About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

இதுதான் நல்ல தருணம்!





"பொறியியல் கல்லூரியில் பகவத் கீதை விருப்பப் பாடமாக இருக்கக்கூடாது" என்று கருப்புக் கழகத்தினர் முழங்குகிறார்கள். ஆம், இக்கூற்று மிகவும் சரி. அதை விருப்பப் பாடமாக வைக்காமல் கட்டாயப் பாடமாக வைக்க வேண்டும். பகவத் கீதையின் சில அத்தியாயங்களில் ஆழமான பொறியியல் சங்கதிகள் மறைந்துள்ளன. இதை ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் அலசி ஆராய்ந்து அதை சொந்தம் கொண்டாட தயாராக உள்ளது. பிறகு அக்கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமையும் வைத்துக் கொண்டு உலகையே ஆட்டிப் படைப்பார்கள்.
கடந்த அரை நூற்றாண்டாக அது கூடாது இது திணிப்பு என்று சொல்லியே எதையும் இங்கே மேற்கொள்ள விடாமல் தடுத்தனர். இன்று அதைப் படிக்கும் வசதி வாய்ப்பும் தேடல்களும் அருமையாக உள்ளபோது இவர்கள் முட்டுக்கட்டைப் போடுகின்றனர். மகாபாரதம் முழுக்க என்ன இல்லை?
கட்டுமானவியல், பொறியியல், அரசியல், போர் வியூகம், அஸ்திரங்கள், கதிர் வீச்சு, அணு ஆயுதங்கள், க்ளோனிங், காலப் பயணம், பரிமாணவியல், விமான சூத்திரம், தானியங்கி புரவிகள், போர் தற்காப்புப் பதுமைகள், ஸ்படிக கணினி, ஆளில்லா பறக்கும் வான் ரதம், மின்காந்த ஒலி அலைகள், தகவல் தொழில்நுட்பம், சப்த சூத்திரம், மின்னியியல், நீரியல், காற்றியில், வெப்பவியல் என எண்ணிலடங்கா பல நுட்பங்களைப் பற்றி நான் சொல்லிக்கொண்டே போகலாம். வேதத்தில் சொல்லப்பட்ட விஞ்ஞான சங்கதிகளை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த ஏனைய தலைப்புகளையும் ஒவ்வொரு ஆண்டு படிப்பிலும் கட்டாயமாக்க வேண்டும்.
இத்துடன் நின்று விடாமல் அகத்தியர் பன்னீராயிரம், போகர் பன்னீராயிரம் ஆகிய நூல்கள் மீதுள்ள தடையை நீக்கி, போகர் எழாயிரம் போல் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கோணத்தில் அறிமுகம் செய்ய வேண்டும். தகுதியானவர்களை வைத்து உலோக/ மூலிகை ஜாலங்கள், ரசவாதம், கனிமவியல், மருந்தியல், செயற்கை இரத்தினக்கல், முன்னேறிய பொறியியல் சூத்திரங்கள், என பலதரப்பட்ட தலைப்புகளை ஆழமாக நடத்தலாம். இப்போது விட்டால் பின் எப்போதும் இவற்றைக் கற்க சமயம் வாய்க்காது. இப்போதே இன்ஜினியரிங் பிரிவுகளுக்கு என்ன பாட திட்டம் என்பதை பல்கலைக் குழு கூடி திட்டமிட வேண்டும். நான் இதை வரவேற்கிறேன்!
அயல்நாட்டிலிருந்து எனக்கு வரும் சில மின்னஞ்சல்களில் இது குறித்த சந்தேகங்களைக் கேட்டும், நான் ஆய்வு செய்தவரை பெருநூல் காண்டங்களில் அவர்களுக்குத் தேவையான ஆராய்ச்சி சங்கதிகள் எதில் உள்ளன போன்ற கேள்விகள் வருவதுண்டு. கல்லூரி புராஜக்ட் செய்வோர், முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள், மற்றும் உதவி பேராசிரியர்களும் இப்பட்டியலில் அடக்கம். ஆனால் இங்கோ அதைப்பற்றிய எந்த பேச்சும் கூடாது என்ற நிலைதான் உள்ளது.
எல்லோருக்கும் மகாபாரதம் என்றதுமே சூதாட்டம், இசை, காதல், தியாகம், அர்ப்பணிப்பு, காம சூத்திரம், கற்பழிப்பு, குரோதம், பழி, என்பதைத் தாண்டி வேறு எதையும் சிந்திப்பதில்லை.

