tag:blogger.com,1999:blog-87485938305882606792024-03-26T23:35:49.089-07:00www.chandru-articles.blogspot.inThis blog carries interesting articles on travel, spiritual, personal, poetical, social experience of the author.S.Chandrasekarhttp://www.blogger.com/profile/03904262959636448568noreply@blogger.comBlogger664125tag:blogger.com,1999:blog-8748593830588260679.post-66272711190459059902024-03-25T10:23:00.000-07:002024-03-25T17:48:50.664-07:00ஒலியா கிலியா? <p>என் பதிவினையொட்டி ஒரு நண்பர் சந்தேகம் கேட்டிருக்கிறார்.</p><p>“நாம் சிறுவயதிலிருந்தே கஙசஞ உச்சரிக்கும் முறை சரிதானா? நாம் பேசும்போது உச்சரிக்கும் சொற்களும் தவறாக உள்ளதோ என்று எனக்குத் தோன்றுகிறது. அதுபற்றி ஒரு பதிவு போடவும்.”</p><p>நீங்கள் கேட்பது சரிதான். கஙசஞ என்பதை ka nga cha gnya என்றுதான் உச்சரிக்க வேண்டும். ஆனால் ஆரம்பப் பள்ளியிலேயே தவறாகத்தான் பயிற்றுவிக்கின்றனர். அதாவது கஙசஞ உயிர்மெய் எழுத்துகளைச் சொல்லும்போது ச என்பதை cha என்றும், வல்லினங்கள் சொல்லும்போது மட்டும் அதை sa என்றும் சொல்லித்தருகின்றனர். கஸடதபற என்பதில் sa என்பதும் பிழைதான்! </p><p>இதன் காரணமாகவே எந்தச்சொல்லை எப்படி உச்சரிக்கவேண்டும் என்பதில் அநேகருக்கும் குழப்பம் உண்டு. பிழையோடே நாமும் கல்வி கற்று ஒப்பேற்றிவிட்டோம். </p><p>எங்கள் ஊரில் மூக்குறிஞ்சி வாத்தியார் என்று இருந்தார். ஏன் இந்தப் பெயர்? சளி மூக்கடைப்பு ஒழுகலுடன் வரும் சிறுவர்களை “உறியாதே, உயிர்மெய்யைப் பழகு!” என்பாராம். அதன்படி நாம் சொல்லிப்பார்த்தால், வல்லினம் என்பது நாக்கின் பின்புறத்திலிருந்து ஒலி எழுந்து ஒவ்வொரு எழுத்துக்கும் மேல்தட்டில் நாக்கு தொடும் நிலை சிறிது சிறிதாக முன்னேறி வந்து உதடுகளில் வந்து முடிகிறது. ஆக ka cha என்பதே சரி, ka sa என்பது தவறு. இதைப்பொறுத்தே சொற்களை நாம் உச்சரிக்கும் விதம் அமைகிறது. இக்காலத்தில் அதை யாரும் பெரிதாய்க் கண்டுகொள்வதில்லை. </p><p>திருப்புகழ் ஓதுதல் நாக்கு சுழற்சிக்கும் மூச்சுப்பயிற்சிக்கும் உகந்தது. "முத்தைத்தரு பத்தித் திருநகை" பாடலில் உச்சரிப்பு ஒலிகள் உதடுகளுக்கும் முன்வரிசைப் பற்களுக்கும் ஒட்டியே அமையும். பிற்பாடு அது மெல்ல மத்திம நிலைக்கு வந்து, அதன்பின் நாக்கு பின்புறம் தொடுமாறு சொற்களை அருணகிரியார் அமைத்திருப்பார். மென்மையில் தொடங்கி அதன்பின் கரடுமுரடாகி, பிறகு இரண்டுமே கலந்து வரும். இதுதான் tongue twister என்பது. வாசியும் நரம்பு மண்டலம் சீர்பெறும்.</p><p>தமிழின் பெருமையை முழங்குவது ஒருபக்கம் இருக்கட்டும், அந்தத் தமிழ் எழுத்துகளின் உச்சரிப்பைத் தமிழாசிரியர்கள் சிரத்தையுடன் ஆரம்பப்பள்ளியில் சொல்லித்தராவிட்டால் தமிழுக்குத்தான் இழுக்கு! வயதானபின்பு பற்கள் கொட்டிவிட்டால் எதுவும் செய்யமுடியாது, பல்லு போனால் சொல்லு போச்சு! பல்செட் போட்டால் உச்சரிப்பு ஏறக்குறைய அருகில் வந்தாலும் அது செயற்கையாக ஒலிக்கும். அதனால்தான் பல் விழுந்த பொக்கை வாயர்களை வேதமந்திரம் ஓத, பதிகம் பாசுரம் பாட அமர்த்த மாட்டார்கள். அவர்கள் மானசீகமாகச் சொல்லிக்கொள்ளலாம். </p><p>அதனால்தான் வேத மந்திரங்களை ஓதச் சிறுவயதிலையே பயிற்சி தருவார்கள். வேத பாடசாலையில் சிறுவர்கள் ஸ்லோகம் சொல்லும்போது விரல் கணு அடையாளம் வைத்துக்கொண்டு கையை ஏற்றி இறக்கி ஒலி அழுத்தம் உணர்ந்து உரக்க உச்சரிப்பதைப் பார்த்திருப்பீர்கள். வர்ணம் மாத்திரை பலம் சாமம் ஸ்வரம் என உச்சரிப்பை எங்கெங்கு எப்படி எவ்விதம் சொல்வது என்று அத்தியயனம் செய்யும்போது பிழையின்றிக் கற்றுக் கொள்வார்கள். ஆனால் நம் தமிழில் எது சரியான ஒலி என்று உணர்ந்து திருத்திக் கொள்ளும்போது வயதாகிவிடுகிறது. 😀</p><p>ஆக இப்படியாக மருத்துவமும் பக்தியும் சேர்ந்ததுதான் நம் மொழி. ஆய்த எழுத்தான ஃ சொல்லும்போது இரு காதுகளும் அடைத்து, அழுத்தம் மேற்புறம் எழுந்து ஆக்ஞா சக்கரம் பகுதியில் குவியும். அந்தப் பகுதிதான் மூன்றாவது கண் ஃ இருக்கும் இடம். உள்ளே ஊசித்துவாரப் பிரம்மரந்திர வாயில் அமைந்துள்ள இடம், ஆகாய சிதம்பரத்தின் வாயில். </p><p>-எஸ்.சந்திரசேகர் </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJfvAtXUfFoAWPHHkTd6SiKELYMOCerOZOUivD1Z-mWv5eIvbucjPilsodwAgfaURwB3WJuhPMh4eKzr-KP08fCnSBQo7xzmxM4ZtmniWeTj2gJ5wMiai2UX1jMrNxQ0J8qRbBlbUdmKQVatuIim8eefQ5LFQWYWtHmde4ffxxBnl0FHEeta-TAtmML1yh/s540/FB_IMG_1711387468516.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="405" data-original-width="540" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJfvAtXUfFoAWPHHkTd6SiKELYMOCerOZOUivD1Z-mWv5eIvbucjPilsodwAgfaURwB3WJuhPMh4eKzr-KP08fCnSBQo7xzmxM4ZtmniWeTj2gJ5wMiai2UX1jMrNxQ0J8qRbBlbUdmKQVatuIim8eefQ5LFQWYWtHmde4ffxxBnl0FHEeta-TAtmML1yh/s320/FB_IMG_1711387468516.jpg" width="320" /></a></div><br /><p><br /></p><br /><p><br /></p>S.Chandrasekarhttp://www.blogger.com/profile/03904262959636448568noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8748593830588260679.post-21886609595978475282024-03-25T10:19:00.000-07:002024-03-25T10:19:17.945-07:00உழவாரம்!<p>கோயில் புனரமைப்பு, உழவாரம், நித்திய கட்டளைகள் சேவைகள், தன்னார்வத் தொண்டு செய்ய இதுபோன்ற தனியார் அறக்கட்டளை இயக்கங்கள் /மன்றங்கள் ஏகப்பட்டது உள்ளன. அதன் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் வரவுசெலவு பற்றி யாம் எதுவும் அறியோம்.</p><p>கோயில் உண்டியலில் காசு போட்டால் அறநிலையத்துறை எடுத்துக்கொள்ளும். சிறிய கோயிலுக்கு நிதியுதவி செய்யாது அதனால் போடாதே என்கிறது ஒரு கோஷ்டி. தட்டில் போட்டால் அர்ச்சகர் எந்த உழைப்புமின்றி ஆரத்தி காட்டிப்பிச்சை எடுக்கிறான் அதனால் போடாதே என்கிறது ஒரு கோஷ்டி.</p><p>கோயில் சிதிலமடைந்தால் அப்படியே இருந்து விட்டுப்போகட்டும். யார் மூலம் எப்படிப் புனரமைக்க வேண்டும் என்பதை அவன் பார்த்துக்கொள்வான். இத்தனை நூற்றாண்டுகளில் சுவடு தெரியாமல் அழிந்துபோன சிவாலயங்கள் பல. அதை எல்லாம் மீட்க வேண்டும் என்றால் மனிதனால் ஆகாது.</p><p>வறுமையில் இருந்தாலும் தேசத்தின் சுபிட்சத்திற்காக வேதியர் தம் பணியைத் தொடரவேண்டும் என்கிறது சாத்திரம். பிறகு அவன் ஏன் பிச்சை எடுக்கவேண்டும்? 🤔</p><p>'அருள்மிகு' பெயர் தாங்கிய அரசுக்குச் சொந்தமான வசதியான கோயில்களில் அர்ச்சகர்களுக்குச் சொற்ப ஊதியம் நிர்ணயிப்பார்கள். நித்திய பூஜை அபிஷேகம் அலங்காரம் நிவேதனம் மற்றும் மந்திரங்கள் சொல்லி அர்ச்சனை செய்யவேண்டும். சிவராத்திரி/ பிரதோஷ காலத்தில் அவர்கள் செய்யும் தொடர் பணிக்கு இடுப்பு உடையும். ஆனால் இதில் உடலுழைப்பு எதுவும் இல்லையே என்று பலர் விமர்சிக்கின்றனர்.</p><p>"தமிழகத்தில், 26 ஆயிரம் கோவில்களில் வசதியோ, வருமானமோ கிடையாது. அர்ச்சகருக்கு மாதம், 60 ரூபாய் ஊதியம். அதுவும் மூன்றாண்டுகளாக பாக்கியுள்ளது. ஆனால், கோவில் கணக்காளருக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் சம்பளம். அர்ச்சகர்களின் வாரிசுகள் யாரும், அப்பணிக்கு வருவதில்லை" என்று திரு. பொன்மாணிக்கவேல் தன் ஆய்வறிக்கையில் சொன்னார்.</p><p>விலைவாசி மிகக்குறைவாக உள்ள இக்காலத்தில் அர்ச்சகர் தாராளமாகவே ஜீவனம் செய்யலாம் என்பது பலருடைய கருத்து. 🤔 திருவள்ளுவர் குறிப்பிட்ட அறுதொழிலோரில் பலரும் கேலி பேசும் இந்த 'பிச்சை எடுக்கும்' வேதியரும் உண்டு.</p><p><b>த₄ர்மஏவ ஹதோ ஹந்தி த₄ர்மோ ரக்ஷதி ரக்ஷித: </b>||</p><p>தர்மத்தை எவன் அழிக்கிறானோ அவனை தர்மம் அழிக்கிறது. தர்மத்தை எவன் காக்கிறானோ அவனை தர்மம் காப்பாற்றுகிறது.</p><p>-எஸ்.சந்திரசேகர்</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbMOhh0Q3soHUObm-MN8Y5M-Cub2HAXOFKv9Jo1UHLoG4LlejQcFY3xrq-nE2pnci-YNg3x_opraHltrRiL6yWQNStdst8JXUJ-lxFmaCZwiS5OckwGAgZIAoUaK417RMPaBPUhe1-xhTfdT-7nT0AMSJ_KVtoG9uj182pkKndnZ9NpJbZvhKY2igPePxh/s966/Screenshot_2024-03-19-09-59-04-309-edit_com.facebook.katana.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="650" data-original-width="966" height="215" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbMOhh0Q3soHUObm-MN8Y5M-Cub2HAXOFKv9Jo1UHLoG4LlejQcFY3xrq-nE2pnci-YNg3x_opraHltrRiL6yWQNStdst8JXUJ-lxFmaCZwiS5OckwGAgZIAoUaK417RMPaBPUhe1-xhTfdT-7nT0AMSJ_KVtoG9uj182pkKndnZ9NpJbZvhKY2igPePxh/s320/Screenshot_2024-03-19-09-59-04-309-edit_com.facebook.katana.jpg" width="320" /></a></div><br /><p><br /></p>S.Chandrasekarhttp://www.blogger.com/profile/03904262959636448568noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8748593830588260679.post-38951017372252741622024-03-25T10:12:00.000-07:002024-03-25T10:12:59.892-07:00மஹா சிவராத்திரி<p> <b>ஓம் நமசிவாய</b> 🕉️🌿</p><p>அண்டபகிரண்ட அணுவும் அசைந்தாடும்</p><p>அத்தன் கூத்தாட அகிலம் சுழன்றாடும்</p><p>உண்ட விடம் யாவும் இறுகி திண்டாடும் ஊழித்தாண்டவம் ஆடும் கணந்தோறும் கண்டம் சதிராட கடலும் எழும் பொங்கும்</p><p>காரிருள் சூழந்து எங்கும் புயல் ஓங்கும்</p><p>பிண்டம் இயங்கவும் ஒளியும் திரும்பவும்</p><p>பஞ்ச பூதனவன் தாளைப் பற்றுவோம்! 🙏</p><p>-எஸ்.சந்திரசேகர்</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2Bv5VGWr39_RSr9nJcY1s7EUxCZIwl6S7FY5umfBEHLRg44te_n2Rn2fJH6ki3ebvQ5xkyh3cqtY84pi3qHcHL4KemqnHSBkdUms3UalsztPPT3osdI-S-xxi99hcULvljDrAFZTsA8_xfIUm0r0q7tETdIHuLp4mNgr9aiXfIk_EbmRVfLBNoPqeEL1a/s1470/FB_IMG_1711386648057.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1470" data-original-width="866" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2Bv5VGWr39_RSr9nJcY1s7EUxCZIwl6S7FY5umfBEHLRg44te_n2Rn2fJH6ki3ebvQ5xkyh3cqtY84pi3qHcHL4KemqnHSBkdUms3UalsztPPT3osdI-S-xxi99hcULvljDrAFZTsA8_xfIUm0r0q7tETdIHuLp4mNgr9aiXfIk_EbmRVfLBNoPqeEL1a/s320/FB_IMG_1711386648057.jpg" width="189" /></a></div><br /><p><br /></p>S.Chandrasekarhttp://www.blogger.com/profile/03904262959636448568noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8748593830588260679.post-31347167326490965992024-03-25T10:09:00.000-07:002024-03-25T10:09:44.010-07:00பங்குனி உத்திரம்!<p> <b>ஓம் சரவணபவ</b> 🕉️🐓🦚🙏</p><p>ஆனைமுகன் தம்பிக்கு அநுபூதிகளுண்டு</p><p>ஆறுமுகம் கந்தனுக்கு வேதமுகம் உண்டு </p><p>ஆனந்த முருகனுக்கு போரூர்கள் உண்டு</p><p>அனந்தன் மருகனுக்கு பதிகள் பலவுண்டு</p><p>ஆற்றுப்படை நாதனுக்கு காவடிகளுண்டு</p><p>அக்கினி வீரனுக்கு தமிழ்ச்சங்கம் உண்டு</p><p>அகரவுகரமகரப்பொருளில் குகனுமுண்டு</p><p>அமரா பதிக்கு சேனை அஸ்திரம் உண்டு</p><p>ஆண்டிக்கு உண்டியில் செல்வம் உண்டு</p><p>அவன் ஒரு கோமணமே உடுத்துவதுண்டு</p><p>ஆற்றல் மிகும் பங்குனி உத்திரம் உண்டு</p><p>அழகு வள்ளி தெய்வானை வாசியருண்டு</p><p>ஆதிசிவன் பெற்றதால் சிறப்புகளுண்டு</p><p>அன்னை சிவகாமியின் ஆசிகள் உண்டு!</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8a4Mih5aCw4U-sbqbg-qRH4U0pxbo43W_dVtNEOCwbrE8d6Q4Q7h_3cfVjMWoV5vPtPkEJCFEASHuAQQJZiX_Si71U1T894e2d8ST_XsxzKM4lgZSeT6WY5rp5Lht4BD1Tj67jgu-QfccM2U2jI09jQiKvE5wt_-1y6GHJp7eB-5jjX7xkkfRUbytibdq/s643/FB_IMG_1711300279231.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="643" data-original-width="640" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8a4Mih5aCw4U-sbqbg-qRH4U0pxbo43W_dVtNEOCwbrE8d6Q4Q7h_3cfVjMWoV5vPtPkEJCFEASHuAQQJZiX_Si71U1T894e2d8ST_XsxzKM4lgZSeT6WY5rp5Lht4BD1Tj67jgu-QfccM2U2jI09jQiKvE5wt_-1y6GHJp7eB-5jjX7xkkfRUbytibdq/s320/FB_IMG_1711300279231.jpg" width="319" /></a></div><p><br /></p><p>-எஸ்.