About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 20 டிசம்பர், 2014

Latest book

The following book will be released by Vijaya Pathippagam, Coimbatore, in March to coincide with GD.Naidu's birth anniversary.


செவ்வாய், 2 டிசம்பர், 2014

கருட புராணம் - GARUDA PURANA

கருடபுராணம்

இப்பூமியில் பிறந்த ஓவ்வோரு மனிதனும் இறந்த பின் இறுதியில் எங்கே செல்கிறான் என்ன ஆகிறான் என்பதை விளக்கமாக உரைக்கும் பதிவு இது..

சாவு வருவதற்கு முன்னும் வந்த பின்பும் உயிர்களை அச்சுறுத்தியோ அன்பு காட்டியோ அழைத்து செல்லும் அந்த 3 நபர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? உயிர்களை எங்கே அழைத்துச்செல்கிறார்கள்? அவர்களின் பூர்வீகம் என்ன? என்பதைப்பற்றி ஆராய்ச்சி செய்வோம். இத்தகைய ஆராய்ச்சிகளுக்குப் பெரும் துணையாக இருப்பது புராணங்கள் ஆகும். புராணங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டால் உண்மைகளை முழுமையாகக் கண்டறிய முடியுமா?

அது நம்பத்தகுந்த வகையிலும் அமையுமா? என்றெல்லாம் சந்தேகம் எழுவது இயற்கையானது தான். காரணம் மிகைப்படுத்திக் கூறல் என்பது புராணங்களில் மிகுதியாகவே உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும் புராணங்கள் முழுமையான கட்டுக்கதைகள் என்று ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாது. காரணம் புராணங்களில் கூறப்பட்டு இருக்கும் பல சம்பவங்களுக்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் பல நவீன விஞ்ஞானத்தால் கண்டறியப்பட்டுள்ளது. எனவே புராண விஷயங்களை பக்க சார்பற்று அலசி ஆராய்ந்து எடுத்த பல விஷயங்களை உண்மையென நம்பி அடுத்த விஷயங்களைப்பற்றிப் பார்ப்போம்.

இறந்தவர்களின் ஆத்மாவை அழைத்துச் செல்ல மூன்று நபர்கள் வருவதாக இறந்தவர்களுக்கும் இறப்பில் இருந்து உயிர்ப்பித்து எழுந்தவர்களும் கூறுகிறார்கள். யார் அந்த முன்று நபர்கள்? 
கிருஸ்துவம் அந்த 3 பேரையும் தேவதூதர்கள் என்கிறது.

இந்து மதமோ அவர்களை மரண தேவனான எமதர்மனின் தூதர்களான கிங்கரர்கள் என்கிறது.
யார் இந்தக் கிங்கரர்கள்? இவர்கள் எப்படி இருப்பார்கள்? இவர்களின் வேலை என்ன? கருட புராணம் இவர்கள் அஞ்சத்தக்க உருவத்தை உடையவர்கள் என்றும் நெருப்பையே சுட்டுவிடும் அளவிற்கு சினமுடையவர்கள் என்றும் பாசம் முசலம் போன்ற ஆயுதங்களைத் தரித்தவர்கள் என்றும் கார்மேகம் போன்ற இருண்ட நிற ஆடைகளை அணிந்தவர்கள் என்றும் வர்ணிக்கிறது.
அவர்கள் வாழ்நாள் முடிந்துபோன உயிர்களை மரண தேவனிடம் கொண்டு சேர்க்கவே படைக்கப்பட்டவர்கள் என்றும் ஆசா பாசங்களுக்கு இடம் கொடுக்காமல் கடமையைச் செய்வதே அவர்களின் பணி என்றும் மாறுபடுத்திக் கூறினாலும் பைபிளும் குரானும் இதே மாதிரியான விளக்கங்களையே இவர்களைப் பற்றித் தருகிறது.

மேலும் இவர்களுக்குப் பூமியில் உயிர்களை அறுவடை செய்து யமதர்மனின் கிட்டங்கியில் சேர்ப்பதோடு வேலை முடிந்து விடுகிறது. உயிர்கள் புரிந்த நன்மை தீமைகளை விசாரிப்பதும் அதற்கான சன்மானம் அல்லது தண்டனையை வழங்குவது எமதர்மனின் வேலை என்றும் தண்டனைகளை நிறைவேற்றுவது வேறு மாதிரியான கிங்கரர்கள் யக்ஷர்களின் வேலை என்றும் பழமையான நூல்கள் பலவற்றில் காண முடிகிறது.

உடலில் இருந்து உயிர் பிரிக்கப்பட்ட பின்பு அந்தந்த உயிர்களுக்கு என்ன நிகழ்கிறது என்பதைக்கருடபுராணம் கவிதா லாவண்யத்தோடு விவரிப்பதைப் பார்ப்போம்.
செடியிலிருந்து மலரைக்கொய்தபின் இறைவனின் பாதத்தில் சமர்பிப்பது போல் உயிர்கள் கிங்கரர்களால் யமன் முன்னால் சமர்ப்பணம் ய்யப்படுகிறது. தன் முன்னால் ஜீவன் கொண்டு வரப்பட்டவுடன் மீண்டும் அந்த ஜீவனை பறித்த இடத்திலேயே விட்டு வரும் படியும் மீண்டும் 12 நாட்கள் சென்றபின் தன் முன்னால் கொண்டு வரும்படியும் கட்டளை பிறப்பிப்பான்.
உடனே யமகிங்கரர்கள் ஒரு நொடி நேரத்திற்குள் 80 000 காத தூரத்தில் உள்ள பூமியில் உயிரைப் பறித்த இடத்தில் அந்த ஜீவனைக்கொண்டு விட்டு விடுவார்கள்.

இப்படி யமலோகம் சென்ற ஜீவன் மீண்டும் தனது உடல் இருக்கின்ற இடத்திற்கே திரும்பி வருவதனால் இறந்தவனின் உடலை சில மணி நேரமாவது ஈமக்கிரியைகள் செய்யாமல் வைத்திருக்க வேண்டும். காரணம் ஆயுள் முடியும் முன்பே அந்த ஜீவன் உடலை விட்டுப் போயிருந்தால் மீண்டும் உயிர் பெற்று எழ வாய்ப்புள்ளது.

செத்துப்பிழைத்தவர்கள் என்று கருதப்படும் நபர்கள் இத்தகையவர்களே ஆவார்கள். அப்படியில்லாது நிரந்தரமாக உடலை விட்டுச் சென்றவர்கள் பூமிக்கு வந்ததும் உயிரற்ற தனது உடலைப் பார்த்து அந்த உடலிற்குள் புகுந்து கொள்ள முயற்சிப்பார்கள். அந்த முயற்சி தோல்வி அடைவதனால் தாங்க முடியாத துயர வசப்பட்டு ஆவி வடிவில் இருந்தாலும் அழுது துடிப்பார்கள். தங்களது உடல் மயானத்திற்கு எடுத்து வரும்போதும் கூடவே வருவார்கள். அவர்களோடு மற்ற ஆவிகளும் கலந்து கொண்டு பாடையில் இருக்கும். உடல்மீது விழுந்து அழுத்துவார்கள். இதனாலேயே பாடை அளவுக்கு அதிகமான பாரத்தைக் கொடுக்கும். இதை பாடை தூக்கிகளில் அனுபவசாலிகள் நிதர்சனமாகவே அறிவார்கள். உடல் மயானத்தைச்சென்றடைந்தவுடன் தனது உடல் எரியூட்டப்படும் சிதைக்கு மேலேயோ அல்லது புதை குழிக்கு 10 அடி உயரத்தில் ஆவி நின்று தனது உடல் வெந்து சாம்பலாவதையோ மண்ணால் மூடப்படுவதையோ பார்த்து பதைபதைத்து துடிக்குமாம்.

மிகப்பழமையான பெயர் தெரியாத ஏட்டு சுவடி ஒன்றில் சில மந்திரங்களைக் குறிப்பிட்டு அம்மந்திரங்களை முறைப்படி உரு ஏற்றினால் சிதைக்கு மேலே நின்று துடிக்கும் ஆவி உருவை நேரில் காணலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இறந்த மனித உடலானது முற்றிலுமாக எரிந்து சாம்பலாகும் வரை அந்த உடல் மீது உள்ள ஆசையும் உறவினர்கள் மீதும் நண்பர்கள் மீதும் கொண்ட அன்பும் வாழ்ந்த காலங்களில் உபயோகப்படுத்திய பொருட்களின் மீதுள்ள ஈடுபாடும் பிரிந்த உயிர்க்குக் கொஞ்சம் கூட குறைவது இல்லை.

உடல் எரிந்து சாம்பலான பின்பு உயிருக்குப் பிண்டங்களால் ஆன சரீரம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. உயிர் பிரிந்து தகனம் முடியும் வரை உயிருக்கு உருவம் என்பது கிடையாது.
காற்றில் மிதக்கும் வெண்மை அல்லது கருமை நிற புகை போன்ற வடிவத்திலேயே ஆவிகள் இருக்கும். இந்த இடத்தில் மிக முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.
ஆவிகளை நேரில் காணும் வாய்ப்புப் பெற்றவர்கள் வெண்பனி போன்றோ கரிய புகை வடிவிலோ ஆவிகளைப் பார்த்ததாகத்தான் கூறுகிறார்கள்.மிகச்சிலர் மட்டுமே பௌதிக வடிவில் ஆவிகளைப் பார்த்ததாகக்கூறுகிறார்கள்.

ஆவிகள் கருப்பு வெள்ளையாகத்தான் காட்சித்தருமா? மற்ற வண்ணங்களில் ஆவிகள் வராதா? இந்த நிறங்களில் மட்டும் பெருவாரியான ஆவிகள் காட்சி தருவது ஏன்? என்ற கேள்விகள் எல்லோருடைய மனதிலும் எழுவது இயற்கை.இதற்கு பல காலமாக ஆவிகளைப்பற்றிய எனது தனிப்பட்ட ஆராய்ச்சிகளிலும் பல பழைய நூல்களில் கிடைத்த விஷயங்களிலும் வேறு பலர் மேற்கொண்ட சோதனைகளிலும் மிகத் தெளிவான பதில் கிடைத்துள்ளது.

பூமியில் நல்ல வண்ணம் வாழ்ந்து மறைந்து போன ஆவிகள் வெள்ளை நிறத்திலும் மனதிற்குள் காமக் குரோதங்களை சுமந்கும் பல தீய செயல்கள் புரிந்தும் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்துபோன ஆவிகள் கருப்பு நிறத்திலும் இருப்பதாகக்கண்டறியப்பட்டள்ளது. மேலும் ஆன்மீக ரீதியில் முன்னேற்றமடைந்து மனிதருள் மாணிக்கமாய் இருந்து முக்தி அடைந்த சித்த புருஷர்களின் ஆவிகள் மெல்லிய ஆரஞ்சு வண்ணத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
ஆனாலும் வைதீக சாஸ்திரங்கள் உயிர்கள் காற்று போன்ற இந்த வடிவில் இருப்பதற்கு வேறு விளக்கங்கள் தருகிறது. முறைப்படியான இறுதிச் சடங்குகளும் திதி திவசம் போன்றவைகள் கொடுக்கப்படாமல் இருக்கும் ஆவிகள் தான் உருவமற்று புகைவடிவில் நடமாடும் என்றும் சாஸ்திரப்படி இறுதிக் கிரியைகள் செய்யப்பட்ட ஆத்மாக்கள் புகைவடிவில் இருந்தாலும் அந்தப்புகை வடிவம் கூட அவர்கள் பூமியில் வாழ்ந்த போது என்ன உருவத்தல் இருந்தார்களோ அதே உருவமாகத்தான் இருப்பார்கள் காட்சி தருவார்கள் என்கிறது.

சாஸ்திரங்கள் கூறும் கருத்திலும் தவறுகள் இல்லை என்றே நான் கருதுகிறேன். 
காரணம் சடங்குகள் முறைப்படி நடத்தப்பட்ட ஆவிகளுக்கு அழுத்தம் திருத்தமான பௌதிகத் தோற்றம் போலவே தெரிகிறது என்றும் மற்றவர்களுக்கு அழுத்தமான உருவங்கள் அமையாததால் வெறும் புகை வடிவாக மட்டுமே தோன்றுகிறது என்ற முடிவிற்கு நம்மை வரவைக்கிறது.
முறைப்படியான சடங்குகள் செய்யப்பட்ட ஆவிகளுக்குச் சொந்த வடிவம்எப்படி வந்தமைகிறது என்பதைக்கருட புராணம் அழகாகக் கூறுகிறது.

இறந்தவன் மகனால் முதல்நாள் வைக்கும் பிண்டத்தால் ஆவிக்குத் தலை உண்டாகிறது.
இரண்டாம் நாள் போடும் பிண்டத்தால் கழுத்தும் தோளும்
மூன்றாம் நாள் பிண்டத்தால் மார்பும்
நான்காம் நாளில் வயிறும்
ஐந்தாம் நாளில் உந்தியும்
ஆறாம் நாளில் பிருஷ்டமும்
ஏழாம் நாளில் குய்யமும்
எட்டாம் நாளில் தொடைகளும்
ஒன்பதாம் நாளில் கால்களும் உண்டாகி
பத்தாம் நாளில் புத்திரனால் பெறப்படும் பிண்டத்தால் சரீரம் முழுவதும் பூரணமாக உருவாகும்.

பிண்டங்களால் முழுமையான உருவத்தைப் பெற்ற ஆவி பதினோறாவது நாள் தான் சரீரத்தோடு வாழ்ந்த வீட்டிற்கு வந்து தான் உயிரோடு இருக்கின்ற பொழுது வீட்டில் நிகழ்ந்த அனைத்து சம்பவங்களையும் தன்னால் 
நிகழ்த்தப்பட்ட எல்லாவிதமான காரியங்களையும் நினைத்துப்பார்த்து அழுது துடிக்குமாம்.

மீண்டும் நம்மால் இப்படி வாழ முடியாமல் போய்விட்டதே என்று எண்ணியெண்ணி அந்த ஆவி துடிப்பதை எரிமலை சீற்றத்திற்குள் அகப்பட்டு கொண்ட சிறு பறவைக் குஞ்சியின் துடிப்பிற்கு இணையாக ஒப்பிடப்படுகிறது.

கடந்தகால வாழ்க்கையை மீண்டும் வாழ ஆசைப்படுவதும் சரீரப்பிரவேசத்தில் மோகம் கொள்வதும் சாதாரணமான உலகியல் வாழ்க்கையில் வாழ்ந்து உழன்ற செத்துப்போன ஜீவன்கள் தான் என்பதையும் பரமார்த்திக வாழ்வை மேற்கொண்ட ஜீவன்கள் சரீரப்பிரிவைப்பற்றியோ மரணமடைந்ததைப்பற்றியோ துளி கூடக் கவலைப் படுவதில்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

வாழ்ந்த வீட்டில் வீழ்ந்து கிடந்து அழும் ஆவியை பதின்மூன்றாவது நாள் எமகிங்கரர்கள் பாசக் கயிற்றால் கட்டி எமபுரிக்கு இழுத்துச்செல்வார்கள்.

அப்படி இழுத்துச்செல்லும் போது கூரிய பற்களுடைய ரம்பம் போன்ற இலைஅமைப்புக்கொண்ட அமானுஷ்ய வனாந்திரம் ஒன்றின் வழியாக அந்த ஜீவன் பயணம் செய்யும் சூழ்நிலை ஏற்படும். அப்போது வாள் போன்ற மர இலைகள் அந்த ஜீவனின் பிண்ட உடலைக் குத்திக் காயப்படுத்தும்.
அதனால் ஏற்படும் வலியில் சுறுக்கு மாட்டப்பட்ட நாய் ஊளையிடுவதுபோல் ஆவி கத்தித் துடிக்கும். வைவஸ்வத என்ற நரகம் வழியாகவும் ஜீவன் இழுத்துச்செல்லப்படுமாம். அந்த நகரத்தில் உயரமான மாளிகைகள் மிக நெருக்கமாக அமைந்திருக்குமாம். அச்சத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்தும் கோர ரூபமுடைய பிராணிகள் பல ஜீவனைச் சூழ்ந்து கடித்துக் காயப்படுத்துமாம்.

மேலும் அந்நகரத்திற்குள் நுழைந்தவுடன் ஜீவனுக்குத் தாங்க முடியாத தாகம்ஏற்படுமாம். தாகம் தணிக்க இரத்தமும் சீழும் கலந்த கொடுக்கப்படுமாம். அந்தநகரத்து மேகங்களெல்லாம் இரத்தத்தையும் அழுகிய சதைத்துண்டகளையும் மழையாகப் பொழியுமாம்.

இத்தகைய அருவருக்கத்தக்க கஷ்டமான சூழலிலும் இறந்த ஜீவனுக்கு அதீதமான புத்திரபாசம் ஏற்படுமாம். பாவத்தின் தண்டனையும் பாசத்தின் சோதனையும ஆவியைச் சட்டையில்லாமல் பனிப்பொழிவிற்குள் அகப்பட்டக் கொண்டவனைப்போல் வருத்தி எடுக்குமாம். இப்படி வழி நெடுகலும் காற்று நிறைந்த வழியிலும் துஷ்ட ஜந்துக்கள் நிறைந்க வழியிலும் இழுத்துச் செல்லப்படும் ஜீவன் இருபத்தெட்டாவது நாளில கொடுக்கப்படும் சிரார்த்த பிண்டத்தை உண்டு சற்று இளைபாறி முப்பதாவது நாள் யாமியம் என்ற நகரத்தை அடையும்.

அந்நகரில் வடவிருஷம் என்ற மரமும் பலவிதமான பிரேதக் கூட்டங்களும் நிறைந்திருக்கும். அங்கு இரண்டாவது மாசிக பிண்டத்தைப் பெற்ற பின்பு சற்று இளைப்பாறி மீண்டும் கிங்கரர்களால் இழுத்துச்செல்லப்பட்டு திரைப்பஷிக மாசிக பிண்டத்தை வேண்டி சங்கமன் என்ற எட்க்ஷன் தலைமையில் உள்ள சௌரி என்ற பகுதியல் சிறிதுகாலம் தங்கி மூன்றாவது மாசிக பிண்டத்தைப் பெறுவார்கள்.

ஐந்து மற்றும் ஆறாவது பிண்டத்தை உண்டு கடந்த சென்று வைதரணி என்ற நதிக்கரையை அடைவார்கள். சாதாரணமான நதிகளைப்போல் இந்த நதியில் தண்ணீர் இருக்காது. அதற்குப் பதிலாக ரத்தமும் சீழும் சிறுநீர் மலம் சளி இவைகள் ஒன்றாகக் கலந்து ஆறாக ஓடுமாம். இந்த நதியைப் பாவம் செய்த ஆத்மாக்கள் அவ்வளவு சீக்கிரம் கடக்க முடியாமல் கிங்கரர்கள் ஆழத்தில் தள்ளி அழுத்துவார்கள்.

புண்ணியம் செய்த ஆத்மாக்களை ஒரு நொடிப்பொழுதிற்குள் ஆற்றின் மறுகரையில் கொண்டு விட்டுவிடுவார்கள். இப்படி பல இடங்களிலும் பலவிதமான அவஸ்தைகளையும் அனுபவங்களையும் பெற்றாலும் இறந்து ஏழாவது மாதம் ஆனாலும் கூட எமலோகத்திற்குச் செல்லும் பாதி வழியை மட்டும் தான் ஜீவன்கள் இதுவரை கடந்து வந்திருக்குமாம்.
பக்குவப்பதம் என்ற இடத்தில் எட்டாம் மாதம் பிண்டத்தையும் துக்கதம் என்ற இடத்தில் ஒன்பதாவது பிண்டத்தையும் நாதாக்தாதம் என்ற இடத்தில் பத்தாவது பிண்டத்தையும் அதப்தம் என்ற இடத்தில் பதினோறாவது பிண்டத்தையும், சீதாப்ரம் என்ற இடத்தில் பன்னிரெண்டாவது அதாவது வருஷாப்திய பிண்டத்தையும் பெறுவார்கள்.

மரணமடைந்து ஒரு வருடத்திற்குப்பின்னரே எமபுரிக்குள் ஜீவன்களால் நுழைய முடியும். எமதர்மன் முன்னால் நியாய விசாரணைக்கு ஜீவன் நிறுத்தப்படும் முன்னால் 12 சிரவணர்கள் இறந்த ஆத்மா செய்த பாவ புண்ணியக்ணக்குகளைப் பார்ப்பார்கள். அதன் பின்னரே எமதர்மனால் விசாரிக்கப்பட்டு தண்டனை பெறுவார்கள்.

இங்கு நாம் எமலோகத்திற்குப்போகும் வழியில் ஆத்மாவிற்கு ஏற்படும் பலவிதமான கஷ்ட நஷ்டங்களைப்பார்த்தோம். தீமை மட்டுமே வாழும் காலத்தில் செய்த ஆத்மாக்கள் துன்பங்களை அனுபவிப்பது நியாயமானதுதான். நன்மையைச்செய்த ஆத்மாக்கள் கூட இதே வழியில்தான் அழைத்து செல்லப்படுவார்களா? இதே துன்பங்களைதான் அனுபவிப்பார்களா என்று வினா எழும்புவது இயற்கையானதுதான்.

நமது சாஸ்திரங்களும் தர்மங்களும் சத்திய வழியில் வாழ்க்கை நடத்துபவர்களை மரண தேவனின் தூதுவர்கள் வந்து அழைக்க மாட்டார்கள்.இறைதூதர்கள் தான் வந்து அழைத்துச் செல்வார்கள் என்று கூறுகிறது.நாம் கிங்கரர்களால் அழைத்து செல்லப்படும் பெருவாரியான ஆத்மாக்களைப்பற்றி மட்டும் பேசியதனால் அவர்கள் அனுபவிக்கும் துயரங்களை விவரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

சனி, 22 நவம்பர், 2014

Kanchipuram tour

We went for a one day tour to Kanchipuram on Friday, Nov 21.

Mango tree, Ekambareswarar temple: Parvathi worshiped Lord Shiva under this tree. The tree, said to be more than 3500 year old, lost its trunk/roots a few years ago. The Horticulture department salvaged plant cells for culture growth and restored a new sapling which is now a big tree. Of the panchbootha sthalas, Earth is Kanchi with Sakthi's presence and Tiruvaarur with Siva's presence. Eka-Amram means single mango tree.

Kamakshi temple: We performed abishekam to the goddess around 10.30am. Adisankarar installed a Meru chakram in front of the goddess in 7AD. Darshan was a divine beauty in fullness! The temple is under renovation.

Varadarajar temple: A massive temple with intricate sculptures. Enjoyed puliyodhari and pongal. The temple record says that Sir Thomas Munro fulfilled his vow by donating huge silver vessels (Munro gangaalm) and gold ornaments to the lord. Perhaps, a pious saint among the British governors of Madras.

Ulagalandha perumal temple: Very huge moorthy with hands and legs spread across to measure the universe. Marvelous!

Kumarakotam: Murugan temple where various saints from Arunagiri, pamban swamigal and others composed and sang hymns on the lord.

Orirukkai: 6 kms from temple town. Mani mandapam for Mahaperiyavar is under construction. Many young students of the Vedha patasalas were learning under big trees in traditional atmosphere and dress code. Very nice to see such things of cultural value and heritage.

On the return phase we visited Adhikesavaperumal temple/ Sriperumpudur and Vallakotai Murugan temple. The day was useful and mind rested in peaceful satisfaction. 12 hours package will do.

Times Ascent



Winner: S Chandrasekar
Topic: Are criminal background checks needed for job candidates?