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

கீழடி: 5ம் கட்ட ஆய்வு

கீழடி அகழாய்வில் வெளிப்பட்டவை சுமார் கிமு.6 என்று ஒருவழியாக அறியப்பட்டுள்ளது. அதாவது இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று உலகிற்கு தெரிய வந்துள்ளது. இப்போதைக்கு கார்பன் டேடிங் முறையில் அவ்வளவுதான் தெரிந்துள்ளது. ஆனால் இந்த கணக்கும் தவறு என்பேன். ஏன்? இன்னும் தென்கிழக்கு நோக்கி முன்னோக்கிப் போகவேயில்லை. அதற்குள் ஊரே இரண்டுபட்டால் எப்படி? இப்போது வரை தோண்டியது வெறும் ஒரு தெருவைச் சுற்றியுள்ள சிறு குடியிருப்பு. அவ்வளவுதான்!
என்னுடைய தனிப்பட்ட சித்தநூல் ஆய்வில் நான் கண்டுகொண்டதை இங்கே சொல்கிறேன். உள்ளே போகப்போக இன்னும் பல அதிசயப் பொருட்கள் இவ்வாய்வில் பரவசமூட்டும். ஒவ்வொரு கடல் கோளுக்கும் பிறகு ஊர் எல்லை பின்னோக்கி வந்துள்ளது. சுமார் பத்து காதம் உள்ளே சென்றால் நிறைய கட்டுமானங்கள் வெளிப்படும். அங்காடிகள், கூத்துப் பட்டறைகள், கோயில்கள், மண்டபங்கள் என இன்னும் பட்டியல் நீளும். ஊர் மையப் பகுதி இதுவரை ஆய்வில் வரவில்லை.
ஊர் கட்டுமானத்தின் சூத்திரதாரிகளான மயன் வம்சத்தாரின் பிரம்மபுரி இன்னும் வெளிப்படவில்லை. அக்குடியிருப்பு அறியபட்டால் கீழடியின் ஜாதகமே வெளிப்படும். அதன்பிறகு தோண்டிக் கொண்டுபோக எந்தவொரு அவசியமுமிருக்காது. குடிமக்கள் வாழத் தேவையான குடில்கள்; மேட்டுக் குடியினர் வாழ மச்சு வீடுகள் /நிலவறைகள், அடுக்குமாடி குடியிருப்புகள்; உரை கிணறு, குழாய் நீர் வசதியுடன் கழிவறை/குளியலறையுடன் பொருளாதார அடிப்படையில் Housing units வெளிப்படும். வீட்டில் புழங்க அத்தியாவசியப் பாத்திரங்கள், இரும்புச் சாமான்கள், வெல்டிங் பட்டறைகள், சகஸ்ரகும்ப மின்சார மின்கலன்கள்; தங்கம் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் நாணயச் சாலைகள்; வீடுகளுக்குத் தேவையான மரச்சாமான்கள் சாளரங்கள், கதவுகள் செய்யும் தச்சுக்கூடங்கள்; கொல்லர் பட்டறைகளுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் கிடைக்கக் கூடியது ஸ்தபதிகளின் சிற்பக்கூடங்கள். ஆக இந்த ஐந்தொழில்களே பிரதானம்.
இது போக குயவர்மேடு, களத்துமேடு, உவர்புறம், பண்டக பறைச்சாலை, பாணர்கூடம், நர்த்தன களம், குடைவறைகள், பௌத்த விஹாரங்கள், வேள்விச் சேரிகள், வைத்திய சாலைகள், நாவாய் ஒடப்பகுதி, சுங்கச்சாவடி என இன்னும் பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம். இவை எல்லாம் என் கண்முன்னே தெரிகின்றன. அநேகமாய் கீழடி மக்களின் கல்வியறிவு நம்மைவிட மிக நன்றாகவே இருந்துள்ளது. எழுதப் படிக்க வடிக்க அடிப்படை பிரம்மி கல்வியறிவு பெற்றிருந்தனர். பச்சை மண்பானை செய்து முடித்தபின் குயவன் அல்லாத வேறொருவன் வாசக எழுத்துக்களை வடித்தால் அதன் நேர்த்தி தெரிந்துவிடும். குயவனே அதை குச்சியில் எழுதி அதன்மீது களிமண் குழைத்த நீரைப்பூசி மிருதுவாக்கியதும் தெரிகிறது. தூண்கள் /அரண்மனைகள் /கோயில் இங்கெல்லாம் கல்வெட்டு வடித்த கல்தச்சரும், செப்புப்பட்டயம் வடித்த கன்னாரும் நிச்சயம் கை நாட்டாக இருக்கவே முடியாது. கல்வி கணிதம் திரிகோண சூத்திரம், கல்லில் உயிரோட்டம் காணும் சாஸ்திரம் எல்லாம் அறிந்தவராகத்தான் இருக்க முடியும். ஆக, நாம் நினைத்ததைவிட ஊர் மக்கள் அடிப்படை கல்வியறிவுடன்தான் இருந்திருப்பார்கள்.
ஒரே நேரத்தில் பல பகுதிகளில் முன்னோக்கி ஆய்வு செய்தால், இன்னும் பல தடயங்கள் கிடைக்கப்பெறும். என்னுடைய கணிப்பில், எதிர்காலத்தில் நடக்கும் ஆய்வுகளில் கிடைக்கக்கூடிய பொருட்களின் பழமை சுமார் 7000 வருடங்கள் வரை போகும். இனி நடப்பதை வேடிக்கைப் பார்ப்போம்!

