About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 19 ஜூலை, 2025

கதண்டு!

உங்களில் எத்தனை பேர் கதண்டைப் பார்த்திருப்பீர்கள் என்று தெரியாது. அது குளவி இனத்தை ஒத்ததாகவும் அதைவிட ஆபத்தானதும் ஆகும். இது கட்டும் கூடு மிகவும் அலாதியானது. பார்ப்பதற்கு அவை தேனீ போலவே இருக்கும். இதில் இரண்டு கதண்டுகள் மனிதனைக் கொட்டினால் அவ்வளவுதான்... தீவிர சிகிச்சையில் வைக்க வேண்டும்!

எண்ணிலடங்காத கதண்டுகள் நிறைந்த வனத்தில் சித்தர்கள் பலகாலம் தவம் செய்தது பற்றியும், சீனாவில் கதண்டு மகரிஷியின் ஆசிரமம் பற்றியும் அவர் தனக்கு உபதேசம் தந்தது பற்றியும் போகர் ஏழாயிரத்தில் விவரித்துள்ளார்.

மலைப்பாம்புகள், கதண்டுகள், ராட்சத வெட்டுக்கிளிகள், மற்றும் பல விஷ ஜந்துக்கள் பழனியில் போகர் சமாதியின் சுரங்கப்பாதையில் உள்ளன என்றும் அதன் காரணமாகவே சமாதி குகை வாயிலை நானூறு ஆண்டுகளுக்கு முன் அடைத்ததாக முன்னொரு சமயம் ஸ்ரீ புலிப்பாணி பாத்திர சுவாமிகள் என்னிடம் பேசும்போது சொன்னார். 

-எஸ்.சந்திரசேகர்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக