About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

கலைஞரின் 'தமர் உகந்த' திருமேனி!

ஸ்ரீஇராமானுஜரின் தாசராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர் கலைஞர். இவருடைய தீவிர வைணவ பக்தியை பகிரங்கமாக ஏற்கும் விதமாக, மார்கழித் திங்கள் முதல் நாளாம் இன்று நவமி திதி முடிந்தபின், தசமியில் கலைஞரின் சிலையை மாலையில் திறக்க ஏற்பாடு செய்த திருக்கழக ஆச்சாரியார்களின் அதீத பக்தியை மெச்சினோம். இது வைணவத்திற்கு கிட்டிய பேறு. ஓம் நமோ நாராயணாய!

புதன், 5 டிசம்பர், 2018

நெல் ஜெயராமன்


Image may contain: 1 person, standing and outdoor

தனியொருவனாய் களமிறங்கி 
தன்னலமில்லா சேவையாற்றி 
தனிப்பெரும் நெற்களஞ்சியம் 
தேடிப்பிடித்த நெல்லண்ணலே
துஞ்சாமல் அலைந்து உழைத்து
துடிப்புடன் ரகங்களை சேகரித்த
தன்னிகரில்லா மைந்தனே இத்
தமிழகம் உன்னை மறவாது
வாழ்வாங்கு வாழும் நின் புகழ்!
வானோர் உலகில் இளைப்பாறு!










பாரம்பரிய நெல் வகைகளை காப்பாற்றியதற்காக மாநில, தேசிய விருதுகளை நெல் ஜெயராமன் பெற்றிருக்கிறார். நெல் ஜெயராமன் 174 அரியவகை  நெல் வகைகளை சேகரித்ததுடன், மரபணு மாற்ற விதை திட்டங்களுக்கு எதிராகவும் நெல் ஜெயராமன் குரல் கொடுத்து வந்தார். 

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

திவ்ய ரூபம்

தெலுங்கில் அவனைப்பாட இப்போது உதித்தது...
"ஆரத்தி காட்டும்போது கன்னத்தின் குழிகள் ஈர்க்கிறது, உன் சிரிப்பில் விரியும் பலாப்பழம் இனிக்கிறது, வண்ணமிகு வாசனை திரவியங்கள் மணக்கிறது, குவித்த பூவிதழ் உதடுகள் மிளிர்கிறது, உன் சிலையில் வழியும் பிரசாதம் அதிமதுரம், உன்னருளால் இயற்றிய பாடல் அதி விதுரம்."
Image may contain: text

பிரம்மாண்டமாய்...

கேளிக்கைகாக கனவுலகில் அதிக பிரம்மாண்டமாய் தயாரிக்கப்பட்டது 2.0 படம். இதற்கான செலவு ரூ.550 கோடி என்று சொல்லப்படுகிறது. வருங்காலத்தில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி இன்னும் அதிக பட்ஜெட் செலவில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு படம் வரும் நிலை உள்ளது.
அண்மையில் விண்வெளியில் வெற்றிகரமாக ஏவப்பட்ட மிக கனமான GSLV Mark 3 ராக்கெட் தயாரிக்க ஆன செலவு ரூ.400 கோடி. வணிக நோக்கில் செய்தால் ஆயிரம் கோடியில் மூன்று ராக்கெட்கூட செய்து முடிக்கலாம் என்கிறது இஸ்ரோ.
ஆக, இந்தியா செயற்கைக்கோள்களை ஏவும் செலவைவிட, இங்கே கேளிக்கை சினிமா எடுக்க ஆகும் செலவு உயர்ந்து வருவது ஆரோக்கியமான சூழலைக் காட்டுகிறது என்று இதை வைத்து நம் பொருளாதாரத்தை கண்மூடித்தனமாய் சொல்லிட முடியாது என்பதே உண்மை. படம் எடுக்க ஆகும் செலவைப் பொறுத்து இனி சினிமா டிக்கெட் விலை நிர்ணயமாகும் என்று வந்தாலும் ஆச்சரியமில்லை. ஒவ்வொரு திரையரங்கின்முன் பேனர் கட்டவுட், பாலாபிஷேகம், ஜிகினா தோரணங்கள், இனிப்புகள் விநியோகம், பட்டாசு வெடிக்க ஆகும் செலவுகள் ஆகியவை ரசிகர் மன்றத்தைச் சேரும்.
படத்திற்கு ரூ.50 கோடி குறைவின்றி சம்பளம் வாங்கும் நடிகர்களின் படத்தை ஓடவைக்க ரசிகர்களாகிய நாம் ரூ.100 முதல் 200 வரை டிக்கெட் வாங்கி படம் பார்ப்பதோடு, முதல்நாள் புதுப்பட ரிலீஸ் விழாவும் எடுக்கிறோம் என்றால் நாம் பணக்கார ஏழைகளா? தமிழன்டா!
Image may contain: 1 person

சனி, 1 டிசம்பர், 2018

குற்றத்தில் பெரியது என்ன?

சமீப நாட்களாக தினமும் செய்தித் தாளைப் படித்தாலே கொலைக் குற்றங்களின் எண்ணிக்கையும் அதை செய்தவர்களின் பின்னணியும் திகிலூட்டுகிறது. மீண்டும் அதே குற்றவாளிகள்தான் இதில் ஈடுபடுவது தெரிகிறது. தடயம் கிட்டாத வகையில் கைத்தேர்ந்த பழையவர்கள் செய்வது சுமார் 70% என்றும் புதிய குற்றவாளிகள் 30% என்று புள்ளிவிவரம் சொல்கிறது. CCTV இருந்தும் அதில் பதிவான கொலை வீரர்களின் முகத்தை குற்றப்பின்னணி ஆவணத்தில் அலசிப் பார்ப்பதும் தாமாகிறது. Face recognition மென்பொருள் மூலம் கூட்டத்தில் முகத்தை சரிபார்த்து அடையாளம் கண்டுபிடிப்பது எளிதாகிவிட்டது என்றபோதும் குற்றவாளிகளைத் தேடுவது சிரமமாக இருக்கிறது. கொலையாளிகள் என்று சொல்வது மரியாதையில்லை என்று கருதும் சமுதாயத்தில் நாம் இருப்பதால், கண்ணியம் குறையாமல் அவர்களை ‘கொலைக்குற்ற வீரர்கள்’ என்று சொல்லிடுவோமே!
‘பல குற்றங்களில் தேடப்பட்டு வந்த குற்றவாளி’ ‘தண்டனைப் பெற்ற முன்னாள் கைதி’ என்று அவர்களைப்பற்றி அறிமுகம் செய்யும்போது, தவறு சட்டத்திலும், மனித உரிமை ஆணையம் மீதும்தான் தெரிகிறது. குற்றத்தில் சிறிது/ பெரிது, மன்னிக்கப்படுவது / படாதது, இத்தனை வருடங்கள் இருந்தால் தண்டனை காலம் போதும், என்று பரிந்துரை செய்ய சட்டமும் அதை நிலைநாட்ட மனித உரிமை ஆணையமும் செயல்படுகிறது. நியாயப்படி நிரபராதிக்கு அநீதி இழைக்கபட்டால் அதற்கு ஆணையத்தின் தலையீடு வேண்டும்தான். ஆனால் பழையவர்கள் புதியவர்களுக்கு சிறையில் குருகுல பாடத்தையும் செயல்படும் ரகசியத்தையும் கற்பிப்பது ஆபத்தாக முடிகிறது. கோரிக்கை வைத்தால் குற்றவீரரின் பிறந்தநாள்களுக்குக்கூட விடுதலை செய்யும் அதிசய நிலை எதிர்காலத்தில் வரும்போல!
சந்தர்ப்ப சூழ்நிலை குற்றவாளிகள் மிகக்குறைவு. ஆனால் habitual crime record கொண்டவர்களால் மீண்டும் மீண்டும் கொலை/கொள்ளை குற்றங்கள் எழுகிறது என்றால் காவல் துறைக்கும் சட்டத் துறைக்கும் அது நேர விரயம்தான். எங்கேனும் குற்றம் நடந்தால் பழைய குற்றவாளியை முதலில் தேடுவது வழக்கம். மூன்று முறைக்கு மேல் ஒருவர் தொடர் குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்தவர் என்றால் அவரை வேறு விதமாக கையாள வேண்டும். மீண்டும் மீண்டும் டெங்கு கொசு வளர அருமையான சூழலை உருவாக்கித் தந்தபின், ஊரெல்லாம் ஒரே காய்ச்சல் அதை மருத்துவர்கள் கட்டுப்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டுவதுபோல் உள்ளது.
பண பலம், ஆள் பலம், அரசியல் பின்னணி, என்று எல்லாமே கொலை வீரர்களை ஊக்கபடுத்தி வளர்த்து விடுவதால் காவலும்/சட்டமும் என்ன செய்ய முடியும்? ஐயோ பாவம்! பணிந்து போயாக வேண்டிய கட்டாயத்தில்தான் உள்ளது. இதன் நடுவில் ‘அப்பாவி’ நிரபராதிகளான அந்த ‘ஏழு பேர்’ விடுதலைக் குறித்து நாடே கவலையில் உள்ளது. ஜேப்பிடி, நகைத் திருட்டு முதல் கற்பழிப்பு, கொலைவரை தண்டனைகள் பூப்போல இருப்பது வேடிக்கையாக உள்ளது. அதே தீவிர தண்டனைகலைத் தொடர வேண்டிய கட்டாயம் உள்ளது. மரண தண்டனை என்பது மனித உரிமை மீறல் என்றால் சித்தர்கள் உரைத்த வழியில் தாக்க வேண்டியதுதான்.
பெரியது கேட்கின் தர்மநெறி மக்களே
பெரிதுபெரிது இளமையில் திருட்டு
அதனின் பெரிது கற்பழிப்பும் கொலையும்
அதனினும் பெரிது மன்னித்தும் குற்றம் புரிதலே

No automatic alt text available.