Image may contain: one or more people and food

திங்கள், 23 செப்டம்பர், 2019

அமானுஷ்ய கதிரியக்க விஞ்ஞானி

அது 2007 பிற்பகுதி. டாக்டர். M.A. பத்மநாப ராவ் (82) என்பவருடன் நீண்ட உரையாடல் செய்ய அரிய வாய்ப்புக் கிடைத்தது. புதுடில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் கதிர்வீச்சு மருத்துவத் துறையின் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற விஞ்ஞானி. இவர் தியானம் செய்யும்போது அநேக இறை வடிவங்கள் இவர் கண்முன்னே வந்து நிற்பார்கள். இராமன், இராவணன், சூரியன், அனுமன், ஆதிசங்கரர், என்று பட்டியல் நீளும். இவர் மாலை வழிபாட்டுக்குப்பின் அமரும்போது இவருக்கு முன் மேஜையில் விரிக்கப்பட்ட டிராயிங் ஷீட் இருக்கும். தியானத்தில் இவருடைய மனத்தில் வந்து நிற்கும் சக்தியானது இவர்மூலம் படங்களை பென்சில் கொண்டு வரைந்திடும். எப்போதேனும் அரிதாக வண்ணத்தில் வரும்.
சூரிய தேவனே தன்னுடைய வெப்ப மண்டலத்தில் நடக்கும் பல நுட்பங்களைக் காட்டி உணர்த்திய தருணங்கள் ஏராளம். இதைக் கண்டறிந்து உலகிற்கு ஆய்வுக் கட்டுரையாக வெளியிட்டார். Bharat Radiation என்ற தலைப்பில் பின்னாளில் 2015 ல் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார். ஆனால் எட்டு ஆண்டுகள் முன்னமே என்னிடம் தன் ஆய்வு குறித்த கருத்தை விளக்கி என்னையும் கேள்வி கேட்டு பதில் சொல்ல வைத்தார். Particle Physics சம்பந்தப்பட்ட நுட்பமான கேள்விகளைக் கேட்டார். ஓரளவுக்கு பதில் சொன்னேன். சூரியனில் எப்படியான அணுவியல் இயக்க நிலைப்பாடு உள்ளது என்றார்? நான் நியூக்ளியர் ஃபியூஷன் என்று சொன்னேன். உடனே அவர், அதுதான் நடக்கிறது என்பதற்கு என்ன ஆதாரம்? என்றார். முதுகலை பட்டப்படிப்பில் அப்படித்தான் படித்தோம். ஆனால் என்னுடைய தனிப்பட்ட யூகத்தின்படி சூரியனில் அணுவுலைக்கான எல்லா அம்சங்களும் இருப்பதாகவே கருதுகிறேன். அங்கு கதிரியக்க யுரேனியமும் அபரிமிதமாகவேகூட இருக்கலாம். தொடர் எரிபொருள் இருந்துகொண்டே இருக்கவும், எரிபொருள் குறையாமல் யுகங்களாக நீடித்து வந்திருக்கலாம் என்றேன். Plasma Physics சம்பந்தப்பட்ட சில உதாரணங்களைச் சொல்லி அது ஃபிஷன் அல்ல ஃபியூஷன் தான் என்று சொல்லவும் சாத்தியம். ஆனால் மேல்நாட்டு விஞ்ஞானிகள் இதை ஏற்கமாட்டார்கள் என்றேன்.
Good. You got my point young man என்று சொல்லிவிட்டு மேலும் விளக்கினார். அகச்சிவப்பைவிட புறவூதா கதிர்கள்தான் உச்ச பட்ச வேகத்துடன் பூமியை நோக்கி பயணிக்கிறது. அதில் பீடா/காமா/எக்ஸ்ரே கதிர்கள் பரவி வரும். ஆனால் நமக்குக் கிடைக்கும் சூரிய ஒளி எல்லாமே சூரியனிலிருந்துதான் வருகிறதா என்றால் இல்லை. நடுவே வெவ்வேறு மண்டலங்களில் சிதறல் ஏற்பட்டு வெப்பம் கூட்டியோ குறைந்தோ வந்து சேரும். சரியாகச் சொல்ல வேண்டுமானால் பூமிக்கு 10கிமீ மேலேயிருந்துதான் சூரிய ஒளியே நமக்கு வந்து சேர்கிறது என்றார். இதற்கான நோபல் பரிசே அவருக்குக் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இல்லை. இதுபோல் தன்னுடைய பதினொன்று ஆய்வுகளை பற்றி மேலோட்டமாகக் கூறினார்.
சரி. நம் விஷயத்திற்கு வருவோம். உங்களுக்குள் அமானுஷ்யமாக இறை சக்திகள் வந்துபோவதும், நீங்கள் Auto writing மூலம் பல காரியங்களை சாதிப்பது எப்படி என்றேன். இராமனின் சேனைகள் சரியாக எங்கிருந்து சேதுவைக் கட்டினார்கள் என்பதை உங்களால் எப்படி மனக்கண்ணில் பார்க்க முடிந்தது? ஒவ்வொரு சர்கத்தையும் இராவணனுடன் நடக்கும் போரையும் நேரடி வர்ணனையாக நீங்கள் சொல்வது எப்படி? என்று கேட்டேன்.
அதற்கு அவர், “இராமன் ஒரு கற்பனை கதாபாத்திரம் என்று தென்னகத்தில் சில திராவிட முட்டாள்கள் (Dravidian Party Fools) உளறுவதைப் பார்த்து வட இந்தியாவிலும் உளற ஆரம்பித்துள்ளனர். இராமன் வாழ்ந்தது திரேதா யுகத்தில் என்பது என்னுடைய காதுகளில் ஒலிக்கிறது. அந்த யுகத்தில் மானுட வாழ்நாள் என்பது பல்லாயிரம் வருடங்களைத் தாண்டியது. அதோடு தெய்வ அவதாரமும் கூடுவதால் ‘தசவர்ஷ சஹஸ்ரானி’ என்பது உண்மையே. வால்மீகி சரியாகத்தான் எழுதினார். ஆங்கிலேயர்கள் எதைத்தான் ஒப்புக் கொண்டனர்? Adams Bridge பற்றியும் அப்படித்தான் அவதூறு சொன்னார்கள். .
“சார், அந்த இறை வரைபடங்களைப் பற்றி..?” என்று நினைவூட்டினேன்.
“நான் தியானத்தில் இருக்கும்போது சப்தரிஷி மண்டலத்தின் ஆற்றலை உள்வாங்கிக் கொள்வேன். அப்போது சூரியன்,ராகு, கேது, செவ்வேள், குரு என கிரக தெய்வங்களும் வந்து நிற்பார்கள். ஆனால் சில சமயம் அசுரர் கூடமும் போலியாக இவர்களைப்போல் அந்நேரம் வந்து குறுக்கீடு செய்வதும் உண்டு. அதை இறை அனுகிரகத்தால் முறியடித்து என்னுடைய உடலை/ மனத்தை ஒத்துழைக்க அனுமதியாமல் இருந்து விடுவேன் என்றார். Surya helped me with colourful thermal image sketches that helped me to submit thesis broad என்றார்.
“சார், நீங்கள் இந்த சக்தியை எப்படி வளர்த்துக் கொள்கிறீர்கள்?” என்றேன்.
“நீ தினமும் வழிபாட்டில் என்னென்ன மந்திரங்கள் ஜெபிக்கிறாய்? எத்தனை முறை?” என்றார்.
“இதெல்லாம் போதாது. மந்திர வீரியம் பெருக தினமும் சஹஸ்ர முறை உரு போடவேண்டும். கடும் காய்ச்சலுக்கு கால் மாத்திரை தின்பது போல் உள்ளது நீ சொல்வது. எப்படி சித்திக்கும்?” என்றார்.
இதுபோல் எனக்குப் பல அறிவுரைகள் சொல்லிக்கொண்டிருந்தார். அதற்குள் இரவுப் பொழுது வரவே. “My body pulls me to sit for auto writing. Before that I have to chant Gayathri. God bless you” என்றார். அதாவது, என்னுடைய உடல் பரவெளி ஆக்கர்ஷணத்தைப் பெறுகிறது. அதற்குள் நான் காயத்ரி மந்திரத்தை ஜெபித்து முடிக்கவேண்டும் என்றார். நானும் விடை பெற்றேன். அவருடைய ஓவியங்களை இன்னொரு சமயம் பதிவிடுகிறேன். இப்படிப்பட்டவர்களுடன் விட்டகுறை இருந்தபடியால் ஒரு மணிநேரம் ஆக்கபூர்வமாக உரையாட முடிந்தது.
Image may contain: 2 people, eyeglasses and closeup

திங்கள், 16 செப்டம்பர், 2019

திராவிடம் சாதித்தது என்ன?

