About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 31 டிசம்பர், 2017

ரூ.1,500 = ரூ.3,00,00000

என் நண்பரின் நண்பர் சரியாக ஆறு ஆண்டுகளுக்கு முன் ஆன்லைன் கிரிப்டோ நாணய வர்த்தக சந்தையில் $20 முதலீடு செய்தார். அன்றைய அமெரிக்க டாலர் மதிப்பில் அது சுமார் 1500 ரூபாய். திடீரென அந்த வர்த்தகம் மடமடவென உயர்ந்து போய் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா? ரூபாய் மூன்று கோடியே இருபது லட்சம். ஆத்தாடி! அதில் எக்ஸ்சேஞ் மூலம் நாம் பணம் போடவும் எடுக்கவும் சிறிய கமிஷன் கழிக்கப்படும். உலகம் முழுக்க வங்கிகளில் வாடிக்கையாளர்களின் பண கையிருப்பு குறைந்து போவதும், நாணயமில்லாத நாணயத்தில் போய் முதலீடு ஆவது பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
உட்கார்ந்தபடியே வருடத்திற்கு ஐந்து முதல் ஏழு லட்சம்வரை அதிலிருந்து அவர் தேவையான பணத்தை எடுக்கிறார். எஞ்சிய தொகை தொடர்ந்து சந்தையில் ஏறிக்கொண்டு இருக்கிறது. இவர்கள் எல்லாம் ஆரம்பத்திலேயே ICO அறிமுகமானபோது பங்கு கொண்டவர்கள். அன்றைக்கு ஒரு கிராம் தங்கம் ரூ.2200 இருந்த நினைவு. இவரை விட மிகப்பெரிய திமிங்கிலங்கள் இதில் உள்ளனர். இன்றைக்கு ஊரெல்லாம் இது பேசப்படுகிறது. ஒவ்வொருவரும் இதில் பல ஆயிரங்களையும் லட்சங்களையும் சக்திக்கேற்ப முதலீடு செய்து அதிர்ஷ்டம் எப்படி என்று பார்க்கிறார்கள். நிதி மேலாண்மையில் High risk, High return என்போம். இன்று எழுபத்துக்கும் மேற்பட்ட virtual நாணயங்கள் அறிமுகமாகிவிட்டது.
அதன்படி வர்த்தகத்தில் விழுந்தால் செம்ம அடிதான். தாறுமாறாக ஏறினால் கூரையை பிச்சிகிட்டு கொட்டும். ஆனால் இப்போது எத்தனை முதலீடு செய்தாலும் அது நாம் எதிர்பார்த்த லாபத்தை குறுகிய காலத்தில் ஈட்டாது. நம்ம ரிசர்வ் வங்கி சும்மா இருக்குமா? இதில் பணம் போட்டு லாபம் சம்பாதிப்பதை எப்படியாவது வருமான வரி சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறது. ரூபாயில் ரொக்கமாக மாற்றாமல் அந்த நாணயம் மூலம் மாற்று பரிவர்த்தனை செய்வதை தடுக்க முனைந்துள்ளது. நமக்கு வந்தவரை ஆதாயமே!
No automatic alt text available.