சந்திரசேகர்</p>S.Chandrasekarhttp://www.blogger.com/profile/03904262959636448568noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8748593830588260679.post-17978170066246689102024-03-04T05:50:00.000-08:002024-03-04T05:50:41.591-08:00குன்றின்மேல் அணையா விளக்கு!<p> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhigdZmAsG3DtKsTZT-Op5FwvWEdhZgMYLQVW8OEd_cM4C4FYNVuBi7KqVX3lS_HrAcPPTiDDRrYx0CxYU3f22u2aZmtEa6G7F1B-laisHZ18T-p1_wxOZYh7f8ruILqPvjKs4SoQyPfjcgHQCkcyNivrnI_bfDOy7_MH-SfDhZz3AXwUuRDY48Cf72-3no/s348/FB_IMG_1709560142780.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="334" data-original-width="348" height="307" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhigdZmAsG3DtKsTZT-Op5FwvWEdhZgMYLQVW8OEd_cM4C4FYNVuBi7KqVX3lS_HrAcPPTiDDRrYx0CxYU3f22u2aZmtEa6G7F1B-laisHZ18T-p1_wxOZYh7f8ruILqPvjKs4SoQyPfjcgHQCkcyNivrnI_bfDOy7_MH-SfDhZz3AXwUuRDY48Cf72-3no/s320/FB_IMG_1709560142780.jpg" width="320" /></a></div><br /><p></p><p>வாலையைப்பற்றியும் அவளைக் கண்டுணர்ந்து தரிசிக்கும் வழியையும், ஆறாதாரசக்கர தளத்தின் குணாம்சங்களையும் “வாலைக்கும்மி” நூலில் கொங்கணர் எளிதாகத் தந்துள்ளார். </p><p>ஆறாதார சக்கரங்கள் வழியாக வாசி ஊர்ந்து சென்று ஆக்ஞா சக்கரத்தில் சுழுமுனையுடன் சங்கமிக்கும் இடமே திரிகூட பர்வதம். அது உண்ணாக்குக்கு மேலாக புரூ மத்தியில் உள்ளது. இடகலை பிங்கலை சுழுமுனையுடன் சங்கமிக்க அங்கே சுயம்பிரகாசம் ஒளிரும். (கபம் சளி இங்கே வாசியின் வழியை அடைத்துக்கொண்டு பிரச்சனை தரும். அதனால் வழலையை அகற்றவேண்டும் என்கிறார் சித்தர்.) எண்கோண வடிவ நட்சத்திரம்போல் ஆடாமல் சுடர்விட்டுச் சுழலும். அங்கே அகத்தீ நிலையாக எறிந்துகொண்டு இருந்தாலும் தலை வெந்துவிடுவதில்லை! </p><p>ஹம்-ஸம் ஓடும் ஆறாதாரங்களின் உச்சியில் அங்கே எண்ணெயில்லை, சுடரை அணைக்கத் தண்ணீர் இல்லை. வாசிக்கால் அந்தப்பாதையிலேயே பிசகின்றிப் போய்க்கொண்டிருந்தால் பாதைப் புலப்படும். எங்கே போவதற்கு? குன்றின் மேலே ஏறி ஆகாயக் கடுவெளியில் தீபஜோதியில் வாலைக்குமரியைத் தரிசிக்க!</p><p>மேலே ஏறிப்போகும் வழிதோறும் ஒவ்வொரு சக்கர தளத்திலும் தசநாத சப்தங்கள் கேட்கும். மேலே அவளுடைய சான்னித்தியம் வெளிப்பட சிலம்புச்சத்தம் கேட்கும். சிக்கலான பாதையைப்போல் தெரிந்தாலும் அகவிளக்கொளி மார்க்கத்தைக் காட்டும். அங்கே ஓங்காரம் ஒலிக்க வாலையவள் வீற்றிருப்பாள்!</p><p>-எஸ்.சந்திரசேகர்</p>S.Chandrasekarhttp://www.blogger.com/profile/03904262959636448568noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8748593830588260679.post-24957569252934833552024-02-03T02:16:00.000-08:002024-02-03T02:16:33.517-08:00கவசக்கயிறு!<p> தெருவில் எனக்கு முன்னே ஒடிசலான ஒரு முதியவர் ஊதிக்கொண்டு நடந்து போனார். அவருடைய இடது கணுக்காலில் கருப்பு கயிறு, கையில் ஒன்று கட்டியிருந்தார். பிய்ந்து போன ரப்பர் செருப்பு அணிந்து நிதானமாய் நடந்து சென்றார். அவர் இழுத்து விட்ட சிகரெட் புகை மண்டலம் காற்றில் எழும்பி என் முகத்தில் உராய்ந்து சென்றது. மூச்சு முட்டாத குறையாக விரைந்து நடந்து அவருக்கு முன்பாகச் சென்றுவிட்டேன். யாரெனத் திரும்பிப் பார்த்தேன்!</p><p>பொக்கை வாய், குழி விழுந்த கன்னம், இடுங்கிய கண்கள், சாம்பல் பூத்த சருமம், வயது பின்னெழுபதுகள் இருக்கும். மோப்ப ஆய்வில் அவர் சரக்கு அடிப்பவர் என்பது தெரிந்தது. உருவத்தைப் பார்த்த உடனே திகைத்தேன்.</p><p>நல்லொழுக்கம் பேணிய ஒரு தேகமாகத் தெரியவில்லை. இவருக்கு ஊரார் கண் திருஷ்டி படுவதற்கு அங்கே என்ன மிச்சம் இருக்கிறது? ஏற்கெனவே சீக்கு உடம்பு போல்தான் தெரிந்தது. புகையும் சரக்கும் அள்ளித்தரும் நோய்களே அதிகம். அப்படி இருக்கும்போது அந்தக் கருப்பு கயிறு எதற்கென்றே தெரியவில்லை.</p><p>முன்பெல்லாம் மிக அரிதாகத்தான் காலில் கருப்பு கட்டிவிடுவார்கள். ஆனால் இப்போது தெருவில் எதிர்படுவோர் எல்லோர் காலிலும் கயிறு பார்க்கிறேன். அது மந்தரித்ததா ஸ்டைலுக்காகவா என்பது தெரியவில்லை. கருப்புக் கயிறை எல்லா ராசிக்காரர்களும் கட்டக்கூடாது என கேள்விப்பட்டுள்ளேன், மிதுனம் துலாம் கும்பம் நீங்கலாக மற்ற ராசிகளுக்கு அது கெடுபலனைத் தருமாம். திருஷ்டி, காத்து கருப்பு, அடிக்கடி உடல்நலம் பாதிப்பு, போன்றவற்றுக்குத் தற்காலிகமாகக் கயிறு கட்டிவிடுவார்கள். பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ஒரு மாதம் வரை கருப்பு வளையல் அணிவித்து திருஷ்டி பொட்டு வைப்பது வழக்கம்.</p><p>வேப்பிலை சாமியாடிகள் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் இதுபோன்ற கயிறு கட்டிவிடுவார்கள். சில உபாசகர்கள் ருத்ர காயத்ரியை ஜெபித்து உருவேற்றிட வேண்டும் என்பார்கள். இக்காலத்தில் அக்கயிறு கட்டியதற்கான காரணமும் தெரியவில்லை, அணிந்தவர் நித்தம் ஜபம் செய்து சக்தியூட்டுகிறார்களா என்பதும் தெரியவில்லை. 🤔</p><p>-எஸ்.சந்திரசேகர்</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJfUu-UDOTpbAKZ7nz7GRh1cRZr0teZZk6poSoozkmu_Fr1B7pgJBf3xu2iXzwg7uhGpdLcePR2P9gFaVIPE5UPypLHl2KFcqWfQ3J0dklECEDGtK5W6QBbWGqayQapRFjNeLDA5TUSX5exrnd5j2WbW9FKEXOeGKhTMmJh7S6xkAU9TvSdnB4JDpon0Uo/s683/Screenshot_2024-02-03-14-02-52-570-edit_com.google.android.googlequicksearchbox.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="647" data-original-width="683" height="303" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJfUu-UDOTpbAKZ7nz7GRh1cRZr0teZZk6poSoozkmu_Fr1B7pgJBf3xu2iXzwg7uhGpdLcePR2P9gFaVIPE5UPypLHl2KFcqWfQ3J0dklECEDGtK5W6QBbWGqayQapRFjNeLDA5TUSX5exrnd5j2WbW9FKEXOeGKhTMmJh7S6xkAU9TvSdnB4JDpon0Uo/s320/Screenshot_2024-02-03-14-02-52-570-edit_com.google.android.googlequicksearchbox.jpg" width="320" /></a></div><br /><p><br /></p><p><br /></p>S.Chandrasekarhttp://www.blogger.com/profile/03904262959636448568noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8748593830588260679.post-59578505262374675812024-01-26T04:47:00.000-08:002024-01-26T04:47:58.785-08:00விட்டகுறையாலே நிறைவேறும்!<p>தென்னிந்தியாவின் கணிதமேதை என்றதும் எஸ். ராமானுஜன் பெயர்தான் நம் நினைவுக்கு வரும். அவர் கும்பகோணத்தில் பிறந்து அங்கே Town High School பள்ளிக்குச் சென்றார். ஆனால் குடும்பச் சூழல் காரணத்தால் மேற்கொண்டு தன் படிப்பைத் தொடரமுடியாமல் சிபாரிசு மூலம் மெட்ராஸ் போர்ட் டிரஸ்ட்டில் குமாஸ்தா பணிக்குச் சேர்ந்தார். ஆயினும் கணிதம் மீதிருந்த தீராத காதலால் அவருடைய ஆய்வுகள் தொடர்ந்தன. அப்போதே அவர் வீட்டுத் திண்ணையில் BA Hons. மாணவர்களுக்குக் கணிதப்பாடம் எடுத்தவர். முறையான உயர்கல்வி இல்லாததால் பல்கலைக்கழகத்தில் சேரமுடியாமல் இருந்தது. இவருடைய திறமைகளை அறிந்த பேராசிரியர் Hardy இவருக்கு லண்டனில் வாய்ப்பு தந்தார். Number Theory பற்றி அவர் பல நுட்பங்களையும் தீர்க்கப்படாத புதிர்களையும் தீர்த்தார். வெளிநாட்டில் நிலவிய குளிர் இவர் உடல்நலத்தைப் பாதித்தது. சைவ உணவையும் ஆச்சாரத்தையும் கடைப்பிடிக்கும் இவருக்கு அங்கு சரியான உணவும் இல்லை. காசநோய் பீடிக்கப்பட்ட நிலையில் ஊர் வந்து சேர்ந்தார். 1920இல் சென்னையில் காலமாகும்போது அவருக்கு வயது 32. </p><p>1938ஆம் ஆண்டு அதே கும்பகோணத்தில் சி.பி.ராமானுஜம் என்பவர் பிறந்தார். அவர் வசதி படைத்த குடும்பத்தில் பிறந்தார், அதே Town High School பள்ளியில் படித்தார். பிற்பாடு சென்னைக்கு வந்தார் லயயோலா கல்லூரியில் உயர்கல்வி பெற்றார். கணிதத்தின் மேல் இருந்த மோகம் அவரைப் புதிய கோணத்தில் Number Theory தலைப்பில் ஆய்வுகள் செய்யத்தூண்டியது. தன் பதினெட்டாவது வயதில் மும்பை Tata Institute of Funamental Research கழகத்தில் சேர்ந்து பல வியக்கும் கோட்பாடுகளை எடுத்துரைத்தார். அங்கு நல்ல ஊதியம், பெயர் எல்லாம் கிடைத்தது. கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் எங்கே விட்டாரோ அங்கிருந்து இவர் தன் பணியைத் தொடர்ந்தார். பாரீஸ் சர்வகலாசாலையில் சிறப்புப் பதவியை ஏற்க அங்கே போகும்போதே உடல்நலம் குன்றியது. மீண்டும் மும்பைக்குத் திருப்பி அனுப்பபட்டார். Schizopherenia நோய்த்தாக்கம் முன்னேறிய நிலையில் இருந்ததால், 1974ஆம் வருடம் மறைந்தபோது அவருக்கு வயது 36. </p><p>ஆக ஆன்மாவின் பயணம் என்பது அளிக்கப்பட பணியை முடிக்கும்வரை மறுபிறவி எடுத்துக்கொண்டே இருக்கும் என்பதற்கு இந்த கணிதமேதைகளின் வாழ்க்கையே சான்று. </p><p>முந்தைய கணிதமேதை ராமானுஜன் தன்னுடைய குலதெய்வமான நாமகிரித்தாயார் மேல் தீவிர பக்தி கொண்டிருந்தார். தான் கண்டுபிடிக்கும் சிக்கலான கணித சூத்திரங்கள் யாவும் அவள் தருவது என்று பகிரங்கமாகச் சொன்னவர். அந்த அர்ப்பணிப்பும் சரணாகதியும்தான் அவருடைய மறுபிறவியில் உயர்கல்வி, வாழ்க்கை வசதிகள், ஆராய்ச்சி வாய்ப்பு, பேராசிரியர் பணி, நல்ல ஊதியம் என எல்லாமே கிடைக்கச்செய்தது. இருந்தாலும், அந்த ஆன்மாவுக்கு இரண்டு பிறவிகளிலும் விதிக்கப்பட்ட ஆயுள் மிகச்சொற்பமே!</p><p>-எஸ்.சந்திரசேகர்</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiDTqOSx0DAivAM1yb_x2xY4LWSDh1epKMnwdbtQ00ucQcDJGz4P3-0LUYG5XFEbGnmyu_f9QjFAaBmpWkC-AHiK43GxzIWzrsiaRPOLpEQhUSKkpLsTDGlrAfPGHPhMwt-fJJITYFpSYJjnRugQoCiTq1xQWiwiHQPGUBtTnSwoMRNZF-e0ksy9zTX77b/s1080/FB_IMG_1706273124065.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="641" data-original-width="1080" height="190" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiDTqOSx0DAivAM1yb_x2xY4LWSDh1epKMnwdbtQ00ucQcDJGz4P3-0LUYG5XFEbGnmyu_f9QjFAaBmpWkC-AHiK43GxzIWzrsiaRPOLpEQhUSKkpLsTDGlrAfPGHPhMwt-fJJITYFpSYJjnRugQoCiTq1xQWiwiHQPGUBtTnSwoMRNZF-e0ksy9zTX77b/s320/FB_IMG_1706273124065.jpg" width="320" /></a></div><br /><p><br /></p>S.Chandrasekarhttp://www.blogger.com/profile/03904262959636448568noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8748593830588260679.post-8372833572038756282024-01-01T08:14:00.000-08:002024-01-01T08:14:42.127-08:00என்னவொரு ஆனந்தம்!<p>சற்றுமுன் ஐயனார் (சாஸ்தா) கோயிலில் திருக்கல்யாண அலங்காரத்தைக் கண்டு தரிசித்தேன். பொதுவாகவே கோயிலில் தரும் அன்னப்பிரசாதத்தை வரிசையில் நின்று தொன்னையில் வாங்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி... மிக அலாதியானது!👌</p><p>பிரதக்ஷணம் முடித்து வெளியே வரும்போது அங்கே ஒருவர் வாழையிலையைக் கையில் தர, அடுத்தவர் பெரிய அண்டாவிலிருந்து பொங்கல் புளியோதரையைக் கிண்டி நீளமான அன்னக்கரண்டியால் எடுத்து இலை நிறையப் பரிமாறினார். அக்கணம் என் கையில் நிறைவான அளவில் பிரசாதம் இருக்கும்போது ஓர் ஐந்து வயது சிறுவனின் மனநிலைக்கு மாறியதை உணர்ந்தேன். என் சுற்று வரும்போது... ஹையா... அண்டாவில் இன்னும் போதிய பிரசாதம் உள்ளது என்பதைக் கண்டதும் இலையை ஏந்தியபடி இரு கைகளை நீட்ட என்னவொரு துள்ளல்! 😀</p><p>ஆன்மிகப் பதிவு, பிரதோஷம் பாடல்கள், சித்தர் பாடல் உரைகள் என்று ஒரு புறம் முகநூலில் செய்யும் நான் சற்றுமுன் சிறுவயது குதூகல மனநிலையில் இருந்ததை ஆச்சரியமாய் நினைத்துப் பார்த்தேன். எல்லாம் சிவசித்தம்! 🕉️🙏</p><p>-எஸ்.சந்திரசேகர்</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcip0fXkOSjDRv0wDTQejUysq6OWdIy_XdPAhQkgdzs4ssM3qfm0z2m6A4EGe_ladaXHeo887tEx5F_yVj2ic9ZCZY1bNI92FOmNF7Uv36ctmeat2wb0-dEc6nxea2kCALHnUL2vMdDXTS5W-0-t9ptWR1r8oKcDp_oJ9hNBMOZyYVM4hA0i4Z_X5BdtUe/s4000/IMG_20240101_190421~3.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2250" data-original-width="4000" height="225" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcip0fXkOSjDRv0wDTQejUysq6OWdIy_XdPAhQkgdzs4ssM3qfm0z2m6A4EGe_ladaXHeo887tEx5F_yVj2ic9ZCZY1bNI92FOmNF7Uv36ctmeat2wb0-dEc6nxea2kCALHnUL2vMdDXTS5W-0-t9ptWR1r8oKcDp_oJ9hNBMOZyYVM4hA0i4Z_X5BdtUe/w400-h225/IMG_20240101_190421~3.jpg" width="400" /></a></div><br /><p><br /></p>S.Chandrasekarhttp://www.blogger.com/profile/03904262959636448568noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8748593830588260679.post-80618349589247537362023-12-29T18:51:00.000-08:002023-12-29T18:51:13.261-08:00எல்லாம் அளவோடுதான்!<p>இப்படியொரு படத்தையும் அதன் கீழே வாசகமும் இருப்பதைப் பார்த்தேன். இது சரியா? மலச்சிக்கல், மூட்டு வலி, நீரிழிவு, கர்ப்பப்பை கோளாறுகளை இது தீர்க்கும் என்பது பொதுவான ஒரு விதி. ஆனால் இந்தப் பிரச்சனைகள் எதனால் வருகிறது என்று ஆராயாமல் அதிகமாக இக்கிழங்கை உண்ணக்கூடாது. </p><p>சராசரி ஆரோக்கியம் உள்ளவர்கள் பனங்கிழங்கை உண்டால் நன்மையைத் தரும். அவித்த இக்கிழங்கை என் சிறுவயதில் நிறைய சாப்பிட்டுள்ளேன்.</p><p>இதயம் சம்பந்தமான நோய், தண்டுவட எலும்புத் தேய்மானத்தால் வருகின்ற ஆஸ்ட்டியோ இடுப்புவலி பிரச்சனையும் மேற்படி சிக்கல்களை உண்டாக்கும். பரிசோதனை செய்து மேற்படி நாள்பட்ட நோய்க்கான காரணம் அறியாமல் மேம்போக்காக மலச்சிக்கல் மூட்டுவலிக்கான மருந்தை உண்டால் வேலை செய்யாது. ஆறாதார சக்கரங்கள் உள்ள பகுதிகளில் சக்தி ஓட்டம் தடைபடுவதால் அது மேலும் சிக்கலைத்தான் உண்டாக்கும். உஷார்!</p><p>-எஸ்.சந்திரசேகர்</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhC69XY12KJm7M6ZHbvUaT0J9rjFsSfGV5f8eU7SO80FARB4ot6Djg6jjzD4jrYeUvp3fRaV0OVZL7w8bjbttzx1CwBHJfg_CiErjFlMR3Kq0E6OeDwdhFjzQVKmejkA9SFtSVaCHj4raYq0qaHs91T6MTQGOgV_tk8MLwGT_oSJGrkKKOatuLB2WNmkSJN/s1080/Screenshot_2023-12-30-06-59-19-498-edit_com.miui.home.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="867" data-original-width="1080" height="257" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhC69XY12KJm7M6ZHbvUaT0J9rjFsSfGV5f8eU7SO80FARB4ot6Djg6jjzD4jrYeUvp3fRaV0OVZL7w8bjbttzx1CwBHJfg_CiErjFlMR3Kq0E6OeDwdhFjzQVKmejkA9SFtSVaCHj4raYq0qaHs91T6MTQGOgV_tk8MLwGT_oSJGrkKKOatuLB2WNmkSJN/s320/Screenshot_2023-12-30-06-59-19-498-edit_com.miui.home.jpg" width="320" /></a></div><br /><p><br /></p>S.Chandrasekarhttp://www.blogger.com/profile/03904262959636448568noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8748593830588260679.post-7292664386099154542023-12-29T06:07:00.000-08:002023-12-29T06:07:21.829-08:00விதிவிலக்கு உண்டு!<p> “கருத்தரிக்காத கன்று ஈன்றாத பசுவுக்குப் பால் சுரக்குமா? குருடாகிப் போன கண்ணில் பார்வையும் வெளிச்சமும் தெரியுமா? பேசாமல் மௌனம் காத்தால் அங்கே உரையாடல் ஏது கேள்விகள் ஏது? குணம்கெட்ட வேசிப்பெண்ணுக்கு வாழ்க்கை ஏது? எவ்வயதிலும் கல்லாமல் வீணாய்க் கழித்தவர்க்குக் கல்வி வாய்க்குமா? எதையும் காணமல் இருப்பவர்க்குக் காட்சிதான் தெரியுமா? மதித்து அண்டிப் பணியாத சீடனுக்கு நல்ல குரு வாய்க்குமா? வேடிக்கையாய் வாழ்க்கையைக் கழித்தால் எல்லாம் பாழாகிப்போகும் பார்” என்று சுப்பிரமணியர் ஞானம் நூலில் முருகப்பெருமான் அகத்தியர்க்கு உபதேசிக்கிறான்.</p><p>மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் நமக்குப் பொதுவானது. ஆனால் இதற்கு மாறாகவும் சில சமயம் நடப்பதுண்டு. திருவண்ணாமலை மாவட்டத்தில் எங்கோ ஒரு பத்து வயது பசுவானது கன்று ஈனாமல் தினமும் 4 லிட்டர் பால் கறக்கிறது என்று முன் எப்போதோ செய்தித்தாளில் படித்துள்ளேன். புறக்கண்கள் குருடாகியும் அகக்கண்கள் மூலம் ஞானவொளிச்சுடர் பிரகாசத்தைக் கண்டவர்கள் உண்டு. மௌனம் நிலவினால் அங்கே வார்த்தைகள் இல்லை. ஆனால் பகவான் ரமணர் பேசாமல் இருந்து தன் சீடர்களுக்கு உபதேசித்தார். அவரிடம் இந்த அனுபவத்தை மஹாத்மா காந்தியும், பரமஹம்ச யோகனந்தாவும் பெற்றதாகத் தங்கள் சரிதையில் சொல்லியுள்ளதைப் படித்துள்ளேன். </p><p>முறை தவறிய நடத்தையைக்கொண்ட பெண்ணுக்கு வாழ்க்கை அமைந்தாலும் அது நீண்டகாலம் ஆரோக்கியமாய் நீடிக்காது. கல்வி கல்லாதவனுக்கு ஞானம் கிட்டும். எப்போது? விட்டகுறையாலே எல்லா ஞானமும் ஓதாமலே ஓதப்பெற்றவனுக்கு. எத்தனையோ மஹான்கள் இதற்குச் சான்று. எதையும் நேரடியாகக் காணாதவர்க்கு நடந்தது என்ன என்று தெரியுமா? தெரியும்! தூரதிருஷ்டி சக்தியால் அந்தக் காட்சிகளை உட்கார்ந்த இடத்திலேயே காணலாம். பாண்டவர்- கௌரவர் இடையே நடக்கும் மகாபாரதப்போர்க் கட்சிகளை அரண்மனையில் இருந்தபடியே சஞ்சயன் திருதிராஷ்டிரர்க்கு விளக்கிச் சொன்னது இப்படித்தான். </p><p>பணிவு பக்தி இல்லாத சீடனுக்கு நல்ல குரு வாய்க்க மாட்டார். குரு இல்லாத வித்தை பாழ். ஆனால் எந்த குருவையும் நாடிப்போகாமல் அந்த இறைவனே நம்மை நாடி வந்து குருவாக இருந்து போதித்தால் அதைவிட என்ன இருக்க முடியும்? ஒருவன் தன் வாழ்க்கையில் எதைப்பற்றியும் சிந்தியாமல், பந்த பாசம் சொத்து சுகம் எதிலும் நாட்டமின்றி விளையாட்டாய் இருப்பதுபோல் வெளியுலகிற்குத் தெரிந்தாலும், சித்தம் கலங்கிய வெள்ளிப்பாடு இருந்தாலும் அவனுடைய வாழ்க்கை வீணாகாமல் பரப்பிரமத்தையே சேரும்.</p><p>ஆக, முருகன் உபதேசித்த விதிகளுக்கு மாறாகவும் நடக்கும். அப்படி நடந்தால் அது அவனருளால் நடக்கும் திருவிளையாடலே! ஓம் சரவணபவ. 🙏</p><p>-எஸ்.சந்திரசேகர்</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIRodwuonBqYuP84_nsWZ-y2MP4EARrmLLJHJfDFt7X4VnhVQo8laoEzIgTfb8R8w4pmQkjLL2-gfD5Tj76XpHfNUBmbJo6jW54z70iqp8XXsTzWdVv250JV86wGowFj1pTbEfnN4yXJii8OxHb3RFFUsaksp58fRVn4Z6lKemWhJ1ZErm1vEGu9uvI3bN/s445/FB_IMG_1703858583742.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="256" data-original-width="445" height="184" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIRodwuonBqYuP84_nsWZ-y2MP4EARrmLLJHJfDFt7X4VnhVQo8laoEzIgTfb8R8w4pmQkjLL2-gfD5Tj76XpHfNUBmbJo6jW54z70iqp8XXsTzWdVv250JV86wGowFj1pTbEfnN4yXJii8OxHb3RFFUsaksp58fRVn4Z6lKemWhJ1ZErm1vEGu9uvI3bN/s320/FB_IMG_1703858583742.jpg" width="320" /></a></div><p><br /></p>S.Chandrasekarhttp://www.blogger.com/profile/03904262959636448568noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8748593830588260679.post-68305355534555714732023-11-25T05:53:00.000-08:002023-11-25T05:53:33.659-08:00கருங்காலி படுத்தும் பாடு!<p>முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் கருங்காலி கட்டையில் செய்த வழு வழுப்பான கொண்டபள்ளி மரப்பாச்சி ஆண்/பெண் பொம்மைகள் சர்வசாதாரணமாக இருக்கும். இப்போதும் உள்ளது. </p><p>தவழும் பிராயத்தில் உள்ள குழந்தைகள் அதை வைத்து விளையாடும், வாயில் வைக்கும், கடிக்க முற்படும். அந்த மூலிகைக் கட்டை, வாய் உமிழ்நீரில் ஊறி மருத்துவ குணம் ஏறுவதால் அதை விழுங்கும்போது தேகம் வலுப்பெறும். பொதுவாகவே இப்பொம்மைகள் நம் வீடுகளில் நவராத்திரி கொலு சமயத்தில் மட்டும் தலையைக் காட்டும். கருங்காலி இலைச் சாறில் பருத்தி நூல் கண்டை நனைத்து உலர்த்திய பின் அதை வைத்து இரும்பை, கண்ணாடியை அறுக்கலாம் என்கிறார் போகர்.</p><p>இன்று கருங்காலி பொம்மையை வைத்து எந்தக் குழந்தையும் நவீன நகரங்களில் விளையாடுவதில்லை. சித்த வைத்தியப் பாடல்களில் கருங்காலிக்கு நல்லதொரு மதிப்பு. வியாபாரத்திற்கு வேம்புக் கட்டையில் பொம்மைகளைச் செதுக்கி அதற்குச் சாயம் ஏற்றி அதை வைரம் பாய்ந்த கருங்காலி கட்டையெனச் சொல்லி அதிக விலைக்கு விற்கின்றனர். அந்த மாலையை அணிந்தால் நற்பலன் கிட்டுமா அல்லது உள்ளது அனைத்தும் துடைத்துக்கொண்டு போகுமா என்பது ஜோசியருக்கே தெரியாது. உண்மையான மாலை தண்ணீரில் மூழ்குமா, நீரின் நிறம் மாறுமா என்பதைப் பரீட்சித்துப் பார்த்து உடனே ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது.</p><p>திடீரென கடந்த ஓராண்டாக கருங்காலி/ செங்காலி மாலைக்கு நல்ல கிராக்கி வந்துள்ளது. கருங்காலி மரங்களெல்லாம் அழியத் தொடங்கும். ஜாதகத்தில் உள்ள கோள்களின் தசாபுத்தி மோசமாகவே இருந்தாலும் குலதெய்வத்தை வேண்டிட அவரவர் இன்னல்கள் குறையும்.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOuGLNMB6KRiF4kL9YKpLiRmMmBkvvQiFqYXeJypD0RjyoCOzF-Ip4azNME-EYMa71fkaFv3NT0YCxVDBbp86_I2lQSIH1rzxqUsKALl9Yb0YBX6phjiya8F02gU2IREvetJQXCUPX6VP5Zqg2HKQcQ4GEq85yma79qBU7F5POMTbnPT0vbs5PiuCRM18E/s1080/Screenshot_2023-11-25-18-27-11-790-edit_com.google.android.googlequicksearchbox~2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1066" data-original-width="1080" height="198" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOuGLNMB6KRiF4kL9YKpLiRmMmBkvvQiFqYXeJypD0RjyoCOzF-Ip4azNME-EYMa71fkaFv3NT0YCxVDBbp86_I2lQSIH1rzxqUsKALl9Yb0YBX6phjiya8F02gU2IREvetJQXCUPX6VP5Zqg2HKQcQ4GEq85yma79qBU7F5POMTbnPT0vbs5PiuCRM18E/w200-h198/Screenshot_2023-11-25-18-27-11-790-edit_com.google.android.googlequicksearchbox~2.jpg" width="200" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhv-6Y-drpUjheee8E3fBQ-sh4rCNjf5lTFhVvy3wpSwX9PtH8EOcwO7065H8qv8tjhbiEkVBGnBU20lL74EDRxWJ9hbeTdBoiO0NJ2-Cm74-ZISk_B-4mz08zdFfnTevKvaZjGskote8fMpYI0_i5Yhom-uwEy25X6-AVnOeiMU9roISWvFh8bfOy05Hbw/s707/Screenshot_2023-11-25-18-29-42-378-edit_com.google.android.googlequicksearchbox~2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="707" data-original-width="660" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhv-6Y-drpUjheee8E3fBQ-sh4rCNjf5lTFhVvy3wpSwX9PtH8EOcwO7065H8qv8tjhbiEkVBGnBU20lL74EDRxWJ9hbeTdBoiO0NJ2-Cm74-ZISk_B-4mz08zdFfnTevKvaZjGskote8fMpYI0_i5Yhom-uwEy25X6-AVnOeiMU9roISWvFh8bfOy05Hbw/w187-h200/Screenshot_2023-11-25-18-29-42-378-edit_com.google.android.googlequicksearchbox~2.jpg" width="187" /></a></div><p><br /></p><p>வனத்திலுள்ள எல்லா மரங்களின் கட்டைகளுக்கும் வேர்களுக்கும் மருத்துவ குணமும் கருதொழில் சக்தியுமுண்டு. நம் சித்தர் பாடல்களில் கணக்கில்லாமல் பல மூலிகைத் தாவரங்களின் முக்கியத்துவம் சொல்லப்பட்டுள்ளது. கருங்காலி மரம் இருக்கும் இடத்தில் இடி தாக்காது, தீய சக்திகள் அண்டாது, மந்திர பீஜ ஒலியை வேகமாய் ஈர்த்துக்கொள்ளும். கோயில் கும்பாபிஷேகத்தின்போது கலசத்தில் கருங்காலி கட்டையும் நவதானியத்துடன் இருக்கும். சூரிய வெப்பக்கதிர்களின் தீமையைத் தடுக்கும்.</p><p>நம் பங்கிற்கு ஏதையேனும் புதுமையாகச் சொல்லி மக்களின் ஆவலை மேலும் கிளப்பிவிடுவோமே! எருக்கன் மாலை, நெருஞ்சி மூக்குத்தி, தர்ப்பை மோதிரம், வேப்பந்தோடு, ஆமணக்கு ஒட்டியாணம், ஆலம் விழுது வளையல், ஏறு சிங்கி ஊன்றுகோல், என பலதும் பயன்படுத்தி நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுங்கள். 😂</p><p>-எஸ்.சந்திரசேகர்</p>S.Chandrasekarhttp://www.blogger.com/profile/03904262959636448568noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8748593830588260679.post-4200231609802103462023-09-21T08:37:00.006-07:002023-09-21T08:37:54.892-07:00விதிமுறைகள் உண்டு!<p>இதுபோன்ற ஐம்பொன் கங்கணத்தை நகை கடைகள் விற்கத் தொடங்கிவிட்டன. இதை யார் எல்லாம் அணியலாம் அணியக்கூடாது? சொல்வதில்லை! இதை அணியும் காலத்தே கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன? எதுவும் அவர்கள் சொல்வதில்லை. </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBwePxCLl4gr9gFF1yKv0gcnQtDUmnClsgAtMqY1BHivIIHxvq6UXzHaoLmj_ndSBN9ZUyLFHyxlob79xp1OaD2MEu_77hu9vEXSOUPThoRh5IuBPlSEvdXHu16gwbQJb13Sb8HjYjz0txGVTRZ0oszC7LldCG-dlbNg075F1zL_AHq74vX8deXc-_rzrM/s1062/Screenshot_2023-09-21-14-08-12-934-edit_com.miui.home.