திமுக நிறுவப்பட்டு இன்றுடன் எழுபது ஆண்டுகள் ஆகிறதாம். சந்தோஷம்! அதனால் சமுதாயத்திற்கு விளைந்த நம்மைகள் என்ன? தேடிக்கண்டுபிடித்துச் சொல்லவேண்டும். முன்னேற்றத்தைவிட அழிவுகளே அதிகம். அன்றைக்குப் படிப்பறிவு குறைவு என்பதனால் பாமரர்களை மூளைச்சலவை செய்து தங்களுடைய கருத்து வட்டத்தினுள் இழுத்துக்கொள்ள தோதான காலமாக இருந்தது. மொழிப்போர் இனப்போர் திராவிடப்போர் அறப்போர் என்று எல்லா அக்கப்போர்களும் நடந்து முடிந்தன. பகுத்தறிவு ஆரிய/வடமொழி எதிர்ப்பு எல்லாமே உச்சத்தில் வெளிப்பட்ட காலம். வாசுகி முதல் கண்ணகி வரை, சித்தர் முதல் புத்தர் வரை, எல்லாவற்றையும் விமர்சித்த காலம். சமுதாயத்தில் கீழ்நிலை பொருளாதாரத்தில் இருப்போரை கிளர்ச்சி செய்யவைத்து அதன்மூலம் தங்களுடைய சுயவளர்ச்சிக்கு உறமூட்டினர் அதன் நிறுவனர்கள்.
தமிழை ஆயுதமாகக் கொண்டு மக்களைக் கவரும் சாதுர்யம் அக்குழுவினரிடம் இருந்ததால் நாடகம் பத்திரிகை சினிமா மூலம் பரப்புரை செய்ய அக்காலகட்டம் பெரிதும் உதவியது. தென்னாடு போற்றும் சிவத்தலமான இந்நிலத்தில் காலங்காலமாகப் பிறந்து வளர்ந்த பல ஜாதி தமிழ்க்குடிகளை 'இனி நீங்கள் திராவிடர்கள் என்று அழைக்கப்படுவீர்கள்' என்று புதிய அடையாளத்தைத் தந்து 'இனி நீங்கள் இப்படித்தான் வாழ வேண்டும், எதிர்க்க வேண்டும்' என்று அவர்களுக்கு தவறான வழிகாட்டிச் சீரழித்தார்கள். அடிக்கடி முப்பெரும்விழா நடத்தி தொண்டர்களை ஞானம் பெறவிடாமல் களிப்பில் வைத்திருந்து வெற்றியும் கண்டது.
அதன் நிறுவனர்கள் அன்று சொன்னதை எல்லாம் நம்பிக்கொண்டு வாய்மூடி கேட்டுக்கொண்ட மக்கள் அவர்களுடைய தலைமையை ஏற்றுக்கொண்டனர். உலையில் வெதுவெதுப்பான நீர் இதமாக உள்ளது எனக்கருதி மகிழ்ச்சியாய் நீந்தும் ஆமைகளாய், அடியில் தணல் எரிந்துகொண்டிருக்கிறது என்ற ஆபத்தை உணராத தவளைகளாய் தொண்டர்கள் வாழ்ந்து மடிந்தனர். தொண்டர்கள் எல்லோருமே வெற்றிப்படியை ஏறவில்லை. ஜாதிகளைப் பொறுத்து பொருளாதார செல்வாக்கைப் பொறுத்து சிலர் மட்டும் நைச்சியமாக தலைமையிடம் அணுகி காரியம் சாதித்துக் கொண்டனர். மற்றவர்கள் முகம்தெரியாத வேலையாட்களாகப் பணிசெய்து, கால்மிதிக்கும் கல்லாகவே இருந்து தேய்ந்து போனார்கள். நிறுவனர்கள் எல்லோருமே தெலுங்கு நாயுடு, நாயக்கர், செட்டி, ரெட்டி, யாதவா, என வடுகநாட்டு கூட்டணி சேர்ந்தது அனுகூலமானது. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் பாடலை வெட்டி/ஒட்டி மாற்றியமைத்து இனி கடவுள் வாழ்த்தாக இதையே வைத்துகொள்ள பரிந்துரை செய்தது நாத்திக நிறுவனம்.
ஆனால் இரண்டு தலைமுறைகளைக் கடந்துவிட்ட பல முன்னாள் தொண்டர்களின் சந்ததிகள் அன்று இருந்ததுபோல் இன்று அணுகுமுறையில் இல்லை. எது உண்மை என்று துலாமிட்டு மெய்ஞானப் பகுத்தறிந்து தெளிவடைந்தனர். திமுக கடந்துவந்த பாதையில் காலச்சுவடாகப் பதித்தது என்ன? அக்கட்சியின் தொண்டர்களைத்தவிர பொதுமக்கள் பீற்றிக்கொள்ளும்படி எதுவுமில்லை. நடத்தைகெட்டு, ஊழல் செய்து, வாரிசு அரசியலை உருவாக்கி, ரௌடிகளைப் பெருக்கி, இச்சமுதாயச் சீர்கேட்டினை ஊக்குவித்து இன்புற்று வாழ்ந்ததுதான் மிச்சம். திமுகவிலிருந்து பிரிந்துபோய் தனியாகக் கம்பனி தொடங்கிய இன்னொன்று மட்டும் யோக்கியமா? எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!

பூமழை தூவி...

மாநகராட்சி குப்பை வண்டி பிரதான சாலையோரக் குப்பைத் தொட்டிகளிலிருந்த கழிவுகளைத் துப்புரவாக அள்ளி போட்டுக்கொண்டு நகர்ந்து போனது. அப்போது இறுதி ஊர்வலம் ஒன்று வந்து கொண்டிருந்தது. சவத்தின் மீதுள்ள மலர்களைப் பிய்த்து தெருவில் வீசியடிக்க அது பாதசாரிகள் மீது, வாகன ஓட்டிகள் மீது, பேருந்து ஜன்னலோரப் பயணிகள் தலையிலும் போய் விழுந்தது. எல்லோரும் ஆசிர்வதிக்கப்பட்டு தன்னியனானார்கள். 😎

குரங்கின் கைப்பூமாலையாய்  அதை பிய்த்துப் போட்டு சவத்தைக் கேவலப்படுத்துவது தமிழ்க்குடி கலாச்சாரமாம். சுத்தமாகப் பெருக்கிய சாலையில் திடீரென பட்டாசு வெடித்த காகிதமும் வெற்றிலை ஊதுபத்தி கட்டு மற்றும் பிய்த்துப்போட்ட பூக்களுமாகக் குப்பைகள் சிதறிக் கிடந்தது. மயானம் போய்ச் சேரும்முன் பாடையே காலியாகிவிடும் போலிருந்தது.

குவார்ட்டர் அடித்த நடன கோஷ்டி கைலியைத் தொடைக்கு மேலே தூக்கிக் கட்டியும் நுனியை வாயில் கவ்வியபடி தாளம் தப்பாமல் தம்போக்கில் அபிநயம் முத்திரை அடவு எல்லாம் காட்டியபடி குத்தாட்டம் போட்டு ஆடிக்கொண்டிருந்தனர்.

சமுதாய கலாச்சாரம் மாறிவரும் போக்கைப் பார்த்தால் சவத்தின் அங்கங்களை வழிநெடுகப் பிய்த்து வீசினாலும் ஆச்சரியமில்லை. 😂



பதப்படுத்திய பால்

"ஆவின் பால் பாலே இல்ல. கெமிக்கல் கலந்தது. அதைப் போய் எல்லாரும் குடிச்சுகிட்டு..." என்று தெருவில் இருவர் எனக்கு முன்னே பேசிக்கொண்டு நடை போனார்கள். நான் செய்தித்தாள் வாங்கும் கடையின் எதிரேயுள்ள டீ கடையில் இந்த இருவரும் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தனர். பார்த்ததும் சிரிப்புதான் வந்தது. அந்த டீ கடை ஆள் காலையில் பெரிய ஒரு லிட்டர் பச்சை பாக்கெட் ஆவினில் 10 வாங்கிக் கொண்டு போவதைப் பார்த்துள்ளேன்.

இப்படி விமர்சித்த அவர்களால் 100% தூய்மையான பாலை விநியோகம் செய்ய முடியுமா? இதற்கு என்ன மாற்று? ஆவின் பாலை நம்பித்தான் குடிக்கணும். கறந்த பாலை வீட்டுக்குக் கொண்டுவந்து ஊற்றுவோர் உண்டு. முன்பு வீட்டு வாசலில் மாடு கட்டி கண்ணெதிரில் கறந்து தந்தனர். இப்போது எங்கேயோ கறந்து வீடுவீடாக வந்து சப்ளை செய்கிறார்கள். கொண்டுவந்து ஊற்றும் ஆள் அதில் ஆவின் பால் கலந்தாலும் தண்ணீர் ஊற்றினாலும் நாம் என்ன கண்டோம்?