‘Never judge a book by its cover’  holds well not only for book readers but also for HR professionals. Usually, the first few minutes of any interview are impacted by the face value of the profile, body language, bold attitude, communication and skill expertise. With negotiation for a win-win climax, the talks end there fruitfully.
But all is not well. When a potential candidate is hired on-board, he becomes an identity of the organisation wherever he represents it. If he is tainted, his personality is sure to have adverse effects on the brand image of the organisation. Today, every employer is keenly cautious to know more about the background of the new hire. They see to it that the potential hire does not have a murky past that was suppressed in the interview rounds. Any such record would hamper the business and pose a threat to long-term clients and employees. 
Predominantly, we have heard of pre-employment checks and police verification done by government organisations. Going a step ahead is the criminal background check that is dutifully carried out in the US and elsewhere. No doubt, such practices are diligently followed by many MNCs in India. It is generally an unsaid trend to mention names of references that are known to the candidate. Imagine the magnitude of harmful hiring and negligence if we were to go by monotonous research of testimonials in the professional network groups. In strict faith, background checks are valuable and can eliminate future problems arising out of the hire. This process, if dutifully, followed would give good return on investment on the hired candidate.
— Chandrasekar is a core HR trainer at SPIRO Professional HR Academy

திங்கள், 1 செப்டம்பர், 2014

Divine photo-2

Hope you have seen my earlier posting about the photo of Mahaperiyavar emerging in homam posted in Dec-2011 on this blog. Now read the following.

At the gruhapravesam function of my elder brother's house on 31-8-2014, gods emerged from homam. When I happened to click photos, the following divine personalities emerged from agni. So it is true that every time when the Aahudhi material is offered in the fire and mantra is recited, it is sure that gods, goddess, Indran, dhevas, rishis from the Siva/Vishnu lokam visit the spot to receive Aahudhi share from fire/smoke. 

Sitting in front of the glowing agni we cannot easily figure out images. Even if recorded on video, it will be only a continuous glowing fire. People generally argue that many images will keep forming in fire just like watching figures in clouds. Here, it is purely a divine act that made me shoot at right moment. We are unsure as to what image would come and go in 1/20th of a second to match the shutter speed.

i) Ganesha : Standing, with perfect ears, long thumbikkai, visible hands and legs, vasthram partially visible in lighter tone
ii) Shiva : standing majestic, holding a thrisoolam with damaru attached to it. Looks like a snake coiled around the neck, Neelakantam clearly visible as dark spot at closeup. Ganga flowing down from his big jata mudi. Parvathi with flying hair, ornaments (vanki) on arms, is slowly emerging from below the left foot of Siva. Bairava is looking up from right bottom. Highly mesmerizing.
iii) Maha Vishnu : Standing tall, chakram on right hand, shangu on left.Vasthram and leg visible. Face not clear. Garudan in red color is seen behind his legs
iv) Shirdi Baba: Two wings emerge from the base, he is leaning to side with raised right hand, left hand stretched in front, begging bowl/bag hanging on right shoulder near waist. His full hand robe Kabni hanging up to his knee level.

We have not seen but only studied in the Hindu scriptures/shastra that devaloka personalities come and take Ahudhi from homam. This special miracle stands testimony to it. Feeling great to be their chosen lens man. 

Mark 4:9
Jesus said, "Whoever has ears to hear, let them hear."
----------- 

வியாழன், 3 ஏப்ரல், 2014

Intro to 'BOGAR 7000' book on Youtube


Visit the following link for an introduction about the books on Siddhar BOGAR & BOGAR-7000.

https://www.youtube.com/watch?v=SLwB0Ios-lE
https://www.youtube.com/watch?v=cpXiFOps6rU



Actor Sivakumar purchased a copy of 'BOGAR-7000 : Sapthakaandam oru paarvai' at the LEO BOOKS Stall, Coimbatore Book Fair, 2014.