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="780" data-original-width="1062" height="235" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBwePxCLl4gr9gFF1yKv0gcnQtDUmnClsgAtMqY1BHivIIHxvq6UXzHaoLmj_ndSBN9ZUyLFHyxlob79xp1OaD2MEu_77hu9vEXSOUPThoRh5IuBPlSEvdXHu16gwbQJb13Sb8HjYjz0txGVTRZ0oszC7LldCG-dlbNg075F1zL_AHq74vX8deXc-_rzrM/s320/Screenshot_2023-09-21-14-08-12-934-edit_com.miui.home.jpg" width="320" /></a></div><p><br /></p><p>பலர் தம் வலது கையில் காசி/ திருப்பதி/ ஷிர்டி தலங்களின் புனிதக்கயிறைக் கட்டியிருப்பதைப் பார்த்துள்ளேன். அவர்கள் உண்ணும்போது அதன் நீளமான நுனிப்பகுதியானது எச்சில் இலையில் ரசம்/மோர் குடிக்கும். அதுபோல் நோன்பு சரடு/ விரத தோரம் கட்டிக்கொள்ளும் பெண்கள் சிலர் அதை இறுக்கிட விரலால் பிடித்துக்கொண்டு பல்லால் எச்சில் பட கடித்து இழுப்பதைப் பார்த்துள்ளேன். 🤔 மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தபோது மஞ்சள் சரடு அங்கே கூடிய சுமங்கலிகளுக்கு விநியோகமானது. அதில் ஒரு பெண் பல்லால் கடித்துப்படும் பாட்டை டிவியில் நீண்டநேரம் குளோசப் காட்டினர். அதைப் பார்த்த பலரும் தங்கள் தலையில் அடித்துக் கொண்டிருப்பார்கள். 😀</p><p>மேற்சொன்ன இரண்டிலும் பவித்ரம் பேணுவது என்பது அறவே இல்லை. வீட்டில் பெரியவர்களும் கண்டித்துச் சொல்வதில்லை. சிவலிங்கம்- நந்தி கங்கண காப்போ, கௌரிசங்கரம் ஆபரணமோ அணிந்தால் தீவிர ஆச்சாரமும் உச்சபட்சமான பவித்ர நிலையை வாக்கால்/ மனத்தால்/ செயலால் அனுஷ்டிக்க வேண்டும் என்பது விதி. </p><p>-எஸ். சந்திரசேகர்</p>S.Chandrasekarhttp://www.blogger.com/profile/03904262959636448568noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8748593830588260679.post-44916114155627221842023-09-05T20:06:00.004-07:002023-09-05T20:06:45.171-07:00சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!<p> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkMSzTHfx8z_uJcosB0GpZ3dmdkK4-G_1kbOdPM5ycZoKPRdKRFLN1lL-g-48tDxrYbk7yW1j4hsq0TNKWRPJjIN3yjfpJqiMKPF7Fb8JnmpLTLCqmPpDDZPRbUFY8yZO0ynIPdD0Hs34Ztt82L_nnb_keGtwalfxV_Aqa6zbDlQj-FerZGFCEDe4cxSeJ/s1004/FB_IMG_1691389838967~3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1004" data-original-width="804" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkMSzTHfx8z_uJcosB0GpZ3dmdkK4-G_1kbOdPM5ycZoKPRdKRFLN1lL-g-48tDxrYbk7yW1j4hsq0TNKWRPJjIN3yjfpJqiMKPF7Fb8JnmpLTLCqmPpDDZPRbUFY8yZO0ynIPdD0Hs34Ztt82L_nnb_keGtwalfxV_Aqa6zbDlQj-FerZGFCEDe4cxSeJ/s320/FB_IMG_1691389838967~3.jpg" width="256" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhGEuLCOX6TRelNiAa9Doijcs6hW29GbuNVvhAv-ZEm6gMwCE5l6Bh1rqsxqmQ11yBocjONQszeDu5DJS_mKytP1gV6PmFtyNJpkMVLrCNNFU4rImTEsyXOH7dkRixJ_oFW7fFlUOgWHBcUtrM5l5XTcawK57gT7uypgOS9qEwMLWATbfOMeUV2yRdHQ4n/s1528/FB_IMG_1691389841805.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1528" data-original-width="1080" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhGEuLCOX6TRelNiAa9Doijcs6hW29GbuNVvhAv-ZEm6gMwCE5l6Bh1rqsxqmQ11yBocjONQszeDu5DJS_mKytP1gV6PmFtyNJpkMVLrCNNFU4rImTEsyXOH7dkRixJ_oFW7fFlUOgWHBcUtrM5l5XTcawK57gT7uypgOS9qEwMLWATbfOMeUV2yRdHQ4n/w283-h400/FB_IMG_1691389841805.jpg" width="283" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYgXBBzj231sYh2gSANkxpDKNiNnK4ae0lr8B4vZwFJxEPO7gT6Mt8MVYIrdrk_78HV7afA6qpQJtUsWAdNhY2RrerKJaFRt2JKOGZzZa1jUf_MlzHAdZur2eAnAKDefYq0-xPFjFLa6JAOY4x-RXQ0g5T2MNwWwaq5c7hdZ-qq7Xbw61wW9dAugbwRS3B/s1005/Screenshot_2023-09-06-07-03-57-911-edit_com.facebook.katana~2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="926" data-original-width="1005" height="295" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYgXBBzj231sYh2gSANkxpDKNiNnK4ae0lr8B4vZwFJxEPO7gT6Mt8MVYIrdrk_78HV7afA6qpQJtUsWAdNhY2RrerKJaFRt2JKOGZzZa1jUf_MlzHAdZur2eAnAKDefYq0-xPFjFLa6JAOY4x-RXQ0g5T2MNwWwaq5c7hdZ-qq7Xbw61wW9dAugbwRS3B/s320/Screenshot_2023-09-06-07-03-57-911-edit_com.facebook.katana~2.jpg" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><br /><p></p>S.Chandrasekarhttp://www.blogger.com/profile/03904262959636448568noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8748593830588260679.post-60887396553436232062023-09-02T20:30:00.004-07:002023-09-02T20:30:53.214-07:00ஆதித்யா!<p>கற்பம் ஒரு மண்டலம் உண்டால் ஜோதிமய சந்திரர்கள் சூரியர்களுக்கு ஒப்பாக தேகவொளி கூடும் என்று ஐந்தாம் காண்டத்தில் போகர் கூறுகிறார். பன்மையில் சொல்வதைப் பார்த்தால் இப்பிரபஞ்சத்தில் பல்லாயிரம் அண்டங்களும் அதில் பல சூரியர்கள் சந்திரர்கள் இருப்பது புரிகிறது. தன் குரு காலாங்கி ஆயிரத்தெட்டு அண்டங்களைப் பார்த்துள்ளதாக ஒரு பாடலில் உரைக்கிறார்.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiA8oJ-LJYbkfYQ8C_7IMA68iHoCPn4DIVisSzYVseu5WtiPsd9UcYUyr-fLyMY3iZ4v8sYHI69MR-sFRqMz5SEBOWxF9UFFiARAw0wh67YyeENbvQQDmWnrn69phi_HWVAG9_6lnugMU7Bvy8PflgymatLJUd2w8a_0jfSjDzLp2Buhbn8pQGDFQJYDIBq/s498/FB_IMG_1693711579485.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="181" data-original-width="498" height="145" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiA8oJ-LJYbkfYQ8C_7IMA68iHoCPn4DIVisSzYVseu5WtiPsd9UcYUyr-fLyMY3iZ4v8sYHI69MR-sFRqMz5SEBOWxF9UFFiARAw0wh67YyeENbvQQDmWnrn69phi_HWVAG9_6lnugMU7Bvy8PflgymatLJUd2w8a_0jfSjDzLp2Buhbn8pQGDFQJYDIBq/w400-h145/FB_IMG_1693711579485.jpg" width="400" /></a></div><p><br /></p><p>நம் கண்களுக்குத் தெரிவது என்னமோ ஒரு சூரியன் சந்திரன். ஆனால் அவர் சொல்வதைப் பார்த்தால் இந்தச் சூரிய குடும்பத்தில் இன்னும் எத்தனை சூரியர்கள் உள்ளனர்? விவஸ்வன் ஆர்யமான் துவஷ்டா சவிது பாகா தத்தா மித்ரா வருணா ஹம்ஸா பூஷன் இந்திரா விஷ்ணு என மொத்தம் பன்னிரண்டு. துவாதச ஆதித்யர் என்று புராணங்கள் சொல்கிறது. ஆதித்யா என்ற பொதுவாக அழைக்கப்படும் இவர்கள் சுழற்சி முறையில் யுகம்தோறும் சூரிய பதவி ஏற்பார்கள்.</p><p>உதய காலத்தில் சூரியன் வெளிப்படும்முன் அவனுடைய தேர்க்குதிரைகளைச் செலுத்தும் அருணன்தான் முதலில் வெளிப்படுவான். அதனால்தான் அந்தப்பொழுதை அருணோதயம் என்கிறோம். சிவபெருமானின் வலது கண்ணாகச் சூரியனும் இடது கண்ணாகச் சந்திரனும் திகழ்வது நாம் அறிந்ததே. சூரியரிஷியார் மேருவில் கிழக்கு முகமாக யாகம் செய்து கிரண காந்தியைக் கூட்டிச் செந்நிற ஒளியுடன் தன்னைச்சுற்றி அக்னிமண்டலத்தை வியாபிக்கச் செய்துள்ளார். உண்மையில் சூரியன் ஒரு நட்சத்திரம் என்றாலும் அதற்கென ஒரு தனித்துவம் உள்ளது. அது சுழன்றபடி இருக்க அதைச் சுற்றியுள்ள அக்னி மண்டலத்திலிருக்கும் வாயுக்களின் அணுவானது பிளாஸ்மா பிழம்பாக வெளிப்படுகிறது.</p><p>சூரிய வனத்தில் அபூர்வ மூலிகைகளும் மலர்களும் உள்ளன என்று போகர் சொல்வது நம்மால் நம்பமுடியாத ஆச்சரியத்திலும் ஆச்சரியம். இது ஒரு வேளை சூரியரிஷி மேருவில் அமர்ந்து யாகம் செய்யும் இடத்தில் வேண்டுமானால் இருக்கலாம், தகிக்கும் சூரியனில் அல்ல என்றுதான் நான் நினைக்கிறன். நம் ஊனக்கண்களுக்கு மேருவில் அரூபமாக நடப்பவை எதுவும் தென்படாது.</p><p>சூரியன் சுமார் 6000 டிகிரி செல்சியஸ் வெப்பம் வெளிப்படுத்துகிறது என்றும், அதன் வெளிப்பரப்பில் பல லட்சம் டிகிரி தகித்துக்கொண்டு Corona discharge ஆகிறது என்று அறிவியல் கட்டுரைகளில் நாம் படித்துள்ளோம். தொலைவில் உள்ள பூமிக்கு வந்து சேரும்போது 30° முதல் 45° டிகிரிவரை உத்தராயன/ தக்ஷணாயன பருவகாலத்தைப் பொறுத்து நிலவுகிறது. நம் வாழ்வாதாரத்திற்கு ஏற்ற வெப்பத்தை இயற்கை பராமரிக்கிறது. இதைப் பற்றி முன்னொரு சமயம் இறையாளரும் மருத்துவருமான டாக்டர் பத்மனாபராவ் அவர்கள் என்னிடம் பேசும்போது சொன்ன விவரங்களை நினைவுபடுத்திப் பார்க்கவும். </p><p>நம் சூரிய குடும்ப கிரகங்களைச் சுற்றி சிறியதும் பெரியதுமாக மொத்தம் இருநூறுக்கும் மேற்பட்ட சந்திரர்கள் உள்ளதெனத் தெரிகிறது. Parallel Universes எனப்படும் மற்ற அண்டங்களிலுள்ள சந்திராதித்யர்களின் எண்ணிக்கை எத்தனை இருக்குமோ ரிஷிகளுக்கே வெளிச்சம். கீதையில் கிருஷ்ணர் “அர்ஜுனா, அப்பாலில் எத்தனையோ அண்டங்களும் சூரியன்களும் உள்ளன. அவை உன் கண்களுக்குப் புலப்படவில்லை என்பதால் அவை எதுவும் இல்லை என்று மட்டும் நினைத்துவிடாதே” என்கிறார்.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgh0TYNCRqCJnQZWgGHEDtcqf8MoKAT0yokvFzxKf6WCcsc0AGpbSchxikc61Q2Re7w0CqGfuX2Skrb0XKnpjfv3O1jZVZxjX3nrqqhikUp_P-HwYaldfa1p_zqo33Afe8LSZViTc0bxPYaHKnkmUJKC5a_MZdOapAyCHA8YumjtIxxzl0C5tELN-lFSe8K/s1600/aditya_l1_sun_mission_isro_latest_update_1693360404282_1693360404459.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="899" data-original-width="1600" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgh0TYNCRqCJnQZWgGHEDtcqf8MoKAT0yokvFzxKf6WCcsc0AGpbSchxikc61Q2Re7w0CqGfuX2Skrb0XKnpjfv3O1jZVZxjX3nrqqhikUp_P-HwYaldfa1p_zqo33Afe8LSZViTc0bxPYaHKnkmUJKC5a_MZdOapAyCHA8YumjtIxxzl0C5tELN-lFSe8K/s320/aditya_l1_sun_mission_isro_latest_update_1693360404282_1693360404459.png" width="320" /></a></div><p><br /></p><p>இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா L1 ராக்கெட் அங்கே சரிசம ஆகர்ஷண Lagrangian விசைப்பகுதியில் இருந்தபடி என்னவெல்லாம் ஆராயும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.</p><p>“ஓம் பாஸ்கராய வித்மஹே மஹாத் யுதிகாராய தீமஹி தந்நோ ஆதித்ய ப்ரசோதயாத்”</p><p>-எஸ்.சந்திரசேகர்</p>S.Chandrasekarhttp://www.blogger.com/profile/03904262959636448568noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8748593830588260679.post-32109887064782395462023-08-28T06:20:00.004-07:002023-08-28T06:20:41.841-07:00முருகன் பிரம்மச்சாரி!<p>முருகன் அகத்தியர்க்கு உபதேசித்த சுப்பிரமணியர் ஞானம் 500 நூலில் கடைசி பாடல்தான் இது. </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkEa9WHXBT9QjzfD-Pfjx5NTO5qlBYv1uICY4NTVSm-NjnU2vN9EZ4H-hQxcVsJn8KgX1vEDvjxCm_DcSGboYNbtNyj3lISGKpj3bOLsfGkfkRumpuct-3IiVc97kAhhaLOpKEH7B9aqiSKC9byd6St11bigyRmG_HoZyOMSgncxvymx9my8bvBC4OdKvP/s371/FB_IMG_1693228630885.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="192" data-original-width="371" height="166" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkEa9WHXBT9QjzfD-Pfjx5NTO5qlBYv1uICY4NTVSm-NjnU2vN9EZ4H-hQxcVsJn8KgX1vEDvjxCm_DcSGboYNbtNyj3lISGKpj3bOLsfGkfkRumpuct-3IiVc97kAhhaLOpKEH7B9aqiSKC9byd6St11bigyRmG_HoZyOMSgncxvymx9my8bvBC4OdKvP/s320/FB_IMG_1693228630885.jpg" width="320" /></a></div><p>முருகனின் வாய்மொழியில் அஷ்டகர்மம் மெய் என்பது தெரிகிறது. வாலையின் அருளால் திரிகூடத்தில் ஒளிரும் அசையாத செந்நிற தீபமே தெய்வமாக இருந்து வாக்கில் வந்து அமரும் என்பது உண்மை. தான் நித்திய பிரம்மச்சாரி என்பதை முருகன் கூறுகிறான். அதனால் வாசியின் உருவகமாக வள்ளி-தெய்வானை இரு கலைகளான பிங்கலை இடகலையாக (வேட மயில், வேழ மயில்) இருப்பது தெரிகிறது. </p><p>“கொண்டேன் மூன்றெழுத்தைக் குவித்தேன், மகாரம் நகாரம் சிகாரமோடு மூன்றெழுத்தை யானறிந்து முருகனானேன்” என்று சொல்லியுள்ளான். இந்த மூன்றெழுத்தில் மாலவன், ருத்ரன், பிரம்மா சங்கமித்துள்ளனர். அதுவே ரிக் யஜூர் சாம வேதங்களின் ரூபமாகவும் கருதப்படும்.</p><p>ஆனால் இதை அறியாத நம் மக்களோ, அந்த சிவன், விஷ்ணு, பிள்ளையார், முருகன், கிருஷ்ணன், சாஸ்தா எல்லாருக்கும் ரெண்டு தாரங்கள் இருக்கு, நாம கட்டிகிட்டா தப்பில்லை என்று சாதாரணமாகச் சொல்வார்கள்.</p><p>-எஸ்.சந்திரசேகர்</p>S.Chandrasekarhttp://www.blogger.com/profile/03904262959636448568noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8748593830588260679.post-54228034148834401852023-08-26T20:25:00.004-07:002023-08-26T20:28:53.173-07:00ஊனுடம்பு ஆலயம்!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnS2Z_RfTVgYdbkDJkq4ejJdTHUAcQTW_bQ0AWwXCIo94aBnN7TwacLMlFpiezhPFe7RI-_rVg3gjZksv1ETN63faua6KQ78Rwz796dnTG6ORlqdBWE7AGCaF50lYpW9D5oaU-i0J45XXQJOZfg8HunX6drlCWyCo_VuZa1JevxNGzHd0xkPDcuu1eIeIc/s288/FB_IMG_1693063173112.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="224" data-original-width="288" height="224" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnS2Z_RfTVgYdbkDJkq4ejJdTHUAcQTW_bQ0AWwXCIo94aBnN7TwacLMlFpiezhPFe7RI-_rVg3gjZksv1ETN63faua6KQ78Rwz796dnTG6ORlqdBWE7AGCaF50lYpW9D5oaU-i0J45XXQJOZfg8HunX6drlCWyCo_VuZa1JevxNGzHd0xkPDcuu1eIeIc/s1600/FB_IMG_1693063173112.jpg" width="288" /></a></div><p>என்று மச்சமுனி 800 நூலில் பாடுகிறார்.</p><p>அதாவது, அகரமான சிவமும் உகரமான சக்தியும் நம் தேகத்தில் வாசம் செய்யும்வரை அவ்வுடலுக்கு அழிவில்லை. எட்டுமிரண்டும் சேர்ந்து இந்தப் பாழும் பஞ்சபூத உடலை அழியாத சத்தியசிவமாக மாற்றும். நவகோள்களும் அடிபணிய அந்த தேகத்தவன் சிவனின் உருவையே பெற்றிடுவான் என்று தெளிவாகக் கூறுகிறார். இவர் கருத்தையே அபிராமி அந்தாதியில் ‘தெய்வ வடிவம் தரும்’ என்ற வரியும் நினைவூட்டுகிறது. </p><p>ஆனால் உண்மையில் நடப்பதென்ன? இவ்வுடல் விரைவில் கெட்டு அழியும் வகையில் புகை பிடித்தல், மது அருந்துதல், தகாத உறவில் உடலைக் கெடுத்துக் கொள்ளுதல், போதை மருந்துக்கு அடிமையாகுதல், முக்குண தோஷங்கள் பெருகும் வகையில் எல்லா வேண்டாத பழக்கங்களும் சிவசக்தியை இந்த தேகத்திலிருந்து விரட்டியடிக்க சதி செய்யும். இது எதுவும் இல்லாமல் இயல்பாக நம் மூச்சை நன்கு உள்வாங்கி விட்டாலே காலனை ஏமாற்றலாம் என்பது சித்தர் விதி. கற்பம் நமக்குத் தேவையில்லை அது சமாதியில் போய் அமர்ந்து மகாநிஷ்டையில் இருக்கும் சித்தயோகிகளுக்கே தேவை. </p><p>மச்சமுனி பாடலுக்கு உதாரணம் என் மூதாதையர் ஸ்ரீ விபூதி சித்தர் தாத்தா. நாமக்கல் மாவட்டம் அ.குன்னத்தூர் காவிரிக்கரையில் எம் குலதெய்வ மகாமாரி கோயில் அருகே சமாதியில் இன்றும் அமர்ந்துள்ளார். அவர் கற்பம் உண்டாரா என்பது எனக்குத் தெரியவில்லை ஆனால் ஆழமான நீண்ட வாசியில் தொடர்ந்து நிலைத்துள்ளார். இவர் எனக்கு 13 தலைமுறைகளுக்கு முந்தையவர். சமாதியில் தற்போது அமர்ந்துள்ள இவருக்கு வயது 460. நடுவிலுள்ள படம் 16ஆம் நூற்றாண்டில் சமாதி பிரவேசம் செய்தபோது இருந்த மத்திம வயதுபோல் தெரிகிறது. அதுவே வலதுபக்க முகத்தில் வயதுக்கேற்ற மூப்பு தெரிகிறது. கடந்த குரு பூர்ணிமா அன்று இவருடைய சமாதி பீடத்தில் பால் அபிஷேகம் செய்தனர். அச்சமயம் தன் இருவேறு முகங்களைச் சிவலிங்கத்தில் வெளிப்படுத்தினார். அதை நான் படம் பிடித்துக்கொண்டேன்.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh73G5widtbf6XSrVfWh8HEkcqK_paAALxf50EW96-heRDm9hm-8TWZzLPsMXT5f679knEvRz_0s8-3dN4g9KvsPy1YT0ZAN2gLkHm6q5-2-1ILmVmLdo-0ORgOsAsKfumjH0rIuecMyRnKGhNOAsOQKJ2fm--8xry7exeHEpeiQV_UfilOHC-8NeFzonbt/s1080/FB_IMG_1693105148840.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="370" data-original-width="1080" height="138" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh73G5widtbf6XSrVfWh8HEkcqK_paAALxf50EW96-heRDm9hm-8TWZzLPsMXT5f679knEvRz_0s8-3dN4g9KvsPy1YT0ZAN2gLkHm6q5-2-1ILmVmLdo-0ORgOsAsKfumjH0rIuecMyRnKGhNOAsOQKJ2fm--8xry7exeHEpeiQV_UfilOHC-8NeFzonbt/w400-h138/FB_IMG_1693105148840.jpg" width="400" /></a></div><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p>ஆகவே நம் தேகத்திலுள்ள சிவனையும் சக்தியையும் எவ்விதத்திலும் நிந்தித்துப் பாழாக்காமல் எந்நேரமும் வாசியில் இருந்தால் ‘தான் அவனாகும்’ நிலையை எட்டலாம்.</p><p>-எஸ்.சந்திரசேகர்</p>S.Chandrasekarhttp://www.blogger.com/profile/03904262959636448568noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8748593830588260679.post-65506419551831592712023-08-15T05:58:00.004-07:002023-08-15T05:59:48.845-07:00வைத்தியர் குண லட்சணங்கள்!<p>அகத்தியர் கனகமணி நூறு என்ற நூலில் நோய்விதி, நோயாளி பரிட்சை, வைத்திய செய்பாகம், பிரயோகம், அனுகூலங்கள் எல்லாம் விவரிக்கும்போது யாரெல்லாம் மருந்து செய்து கொடுக்கக்கூடாது என்ற பட்டியலையும் (பா:54) சொல்கிறார்.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEtyCITIxhgD_R6ttCQVqlpTD9b-urOdzevmqvNYs8kJOm4hIqV-MT66T8yoZToQ6GEg2eMW1L3PWMkHAK4b_1QtexPS0YxHnvX1F_w1WCiQYViXveqPl-qSwaelzCA1by9faTAzURDPE5ppfofFjnRleyOzdMgy2gJtyV6-ErQ8V-zN_3viiQEzYl31SH/s885/FB_IMG_1692104043718.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="487" data-original-width="885" height="176" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEtyCITIxhgD_R6ttCQVqlpTD9b-urOdzevmqvNYs8kJOm4hIqV-MT66T8yoZToQ6GEg2eMW1L3PWMkHAK4b_1QtexPS0YxHnvX1F_w1WCiQYViXveqPl-qSwaelzCA1by9faTAzURDPE5ppfofFjnRleyOzdMgy2gJtyV6-ErQ8V-zN_3viiQEzYl31SH/s320/FB_IMG_1692104043718.jpg" width="320" /></a></div><p>அம்பட்டர், வண்ணார், எண்ணெய் வியாபாரிகள், வட்டித்தொழில் ஈட்டுவோர், விஸ்வகர்ம கம்மாளர்கள், குயவர்கள், கள் இறக்குவோர், வேடர்கள், துர்க்குணம் கொண்டோர், முன்கோபிகள், சாஸ்திரங்களை மதிக்காதவர்கள், அன்னமிடாதவர்கள், கருமிகள், நீதிநெறி இல்லாதவர்கள், அக்கிரமக்காரர்கள், தற்பெருமை பேசுவோர், கள்வர்கள், தெய்வபக்தி இல்லாதவர்கள் ஆகியோர் மருந்து செய்து கொடுக்கலாகாதவர்கள் என்கிறார் அகத்தியர்.</p><p>அவர் உரைத்தது இன்றைக்கும் பொருந்துமா என்பது எனக்குத் தெரியாது. செயலால் மனத்தால் வாக்கால் களங்கப்பட்டவர்களும், மாசு நிறைந்த தொழிற்பணி செய்பவர்களும் வைத்தியராக இருக்கவோ மருந்து செய்துகொடுக்கவோ கூடாது என்கிறார். அப்படியே அவர்கள் செய்துகொடுத்தாலும் அபய சுவஸ்தம் என்கிற ஹீலிங் டச் அவர்களிடம் இருக்காது என்கிறார். </p><p>மேற்சொன்ன குலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரவர் ஜனனகால ஜாதக கோள் சஞ்சாரப்படி வைத்தியம் சார்ந்த தொழில் விதிக்கப்பட்டிருந்தால் அதை யாராலும் மாற்றமுடியாது. எனக்குத் தெரிந்து இந்தப் பட்டியலில் வரும் மருத்துவர்களிடம் கூட்டம் வருகிறதைக் காண்கிறேன்.</p><p>அதுபோக வைத்தியரின் லட்சணங்கள் என்னென்ன என்று இன்னொரு பாடலில் சொல்லியுள்ளார். சாந்தகுணமும் சக்தியுள்ளவனாயும், நூல் கற்றவனாய், நன்மைகள் செய்தவனாய், வசீகர சிவப்பு மேனியுள்ளவனாய் இருக்கவேண்டும்; சூரணம் பற்பம் மெழுகு லேகியம் தைலம் ஜெயநீர் சுண்ணம் சரக்குவைப்பு திராவகம் பூநீறுவழலை செய்யத்தெரிந்தவனாய் இருக்கவேண்டும் என்றும்; அஷ்டகர்மம் யோகம் மந்திரப் பிரயோகமும், சக்தி பூஜை செய்பவனாகவும் இருக்கவேண்டும். வைத்தியர் அங்கத்தில் எல்லா அவயங்களும் குறைவின்றி இருக்கவேண்டும். குருடு செவிடு முடம், குருத்துரோகி, ஆகாத குணமுடையோன், ஜீவவதை செய்தவன், கல்வி கற்காதவன், தாய்தந்தையின் சாபம் பெற்றவன், லோபி, வைத்தியனாகத் தகுதியற்றவன் என்கிறார். </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSTUsSMV35NViKnIE4Kanihp3DPOFo_gLGOC1eCk3pPsOcLtCGr1cok9m5FqCn2W2BeWhkqe20nIgaUZm-VSxeF7GGo7aaStdEU4Ss7JCTj_s-mRFNzqF4u2BuxeqytcwLsb9gxah5YEEnYR2OuBrTwrE1YkOUgbBnNj9qxxBEKqH_NdasjmJf4zJe5rIP/s933/Screenshot_2023-08-15-15-04-36-462-edit_com.adobe.reader.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="482" data-original-width="933" height="165" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSTUsSMV35NViKnIE4Kanihp3DPOFo_gLGOC1eCk3pPsOcLtCGr1cok9m5FqCn2W2BeWhkqe20nIgaUZm-VSxeF7GGo7aaStdEU4Ss7JCTj_s-mRFNzqF4u2BuxeqytcwLsb9gxah5YEEnYR2OuBrTwrE1YkOUgbBnNj9qxxBEKqH_NdasjmJf4zJe5rIP/s320/Screenshot_2023-08-15-15-04-36-462-edit_com.adobe.reader.jpg" width="320" /></a></div><p>ஆக லட்சணங்கள் பொருந்திய உத்தம வைத்தியரிடம் அணுகி மருந்து வாங்கி உண்டால், கொடுநோயெல்லாம் குணமாகும். அத்தகைய வைத்தியர்களுக்கு நிதி, வஸ்திரம், நெல்லரிசி, பண்டங்கள், தாம்பூலம் வைத்துத்தந்து கௌரவித்து அவர்கள்பால் பக்தி விசுவாசம் கொள்ளவேண்டும் என்று அகத்தியர் உரைக்கிறார்.</p><p>எங்கள் ஊரில் மொண்டி வைத்தியர் ராமலிங்கம் என்பவர் இருந்தார். திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த அவர் கைராசியும், தொழில் சுத்தமும் நிறைந்தவர் என்று என் தாத்தா சொல்லக்கேட்டுளேன்.</p><p>ஆக, இதெல்லாம் பொதுவான விதியாகக் கொண்டாலும் அவரவர் கர்ம வினைக்கேற்பத்தான் கைராசி வைத்தியர் அமைவதும் நோய் குணமாவதும் உள்ளது. அகத்தியரின் பாடல்களைத் தோண்டி ஆராய்ந்து இக்காலத்தில் இவ்விதிகள் சரியா? சாதிபேதம் தகுமா? மருத்துவத்தை வியாபாரமாக்குவது சரியா? என்ற போக்கில் அதில் குற்றம் குறை காணாது இருப்பது நலம்.</p><p>- எஸ்.சந்திரசேகர்</p>S.Chandrasekarhttp://www.blogger.com/profile/03904262959636448568noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8748593830588260679.post-37949597055735199192023-07-30T08:39:00.002-07:002023-07-30T08:39:32.216-07:00மந்திர சுவரூபமாகும் சொற்கள்!<p>சங்க இலக்கியங்களில் பலவிதமான கவிப்பாடல்களைப்பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம். பக்தி, சந்தான விருத்தி, ஆயுள் ஆரோக்கிய ஆசிகள் நல்கும் வாழ்த்து, வேதனைப்படும் உயிர் விடுதலை பெற பிரார்த்தனை, எதிரியைத் தண்டிக்க அறம் பாடுதல், சரம கவி இயற்றல் என்று பல்வேறு ரகங்கள் உள்ளன. உற்ற நேரத்தில் அருள்புரி என்று சித்தர்களை, குலதெய்வத்தை வேண்டிப்பாடினால் உடனே நிறைவேறும்.</p><p>இதெல்லாம் நம்பும்படி இல்லை என்று இக்காலத்தில் நினைப்போரே அதிகம். சமஸ்கிருதம் தமிழ் மட்டுமல்ல எந்த மொழியில் பாடினாலும் பலன் உண்டு. பாடும் கவிஞனின் மனத்திலும் வாக்கிலும் பாடப்படும் கவிப்பாடலிலும் தன்னலமற்ற சக்திவாய்ந்த பிரயோகமும் தெய்வீகமும் இருக்கவேண்டும். அக்காலத்தில் ஔவையார், காளிதாசன், நந்திவர்மன், கம்பன் போன்றோர் பாடிய கனமான நடையில் நிறை இலக்கணம் ஏற்றிய பாடல் போன்று இருக்கவேண்டும் என்பதில்லை. எழுதப்படிக்கத் தெரியாத ஊமையன் மானசீகமாகப் பாடினாலும் அதற்குப் பலனுண்டு.</p><p>சமூக வெளியில் இரண்டு வரிகளில் வாழ்த்துவது இயல்பான ஒன்று. ஆனால் கூடியவரையில் நெருங்கிய நட்புகளை வாழ்த்த பிரத்தியேக தனிப்பாடல்களைத் தமிழிலோ, ஆங்கிலத்திலோ அக்கணம் தருவது என் பழக்கம். நாம் பாடும் நேரம் நம்முடைய ஜீவகாந்த எண்ணங்கள் பரமாகாச வெட்டவெளியில் எதிரொலிக்கும், அந்த அலைகள் ஜீவராசிகள் மூலம் கடத்தப்பட்டு அந்தந்த நபரை வந்தடையும். அவர்களும் உடனே அதை உணர்ந்து ஆமோதிப்பார்கள். எனக்குத் தெரிந்து மதுரை சென்னை இலங்கை லண்டன் ஆகிய தலங்களிலுள்ள நண்பர்கள் என் எண்ணங்களைத் திறம்பட கிரகிக்க முடிகிறது. இங்கே அவர்களுடைய பெயர்களைச் சொல்லக்கூடாது.