About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 29 ஜூன், 2018

உச்சரிப்பு 'ஸ்பஷ்டம்'

வேதம் ஓதுவதில் வடக்கிந்திய வேதியர்களைவிட தென்னிந்திய வேதியர்களே சிறப்பாக உச்சரிப்பு செய்கிறார்கள். எல்லா பிராந்தியங்களிலும் முதல்கட்ட சங்கல்பம் அவரவர் மொழியில் விளக்கிவிட்டு பிறகு, முழு மந்திரங்களை சமஸ்கிருதத்தில் சொல்வதுதான் பாரதம் முழுக்க வழக்கத்தில் உள்ளது.
நம்மைவிட அவர்களுக்குத்தான் உச்சரிப்பு வரும் என்று நாம் நினைப்போம், ஆனால் தென்னகத்தினர் குறிப்பாக தமிழ் வேதியர்கள் மட்டுமே வேத மந்திரகங்களை கனம் பாடுவதுபோல் சிரத்தையுடன் செய்கிறார்கள். சமஸ்கிருதம் என்பது தென்னகர்களுக்குத்தான் போல என்று அவர்கள் நினைப்பதும், வடமொழி நமக்கானதில்லை என்று நாம் நினைப்பதும் உண்டு. அப்படி என்றால் ஈசன் யாருக்காக இதைப் படைத்தான்? எப்படி இந்த அட்சர சுத்தம் தமிழ் வேதியர்களுக்கு வந்தது?
தமிழும் கூடுதலாக பேசுவதால், எந்த மொழியில் எந்த எழுத்தின் உச்சரிப்பும் நமக்கு வராமல் போகாது. இங்குதான் வடகிந்திய வேதியர்களின் ஓதும் திறன் குறைபடும். இரண்டு கண்களும் தெளிவாக இருந்தால்தானே பூரணத்துவம் கிடைக்கும்? அதுபோல்தான் நம் இருமொழிகளின் கலைகளும், சுவாசமும்.
இருமொழிகளும் படைக்கப்பட்டதன் உன்னத காரணமே இதற்குத்தான். ஆனால் துவேஷம் வெளிப்படுத்திக்கொண்டு சேற்றைவாரி வீசுவதை யாரும் உணர்ந்ததில்லை. அதனால்தான் சமஸ்கிருதம் என்ற மொழிக்கு எழுத்துவடிவம் இருந்தும் அதை அற்ப மனிதர்களுக்கு ஈசன் வெளிப்படுத்தவில்லை. அதை யாருக்குக் காட்டினான்?
அகத்தியர் திருமூலர் போகர் முதலான சித்த ரிஷிகளுக்கு அவனே கற்பித்து அருளினான். ஆனால் மனிதர்களுக்கு அதை காட்டாமல், சப்த மந்திரமே போதும் என்று விட்டுவிட்டான். இதனால்தான் சமஸ்கிருதத்தை அவரவர் மொழியில் இன்றுவரை எழுதி வருகிறோம். இன்னும் எத்தனைக் காலங்கள் ஆனாலும் அசோகர் காலத்து குப்பையைத் தோண்டினாலும் மூல வடிவம் புலப்படாது. குருடர்கள் யானையின் வடிவத்தைக் கண்டுக்கொண்டதைப் போலத்தான் அவரவர் போக்கில் மொழியைப் பற்றி விமர்சனம் எழும்.