திங்கள், 3 மார்ச், 2014

Preface to BOGAR-7000




அன்பர்களுக்கு வணக்கம்!
நான் மெத்தப் படித்த தமிழ் பண்டிதனல்ல, ஆன்மிகத்தில் தெளிந்து கரையேறியவனல்ல, சித்த இலக்கியங்களை உழுதுப் பார்த்தவனுமல்ல. நான் ஒரு சராசரி நிலையில் உள்ளவன்.
அதிசய சித்தர் போகர் (கற்பகம் புத்தகாலயம்) என்ற புத்தகத்தை எழுதும்போதுதான், சித்தர் நூல்கள் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இதுபோன்ற நூலை நான் எழுதவேண்டும் என பணித்ததே சித்தர் போகர் தான். சில வருடங்களுக்குமுன் அவர் தந்த இப்பணியை எடுத்துச்செய்ய ஞானமோ தெளிவோ அனுபவமோ அப்போது எனக்கு இருக்கவில்லை. அந்நூல் எழுதியபின் இவையெல்லாம் முழுமையாய் இப்போது எனக்கு வந்துவிட்டது என்று கூறிட இயலாது. அவர் இதுவரை என்னை பயிற்சியில்தான் வைத்துள்ளார் என்று நம்புகிறேன். 
முதல் நூல் எழுதுவதற்காக போகரின் சப்த்காண்டத்தைப் ஆய்வு செய்ய நேர்ந்தது. எண்ணற்ற மற்ற சித்த நூல்கள் இருக்க இதை மட்டும் ஏன் தேர்ந்தெடுத்தேன் என்று தெரியவில்லை. போகர் 7000 போன்ற பிரம்மாண்ட நீளமுள்ள சித்தர் பாடல்களை இதற்குமுன் நான் வாசித்தது கிடையாது. சித்தர் பாடல்களை மட்டுமே வெளியிடும் ஒரு பதிப்பாளரை அணுகி சப்தகாண்டத்திற்கு உரை இருக்குமா என்று கேட்டேன், இதுவரை யாரும் போடவில்லை என்றார். 
கொடுத்த பணியை செய்யாது காலம் கடத்துகிறேன் என்று நினைத்து போகரே என்னுள் இருந்து வேலை செய்தார் போலும். இதை எங்கு ஆரம்பித்து எப்படி முடிப்பது என குழப்பம் இருந்தது. அதுபோன்ற சமயத்தில் நான் எதை எழுதினால் போதுமோ அப்பாடல்கள் மட்டும் புரட்டும்போது கண்ணில் படும். அதை கோர்வையாக எழுத முதல்புத்தகம் சிறப்பாக வந்து பாராட்டையும் பெற்றது. நம்புங்கள், நான் அப்போது கூட சப்தகாண்டத்தை முழுமையாக வாசிக்கவில்லை. பாடலின் எண், குறிப்புமட்டும் எடுத்தேன். படிக்கும்போது மறைபொருள் சொற்கள் வந்து குழப்பும். அதனால் எழுதுவதற்கு முன் இதைப்பற்றி நிறைய ஆய்வு செய்தேன்.
போகருடைய நூலில் அப்படி என்னதான் சங்கதிகள் இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆசைபடுவோருக்கே இந்நூல் எழுதப்பட்டது. கரைக்கண்ட சித்த வைத்யர்களுக்கோ, ஆழம் எதிர்பாற்பவர்களுக்கோ எழுதவில்லை என்பதை சொல்லிவிடுகிறேன். ஒரு சராசரி நபருக்கு இந்த நூல் பற்றி என்ன தெரியவேண்டுமோ, அந்த அளவில் மட்டுமே என்னை எழுதவைத்தார். எத்தனையோ புலவர்களும் அறிவாளிகளும் இருக்க அவர் இப்பணி செய்ய என்னை தேர்ந்தெடுத்ததும் தெரியவில்லை.
இப்போது போகர் எழயிரத்தை முழுதுமாக வாசித்துப் பார்த்தபின் பிரமித்துப்போனேன். இந்த இரண்டாம் நூலை எழுதியபிறகும்கூட கருத்தை முழுமையாக உள்வாங்கிக் கொண்டேனா என்பது தெரியாது. மூலிகைகள், ரசவாதம், கற்பம், மாந்த்ரீகம் போன்ற தலைப்புகள் எல்லாம் எனக்கு முற்றிலும் புதிது. சப்தகாண்டத்திற்கு நாம் ஏன் பொருளுரை எழுத முயற்சிக்கக்கூடாது என்று மனதில் அவர் கொடுத்த தைரியத்தில் இந்நூல் உருவானது. பலர் இதுவரை முயற்சிக்காத ஒரு நூலைக் கையிலெடுத்து அதற்கு சாராம்சமாக எளியவுரை எழுதும் அளவிற்கு நான் புலமையும் தகுதியும் உள்ளவனா என்று நீங்கள் கேட்டால் என்னிடம் பதில் இல்லை.
வருங்காலத்தில் போகர் 7000 நூலுக்கு யாரேனும் இன்னும் விரிவாக உரை எழுதக்கூடும். அதற்கு ஒரு அடித்தளமாய் இந்நூல் விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. நான் எழுதியதில் சொற் குற்றம் பொருள் குற்றம் இருக்க நிறையவே வாய்ப்புண்டு. அதையெல்லாம் சித்தர் போகரும் அன்பார்ந்த வாசகர்களும் மன்னித்தருள வேண்டும். எழுத வழிகாட்டிய போகரின் தாள் பணிந்து  இப்புத்தகத்தை சமர்ப்பிக்கின்றேன்.
                                                                                                           எஸ். சந்திரசேகர்


Salutations!
I stand before thee as neither a learned Tamil scholar nor an enlightened spiritual figure nor a person of siddha cult who had ploughed and fathomed the depth of siddha literature. I am a Hindu with an average knowledge and basic skills.

When I attempted my first book Athisaya Siddhar BOGAR (Karpagam Publications), I had an opportunity to read the mammoth composition of seven thousand songs of Bogar called BOGAR 7000. Of course, reading it was a mega task. It happened so that a few years ago, the writing assignment was symbolically entrusted to me by Siddhar Bogar himself. As I did not possess sufficient writing experience or a fair knowledge then, I could not take over the specific task. 

Never should you presume that I have achieved it in these years. Even to this day, I will not be able to say if I stand anywhere near to be qualified to write a thesis going by the strict yardstick prescribed for competency in Tamil language and grammar. I would rather say that it was purely a task initiated, entrusted and executed by him through me. All I understood is that he has put me on intensive training.

When several other works of siddhas are available in print, I did not know as to why I chose this particular work. Till that occasion, I never came across a lengthy work like this. I approached a local publisher who holds a track record of publishing all siddha works to know whether a detailed prose explanation is available for Bogar 7000. I received a negative reply that none had attempted to write notes for it. 

As I was procrastinating, Bogar himself had triggered the impulse in me to start the work. I was totally blank and knew nothing as to how to start and finish. During such difficult times, he would show those songs that were just required to write chapter wise. This was how I authored my first book that captured accolades and compliments from readers. Frankly speaking, at that stage also, I did not go through the entire length of epic like Sapthakaandam except jotting down brief notes and song number. Since the songs have pseudo words in disguise with encrypted meaning, it was confusing and difficult to proceed ahead. It demanded reasonable research before I wielded the pen.

After studying the entire composition, I was totally surprised and spellbound. The topics like elixir, salts, herbs, alchemy and black magic are new to me. Inspite of zero knowledge on the topics, it struck me as to why I should not attempt to write an abridged explanation for sapthakaandam comprising thousands of verses. I believe the courage was seeded by none other than the siddhar. Would anyone dare to write a thesis on a subject that is totally new to his expertise? Perhaps you would ask why I took a heavy subject in depth without ground knowledge and which many scholars did not try in the past. I have no answer.

In future, somebody could possibly bring out a better version with excellence and nuance. Any way, this book would be a primitive forerunner. Going by publishing standards, though predominantly the vocabulary and language chosen for subjects on these lines have been bombastic, it was tough for a common man to understand. As a person who is against the barricades of language reach, I wanted a simple flow that will not shoo away enthusiastic readers.

A siddha mother living in Palani asked me to translate my work into English. I hesitated for the reason that this would need precision to convey the right meaning without distortion and at the same time understandable, without running for dictionary. It is my personal view that a prose work should not be a vehicle to boast one’s mastery over the language through high level vocabulary. The language style followed in many books on subjects of siddha and spirituality, address only the international native speakers of English. Even if the translation work was entrusted to some learned professors, I may not be sure whether they will understand and portray with ease the crux of what I conveyed in Tamil. Their emphasis would be more on language style and grammar than the essence. So, I decided to try it myself.

Though care has been taken, errors in interpretation and typography are expected in my classic debut in English. I beg the siddhar and readers to pardon it magnanimously. It is my soulful pleasure to dedicate the book at the holy feet of my guide, Siddhar Bogar.
                                                                                                        S.Chandrasekar

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

முடிமன்னனும் பிடிமண்ணில் அடங்குவான்


உலகிலேய மிகபெரிய யானைப் படையை கட்டி ஆண்ட சோழ மன்னன் தென்னிந்தியா முழுவதும், தெற்காசியா வரை வேர் பரப்பி தன் மகன் வெற்றி கொடி நாட்ட வழிவகுத்த மாமன்னன் ராச ராச சோழன். ஆட்சி காலம் கிபி.985 - 1012.
1000 வருடமாக கம்பீரமாக நிற்கும் பெரியகோவிலை கட்டிய மன்னன், உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன், மாலம், இலங்கை, ஸ்ரீவிஜயம் சுமத்ரா, கம்போடியா, தேசங்களுளையும்  கங்கை வரை சென்று வென்றவன், பல பெயர்களால் வழங்கப்பட்ட மன்னன், என்று இவருடைய புகழை இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படிப்பட்ட மாமன்னன் சமாதியைப் பாருங்கள். பள்ளிப்படை கோயில் கட்ட நிதி வசூலாகிறது என்பது இங்கே பலகையில் போட்டுள்ள செய்தி.
தஞ்சை மாவட்டம் குடந்தை தாலுகா, உடையாளூர் கிராமம் (பட்டீஸ்வரம் அருகில்) முடிகொண்டான் நதிக்கரையில் ஒரு விவசாயியின் (Mr.பக்கிரிசாமி) வாழைத் தோப்பில் உள்ளது மன்னனின் சமாதி. பள்ளிப்படை கல்வெட்டுகள் குறிக்கும் இடம் இதுதான். தன் பட்டத்து அரசி உலகமுழுதுடையாள் (Ulagamadhevi) க்கு இந்த கிராமத்தை எழுதி வைத்தான். முடிமன்னனும் பிடிமண்ணில் அடங்குவான் என்பது எத்தனை உண்மை.

 

அதே வாழைத்தோப்பில் 2015 ல் எழுப்பப்பட்ட பள்ளிப்படை (சமாதி) கோயில்.
Image may contain: outdoor