</p><p>அன்றாடம் எந்த மனநிலையில் இருந்தாலும் நல்ல இன்சொற்கள் சொன்னால் மட்டும் போதுமா? போதாது! ஏன்? சில சமயங்களில் வாக்குவாதம் முற்றிப்போய் பாதிக்கப்பட்டவர் கோபத்தில் “நீங்க நல்லா இருப்பீங்கடா” என்று அழுதுகொண்டே அனல் கொதிக்கும் புண்பட்ட மனத்துடன் சொன்னாலும் அது கேடு விளைவிக்கும். “மனஸா வாச்சா கர்மனா” என்றுதான் கிருஷ்ணர் சொல்கிறார். </p><p>“ஆமா, சொன்னா உடனே பலிக்குற அளவுக்கு இக்காலத்துல ஒரு பய கிடையாது. இப்படி சும்மா உதார் பேசி பயமுறுத்துறாங்க” என்று தவறாக எண்ணுவோர் உண்டு. கல், தாவரம், மீன், பறவை, நாய், பசு, மனிதர் என்று இப்பிரபஞ்சத்திலுள்ள எல்லா சரம்-அசரம் ஜீவனும் சக்தி அலைகளை வீசும் நம்மை வாழ்த்தும் என்பதை மறந்திடக்கூடாது.</p><p>இரண்டு நண்பர்களுக்காக வாழ்நாளில் இதுவரை இருமுறைதான் மோட்ச கவி பாடியுள்ளேன். பாடிய இரண்டே சாமத்தில் அவர்கள் இறையடி சேர்ந்தனர். பதிவிடும் பதிகங்களின் வீரியத்தை அப்போதுதான் இறைவன் எனக்கு உணர்த்தினான். அது முதலே சொற்பிரயோகங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கிறேன். ஓம் நமசிவாய! 🙏</p><p>-எஸ்.சந்திரசேகர்</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBv_iUn4JWRfKwWw4w0sceGfrBy1zM8VAOdPr4bawTFVpn1ySe51F5gRW1_JWEiSpdtLaXhwOO9RUDLmRH3jDaidwWIWjfnmI6maRK4MJCFqNjMkH2Amrm3JoMpyxH-WiFeXaum9ufLLNcSk-ZOArxKQ0MzpFk_qAIJrLAQmac0HcHDrld39fm-wlebeON/s749/IMG-20230618-WA0005.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="673" data-original-width="749" height="288" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBv_iUn4JWRfKwWw4w0sceGfrBy1zM8VAOdPr4bawTFVpn1ySe51F5gRW1_JWEiSpdtLaXhwOO9RUDLmRH3jDaidwWIWjfnmI6maRK4MJCFqNjMkH2Amrm3JoMpyxH-WiFeXaum9ufLLNcSk-ZOArxKQ0MzpFk_qAIJrLAQmac0HcHDrld39fm-wlebeON/s320/IMG-20230618-WA0005.jpg" width="320" /></a></div><br /><p><br /></p>S.Chandrasekarhttp://www.blogger.com/profile/03904262959636448568noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8748593830588260679.post-6548606511523878382023-07-18T20:12:00.001-07:002023-07-18T20:13:18.147-07:00பிறவி எடுக்க அச்சம், பாவம் செய்ய மோகம்!<p>மனிதன் மரணித்தபின் அவ்வுடலைத் தகனம் செய்யாமல் வைத்தால் என்னவாகும்? </p><p>இயற்கையாகச் சித்தியாகும் யோகிகளின் தேகம் பல மணிநேரங்கள்/ நாட்கள் ஆகியும்கூட கெடாமல் இருந்துள்ளது. ஆனால் நம்மைப்போல் சாதாரண மனிதர்களின் நிலை அப்படியல்ல. அவரவர் உடல்வாகைப் பொறுத்து வெப்பம் மெள்ளக்குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமல் போகும். அந்தச்சருமம் உயிரோட்டப் பொலிவை இழந்து மாற்றமடையும். என்னதான் வாசனாதி ஊதுபத்திகள் ஏற்றினாலும் அதன் மண இயல்பை மாற்றும் வல்லமை தசவாயுக்களுக்கு உண்டு. </p><p>1 நாள் கழித்து ஈக்கள் முட்டையிடத் தொடங்கும், 2 நாள் கழித்துப் புழுக்கள் தோன்றுகின்றன, 3 நாட்களில் நகங்கள் விழும், 4 நாட்களில் ஈறுகள் கரையும், 5 நாட்களில் மூளை உருகும், 1 வாரத்தில் வாயு தேங்கி வீங்கி வயிறு வெடிக்கும், 2 மாதங்களில் உடல் உருகித் திரவமாகிறது. தக்க சீதோஷ்ண நிலை உறுதுணையாக இருந்தால் உடல் நிலைப்பொறுத்து ஒரு மாதத்திலேயே சதையும் கொழுப்பும் ஒழுகிக் காணாமல் போகும். ஆக எப்படியும் அறுபது நட்களுள் அடையாளம் இல்லாமல் வெறும் எலும்புக்கூடு மட்டுமே மிஞ்சும்.</p><p>பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். ஒரு வருடத்திற்குள் ஒரு புழு/பூச்சி (ஆண்/ பெண்) உருவாகி வயிற்றில் தங்காதா என்று புதிதாய்த் திருமணமான பெண்ணின் உறவுகள் காத்துக் கிடக்கும். யாத்திரைப் போகாத தலங்கள் இல்லை, இருக்காத விரதங்கள் இல்லை, பார்க்காத வைத்தியர் இல்லை, எடுக்காத முயற்சிகள் இல்லை என்று பெரும் கடுந்தவத்திற்குப்பிறகு கரு தரித்து வயிற்றில் ஒரு சிசு உருவாகி, பிரம்மப்பிரயத்தனத்திற்குப் பிறகு பிரசவத்தில் குழந்தைப் பிறக்கிறது. </p><p>கர்ப்பத்தில் இருக்கும்போது முதல் 2-3 மாதங்கள் சதைப்பிண்டமாக இருந்தபின் ஆறு மாதங்களில் விதிக்கப்பட்ட ஆன்மா ஒன்று அதில் நுழைந்துத் தங்கும். அப்போது ஊழ்வினை கனத்தால் தலை குப்புற கவிழும். வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்த நீர் நிறைந்த கருவறைக் குடத்தினுள்ளே அச்சத்தில் அவ்வான்மா திணறும் தப்பிக்க நினைக்கும். “நான் போன பிறவிகளில் ஆட்டம் போட்டேன், தலைக்கனம் பிடித்து ஆணவத்தில் பாவங்கள் புரிந்தேன், இனி செய்ய மாட்டேன். மன்னித்துவிடு. தப்பிக்க வழியற்ற ஆரண்யத்திலிருந்து என்னைப் போகவிடு இறைவா” என்று மன்றாடிக் கெஞ்சும். </p><p>ஆனால் தூய்மையாகப் பிறந்தபோதும் உள்ளே இருக்கும் திமிரு பிடித்த ஆன்மா மெள்ள தன் வாசனையை உணர்ந்து மீண்டும் ஆட்டம் போடும். கர்ப்பத்தில் இருந்தபோது இறைவனிடம் சத்தியம் செய்து கெஞ்சியதை காற்றில் விடும். காலப்போக்கில் பிராரப்த கர்மாவின் பிடியில் சிக்கி விட்டகுறைப்பயனாக மீண்டும் ஆகாம்ய பாவங்கள் ஈட்டி நரகதிக்கு வழி தேடிக்கொள்ளும்.</p><p>மரணித்தபின் வெளியேறிய ஆன்மா போக்கிடம் இல்லாமல் அங்கேயே சுற்றிக்கொண்டு இருக்கும். மீண்டும் அந்த உடலுக்குள் எப்படியேனும் நுழைய வழியுண்டா என்று தவிக்கும். ஆனால் உடலின் நவதுவாரங்களை அடைத்துவிடுவார்கள். இறுதியாக அது ஆசனவாய் வழியாகவாவது நுழைய முடியுமா என்று நினைக்கும். ஆனால் கால் கட்டைவிரல்களைச் சேர்த்து இறுகக்கட்டிவிட ஆசனவாய் வழியும் மூடிவிடும். அதன் கடைசி முயற்சியும் தோல்விதான். தகனமாகிக் காரியங்கள் முடிந்து கடைசி நாளில் சூட்சும தேகம் பெறும் அந்த ஆன்மாவைக் கிங்கர்கள் இழுத்துப் போவார்கள். </p><p>அச்சமூட்டும் கர்ப்பத்திலிருந்து வெளியே தப்பித்துப்போனால் போதும் என இருந்த நிலை மாறி, கடைசியில் வெளியே போன ஆன்மா மீண்டும் அவ்வுடலுக்குள்ளே வர வழியில்லையா இறைவா என்று கதறும். அது இறைவனைத்தவிர அதன் வீட்டார் யார் காதுகளுக்கும் விழாது. அதன் வாரிசு எள்ளும் நீரும் இறைத்து அதற்குப் பிண்டம் வைத்துச் சோறு போட்டால் உண்டு. இல்லாவிட்டால் போக இடமின்றிக் கோபமாக அலைந்துத் திரியும். </p><p>கோபப்பட அதற்கு யோக்கியதை உண்டா? உயிருடன் இருக்கும்போது ஆட்டம்போடு என்று இறைவனா சொன்னான்? மேன்மேலும் வினைகளைச் சேர்த்துக்கொள்ளச் சொன்னது யார்? “நான் ஆதியில் படைத்து உயர்நிலைக்கு அனுப்பிய ஆன்மா எப்படி அப்பழுக்கில்லாமல் தெய்வீகமாய் இருந்ததோ அப்படித்தான் என்னிடம் வந்து சேரவேண்டும். தக்க குருநாதர் வந்து உன்னை நல்வழிப்படுத்தும்வரை பிறவிதோறும் அடிபட்டு மிதிபட்டுப் பாடம் கற்றுக்கொள்” என்பான். அந்த ஆன்மா பாவம் செய்து கெட்டதாகவே இருந்தாலும் அதன் சந்ததியர் அதைத் தென்புலத்தார் என்ற அளவில் கும்பிடவேண்டும், அதனிடம் ஆசி பெற வேண்டும் என்கிறது நம் சாஸ்திரம். </p><p>ஆதலால் இப்பிறவியில் இக்கண்ணாமூச்சி விளையாட்டிலிருந்து நாம் தப்பிக்க வேண்டுமானால் தர்மநெறி பின்பற்றி, குருவின் சொல் ஏற்று அதன்படி நற்கதிக்கு வழியைத்தேடி மோக்ஷம் அடையவேண்டும்.</p><p>- எஸ்.சந்திரசேகர்</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3DvZ0R7jd7ZOAXLHe8hc__2uJRAqP4tQtzayHxrPpCAULtZ96yYTlAEm7Uv-aeZXhMrCglpA-3katIm3sHOewl6t_jEt9lU4-fIvj_CodZiR8Tn6uD3ZWERklrmPwUpWEBJjlB_S7-iIBlaAi_PVu4uGKHjgzHxk0QM8NulHWxmKnSD50wOROW4-e_Fwa/s586/FB_IMG_1689736271572.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="463" data-original-width="586" height="253" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3DvZ0R7jd7ZOAXLHe8hc__2uJRAqP4tQtzayHxrPpCAULtZ96yYTlAEm7Uv-aeZXhMrCglpA-3katIm3sHOewl6t_jEt9lU4-fIvj_CodZiR8Tn6uD3ZWERklrmPwUpWEBJjlB_S7-iIBlaAi_PVu4uGKHjgzHxk0QM8NulHWxmKnSD50wOROW4-e_Fwa/s320/FB_IMG_1689736271572.jpg" width="320" /></a></div><br /><p><br /></p>S.Chandrasekarhttp://www.blogger.com/profile/03904262959636448568noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8748593830588260679.post-38241800018838388642023-07-13T20:22:00.001-07:002023-07-13T20:22:47.893-07:00அடிமுடி சித்தர்<p>அடி அண்ணாமலை கிரிவலப் பாதையில் அடிமுடி சித்தரின் ஜீவசமாதி உள்ளது. இவர் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து அரிய மூலிகை மருத்துவத்தால் பக்தர்களின் நோயை குணமாக்கியவர். நவகண்ட யோகம் செய்தவர். கல்லைத் தொட்டுத் தந்தால் தங்கமாகும், காய்ந்த இலையைத் தந்தால் திருநீறாக மாறும். இந்த அடிமுடி சித்தர்தான் முதன்முதலில் கிரிவலப் பாதையை ஏற்படுத்தினார்.</p><p>இவருடைய குரு கௌதம முனிவர். இவர் கிரிவலப் பாதையை ஏற்படுத்தும்போது அங்கே வழியில் அகலாமல் இருந்த பெரிய கனமான பாறை ஒன்றைத் தன் ஜடாமுடியால் கட்டி இழுத்து ஓரமாகப் போட்டாராம். இன்றும் கௌதம நதி இவ்வூருக்கு அருகாமையில் ஓடுகிறது. மாசி மகம் தீர்த்தவாரி உற்சவம் அங்கு நடக்கும். அதை நம்முடைய பழைய பதிவில் விரிவாகப் பார்த்துள்ளோம்.</p><p>பறக்கும் பெண் சித்தர் அனந்தாம்பாள் (எ) ஸ்ரீசக்கரம் (எ) சக்கரை அம்மாவுக்கு உபதேசம் தந்த குருதான் அடிமுடியார். இவர் சர்வ சாதாரணமாகப் பல அற்புதமான சித்துகளை நிகழ்த்தியவர்.</p><p><span style="color: #2b00fe;">அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே</span></p><p><span style="color: #2b00fe;">அருணாசலக் குமரா அருணகிரிக்கு அருளியவா</span>... (கந்த குரு கவசம், பா.45)</p><p>-எஸ்.சந்திரசேகர்</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIDmzvBeTsekAuMBdbhXeKTQKfgDxGfRqeyVxOv5G8rm_iyml2yvHCdNlXTPycR7YxRDfKb7FnwI5Gc9bbnzhguYXiXAqBlzGv36Cctb7h3bgquoJrrP1jVi6V_LNneSTiXagZHWtcrKK3qamcPgDLuZbnSQhQwluTp9ZSMrl8OAeIHbVnl_MfkUB38EYp/s1358/Screenshot_2023-07-12-15-19-37-752-edit_com.facebook.katana.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1358" data-original-width="963" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIDmzvBeTsekAuMBdbhXeKTQKfgDxGfRqeyVxOv5G8rm_iyml2yvHCdNlXTPycR7YxRDfKb7FnwI5Gc9bbnzhguYXiXAqBlzGv36Cctb7h3bgquoJrrP1jVi6V_LNneSTiXagZHWtcrKK3qamcPgDLuZbnSQhQwluTp9ZSMrl8OAeIHbVnl_MfkUB38EYp/s320/Screenshot_2023-07-12-15-19-37-752-edit_com.facebook.katana.jpg" width="227" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoHAIiiQUbsdkamNjP43cCkupqspZ2mQhNkIspn0cp18uCAMz3QAC3hj-mnXElYt9q6Qrnagxfru9_R1Vk4tX3gxcuoTAcSLlBYtwSuUjTD_H5tInWCxqiwq9CM8X2sqO7L5W6RsFkrecZkOvnpEvPZyMHs4VDLa5gVCWhLsCEt5bVDb4xb9S_WN9DEidh/s923/Screenshot_2023-07-12-15-20-21-763-edit_com.facebook.katana.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="520" data-original-width="923" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoHAIiiQUbsdkamNjP43cCkupqspZ2mQhNkIspn0cp18uCAMz3QAC3hj-mnXElYt9q6Qrnagxfru9_R1Vk4tX3gxcuoTAcSLlBYtwSuUjTD_H5tInWCxqiwq9CM8X2sqO7L5W6RsFkrecZkOvnpEvPZyMHs4VDLa5gVCWhLsCEt5bVDb4xb9S_WN9DEidh/s320/Screenshot_2023-07-12-15-20-21-763-edit_com.facebook.katana.jpg" width="320" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><br /><p><br /></p>S.Chandrasekarhttp://www.blogger.com/profile/03904262959636448568noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8748593830588260679.post-81813784781308863772023-07-11T02:18:00.003-07:002023-07-11T02:18:29.273-07:00தில்லையில் வாழ்ந்த மூவாயிரம்!<p>அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நான் முதுகலை படித்தபோது தவறாமல் கோயிலுக்குப் போவேன். அவ்வூரில் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தீட்சிதர் குலத்தின் மூத்தவர்களைப் பார்ப்பேன். அவர்கள் கருத்த தேகத்துடன் இருந்தனர். தூரத்திலிருந்து பார்த்தால் யார் என்றே தெரியாத அளவுக்கு நிறம். நெற்றியில் விபூதி பட்டை, பூணூல், முன் குடுமி மட்டும் பளிச்சென்று தெரியும். இவர்களுடைய கருத்த தோற்றத்திற்கான காரணம் அப்போது எனக்குத் தெரியாது.</p><p>இவர்கள் தங்களுக்குள்ளேயே சம்பந்தம் செய்து கொள்வதால் தங்கள் ஆதிகுடி மரபணு தன்மையின் அடையாளத்தை இழக்காமல் உள்ளனரோ என்று நினைப்பேன். அவர்களுடைய பழைய ஓடு வீடுகள் பலகாரக்கடையைப்போல் பொலிவின்றி இருந்தது. ஓரிருவர் வீட்டு வாசலில் மட்டும் சைக்கிள் இருந்தது. இன்றைய தலைமுறையினரின் தோல் நிறம் மெள்ள மாறி வருவது கண்கூடு. வாழ்வாதாரம் ஊசலாடுவதால் இதுவரை ஆற்றிய சிவத்தொண்டு போதும் என்று முடிவெடுத்து சில ஆண் வாரிசுகள் வேறு வேலைக்குப் போய்விட்டனர். தில்லைக்கு உள்ளேயே சொந்தங்களில் சம்பந்தம் செய்து வருவதால் குழந்தைப்பேறு இல்லாமல் போகும் நிலையே உள்ளது. அதனால் இக்காலத்தில் கோத்ர பிரவரம் சம்பிரதாயம் மீறி தீட்சிதர்கள் மணமுடிக்க சாத்தியமுண்டு.</p><p>கடந்த வாரம் தீட்சிதர்களை இலக்காக வைத்து நடந்த அக்கப்போர் அனைவரும் அறிந்ததே. சந்தடி சாக்கில் அவர்களைப் பற்றிய வதந்திகளும் பரப்பப்பட்டன. அது என்ன? பராந்தக சோழன் வேய்ந்த பொன் கூரையின் ஆணிகளைப் பிய்த்து எடுத்து தீட்சிதர் குடும்பத்துப் பெண்கள் நகை செய்து கொள்கிறார்களாம். கனகசபை மீது ஏறி நின்று தரிசிக்க அங்கே பணம் தர வேண்டுமாம். சிவன் சொத்தை விற்று ஜீவனம் செய்கிறார்களாம். இப்படிச் சில பரப்புரைகள். கனகசபை சர்ச்சை இன்னொன்று. கனகசபை மேடை என்பது சிறப்பு நாளில் இறைவனை அங்கே எழுந்தருளச்செய்து அபிஷேகம் பூசைகள் நடத்தும் புனிதமான இடம். அவர்களைத் தவிர யாரும் அங்கே நிற்கவோ பஞ்சாட்சரப்படி ஏறி மிதிக்கவோ விதியில்லை. ஆனாலும் கடந்த சில ஆண்டுகளில் அதை அனுமதித்தனர். இப்போது சீருடையில் பெண் காவலர்கள் உள்ளே திபுதிபு என ஏறிப்போய் நிற்பதை டிவியில் காட்டினார்கள். 🤔</p><p>"சிவன் சொத்து குல நாசம்" என்ற முதுமொழி இவர்களுக்குப் பொருந்தாது. மூத்தவனாம் சிவனின் சொத்து இவர்கள் சொத்து, இவர்கள் உண்ணும் சோறு சிவனுடையது. கைலாய பூதகணங்கள் எல்லாம் அந்தணர்களாகி சிவனிடம் தீட்சை பெற்றபின் சிவனே இவர்களைத் தில்லையில் அமர்த்தினான். அவர்களே தில்லை மூவாயிரத்தார் (எ) தீட்சிதர்கள். இவர்களைப் பேணினால் சிவத்தொண்டு புரிந்த புண்ணியம் கிட்டும் என்பதால் ஒவ்வொரு காலகட்டத்தில் மன்னர்கள் கோயிலை விரிவாக்கி நிலங்கள் மானியங்கள் வழங்கினார்கள். இன்று பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் எங்கே உள்ளது, எங்கே போனது என்பது இவர்களுக்கே தெரியாது. அதிக அளவில் அந்நியர் படையெடுப்பின்போது கோயில் சூறையாடப்பட்டது என்று வரலாறு சொல்கிறது. </p><p>தில்லை அந்தணர்களை வைத்தே ஈசன் பல திருவிளையாடல்கள் புரிந்தான் என்கிறது திருத்தொண்டத்தொகை மற்றும் பெரியபுராணம். நந்தனாரின் மேன்மை, பூட்டிக்கிடந்த அறையிலிருந்து எடுத்து நம்பியாண்டார் நம்பி தொகுத்த திருமுறைகள், மாணிக்கவாசகர் பாடியதை ஈசனே சுவடிகளில் தன் கையால் படியெடுத்த நிகழ்வு, போன்ற பலவற்றைச் சொல்லலாம்.</p><p>இக்குலத்தினரின் எண்ணிக்கை இன்று 150ஐ தாண்டவில்லை. ஆண்- பெண் சதவிகிதம் சமன்பாடின்றி உள்ளதும் கஷ்டம்தான். அவர்களை நசுக்கிவைக்க சமூக-அரசியல் எதிர்ப்புகள் வலுக்கின்றன. ஒரு கட்டத்தில் ஆதி தீக்ஷிதர் வம்சத்தில் அந்த ஆதி மரபணு தொடராத நிலை வரலாம். இக்கலியுகத்தில் அவர்களுக்கு விதிக்கப்பட்டது அவ்வளவுதான் என்றாலும் இன்றும் அவர்களுள் சிவனும் ஒருவனாக இருந்து அவர்களைக் காத்து வழி நடத்துவது சிறப்பு. தனி நபர் அளவில் அவர்கள் செய்யும் தவறுகள் ஏதும் இருப்பின் அது அவர்களையும் சிவனையுமே சேரும். டிவி செய்திகளைப் பார்த்து இவர்களைப் பற்றி ஆர்வக்கோளாறில் நாம் விமர்சனம் என்ற சிவநிந்தனையைச் செய்யாமல் இருப்போம். 🕉️🙏</p><p>-எஸ்.சந்திரசேகர்</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXy6RS5Lx5iZ46By8Rohdkw9Jp1grv7YweEVoQUcfbWrwy1ZkuVoOwkAERPW-F5jGTXrAKdtrECrKSiyI_a-fBsgrGioP50yVDM5TKvYMCXawDs_AQbWRambTJ-vxKM1HZ3lqAvZaecvCmM5K-7XpIcFTLpEYGUwktJK__HsCL09Q6g4vZl_0viF67yhYu/s1071/Screenshot_2023-07-01-21-48-02-789-edit_com.facebook.katana.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1071" data-original-width="1024" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXy6RS5Lx5iZ46By8Rohdkw9Jp1grv7YweEVoQUcfbWrwy1ZkuVoOwkAERPW-F5jGTXrAKdtrECrKSiyI_a-fBsgrGioP50yVDM5TKvYMCXawDs_AQbWRambTJ-vxKM1HZ3lqAvZaecvCmM5K-7XpIcFTLpEYGUwktJK__HsCL09Q6g4vZl_0viF67yhYu/s320/Screenshot_2023-07-01-21-48-02-789-edit_com.facebook.katana.jpg" width="306" /></a></div><br /><p><br /></p>S.Chandrasekarhttp://www.blogger.com/profile/03904262959636448568noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8748593830588260679.post-61944922664587269642023-07-06T18:30:00.003-07:002023-07-06T18:30:45.030-07:00ஒரு யோகியுடன் உரையாடல்!<p>என் மெசஞ்சர் உள்பெட்டியில் பலருடன் பேசிய மிகப்பழைய உரையாடல்கள் எல்லாம் இருக்கிறது. அதில் வேண்டாத சிலவற்றை நீக்கலாமென நினைத்து பார்வையிட்டேன். நான் மறந்துபோன /தொடர்பில் இல்லாத பல பெயர்கள் இருந்தன. அதில் ஓர் உரையாடல் மதுரையைச் சேர்ந்த வாசி/அஷ்டாங்க யோகி திரு. வி. ராஜா கிருஷ்ணமூர்த்தி அவர்களுடையது.</p><p>ஏழாண்டுகள் பழைமையான தகவலைத் திறந்து வாசிக்கும்போதுதான் இருவரும் என்னென்ன உரையாடினோம் என்பது புலப்பட்டது.</p><p>என் ஆன்மிக நிலையைப் பற்றியும் பின்புலத்தில் என்னைக் கண்காணித்து வழிநடத்தும் சித்தர்கள் பற்றியும் அதில் சொல்லியிருந்தார். பெரும்பாலும் ஐயா இரவில்தான் தொடர்பில் வந்துள்ளது தெரிந்தது.</p><p>என் பிறப்பு முதல் சித்தர் போகர் பிரான் என் தீக்காயத்திற்கு வைத்தியம் செய்தது வரை துரிய தியானத்தில் சென்று அவர் கண்டுணர்ந்து விவரித்தார். வாசி/ அஷ்டாங்கம் குறித்து விவாதங்கள் செய்துள்ளேன். ஒருவர் மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்திட வாசியும், உடல் அழியாமல் இருக்க அஷ்டாங்கமும் தேவை என்றால் எதைத் தேர்ந்தெடுத்து ஆழமாகக் கடைப்பிடிப்பது? என்று கேட்டேன். அதற்கு அவர் சிலருடைய விருப்பங்களைச் சொல்லி தன்னுடைய கட்டுரையின் link-ஐ அனுப்பினார். அதன்பின் இடைப்பட்ட காலங்கள் நான் அவருடன் தொடர்பில் இருக்கவில்லை.</p><p>ஆக நம் ஆன்மா மீண்டும் பிறக்காமல் இருப்பதே மரணமில்லாத பெருவாழ்வு. இந்த உடலுக்கு அழிவே வராமல் இருக்க வேண்டுமானால் அது உயர் வித்தை. அதை நிலைநிறுத்த உபாயங்கள் தேவை என்று சித்தர்கள் சொல்லியுள்ளனர். "வந்த நோக்கமும் யுகாந்திர காலமும் முடிந்தால் கல்பதேகமும் ஒருநாள் மண்ணுக்கும் போகவேணும்" என்று சித்தர் பாடல்கள் குறிப்பிடுவது மெய். சித்தியும் யோகமும், சித்தியும் மருத்துவமும் இரு வழித்தடங்களாக இருந்து வருகிறது. சமாதியில் அமர்ந்த சித்தர்களில் சிலர் காயகற்பம் உண்டும், சிலர் யோகம் மட்டுமே கையாண்டும் இருந்தனர் என்பது தெரிகிறது.</p><p>நம்மைப் பொறுத்தவரை ஆன்மாவுக்கு வீடு கிடைத்தாலே உத்தமம்! இவ்வுடலை உறுதியாக்கிக் குறிக்கோளின்றி நீட்டித்து வைத்துக்கொண்டு இக்காலத்தில் என்ன செய்ய? </p><p>"<span style="color: #2b00fe;">பின்கலையும் இடகலையும் மாறும் போது</span></p><p><span style="color: #2b00fe;">அறிவான சுழிமுனையில் மனதை வைத்து</span></p><p><span style="color: #2b00fe;">அசையாமல் ஒருமனதாய்ப் பார்க்கும் போது</span></p><p><span style="color: #2b00fe;">குறியான சிவயோகம் சித்தியாச்சு</span></p><p><span style="color: #2b00fe;">கோடி சென்மம் சித்தரைபோல் வாழலாமே"</span></p><p>என்பது வாசியோகம் பற்றி சித்தர்களின் வாக்கு. </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqZYuWQvXPhXvC2LtjBeKgGcDvf0F6ohiT5mTDRCuWv7qBklI1JDmxKdDwElDFKjodn3trU__URSsKUxTmx1nkrgTBClFI4-o2xrbDDEkZzdmkCYI29oknxT4MWbq2t8BOuglenrkYoHAPnkaWacbiOh6j-wSz8B90i-3dRNN2BJdIvPMNOkMngdBnZEvu/s1056/Screenshot_2023-07-05-23-02-53-427-edit_com.facebook.orca.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="785" data-original-width="1056" height="238" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqZYuWQvXPhXvC2LtjBeKgGcDvf0F6ohiT5mTDRCuWv7qBklI1JDmxKdDwElDFKjodn3trU__URSsKUxTmx1nkrgTBClFI4-o2xrbDDEkZzdmkCYI29oknxT4MWbq2t8BOuglenrkYoHAPnkaWacbiOh6j-wSz8B90i-3dRNN2BJdIvPMNOkMngdBnZEvu/s320/Screenshot_2023-07-05-23-02-53-427-edit_com.facebook.orca.jpg" width="320" /></a></div><p><br /></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuZtHXDJwdirtHDArzDo82vo8ap257pBF4pu2_iLwR57CFdZIWMkEU2E1Vb08bjRAsYol2jepfUEeoPWfp1Mjs5OxWxvP2T6yH-fhB6dbYTUMM_kYyqbj6RpnwutpBvCwwcIFmqJ23u3I5C-oHSHT9kYxHjn_qI0zfrHkL1OaVB_lOixlTsf9k2O7SdHp8/s1080/Screenshot_2023-07-05-23-03-37-039-edit_com.facebook.orca~2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="959" data-original-width="1080" height="284" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuZtHXDJwdirtHDArzDo82vo8ap257pBF4pu2_iLwR57CFdZIWMkEU2E1Vb08bjRAsYol2jepfUEeoPWfp1Mjs5OxWxvP2T6yH-fhB6dbYTUMM_kYyqbj6RpnwutpBvCwwcIFmqJ23u3I5C-oHSHT9kYxHjn_qI0zfrHkL1OaVB_lOixlTsf9k2O7SdHp8/s320/Screenshot_2023-07-05-23-03-37-039-edit_com.facebook.orca~2.jpg" width="320" /></a></div><p><br /></p><p>ஐயா அவர்கள் சொன்னதுபோல் இது எனக்குச் சித்தி ஆனதா? ஆகியது என்பதை இரு தருணங்களில் கண்டு உணர்ந்தேன். எப்படி என்பதைச் சொன்னால் அச்சப்படுவீர்கள் என்பதால் இங்கே சொல்லாமல் ரகசியமாக வைக்கிறேன். வாசியோகப் பயிற்சி என எனக்கு எதுவுமில்லை என்றாலும் ஜாதக ரீதியாகக் கோள்களும், மூதாதையர் ஆசியும் என்னுள் வாசியை இயல்பாய்த் தூண்டி நடத்தியுள்ளது என்பது புரிந்தது. எல்லாம் சிவசித்தம். 🕉️</p><p>-எஸ்.சந்திரசேகர்</p>S.Chandrasekarhttp://www.blogger.com/profile/03904262959636448568noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8748593830588260679.post-24360212637374306002023-06-25T09:24:00.004-07:002023-06-25T20:05:46.958-07:00சிறியாநங்கை-சீந்தில் கிருதம்!<p>சிறியாநங்கை என்ற மூலிகை விஷ ஜந்துக்களை அண்டவிடாது. அதனால் வேலியோரம் நிறைய இருக்கும். மஞ்சள்காமாலை, கல்லீரல் பிரச்சனை, காய்ச்சல், சளி, உடலில் வீக்கம், மதுமேகம் (டையாபடிஸ்) போன்றவகைகளுக்கு மட்டும் பயன்படுவதில்லை. அது யோக மார்க்க உயர்வுக்கும் சின்மயத்தில் ஒளியைத் தரிசிக்கவும் காரணமாக உள்ளது என்றால் மிகையில்லை. இதுபோன்ற மூலிகை அஷ்டகர்மத்திலும் பயன்படும். </p><p>எந்த ஒரு பச்சிலை மூலிகையாக இருந்தலும், அதைப் பறித்து உபயோகப்படுத்த நம் உடல்நிலை ஏற்றம் பெறும் அதோடு அதன் ஆன்மா மேன்மை அடையும். விதியாளியின் கர்மவினைக்கேற்ப அம்மருந்து உடலிலும் யோகத்திலும் செயல்படும் என்பது சித்தர் விதி. </p><p>தோட்டத்திற்குப்போய் கீரை பறிப்பதுபோல் மருத்துவ மூலிகைகளை பறித்தேன் எடுத்தேன் என்று வந்திட முடியாது. அதற்கும் உயிர் சக்தி, மந்திர சக்தி உள்ளது, என்பதால் அதனிடம் மந்திரம் ஜெபித்துச் சாப நிவர்த்தி செய்துகொள்ளவேண்டும். இது சைவ மார்க்கத்தின் சிறப்பு.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfJTuwRlDUJouj4-7OFQ6yuGaG2uB2H8oXhI6vGqIxX9jO7t8cFlsFktJblOZomwS57gLoHYNis0k_2uOt9cutYcbl97nuPxzxrNJ28_527u8CTkl6l-hzH8JxR-L_Vk9zJl5Zm6J1CofyG3zLJbypjXRcgBybvHYkBtv_lzjA553Oqa-umkybmD7pjR6T/s486/FB_IMG_1687710059674.