இது போதாதென்று ஐரோப்பிய பாதிரிகள் ஆரியர்-திராவிடர் என்று ஒரு கற்பனைக் கதையை எடுத்துக்கொண்டுவந்து "நாங்கள் சொன்னபடி உங்கள் வரலாற்றை திருத்தி எழுதிக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டுப் போனான். ஆரியர் என்ற தனி இனம் கூரியரில் அயல் தேசத்தில்ருந்து வந்ததை இவன் பார்த்தானாம். ஆரியம் / ஆரியன் என்பதன் உண்மைப் பொருளை திருமந்திரம்/ திருவாசகம் உரைக்கிறது. சைவ சமய நூல்களை புறந்தள்ளி வெறும் தொல்லியல் வழியில் தேடினால் நூற்றாண்டுகளானாலும் ஏதும் கிடைக்காது. இத்தோடு லத்தீன், எபிரேயம், அராமி 'தொன் மொழிகள்' பதாகை வைத்துக்கொண்டு கோஷம் போடும்.
அப்படிப் பார்த்தால் வேத ஆரியரே தமிழர்தான்! எகிப்து, ரோம், சிரியா, மெக்சிகோ, சீனா, துவாரகையில் கிடைத்த அதே பானையோடு பிரம்மி எழுத்துக்கள்தான் கீழடியில் கிடைத்தது. ரிஷிப் பிரதேசமாம் ருஷ்யம்தான் ஆரிய வேதபூமி என்றால் அங்கும் அதே தமிழைத்தான் பேசினார்கள். இக்கூற்றை நம்மவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? நாம் இன்றைக்கு தமிழ்ப் பேசி சம்ஸ்கிருத மந்திரமும் சொல்வதுபோல் தான் அன்றைக்கு அவர்களும் செய்தனர். பிற்பாடு பல மொழிகள் ஒன்றிலிருந்து ஒன்று வளர்ந்து, சொற்களை கடன்வாங்கி உலகம் முழுக்க எப்படியோ பரவி வளர்ந்தது, நான் பெரியவனா நீ பெரியவனா என்று மோதி நிற்கிறது. ஆரியர் எனப்படும் தமிழர்கள் எல்லோரும் ஆப்கானிஸ்தான், ரஷியா, ஈராக் தேசத்திலிருந்து இங்கே படையெடுத்து வந்திருந்தாலும் ஒரு தவறுமில்லை!
இங்கே மூவேந்தர்கள் போரிடலாம், கங்கையைத் தாண்டி இமயம்வரை சென்று வெற்றிக் கொடி நடலாம். இவன் அவனுடைய ராஜ்ஜியத்தை பேராசைக்கொண்டு அபகரிக்கலாம். ஆனால் ஆரிய தேசத்து தமிழன் இங்கே வந்து படை எடுத்தால் அது ஆரிய படையெடுப்பாம். தமிழனுக்கும் வேதத்திற்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்று இருந்துவிட்டதுதான் இதற்குக் காரணம். சப்த சாகரங்களைக் கடந்து போய் போகர் பலகாலங்கள் அங்கெல்லாம் தங்கி நாகரிகத்தையும் வழிபாடு / பஞ்சாங்க நெறிகளையும் முறைப்படுத்தியவர். நான் சொல்வது பலருக்கு வியப்பாக இருக்கும். கோபம்கூட வரும். மொழி சச்சரவுகள் தீரும்வரை சமஸ்கிருத 'தேவமொழி' வடிவம் மனித கண்களுக்குப் புலப்படாமல் இருக்கட்டும்.