ஆவின் பாலில் Blue Nice, Green Magic, Magenta Premium என கொழுப்பு % நிலைக்கேற்ப உள்ளது. ஆக Fat மற்றும் Solid Non-Fat ஏற்றியும் குறைத்தும் சமன்பாட்டில் வைக்கிறார்கள். அந்த விவரமும் பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ளது. அது ஊறு விளைவித்ததாக இதுவரை எங்கும் புகார் வரவில்லை.

பட்டணத்தில் சொந்தமாக மாடு இருந்தால் ஆவின் தயவு வேண்டாம். அது முடியுமா? பால்காரர் தன் மாட்டை ஓட்டிவந்து கறந்தாலும் ஊசி போட்டு போட்டு அந்த கெமிக்கலும் கறந்த பாலில் இறங்கி விடுகிறது. சுரப்புப் பிடிக்க அதன் அருகே கம்பத்தில் சாய்த்து வைக்கும் வைக்கோல் அடைத்த கன்றுக்குட்டிகே 5 வயது ஆகியிருக்கும். கன்று ஏன் வாலாட்டவில்லை துள்ளவில்லை மடியை முட்டவில்லை என்று ஒருபோதும் சந்தேகப்படாத தாய் மாடு இக்கன்றை நக்கி நக்கி தோல் பொம்மையின் அடிபக்கம் தையல் பிய்ந்து ஆங்காங்கே வைக்கோல் வெளியே தொங்கிக் கொண்டிருக்கும். இப்படி எல்லாம் செய்பவர் யோக்கியமான பால்காரரா? விற்கும் பால்தான் தூய்மையாக இருக்குமா?

கூட்டுறவு பால் கொள்முதல் மையத்திற்கு வந்து கறந்த பாலை ஊற்றிவிட்டுப் போவோர் ஊசி போட்டு பால் கறக்காமலா இருப்பார்கள்? அங்கே பாலின் அடர்த்திதான் அந்நேரம் அளக்கப்படும். இனி காலம் போகிற போக்கில் ரசாயன வாழ்க்கை என்று ஆனபிறகு எல்லாவற்றையும் பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்தால் நாம் எதையும் வாங்கிக் குடிக்கவோ உண்ணவோ முடியாது. சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!




ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

கஜ-லக்ஷ்மி

என்னுடன் வேலை பார்த்த இராஜபாளையத்துக்காரர் ஒருவர் தங்களுடைய 15 கிரவுண்ட் நிலம் பல வருடங்களாய் விற்காமல் இருந்தது என்றும் அதில் எந்தவொரு செயலை மேற்கொள்ளலாம் என்று முயற்சி செய்தாலும் அது நடவாது போகும் என்று கூறினார். நிறுவனம்/பில்டர்/தனிநபர் என்று யார் வந்து பேசி முடித்தாலும் அது அடுத்த நிலைக்கு முன்னேறாமல் முடங்கிப் போகும் என்றார்.

அவர் தங்களுடைய கிராமத்துக் கோயிலில் குறி கேட்கப்போக வேண்டும் என்று ஒரு பெரியவர் அறிவுரைக் கூறினாராம். ஆனால் அவருடைய தந்தைக்கோ/ பங்காளிக்கோ/ இவருக்கோ அக்கோயில் எங்குள்ளது என்று தெரியாது. ஒரு வழியாக தெய்வம் எங்குள்ளது என்பதைத் தேடிப்பிடித்து அறிந்தனர். ஆனால் அதற்குக் கோயில் என்று எங்கும் கண்ணில் படவில்லை. அப்போது ஒரு விவசாய முதியவர் ஒருவர் அவ்வழியே போக, அவரை விசாரித்தனர். அவர் அதுபற்றிய தடயம் சொல்ல இவர்கள் போனது மலையடிவாரத்தில் புதர் மண்டயிருந்த ஒரு சிதிலமடைந்த சிறிய அம்மன் கோயில். உடனே உள்ளூர் ஆட்களை வைத்து சுத்தம் செய்து ஆடைச்சாற்றி தீபம் ஏற்றி வழிபட்டனர். அப்போது அவ்வூரில் ஒரு மருளாளி இருப்பதை அறிந்து அவரிடம் இவர்கள் பிரச்னையை சொல்லியுள்ளனர். அதற்கு அவர் 'உங்க நிலத்தில் ஒரு பசுவும் கன்றையும், யானையையும் ஒரு மண்டலம் வரைக்கும் வைத்து பராமரித்து வரவும். அது காலாட நிலத்தில் நடந்து வந்தால் பிரச்சனைத் தீரும்' என்றாராம்.

அதன்படி உள்ளூர் கோனாரிடம் பேசி அங்கே ஒரு கொட்டகை அமைத்துத் தந்து அவரை இருக்க வைத்தனர். ஒரு யானைப்பாகனை தொடர்பு கொள்ள ஐந்து வயது யானையை அங்கேயுள்ள மரத்தின் கீழே சங்கிலியிட்டு தீனிபோட்டு பராமரித்தார். சரியாக ஒரு மண்டலம் கழிந்தது. அதுவரை விற்காத நிலத்தில் இவர்களே ஒரு சிறிய ஷாப்பிங் காம்பிளக்ஸ் கட்ட வங்கியில் நிதி கிடைத்து இரண்டு ஆண்டுகளில் கட்டி முடித்தனர். எஞ்சிய காலி நிலத்தை வாகன பார்கிங்காக வாடகைக்கு விட்டனர். மாதாமாதம் நல்ல வருவாயும் வர ஆரம்பித்தது, கடனையும் அடைத்தனர் என்றார். 'அந்த யானையை விட்டுப்போக எனக்கு மனசில்ல சந்துரு. அது என்கிட்டே ஒட்டிக்கிடுச்சு. ஆனா யானைகட்டித் தீனிபோடுறது செலவுதான்னாலும் நல்ல பலன் தந்தது' என்றார்.

பசுவைத் தொட்டு வணங்கினாலும் உண்ண அகத்திகீரை தந்தாலும் நம் எல்லா தோஷங்கள் நீங்கும். யானையைத் தொட்டாலும், லத்தி விழுந்தாலும், துதிக்கை அபிஷேக நீர் பட்டாலும் சகல விதமான கண்திருஷ்டி ஏவல் செயவினைகளும் நீங்கும் என்பது சாஸ்திரம். அவர் யானைமுடி மோதிரமும் வலக்கையில் செப்பு வளையமும் அணிய ஆரம்பித்தார், வீட்டில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் கோமியம் தெளிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்களாம்.


Image may contain: one or more people, outdoor and nature

சனி, 14 செப்டம்பர், 2019

திருக்கூத்து அம்பலத்தில்!

சிவகாசி ஸ்டான்டர்ட் ஃபயர்வர்க்ஸ் பட்டாசு தொழிலதிபர் வீட்டுத் திருமணம் பற்றிதான் ஊரெங்கும் ஒரே பேச்சு. தில்லை நடராஜரும் சிவகாமியும் மூக்கின்மேல் விரல் வைத்து ஆச்சரியத்தில் உள்ளனர் என்றால் மிகையில்லை. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நட்சத்திர விடுதிக்குச் சமமாக அலங்காரங்களும், வண்ண சீரியல் விளக்குகளும், தடபுடல் விருந்தும் களைகட்டியதாம்.

பல நூற்றாண்டுகளாக அம்மண்டபத்தில் இறைவன்-இறைவி திருக்கல்யாண வைபவம்தான் நடந்து வந்துள்ளது. சோழ மன்னர்களின் முடிசூட்டு விழாகூட பஞ்சாட்சர படியில் நடக்கும். இறைவனுக்கான விழாவன்றி வேறு எதுவும் நடத்த மண்டபத்தில் அனுமதி இல்லை என்கிறார் சேக்கிழார் பெருமான். இது இப்படி இருக்க அண்மையில் நடந்த கல்யாண கூத்து தில்லை மரபை மீறிய செயலாகவே தெரிகிறது. மிகுந்த கட்டுப்பாடு கொண்ட பொது தீட்சிதர்கள் ஆகம விதிகளுக்குப் புறம்பாக இந்த கேளிக்கைக்கு அனுமதி தந்தது எப்படி? இவர்களை அடிபணிய வைத்தது யார் என்பது தெரியவில்லை. மண்டபத்தை வாடகைக்குத் தந்தாக வேண்டும் என்று மேலிடத்தின் அழுத்தத்தில் மிரட்டப்பட்டிருக்கலாம்.

பொற்சபை அம்பலத்தின்மீது பொன்வேய்ந்த பராந்தக சோழன்கூட கால்பதித்து இருக்க மாட்டான். கயிலாய மரபினரான பொது தீட்சிதர்களும் மிதித்திருக்க வாய்ப்பே இல்லை. அது அவர்களின் உயிர்நாடி. அப்படி இருக்கும்போது அலங்கார மலர் கட்டுபவனும், மின் வண்ண விளக்குகள் மாட்டுபவனும் ஈசனின் தலைமேல் ஏறி கூரையில் நின்றும் நடந்தும் உள்ளனர். இன்னொரு வேலையாள் அம்பலத்தின் புறத்தே மலர் கொத்துகளுக்கு மத்தியில் கால்நீட்டி மல்லாக்கப் படுத்துக் கிடக்கிறான்.

மணமக்கள் தங்கள் காலணிகளுடன் படாடோபமான வரவேற்பில் அமர்ந்துள்ளனர். அங்கு விருந்தினர்களைத் தவிர மற்றவர்கள் பிரகாரத்தில் நுழையக்கூடாது என சிவகாசி தொழிலதிபர் குடும்பம் ஒரே கெடுபிடியாம். புனிதமான மண்டபத்தில் காலணி அணியக் கூடாது என்ற அடிப்படை அறிவுகூட பாவம் 'சின்னஞ்சிறுசு' மணமக்களுக்குத் தெரியாதாம். மாணிக்கவாசகர் திருவாசகச் சொற்பொழிவு வழங்கிய இறைவனின் அருட்பிரசாதம் வியாபித்த அம்மண்டபத்தில் ஸ்டார் ஓட்டலின் கனமான விருந்தும் நடந்துள்ளது. தேசம் முழுக்க/ உலகம் முழுக்க இத்திருமண அட்டகாசத்தைக் கண்டித்தும், 'விவரமறியாத' இந்த மணமக்களை அமங்கலமாகச் சபித்தும் கரகோஷத்துடன் இகழொலி பதிவிட்டனர்.

கலிகாலத்தில் கூத்தனின் சபையில் இப்படியும் கூத்து நடக்கும். காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்ட ஆகம விதிகளை ஏதோ காரணத்திற்காக தீட்சிதர்களே மீறத் துணிந்து விட்டனர் என்றால் அது மன்னனுக்கும் மக்களுக்கும் கேடு. கம்பன் தன் இராமாயணத்திற்கு ஒப்புதல் பெற்ற 'தில்லை மூவாயிரம்' இன்று விமர்சனத்திற்கு உள்ளாவது தேச மக்களுக்கு நல்லதன்று. சிவகாசியிலிருந்து தில்லைக்கு வந்து தொழிலதிபரும் மணமக்களும் தீராத பாவம் கட்டிக்கொள்ள வேண்டும் என்பது விதி!

i





செவ்வாய், 10 செப்டம்பர், 2019

சூரியனை ஆய்வுசெய்த சித்தர்கள்

ஆதித்யா ஆதவன் பாஸ்கரன் பரிதி பானு என சூரியனுக்குப் பெயர்கள் பலவுண்டு. பூமி சூரிய மண்டலத்தில் பால் வெளியில் சுற்றிக்கொண்டு இருப்பதை அன்றே அகத்தியர் கூறினார்.

‘‘புவி தானும் ஜோதி வெளியின் ஒளியில் மிதக்க மிதந்தே கண்டோம்
போகனும் புலிப்பாணியுஞ் சாட்சியே
பருதி குலத்து செம்மையான உயிர்
கோளிது புவியாமே’’ என்றார்.
ஜோதி வெளி ஒளி என்பது MILKY WAY என்று பொருள்பட, பருதி குலம் என்பது SOLAR FAMILY என்று பொருள் ஆகிறது.

பல யுகங்களுக்கு முன்பே அகத்தியர் காலாங்கி திருமூலர் போகர் என பல சித்தர்கள் பால்வெளியில் கிரகங்களுக்கு ககன மார்க்கமாக பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டனர். பூமியில் மொத்த நிலம்/ நீர் பரப்பு எத்தனை சதவிகிதம் என்பதை காலாங்கி அன்றே கால் / முக்கால் பாகம் என்றார்.

சூரியனின் தன்மைகளைச் சித்தர்கள் விவரிப்பது என்ன?

"அக்கினியே அடுதி அளவு இருக்க கண்டோமே" என்று பன்னீராயிரத்தில் போகர் உரைத்தார். அதாவது ஐயாயிரத்து ஐந்நூறு சென்டிகிரேடுக்கு இணையானது என்று வெப்ப நாடி அகராதி பொருள் தருகிறது.

கோரக்கர் தன்னுடைய கோவையில்,

‘‘பருதி தனில் பிரணமிலா நீரின்வாயு நிறைய மீதக் காலே சோம்பல் பிராண காரிரும்பென கண்டோமே’’ என்றார்.

இதில் பிராணமிலா நீர்வாயு என்பது ஹைட்ரஜன் வாயுவைக் குறிக்கும். இது சூரியனின் எடையில் முக்கால் பகுதி எனவும், INERT எனப்படும் ஹீலியம், ஆக்சிஜன், கார்பன், இரும்பு என்றும் பொருள்படுகிறது.

‘‘ பருதி நிறை சூடுமலராம் - புவியெப்ப அஸ்டோத்திர நிறையாம் - மங்களவர்ணமாய் புவி காட்ட, மண்டல நீலமே கரு’’ என்பது புலிப்பாணி கூற்று.

சூடுமலர் என்பதே HOT PLASMA என்று சித்தர் வர்ணிக்கிறார். பூமியைப் போன்று நூற்றியெட்டு பங்கு எடை மிகுந்தது என்கின்றார்.

இத்தனை வெப்பம் கொளுத்த அவ்வொளி சூரியனிலிருந்து பூமிக்கு வர எத்தனை நேரமாகும்?

‘‘பருதி கிரணம் பாய்ந்து வந்திம் மண்ணையண்ட யண்டத்தில் சஞ்சாரமாகுமே பஞ்சரத மாத்திரை காலமே’’ என்றார் போகர். அதாவது ஐந்நூறு வினாடிகள் என்கிறார்.

போகர் தன் பெருநூலில் சூரியனில் உயர் தாதுக்கள் உள்ளன என்று முன்னமே உரைத்தார். அதையே பாம்பாட்டி சித்தரும் உறுதி செய்கிறார்.

‘‘மதிப்பிலடங்கா உலோக முடைத்தான் கதிரோன் - தங்கமுமுண்டு - ஒளியுலோகமுமுண்டு சாற்றுவோம் - இவையே அணுச்சக்தி தமை யெழுப்பக் கரு’’

யுரேனியம், தங்கம் போன்ற விலையுயர்ந்த உலோகங்கள் சூரியனில் நிறைய இருப்பதினால், NUCLEAR REACTION அங்கு எளிதில் நடைபெறுகின்றது என்கிறார். குறிப்பாக அங்கு NUCLEAR FUSION அல்ல FISSION தான் நடக்கிறது என்றும் புரியும். சூரியனின் விட்டம் பூமியின் விட்டத்தைவிட 108 மடங்கு என்று அறிந்து சொன்னார்கள்.

(சித்தர்களின் அறிவியல் பங்களிப்பு, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர். ரூ.70)


ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

மாணிக்கவாசகருடன் ஈசன் நடத்திய திருவிளையாடல்

அரிமர்த்தனப் பாண்டியன், நல்ல ஜாதிக்குதிரைகளை வாங்கவேண்டி தனது முதல் அமைச்சரான வாதவூரரை (மாணிக்கவாசகரை) திருப்பெருந்துறைக்கு பொன்பொருள் கொடுத்து அனுப்பினான். அவ்வூரில் குருவாய், சிவனடியாராய் வந்தமர்ந்திருந்த சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டார் மாணிக்கவாசகர். குதிரை வாங்கும் பணத்தை அங்கு ஆத்மனாதருக்குக் கோயில் எழுப்பச் செலவிட்டார். ஆடி மாதம் முடிந்து ஆவணியும் வந்தது. குதிரை வராததால் ஒற்றனை திருப்பெருந்துறைக்கு அனுப்பினான் மன்னன். அதன் பிறகு மாணிக்கவாசகர் சந்தித்த இன்னல்களை நாம் எல்லோரும் அறிவோம். மதுரை சுற்றுவட்டார காடுகளில் உள்ள நரிகளை ஈசன் குதிரைகளாக மாற்றி அரண்மனைக்கு அனுப்பினான். திருவாசகத்தில் 3 இடங்களில் நரியைப் பரியாக்கிய விபரம் கூறப்பட்டுள்ளது.
கீர்த்தித் திருவகவல் 36வது வரியில் – “நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்.”
திருவேசறவு 1-“நரிகளெல்லாம் பெருங்குதிரை ஆக்கியவாறன்றே உன் பேரருளே.”
ஆனந்தமாலை 7- “நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்தாய்"
(இங்கு படத்திலுள்ள ஓலையில் இப்பாடல்தான் உள்ளது. இவ்வரியை கோடிட்டுக் காட்டியுள்ளேன். படிக்க முடியும்வரை முயற்சி செய்யுங்கள். இது திருபெருந்துறை படலத்தில் வருகிறது. ஆனால் ஓலையில் தெளிவு இல்லாததால் மேற்கொண்டு படிப்பது சிரமமாக இருந்தது. எஞ்சிய வரிகளை திருவாசகம் தளத்திலிருந்து தேடி எடுத்தேன். அது 'பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய் அரிய பொருளே அவினாசி அப்பா பாண்டி வெள்ளமே தெரிய அரிய பரஞ்சோதீ செய்வ தொன்றும் அறியேனே’.)
மதுரையில் இத்திருவிளையாடல் நடந்த தினம்தான் இன்று. மாணிக்கவாசகர் அனைத்துத் தலங்களிலும் பதிகம் பாடியதை தில்லையில் சொற்பொழிவாகத் தந்தார். அதைக் கேட்க வந்த கூட்டத்தினரில் முதிய அந்தணராக வந்த ஈசன் எல்லாவற்றையும் தன் கைப்பட படி எடுத்து மொத்த சுவடிக்கட்டையும் பஞ்சாட்சரப் படியில் வைத்துவிட்டு மறைந்தான். அந்த மூலச்சுவடியை நாமும் கண்ணுற்று ஈசனின் அருட்பேறு பெறுவோம். ஓம் நமசிவாய!
No photo description available.

சனி, 7 செப்டம்பர், 2019

தாக்காது என்பது என்ன நிச்சயம்?