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="399" data-original-width="486" height="329" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfJTuwRlDUJouj4-7OFQ6yuGaG2uB2H8oXhI6vGqIxX9jO7t8cFlsFktJblOZomwS57gLoHYNis0k_2uOt9cutYcbl97nuPxzxrNJ28_527u8CTkl6l-hzH8JxR-L_Vk9zJl5Zm6J1CofyG3zLJbypjXRcgBybvHYkBtv_lzjA553Oqa-umkybmD7pjR6T/w400-h329/FB_IMG_1687710059674.jpg" width="400" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKDF21VwsRffyaoB-llTjkNqq9IJBYiFtCOK2NAjNiNezVO3XR1t0nAVb-qim7sVlTEtJs-D4vjZUaoJEkQ9eqPAzVPeqj6GpTOTJ-F36oZoptSnYdE-8hdkWo_fRQ98nexQRjMreVNY51_QNuSD3Eni68NKMha_oz16tIEHz_g8x0bVye5MTE1MK1DKBw/s740/1566197053-3957.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="417" data-original-width="740" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKDF21VwsRffyaoB-llTjkNqq9IJBYiFtCOK2NAjNiNezVO3XR1t0nAVb-qim7sVlTEtJs-D4vjZUaoJEkQ9eqPAzVPeqj6GpTOTJ-F36oZoptSnYdE-8hdkWo_fRQ98nexQRjMreVNY51_QNuSD3Eni68NKMha_oz16tIEHz_g8x0bVye5MTE1MK1DKBw/s320/1566197053-3957.jpg" width="320" /></a></div><p>சிறியாநங்கையின் அனைத்து பாகங்களும் சமூலமாய் உபயோகித்தல் மருந்தே. அந்தச் சமூலத்தை நிழலில் உலர்த்தி காயவைத்து இடித்து வஸ்திரகாயம் செய்து வைத்துக்கொள்ளவேண்டும். ராஜக்கனி என்று அழைக்கப்படும் எலுமிச்சையின் சாற்றை ஒரு படி ஊற்றி மூன்று சாமம்வரை அரைத்தபின் அதை வில்லைகளாகத்தட்டி காயவைக்க வேண்டும். அதன்பின் அதன் எடைக்குச் சமமாகச் சீந்தில்கொடி சர்க்கரையை போட்டு பசும்பால்/ நெய் விட்டு நான்கு சாமம்வரை மைய ஆட்டி எடுக்கவேண்டும். இதில் ஒரு வராகன் (4 கிராம்) எடுத்து 'மசி' என சொல்லிவிட்டு அந்தி சந்தி என தினம் இருவேளை ஒரு மண்டலம் உண்டு வந்தால் வாசி திரிகூட பர்வதத்தில் சங்கமிக்க, ஆக்ஞாவில் சுடரொளி அக்னியாய்ப் பிரகாசிக்க, அங்கே பிரம்மரந்திரம் திறக்கும்போது கபாலபீட மேருவில் நாதங்கள் கேட்கும். திரிகூடம் எங்கே உள்ளது? புருவ மத்திதான் அது!</p><p>அதனால் சாகாக்கால் வேகாத்தலை போகாப்புனல் என்று சித்த குறியீட்டில் சொல்வதற்கேற்ப வைத்தியம் யோகம் ஞானம் ஆகிய மூன்றுக்கும் இந்த மூலிகைச்சமூலத்தின் கிருதம் ஏற்றம் தரும். எப்போதும்போல் இதற்கும் பத்தியம் தேவை.</p><p>அதென்ன கிருதம்? ஒவ்வொரு நோய்க்குத் தக்கவாறு மூலிகைகளுடன் நெய் சேர்த்துத் தரும் மருந்துதான் கிருதம் என்கிறது ஆயுர்வேதம். முருகப்பெருமான் அகத்தியர்க்கு உபதேசித்த சுப்பிரமணியர் ஞானம் நூலிலிருந்து மேற்படி பாடல்களை இங்கே சிந்தித்தோம்.</p><p>-எஸ்.சந்திரசேகர்</p>S.Chandrasekarhttp://www.blogger.com/profile/03904262959636448568noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8748593830588260679.post-9144485464676682982023-06-25T01:21:00.003-07:002023-06-25T02:25:13.592-07:00திகில் பயணம்!<p>போன நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆழ்கடலில் மூழ்கிச் சிதிலமடைந்து கூழாகிக் கரைந்துபோன டைட்டானிக் கப்பலை வேடிக்கைப் பார்க்க அப்படி என்னதான் இருக்கும்? The White Star Line என்ற கம்பனிக்குச் சொந்தமான அந்தக் கப்பலின் கட்டுமான உள்ளரங்க வரைபடத்தை ஆதாரமாக வைத்துத்தான் Titanic ஆங்கிலத் திரைப்படத்தில் தத்ரூபமாய் செட் போட்டு நிறைவாகக் காட்டினார்கள்.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-IH_BoZgUFwJhbGY5IvNh-WVbA5IxXPGp4DlabdccKwwUTuuGt2QtwbM9Fg5pgy46tjXcledAecVa8QFSbiYeF5yYjfFZhnj_0GUQWWH-vcW2Nts5nyMAfg5gvte4HzoJnipzkzP9Fno3IyuhFmh5x55RKrt9GXXc2gGxZCxt4OwKqTv1HSyn_wP-N-6A/s615/1_JS114611189.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="409" data-original-width="615" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-IH_BoZgUFwJhbGY5IvNh-WVbA5IxXPGp4DlabdccKwwUTuuGt2QtwbM9Fg5pgy46tjXcledAecVa8QFSbiYeF5yYjfFZhnj_0GUQWWH-vcW2Nts5nyMAfg5gvte4HzoJnipzkzP9Fno3IyuhFmh5x55RKrt9GXXc2gGxZCxt4OwKqTv1HSyn_wP-N-6A/s320/1_JS114611189.jpg" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKoQ48ZfI_BSr8Y0fNsuRp-Z37D1ymf6XO18-rkl7AF-tI5e9Yw8S30R43bwN3bLxQfPKy-p9g2iLnRzr1KHIW_2w3K47rYvSApLRPzTDQR27AG0Oa5rWjIk1bF2u_56KUmaoLZMADQeiHliLK-6W-2_qvhwau8VjKBViu4I-425FCjXwugxbBqfwBIp8A/s986/Screenshot_2023-06-24-16-36-56-018-edit_com.google.android.googlequicksearchbox.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="606" data-original-width="986" height="197" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKoQ48ZfI_BSr8Y0fNsuRp-Z37D1ymf6XO18-rkl7AF-tI5e9Yw8S30R43bwN3bLxQfPKy-p9g2iLnRzr1KHIW_2w3K47rYvSApLRPzTDQR27AG0Oa5rWjIk1bF2u_56KUmaoLZMADQeiHliLK-6W-2_qvhwau8VjKBViu4I-425FCjXwugxbBqfwBIp8A/s320/Screenshot_2023-06-24-16-36-56-018-edit_com.google.android.googlequicksearchbox.jpg" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRPzdqeY9j_7hNDXVoCWfQlzvxYRQ_7F0XbdFYPgrSYpE7AUb4deMNWxg-EV1lTuqUxABCWjT8l4PkTi3VEcJgZNoPPBVLYfZpcKY4aISvekl0-0TCRNlepjuf2Z3NQt3LPoWCi0OKflxJQoNt6qnZCm71Nj4wIAuC9uPqaGYTNGjiSZVKVBmYKJ2QVGlO/s1059/Screenshot_2023-06-24-16-38-20-748-edit_com.google.android.googlequicksearchbox.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1059" data-original-width="973" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRPzdqeY9j_7hNDXVoCWfQlzvxYRQ_7F0XbdFYPgrSYpE7AUb4deMNWxg-EV1lTuqUxABCWjT8l4PkTi3VEcJgZNoPPBVLYfZpcKY4aISvekl0-0TCRNlepjuf2Z3NQt3LPoWCi0OKflxJQoNt6qnZCm71Nj4wIAuC9uPqaGYTNGjiSZVKVBmYKJ2QVGlO/s320/Screenshot_2023-06-24-16-38-20-748-edit_com.google.android.googlequicksearchbox.jpg" width="294" /></a></div><p>ஏப்ரல் 15, 1912 அன்று இரவு நடந்தது ஒரு பயங்கரம். ஆயிரக் கணக்கானோர் ஜல சமாதி ஆன வட அட்லாண்டிக் கடல் பகுதி இன்றும் பீதியைக் கிளப்பும். ஆழ்கடல் கல்லறை தேசத்தில் பல அமானுஷ்ய சம்பவங்கள் எப்போதும் நடப்பதுதான். சில நிகழ்வுகள் செய்தியில் வரும் சில வராது.</p><p>கடலில் மட்டுமல்ல பூமியிலும் இதை ஒத்த இடங்கள் இயல்பாகவே இருக்காது. அதுபோன்ற இடங்களுக்குச் சுற்றுலா போக எவருமே தயங்குவார்கள். அங்கே முன்னொரு சமயம் ரோபோவை அனுப்பி அது எடுத்து அனுப்பிய நேரடி காணொளி காட்சியை டிஸ்கவரி சானலில் நள்ளிரவு தாண்டி ஒளிபரப்பினர். நானும் விடிய விடிய பார்த்து வியந்தேன்.</p><p>அண்மையில் நடந்த Ocean Gate சப்மரீன் ஆழ்கடல் விபத்து விவாதமாகிவிட்டது. இதற்கு முன் கடந்த காலத்தில் சென்று வந்த வண்டிகள் இவ்வளவு ஆழத்திற்குச் சென்றதில்லையாம். அதனால் அதீத அழுத்தத்தால் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை. திமிங்கிலங்களேகூட தனக்குத் தோதான குறைந்த அழுத்த எல்லைக்குள்தான் பிரவேசிக்குமாம்.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZ8PPD7byhegxQWqG42BrFvY1gcPq_TLQqNB9lWhvYPYvRDHx2ZBIia9yEprl3xP67z9dEjXSxHPwWsfMxt2oEceEFEnrE3E0ZyPnNGw-WW2F5UBAYoDgGqc0V2gZevWW6MXdRVbvpgZqrLpWVUHomKn-_nbtIig91u83lUeGaKeAunSnFT2CoPes88GOc/s900/FS_CUSTOM_IMAGE_TITAN_SUB.png" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="506" data-original-width="900" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZ8PPD7byhegxQWqG42BrFvY1gcPq_TLQqNB9lWhvYPYvRDHx2ZBIia9yEprl3xP67z9dEjXSxHPwWsfMxt2oEceEFEnrE3E0ZyPnNGw-WW2F5UBAYoDgGqc0V2gZevWW6MXdRVbvpgZqrLpWVUHomKn-_nbtIig91u83lUeGaKeAunSnFT2CoPes88GOc/s320/FS_CUSTOM_IMAGE_TITAN_SUB.png" width="320" /></a></div><br /><p>விஞ்ஞான தொழில்நுட்பம் நவீனமாக முன்னேறினாலும் இயற்கையை அவை எப்போதும் ஏய்த்துவிட முடியாது. புரியாத கணித்து விடை காணமுடியாத புதிர்கள் பல உண்டு. பழவேற்காடு ராயபுரம் பகுதி மீனவர்கள் தங்களுக்கு நடுக்கடலில் ஏற்பட்ட திகிலான அமானுஷ்யங்களை விளக்கும் காணொளியைப் பல வருடங்களுக்கு முன் பார்த்துள்ளேன். அவர்கள் சொன்ன விஷயங்களைப் பலர் நம்பமாட்டார்கள்.</p><p>கடல் என்பது மாபெரும் ரகசியத்தைக் தன்னுள் வைத்துள்ள பெட்டகம். ஆழ்கடல் தன்மையறிந்து தண்ணீரின் நிறமறிந்து அதன் பண்புகளையும் கண்ணுக்குத் தெரியாத கொல்லக்கூடிய ஆபத்தையும் நோட்டமிட்டபின்தான் அதில் பயணிக்க, குதிக்க, முத்தெடுக்க, சூத்திரம் வகுக்க வேண்டும் என்கிறார் போகர். கண்ணாடி கை தொலைநோக்கி, புரட்டிப்போடும் நடுக்கடல் டைஃபூன், பாதையில் மறைந்த பாறைகள், மூழ்கியுள்ள நவதாது அக்னி மலைகள் என பலவற்றை ஆய்வுசெய்த பிறகே சாகரத்தில் பயணிக்கவும், கடலடி பொக்கிஷங்கள் சேகரிக்கவும், scuba கவசத்தில் குதிக்கவும் மூச்சடங்கி இருக்கவும் யோசிக்க வேண்டும் என்கிறார்.</p><p>அங்கே உஷாராக இருக்கவேண்டும் என்று ஆனானப்பட்ட சித்தரே மிகுந்த எச்சரிக்கையுடன் தன் சாதனைகளைச் செய்தார் என்றால் நம் என்ஜினியர்கள் எம்மாத்திரம்? Adventure tourism முன்பதிவு செய்து 13000 அடி ஆழத்தில் போய் உயிரைவிட தலைக்கு டிக்கட் விலை என்ன? $250000. 🤔</p><p>- எஸ்.சந்திரசேகர்</p>S.Chandrasekarhttp://www.blogger.com/profile/03904262959636448568noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8748593830588260679.post-43014255835095908552023-06-15T18:17:00.000-07:002023-06-29T18:24:26.925-07:00காலச்சக்கரம் என்னும் ஆசிரியர்!<p>வாழ்க்கையில் ஏற்றமும் இறக்கமும், சுகமும் துக்கமும், வெற்றியும் தோல்வியும், அவ்வப்போது வந்து போவது இயல்பு. உண்மையில் அவை நிரந்தரமற்ற மாறும் வெளிப்பாடுகள் என்கிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. குளிர் வெயில் மழை இரவு பகல் என மாறுகின்ற தன்மையைப் போன்றது.</p><p>ஒரு காலத்தில் வாழ்ந்த ஏற்றமிகு வாழ்க்கையை நினைத்தோ, எப்போதோ அடைந்த வெற்றியை நினைத்தோ, அனுபவித்த சுகத்தை நினைத்தோ, நிகழ்காலத்தில் இக்கணம் நினைத்து நினைத்து மனம் வெதும்புதல் கூடாது. அதற்கு மாறாக மனம் குதூகலித்தால் நல்லதே. ஆனால் நம்மில் பலர் செய்வது என்ன? கட்டிய வீடு போச்சு, போட்ட நூறு பவுன் நகை போச்சு, வியாபாரம் போச்சு, நல்ல வாழ்க்கை போச்சு, உடல்நலமும் போச்சு, இனி எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று அங்கலாய்ப்போரே அதிகம். அதனால் மன உளைச்சல்தான் ஏற்படும்.</p><p>அதனால் இன்றைய நிலையுடன் ஒப்பீடு செய்துகொண்டு தோல்வி ஏமாற்றம் துக்கம் ஆகியவற்றை நினைத்து மனம் கவலை கொள்ளக்கூடாது. அவற்றை ஒரு படிப்பினையாக மனம் ஏற்கவேண்டுமே தவிர இன்று உட்காந்து புழுங்குவது சரியல்ல. மத்திமமாய் வாழப்பழகினால் நிம்மதி தங்கும்!</p><p>சுகம் துக்கம், வெற்றி தோல்வி பற்றியே சதா நினைத்தால் அவை எல்லாம் தன் ஊழ்வினைப்பயனே என்பதையும் மனம் ஒப்புக்கொண்டு ஏற்கவேண்டும். இந்தச் சூட்சுமத்தைப் புரிந்துகொண்டு மௌனமாய் இருந்தால் அதுவே உத்தமம். </p><p>வாழ்ந்து கெட்டவன் என்றால் வாழ்க்கையில் இதுவும் கடந்து போகும் என்பதைப் புரிந்துகொண்டு அனுபவத்தால் மீண்டு எழுந்து விவேகத்துடன் எளிமையாக நிறைவுடன் வாழ்பவன் என்பதே பொருள்.</p><p>-எஸ்.சந்திரசேகர்</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEik34Q-QyJZXAn25ukECxf2DzdcRziGNBEmGSb8boi2NPnUkmw2gI03OmR4cuCXO4E-oXdvhQ39z5RgMeWtNjuqP2ovhwdHg0oPyPOla32Vn88Yw0B2GxL9ye3Rt7OfY1bQMXteZQ3ah988jIj5O44b6cGQmMUats6O0di9frEu4F-Jfpp2wnn1uvtg9Ejh/s1280/FB_IMG_1688087815907.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="874" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEik34Q-QyJZXAn25ukECxf2DzdcRziGNBEmGSb8boi2NPnUkmw2gI03OmR4cuCXO4E-oXdvhQ39z5RgMeWtNjuqP2ovhwdHg0oPyPOla32Vn88Yw0B2GxL9ye3Rt7OfY1bQMXteZQ3ah988jIj5O44b6cGQmMUats6O0di9frEu4F-Jfpp2wnn1uvtg9Ejh/s320/FB_IMG_1688087815907.jpg" width="219" /></a></div><br /><p><br /></p>S.Chandrasekarhttp://www.blogger.com/profile/03904262959636448568noreply@blogger.com0