No automatic alt text available.

ஞாயிறு, 24 ஜூன், 2018

அம்மையே!

காரைக்கால் அம்மையாருக்கு ஈசன் மாங்கனி அளித்த நிகழ்வுதான் 'மாங்கனித் திருவிழா'.
நாயன்மாரென பெயர்பெற்ற புனிதவதியே
ஆலங்காட்டில் சிவதாண்டவம் கண்டாயே
திருச்சிற்றம்பலத்தான் விளித்த அம்மையே
அற்புதத் திருவந்தாதி தந்த மணிமாலையே
பேய் உருக்கொண்ட நற்பெரும் தெய்வமே
தலையே பாதமென கயிலை விரைந்தவளே
ஈசன் திருவடியில் நிலைத்து அமர்ந்தவளே
மாங்கனி பெற்ற உன்னடியைத் தொழுதேன்!

Image may contain: 2 people, people smiling, crowd

கலியுக பக்தி

ஆளில்லா  பழங்கோயில்
தனிமையில் இறைவன்!
**
உண்டியலிலா தட்டிலா?
உண்டிக்குள் போட்டது ஊனாகி
ஊழலில் வீணாகிப் போகாமல்
உழன்றிடும் அர்ச்சகர் உண்டிக்கு
உத்தமமாய் இடுவது புண்ணியம்!
**
இறைவனின் மேனியைத் தொட்டாலும்
இறைத்துதி அபிஷேகம் செய்தாலும்
இறைவனை அண்டியே பிழைத்தாலும்
இம்மையில் மும்மையின் வினைகள்
இல்லாமல் போகாது அர்ச்சகருக்கு!
இறைப்பணி கழிவினையே நல்வழி!
**
நாத்திகம் பேசியவன் ஆத்திகனாகிறான்
தூத்திகம் போனவன் திருநீறிடுகிறான்
வேத்திகம் பழித்தே சாத்தானாகிறான்
மாத்திகம் பிறந்தும் வேதியனாகலாம்
நன்மனமும் மார்க்கமும் நிலைக்கவே!
Image may contain: 2 people, including Soundar Isr, people sitting, people eating and food

சனி, 23 ஜூன், 2018

காந்தக் குழாய் விசைப்பாதை

பஞ்சபூதத் தலங்கள் போக இன்னபிற ஷேத்திரங்களான வடகாசி, தென்காசி, திருக்கடையூர், சீர்காழி, திருத்தணிகை, பழனி, சதுரகிரி, பொதிகை, ஆவுடையார் கோயில், திருப்பதி, திருக்கழுக்குன்றம், திருவொற்றியூர், திருபரங்குன்றம், திருவாரூர், திருவிடைமருதூர், திருப்புவனம், இங்கெல்லாம் ஒரு நுணுக்கமான உண்மை மறைந்துள்ளதை இன்றுதான் தெரிந்து கொண்டேன். அதை இன்றுதான் போகர் அறியவைத்தார் என்று சொல்வேன்.
கடந்த ஆண்டில் எனக்கு ஒரு சொப்பனம். பூமியிலிருந்து திடீரென்று உந்துவிசை என் பாதத்திற்கு அடியிலிருந்து மேல்நோக்கி என்னைத் தள்ளவும், மேலிருந்து ஏதோ என்னை இழுப்பதுபோலவும் தெரிந்தது. பறந்து போய்விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டேன். பிறகு வேப்பமரத்தின் அடியில் நின்று பேசிக்கொண்டிருக்கும்போதே மீண்டும் அதே உணர்வு. கொஞ்சம் எழும்பி விட்டேன். கிளைகளை பிடித்து விட்டேன். மெல்ல மரத்திலிருந்து இறங்கி வந்தேன். மூன்றாவது முறை வெட்டவெளியில் இருக்கிறேன். அப்போது அதிக விசை என்னை தூக்கிட, ஜெட் வேகத்தில் நான் ஆகாயத்தில் உரியப்படுகிறேன். டைஃபூன் சூறாவளி funnel போல் நீளமாக இருக்குமே அதைபோல் அந்த குழாய் பாதையில் அதிவேகமாகப் பயணிக்கிறேன். வான் மண்டலத்தில் எங்கோ குறிப்பிட்ட ஓர் இடத்தில் இறங்குகிறேன். காற்று வெப்பம் குளிர் ஏதுமில்லை, எந்த சலனமும் இல்லாத ஓர் இடத்தில் அமைதிதான் நிலவியது. இது பூமிப்பகுதி இல்லையே என்று உணர்ந்து கொண்டபோது அச்சத்தில் விழித்து எழுந்தேன். அன்று நடந்த சொப்பனத்தை அப்படியே மறந்துவிட்டேன். இன்று ஏனோ திடீரென அவ்வனுபவம் விழித்துக்கொள்ள அதற்கான விடையும் தெரிந்தது.
நான் போன பாதை என்ன? பரவெளியில் வேற்று கிரகங்களை இணைக்கும் காந்த குழாய்வழி. Wormhole என்று சொல்வார்களே அந்த ஆகாய சுரங்கம்தான் இது. ஆனால் Balckhole என்று சொல்லும் கருந்துளை அல்ல என்பதை நிச்சயமாக சொல்வேன். நான் பூமியிலிருந்து புறப்பட்ட தலம் எது என்று அறியமுடியவில்லை. சித்தர்கள் எல்லோருமே குறிப்பிட்ட பாகையில் உள்ள தொன்மையான சிவதலங்களையே நாடியது ஏன் என்ற விடை தெரிந்தது. காலப்பெருவெளி பயணத்திற்கு உகந்த யுக்திதான் இது!
போகரும் இப்படித்தான் கிரகங்களுக்குப் பயணித்தார் என்பதை புரிந்து கொண்டேன். எனக்குப் புரியவைக்க demoவில் என்னை வைத்தே காட்டி விளக்கினார் போலும். கெவுன குளிகை ஏதுமின்றி இலவச கல்விச் சுற்றுலா முடிந்தது. ஐன்ஸ்டீனும், ஸ்டீபன் ஹாக்கிங்கும் தோராயமாகச் சொன்னதை பயிற்சியில் நேரடியாகவே புரிந்து கொண்டத்தில் ஒரே மகிழ்ச்சி. சிவ பிரபஞ்சம் மர்மம் நிறைந்த ஆழ்கடல் போன்றது.
Image may contain: night

வெள்ளி, 22 ஜூன், 2018

சேயோளே!

மஞ்சள்நில அகமுடையாளே மகாமாரியே   
மங்காத வாழ்வளிக்கும் அய்யம்பாளயத்தாளே
சஞ்சலம் தீர்ப்பாய் மூத்தவளே ஆதிசக்தியே
சந்ததிகள் காப்பாய் எம் சேயோளே பரையே!   

மஞ்சள்பூசி பொன்பொலிவான பிரபையாளே
மாட்சிமையோடு கொலுவிருக்கும் நிலமகளே
மங்கலப் பொருளெட்டும் தரும் பெண்ணாளே
மாபுனல் காவிரியின் மகிமை உயிர்ப்பவளே!

மஞ்சளும் நெற்கதிரும் கரும்பும் மருத நிலத்தில்
மூன்று போகமும் மணம்வீச செழிப்புடன் தந்து
முன்னூறு காலம் காத்துவரும் குலதெய்வமே   
மதிப்பான சக்தியே அபயம்தந்து இரட்சிப்பாயே!

-எஸ்.சந்திரசேகர்

ஆரியன் தென்னவன்


No automatic alt text available.
ஓம் நமசிவாய!
---------------------
மகுடேசனென அருள்பொழியும் மலைக்கொழுந்தீசர்
மதுரபாஷினியென பன்மொழியருளும் திரிபுரசுந்தரி 
கிளர்புனல் காவிரியாள் கிழக்குமுகம் வட்டமடித்து
கலசமுனி திருக்கரத்தால் ஜீவநதியென பொங்கியோட
கொங்குதல சுந்தர தேவாரம் பாடப்பெற்ற ஆதியனே
வைரமணி மின்னும் திருப்பாண்டிக் கொடுமுடியானே
அழிவில்லா ஓங்காரமென நிலைத்த சுயம்புரூபனே
அகம்நோக்கி இவ்வடியவனை உன்னுள் கொள்வாய்! 




ஓம் நமோ நாராயணாய!
--------------------------
மல்லாண்ட திண்தோள்களோடு சயனத்தில் கிடப்பவனே
மலர்ப்பங்கய நாபியனே திருப்பாண்டி வீரநாரயணனே
மங்கலங்கள் அருளும் பூமாது உறையும் கொடுமுடியில்
மனங்குளிர பாடுகிறேன் சேவடிகளுக்குப் பல்லாண்டு!
No automatic alt text available.

Image may contain: tree, plant, sky, basketball court, outdoor and nature

பிரம்மபுரி
-------------

பிரம்மத்தை உரைக்கும் நான்முகன் வடிவே
பரப்பிரம்மமாய் ஓங்குவுயர் நிலைத்தவனே
பரத்வாஜதல தென்கயிலாய கொடுமுடியில்
பச்சை வன்னிமரம் கொண்டவனே போற்றி.