பூமியின் இயற்கை கோளானா சந்திரனில் மின்காந்த புலம் மிகவும் குறைவு என்பது நாம் பள்ளிக்கூட பாடங்களில் படித்துள்ளோம். ஆனால் என் இளங்கலை கல்லூரி நாட்களில் அணு இயற்பியல் பேராசிரியரிடம் இது எப்படி சாத்தியம்? என்று நான் கேள்வி கேட்டதுண்டு. பூமியைப்போல் நிலவும் ஒரு உருண்டை. தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை வலம் வருகிறது. அப்படியென்றால் அதன் நிலத்தடி கட்டமைப்பினுள் கனிமங்களும் சுழலும், அதிக வெப்பத்தில் குழம்பாகவும் உருகும் சாத்தியம் இருக்க சமயத்தில் எரிமலைகளும் வெடிக்குமே என்றேன். துருவங்களும் சக்திவாய்ந்தது ஆற்றலை வெளிப்படுத்தும். ஆனால் பலவீனமானது என்று இந்த புத்தகத்தில் போட்டுள்ளது என்று நூலகத்தில் எடுத்த அமெரிக்க ஆசிரியரின் புத்தகத்தை மேற்கோள் காட்டினேன். அங்கு எரிமலைகள் தற்காலத்தில் வெடிக்கவே இல்லை, அது உறங்கும் நிலையில் உள்ளவை என்று எப்படி தீர்மானித்தனர்? Outer plasma has its own effect என்றேன்.
அது சுழலும்போது அந்த ஒவ்வொரு கனிம அணுவும் ஒரு காந்தமாகத்தான் செயல்படும். நம் பூமிக்குண்டான அதே இயல்புதானே அதற்கும் இருக்கும்? அப்படி இருக்கும்போது அதற்கு மின்காந்த புலம் பலவீனமானது என்று எப்படி கணக்கிட முடியும்? புழுதிப்புயல் முதல் நீரோடை தடங்கள் வரை அங்கு ஏற்படும்போது நாம் செலுத்தும் விண்கலத்தையோ சந்திரனை ஆராய்ச்சி செய்யும் செயற்கை கோளையோ அது பெரிய அளவில் பாதிக்காது என்று எப்படி உறுதியாகச் சொல்லமுடியும்? திடீரென வீசும் காந்தப் புயலோ, பரவெளி ஒளிக்கற்றை சக்தியோ ஐநூறு கிலோ எடையுள்ள செயற்கைக் கோளை அதை உருட்டித் தள்ளாது என்று எப்படிச் சொல்ல முடியும்? பூமியே ஒரு காந்தமாக இருக்க அதைச் சுற்றிவரும் கோளின்மீது அதன் புலம் நிச்சயமாக தாக்கத்தை உண்டாக்கும். ஆக இரு Dynamo க்கள் மத்தியில் நாம் உள்ளோம் என்றேன். அதற்கு என்னுடைய பேராசிரியர், 'Your theory is fascinating. Why don't you write an article and submit? I shall see to that it is published in our college magazine' என்றார்.
மாணவனாக அன்று நான் கேட்ட கேள்வி இன்றைக்கு கற்பனையாகவோ குப்பையாகவோ ஆதாரமற்றதாகவோ தெரியலாம். அக்கல்வி ஆண்டில் நான் எழுதிய Exploring the hidden kinetics of the moon என்ற அறிவியல் கட்டுரை முதல் முறையாக என் கல்லூரி இதழில் வெளிவந்தது. இன்று சந்திராயனின் விக்ரம் லேன்டர் கலத்திற்கு நேர்ந்த காரணத்தை யோசிக்கும்போது பழைய நினைவுகள் வந்தன.
Image may contain: night and sky

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

மயக்கத்தில் விக்ரம்!

'நிலவு ஒரு பெண்ணாக நீந்துகின்ற அழகோ...' என்று திரைப்படப் பாடல் வரிகள் வரும். அழகு என்றால் அங்கு ஆபத்தும் இருக்கும். அல்லவா? நிலவு/நிலவன் இன்றுவரை தன்னுள் பல ரகசியங்களை உள்ளடக்கியது.

சந்திராயன்-2 விண்கலத்திலிருந்து விக்ரம் லேன்டர் வெற்றிகரமாகப் பிரிந்து நிலவின் ஈர்ப்பினால் பயணித்தது. நிலவின் தென் துருவத்தில் 2கிமீ உயரத்தில் விக்ரம் தரையிறங்கும் சமயம் வேகம் கூடியதால் தரையைத் தொடும்முன் பூமியுடனான தொடர்பு நின்றுபோனது என்கிறது இஸ்ரோ.

கடைசி சில வினாடிகளில் அது தரையில் இறங்கி இருக்கும் அல்லது மோதி விழுந்திருக்கும். அதுவரை நன்கு இயங்கிய இயந்திரத்தின் செயல்பாட்டில் திடீரென என்ன கோளாறு வந்தது? கோள்களின் தென் துருவம் எப்போதுமே மர்மம் நிறைந்த பகுதி. அமானுஷ்யமாக ஏதேனும் நடந்திருக்குமா? இச்செயல்பாடு விஞ்ஞானிகளின் கணிப்பிற்கும் திறனாய்வுக்கும் அப்பாற்பட்டது. இனி அடுத்து என்னவாகும்?

வேகமாகத் தரையிறங்கி மோதிய தாக்கத்தின் அதிர்விலிருந்து விக்ரம் சுதாரித்துக்கொண்டு பூமியின் தரைக்கட்டுப்பாடு மையத்துடன் தொடர்பை நிதானமாக ஏற்படுத்திக் கொள்ளலாம். அல்லது திக்குத் தெரியாத நிலவின் தென் துருவ பள்ளத்தாக்கில் எங்கேனும் தொலைந்து போயிருக்கலாம். அது எங்கே விழுந்தது என்பதைச் சுற்றிக் கொண்டிருக்கும் சந்திராயன் விண்கலம்தான் கண்டுபிடித்துச் சொல்லும். ஆக மொத்தம் தரை இறங்கிய வரை இந்தியாவுக்குப் பெருமையே! பிற நாடுகள் இதுவரை முயற்சிக்காத சந்திரனின் தென்துருவ பிரவேசத்தில் முன்னோடியாக இந்தியா செய்த சாதனையிலும் சோதனை உண்டு.

கடந்த யுகத்தில் குரு காலாங்கியும் சீடர் போகரும் கோள்களில் ககன மார்க்கமாக சஞ்சரித்து அங்கிருந்து நோக்கி பூமியின் அளவையும் வளத்தையும் பால்வெளியின் பிரம்மாண்டத்தையும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கணித்துச் சொன்னதை நாம் எல்லோரும் அறிவோம்.



தெளிவற்ற நிலை!

ஒவ்வொருவருக்கும் தன் கடவுள் நம்பிக்கையை /மறுப்பை வெளிக்காட்டிக் கொள்ள உரிமையுண்டு என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் மறுப்பை வெளிக்காட்ட கோயிலில் சிலையை உடைப்பது, வழிபாட்டு இடத்தில் பெட்ரோல் குண்டு வீசுவது, பக்தர்களையும் அர்ச்சகர்களையும் தாக்குவது, கடவுள்களின் ஓவியங்கள் மீது பெயிண்ட் அடிப்பது, ஆன்மிக கலாச்சாரத்தை கொச்சைப்படுத்துவது, பக்தர்களின் மனம் புண்படுமாறு நாகரிகமற்ற வாசகங்களைச் சுவற்றில் எழுதுவது, போன்ற செயல்களையே பொதுமக்கள் எதிர்க்கிறார்கள்.

IPC சட்டப்பிரிவு 295A ன்படி 'மதவழிபாட்டில் ஈடுபடுவோரின் உணர்ச்சிகளை சீற்றமுற்று எழச் செய்யவேண்டும் என்ற தீய கருத்துடன் வேண்டுமென்றே பேச்சாலோ, எழுத்தாலோ, அல்லது செய்கையாலோ அவர்கள் மதத்தை அல்லது மத உணர்வுகளை புண்படுத்துவதும் அல்லது புண்படுத்த முயற்சி செய்வதும் குற்றமாகும். 3 ஆண்டு சிறைத்தண்டனை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.'

இந்திய அரசியலமைப்புச் சட்டபிரிவு-19 'தன் கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்த உரிமை உண்டு' என்கிறது. ஆனால் நாத்திகர்கள் செய்யும் அராஜகச் செயலுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 295A ன்படி இதுநாள்வரை ஏன் தண்டித்ததில்லை?