வெள்ளி, 15 ஜூன், 2018

மின்னும் அம்பலங்கள்

மெக்கா - பொன் விமானம்
மதீனா - மரகத விமானம்
அல் அக்ஸா - வெள்ளி விமானம்
"அற்பமென்று நினையாதே அவனிதன்னில்
ஆண்டவனார் நபிநாயன் கிருபைதன்னை
மாண்பான யாக்கோபு மக்கதேசம் நளின
முடன் சென்றதொரு வண்மைதன்னை
சீரேதான் அல்லாவுதல்லா வென்று
சிறப்புடனே வாய்தனிலே கூறிக்கொண்டு
சேரத்தான் வையகத்தில் வந்தாரப்பா
சிறப்பான யாகோபு முனிவர்தானே"
                                         - (போகர் ஏழாயிரம்)
மெக்காவிலிருந்து இரவில் நபிகள் அல்-அக்ஸா மலைக்கு வந்து சேர்ந்தார். மதினாவில்தான் நபிகளின் சமாதி உள்ளது என்பது சிறப்பு. போகநாதர்தான் இறுதி இறைthதூதர் நபியாக வந்து போனவர். 

நபி பெருமானார்

துபாய் அருங்காட்சியகத்தில் முகம்மது நபி (ஸல்) அவர்களின் தலைமுடி கற்றை இன்றும் பாதுகாத்து வருகிறார்கள். அவரது சிகையில் கருப்பு வெள்ளை முடிகள் உள்ளன. அவை அப்படியே நிறம் மாறாமல் உள்ளன. அவர் ஆலிவ் எண்ணெய் தடவி வந்த வாசம் அந்தப் பேழையில் வீசுகிறதாம். அதை வெளியே வெயிலில் கொண்டுபோனால் உடனே அதன்மீது சூரியவொளி படாதவாறு மேகங்கள் வந்து சூழ்கிறது என்பது அரேபியர்கள் ஆச்சரியப்படும் விஷயம்.
இதுபோக சென்னை பல்லாவரம் மலை உச்சியில் (திரிசூலம் ரயில் நிலையம் பின்னே) உள்ள பழமையான மசூதியில் நபி பெருமானின் மேலங்கி ஜிப்பா இன்றும் வேப்பம் இலைகள் போடப்பட்ட சந்தன பேழையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

செவ்வாய், 5 ஜூன், 2018

யுகம்-மொழி Timeline

இந்தப் பதிவு பகுத்தறிவாளர்களுக்கும், ஆரிய மொழி எதிர்பாளர்களுக்கும், சுயம்பு தத்துவத்தை எதிர்க்கும் முற்போக்குவாதிகளுக்கும் ஏற்புடையதல்ல. இவை சத்தியமாக அவர்களுக்குப் புரியாது.
இப்படத்தில் விராட் பரப்பிரம்மம் பிரம்மனைப் படைத்து சுயம்பு தேவமொழியாம் சமஸ்கிருதம் படைத்து, பல மனுகாலங்கள் உருண்டோடின. நடப்பு மன்வந்திரம் ஓட்டத்தில் சதுர்யுகங்களின் சுற்றில் கிருத யுக காலத்தில் ரிஷிகள், அரக்கர்கள் இருந்தனர். அதன்பிறகு மேல்தட்டு பரிணாமம் நரசிம்மர் காலத்திலிருந்து உயர்கிறது. அதுவரை stone age எனலாம். அதன்பின் கிருத இறுதியிலிருந்து புத்தி ஞானம் உலோகம் கருவிகள் எல்லாம் படிப்படியாக உயர்ந்து இன்றுவரை வந்துள்ளோம். ஒவ்வொரு யுகத்தின் வருடங்கள் எவ்வளவு என்றும் தந்துள்ளேன். ஹிரண்யன்/பிரஹலாதன் காலம் முதல் மொழி மூலம் பக்திசேவை தொடங்கியது என்று வைத்துக்கொண்டாலும், தமிழின் வயது என்ன என்பதை நீங்களே கணக்கிடுங்கள். படத்தில் இராவணனுக்கும் இராமனுக்கும் ஏன் இம்மா தூரம்? என்று குழம்ப வேண்டாம். இராமன் சின்னப் பையன். இராவணன் அவனைவிட 43 தலைமுறைகள் பெரியவன்.
இந்த கணக்கு நமக்கு பலலட்ச வருடங்களாக வியப்பாக இருக்கும். ஆனால் இதுவரை பிரம்மனின் ஒரு நாளில் பகல் பொழுதுமட்டும் முடிந்துள்ளது. சமஸ்கிருதமும் தமிழும் சொடக்கு போடும் காலப்பிரமாணத்தில் படைப்பாயின என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்னொரு சமயம் நேரம் கிடைத்தால் ஆழமாகப் பேசுவோம். அதுவரை நான் வரைந்த இந்தப் படமே மொழியின் தொன்மையைப் பேசும்.😃
எந்த மொழி தொன்மையானது என்று சண்டைபோட இனி ஏதுமுண்டோ? கற்காலம் முதலே தமிழ் உள்ளது என்று ஔவை சொன்னது உண்மைதானே? இது உங்களுக்கே இந்நேரம் புரிந்திருக்கும். நாம் சமஸ்கிருதத்தை சந்திக்கு இழுப்பது ஈசனையே நிந்தித்த பாவதிற்கு சமம்.
No automatic alt text available.

திங்கள், 4 ஜூன், 2018

சாத்தான் வேதமும் ஓதும்

பாதிரிகளும் சகோதரர்களும் கலசகும்பம் காட்டி என்ன மாதிரி மந்திரம் சொல்வார்கள் என்று கற்பனை செய்து பார்த்தேன்.
ஓம் ஹிரண்யகர்ப மரியபுத்ரா நமஹ
ஓம் கிறிஸ்துபிரவர ஏசையா நமஹ
ஓம் சித்தபுருஷ ஆங்கீரசமுனி நமஹ
ஓம் காருண்ய அபயகர்த்தர் நமஹ
ஓம் நீலமேக சியாமரூபனே நமஹ
ஓம் சுகினோபவ ஆத்மத்தியாகி நமஹ
ஓம் பிராமணேப்யோ யாதவா நமஹ
ஓம் ஷத்ரியவீர மயதச்சர் நமஹ
ஓம் பூர்ணகும்ப ஸ்வரூபா நமஹ
ஓம் சிவபூஜ ஸ்வீகர்யா நமோநமஹ
"மரியாளின் கர்பத்தில் உண்டானவரே, கிறிஸ்து என்ற பிரவரம் தந்த ஏசுவே, அயல் தேசத்து சித்த புருஷரே, கருணையோடு அபயம் காக்கும் கர்த்தரே, நீலவண்ணமாய் இருப்பவரே, உலகமக்களுக்காக தியாகம் செய்தவரே, பிரம்மத்தை உணர்த்திய பிராமணரே, நல்ல மேய்ப்பரே, இரத்தம் சிந்திய ஷத்ரியரே, மயன்வம்ச தச்சரே, பூர்ணகும்பத்தோடு சிவபூஜை முறையை சுவீகரித்தவரே, உமக்குப் போற்றிகள்."
இப்படி எல்லாம் அட்டகாப்பி அடித்து வருவது நகைப்புக்குரியது. தேவனுக்கு குங்கிலிய தூபம் போட்டு, வாசனாதி தைலம் பூசி, தீர்த்தம் புரோட்சித்து, வஸ்திரம் சாற்றி, வேதாகம மந்திரம் முழங்கி, மலர்களால் அர்ச்சித்து, வெள்ளையப்பம் நிவேதனம் வைத்து, சோடச உபசாரங்கள் செய்து, கடைசியில் சிவன் கோயிலுக்குள் பிரவேசித்து ஆக்கிரமிக்க நல்லதொரு பயற்சி என்று நினைக்கிறன்.

டமட்...டமட்...டமட்

ஆதியில் சிதம்பரத்தில் ஈசன் நவபஞ்ச (14) முறை தன் டமருவை அடித்தார். அதிலிருந்து எழுந்த சப்தங்கள்தான் தேவமொழி (எ) சம்ஸ்கிருதம். சரி, அந்த சப்தங்கள் என்னவாகயிருக்கும்? ஒவ்வொரு முறை அடிக்கும்போதும் கோர்வையாக அதிலிருந்து சப்தங்கள் வெளிப்பட்டது. நாமும் அவற்றை பூஜை மந்திரத்தில் கேட்டுள்ளோம். ஆனால் இதுதான் அது என்று பலருக்கும் தெரியாது.
"அ.யி.உ.ண்ரு.லு.க்ஏ.ஓ.ங்ஐ.ஒள.ச்;ஹ.ய.வ.ர.ட்ல.ண்; ஞ.ம.ங்.ண.ந.ம்; ஜ.ப.ஞ்; க.ட.த.ஷ்; ஜ.ப.க.ட.த.ச; க.ஃப.ச.ட.த.ச.ட.த.வ்; க.ப.ய்; சஷ.ஸ.ர்; ஹ.ல்"
இப்போது நினைவுக்கு வருதா? இதுதான் மகேஸ்வர சூத்ரம். இதில் ஏன் 'ழ'கரம் இல்லை? ஏனென்றால் தமிழ் என்பது தன்னுடைய மற்றொரு படைப்பு, அது மனுமொழி. டமருவில் வெளிப்பட்ட சுயம்புவடிவ தேவமொழி சப்தங்களை ஆதாரமாகக்கொண்டு, அதிலிருந்து சில வடமொழி சப்தங்களை நீக்கி தனியே திராவிடதேச மொழியை உருவாக்கினார். இரண்டுமே செம்மையான பூரண மொழிகள்தான். பதஞ்சலியை சமஸ்கிருதத்திற்கு வியாகரணம் எழுதவைத்து, அகத்தியரை தமிழுக்கு இலக்கணம் எழுதுமாறு பணித்தார்.
"ஐந்திறம்” நிறைந்த தொல்காப்பியம் என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அது என்ன? இலக்கணம் கூறும் தொன்மையான காப்பியம். இத்தனை செய்த ஈசன், விஸ்வகர்ம மயனுக்கு ஒரு வேலை தந்தான். சமஸ்கிருதம்-தமிழ் மொழிகளுக்கான பொது இலக்கண நூல் எழுதும் பணி. அதெப்படி இரு மொழிகளும் சமனாகும்? வைவஸ்வத மன்வந்திரத்தில் ஒரே மொழிதான் பேச்சு மொழியாக இருந்தது.
வேதகால தமிழ் என்று நிலவ, அதன் பிற்பாடு பிராகிரதம், பாலி என்று பல மொழிகள் பிறந்தது. புலம் பெயர்ந்த பிறகு அங்கிருந்து புது மொழிகள் பிறந்தன. அப்படித்தான் தமிழின் தொன்மைக்கு 'சுமேரிய' (ஈராக்) தமிழை பிடித்துக்கொண்டுள்ளனர். அதற்கும் முந்தையது கீழடியின் அடியிலேயே உள்ளது. வடமொழிதான் தமிழ் என்றால் ஏன் வேதங்களும் மந்திரங்களும் நமக்கு புரிவதில்லை? மந்திர சப்தங்களின் உச்சரிப்பு நிலைகள் தமிழைப் போல் இல்லையே? உதாரணம்: க, க2, க3, க4, Ka kka Ga Gha.
தமிழ்மொழி எத்தனை பழமை என்பதை இன்னொரு 'நீண்ட' பதிவில் பார்ப்போம்.
No automatic alt text available.

வெள்ளி, 1 ஜூன், 2018

கதலி

பேயன் சிவனார் மலைப்பழமே 
பஞ்ச அமிருதம் மலையனுக்கு
முகுந்தனான மாலவனுக்கோர் 
மொந்தன்
பழமே ஏற்புடையது
பிரம்மன் பெயரில் பொன்பழம்
பூவில் அமர்ந்த
பூவனுமாமே
மஞ்சள் கற்பூரம்
சுவை மணக்க
மரபின் உணவே மென்
ரசுதாளி
மிரட்டும்
கோட்டான் சிங்கம்பாரு
மருந்தில் மிகுவகை பழமேயுண்டு
ஏலம் நேந்திரம் பச்சை
என்பார்
ஏற்க உகந்தது எவ்வயதினர்க்கும்
தினமுண்ண போகும் மலச்சிக்கல்

திரட்டும் மாவும் நார்சத்துகூடும்
கனிந்தபழம் திங்க பேதியே நிற்கும்
கனித்தோல் கட்ட படையே ஓடும்
பார்க்கும் இரையில் இறைப் பாரு
போற்றத் தகுந்த மும்மூர்த்திகளே!


Image may contain: food