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

வடமொழியின் மாண்பு

தவத்திரு பாம்பன் சுவாமிகளின் கருத்தை உரைத்து வெளியான கட்டுரையை இங்கே பதிக்கிறேன். இது தமிழின உணர்வை சிதைக்கிறது என்று உங்களில் சிலர் நினைக்கலாம். அந்தத் தொகுப்பு இங்கே. 
     --*---- * -----*--
வடமொழியும் தென்மொழியும் நாவலந்தீவு நார்களுக்கு வாய்த்த இரு கண்களாம். இவ்வுண்மை உணராது வடமொழியைத் தூடனை புரிவோர் குமுகாயப் புண்களாம். வடமொழி கல்லாதவரைத் திருஞான சம்பந்தர் “மந்திபோற்றிரிந்து ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலா அந்தகர்” என இழித்துரைத்தல் காண்க. பாம்பன் சுவாமிகள் திருஞானசம்பந்தர் வாக்கிற்கேற்ப வடமொழி கற்று இருகண்களையும் பெற்றார். நமக்கு அதனைச் சொன்னார். திருப்பா நூன் முகத்தில் சுவாமிகள் கூற்று “நமா ஆர்ந்த கடவுளுடைய நாமார்ச்சனத்திற்கும் நாம மந்திர செபத்திற்கும் சத்திபீஜ மணைந்த மந்திர செபத்திற்கும் பிறமந்திரங்கட்கும் அங்கியை முன்னிட்டு ஒற்று உத்திரகிரியைக்கும் வடமொழியே முக்கிய உதவியாகவும் இருத்தலின் இவ்விருதிறமுந் தமிழர் கொண்டுய்பவரே யாவர்” திருப்பா பக்கம் 17.
சுவாமிகள், வடமொழியறிவு பெற்றதனாலேயே சாம வேதத்திலே சுவாமி என அழைக்கப்பட்ட சிறப்பு ஆறுமுகச் சிவனுக்கே கிட்டியது என்பதைப் பாடலாய்ப் பாடியருளினார். தன் சாத்திர நூல்களில் எல்லாம் வேதாகம உபநிடதக் கருத்துக்களை மேற்கோளாக எடுத்துக் காட்டி குகபரத்துவக் கொள்கையை நிருவியருளினார். பிறப்பாலுயர்வு தாழ்வு இல்லையெனும் கருத்தை சாமவேத வஜ்ரஸுசிகோப நிஷதம் கொண்டு பரிபூரணானந்த போதம் நூலில் பகர்ந்தார். தமிழ்த் தென்றல் திரு.வி.கவும் சுவாமிகளின் வடமொழிப் புலமையை தன் வாழ்க்கைக் குறிப்பு நூலில் சொல்லியுள்ளார்.
“பாம்பன் சுவாமிகள் என்பவர் பாம்பனில் தோன்றிய குமரகுருதாச சுவாமிகள்-சுவாமிகள் வடமொழிக் கடலையும் தென்மொழிக் கடலையும் முழுதொருங்குண்ட காளமேகம்”
“குமரகுரு திருவல்லிக்கேணியில் தங்கியிருந்த போது நாடோறும் மாலை வேளையில் கடற்கரை செல்வர். அவருடன் யானும் போவேன். அடிகள் வடமொழி உபநிடதக் கருத்துக்களைத் தமிழில் விளக்குவர். சாத்திர நுட்பங்களை எளிதில் வெளியிடுவர்” திரு.வி.க.வாழ்க்கை குறிப்பு பக்கம் 127.
சுவாமிகள் வடமொழியிலியற்றிய “குமாரஸ்தவம்” தௌத்தியம், அட்டாட்ட விக்கிரகலீலை போல்வன என்றும் பாராயணத்திற்குரிய பனுவல்களாய் விளங்குகின்றன. 
Image may contain: 5 people

வெள்ளி, 15 டிசம்பர், 2017

மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா

என் நண்பர்வீட்டு திருமணத்திற்குச் சென்றேன். அவர் முற்போக்காளர். அன்பளிப்பைத் தவிர்க்கவும், கொடுத்தால் எங்களை அவமதித்தகாக ஆகும் என்று கண்டிப்பாக பத்திரிகையில் போட்டிருந்தனர். அதனால் நாங்கள் எல்லோரும் கைவீசிக்கொண்டு போனோம். அவருடைய சகோதரியை மணமேடைக்கு அழைத்து வந்தனர். அங்கே இருவீட்டு மூத்தவர்கள் மட்டும் ரெண்டு நாற்காலியில் அமர்ந்திருந்தனர். பெரிய குத்துவிளக்கு இருந்தது. ஒரு மூதாட்டி அதை ஏற்றினாள்.
'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது." திருக்குறளை சொல்லிவிட்டு ஒரு தாத்தா தட்டில் இருந்த தாலியை எடுத்து மப்பிள்ளைக்குக் கொடுத்தார். அவர் பெண்ணின் கழுத்தில் கட்ட, கல்யாணம் முடிந்தது. என்னுடன் வந்த ஆந்திரா நண்பர் அப்போதுதான் போன் பேசிவிட்டு சுதாரித்துக்கொண்டார்.
"முஹுர்தத்திற்கு இன்னும் நேரம் இருக்கு இல்லையா?" என்று கேட்டார். சரியாபோச்சு. இப்போதானே கல்யாணம் முடிந்தது என்றேன். "எப்போ? இங்கதானே இருந்தேன். இன்னும் மேடைல அக்னி குண்டமே வளர்க்கலையே?" என்றார். அவர்கள் ஏன் அப்படிச் செய்தார்கள் என்று நடந்த கதையைச் சொன்னேன். "ஆஆஹ்..." என்று வாய்பிளந்தார். நாங்களும் பந்திக்குப் போனோம். பஞ்சமுக குத்துவிளக்கு அக்னிதான் ஹோம குண்டம். சித்தர் திருவள்ளுவரின் ஒரு குறள்தான் வேதமந்திரம். அதுதான் வாழ்த்துப் பா. அங்கே ஒரு வைணவ புரோகிதர் சும்மா உட்கார்ந்திருந்தார். அவருக்கு என்ன வேலை என்று சத்தியமாகப் புலப்படவில்லை.
"ஹையோ.. இதுக்கா இவ்ளோ பெரிய சத்திரம் எடுத்து செலவு செய்யணும்.. இதை வீட்லயே பண்ணிருக்கலாமே? ஓட்டல்ல ஒரு ரிசப்ஷன் சிம்பிளா கொடுத்திருந்தா போதும்" என்றார் மிகுந்த ஏமாற்றத்துடன். நாம் என்னத்தை சொல்ல? அது அவரவர் விருப்பம்.
"மாங்கல்யம் தந்துனானே.." என்ற வாக்கியங்களை பாரதம் முழுக்க மணமேடையில் கேட்கிறோம். அது எந்த தெய்வத்தைப் பற்றியது? இது ஸ்லோகமா? ஹுஹூம். இது எதுவுமில்லை. "என்னுடைய வாழ்க்கையில் அங்கமாகி இருப்பவளே, இந்த மங்கல நாணை, உன் கழுத்தில் அணிவித்து நம் உறவை உறுதி செய்கிறேன். குணவதியே நூறாண்டுகாலம் வாழ்க!" என்பதுதான் அதன் பொருள்.
No automatic alt text available.

சிவன் சொத்து : பனைவோலை, பாதுகை

மாணிக்கவாசகர் திருவாசகத்தைப் பாட அந்த ஈசனே அந்தணர் வடிவாக வந்து, பாடல்கேட்டு, படி எடுத்து ஒலைச்சுவடியாக வடித்து கையொப்பமும் இட்டார். திருவாதவூரான் சொல்லக்கேட்டு தில்லையம்பலன் எழுதிய திருவாசகம் ஓலைக்கட்டு இன்றும் இருக்கின்றது. சிதம்பரத்தில் உள்ள அம்பலத்தாடி மடத்தில் பாதுகாக்கப்பட்டு, தற்போது அது பாண்டிச்சேரி (பஜாஜ் ஆட்டோ ஷாப் எதிரில், முத்தியால்பேட்) அம்பலத்தாடி (தலைமை) மடத்தில் பூசனை செய்து பாதுகாக்கப்பட்டு வருகின்றது. வருடம் ஒருமுறை மார்கழித் திருவாதிரை அன்று மட்டும் ஓலைச்சுவடி பேழைக்கு சிறப்பு தைலங்கள் சாற்றப்படும். ஆனால் மகா சிவராத்திரி அன்று இரவு 11-12 வரை மட்டுமே பொதுமக்கள் தரிசனத்திற்கு வைக்கப்படுகிறதாம்.
அதுபோல், சுந்தரர் எமக்கு அடிமை என்று வழக்காடி திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்) வரை கூட்டிச்சென்று இறுதியில் கருவறைக்குள் மறைந்த ஈசன், தன் பாதுகைகளை விட்டுச்சென்றார். இன்றும் அது கிருபாபுரீஸ்வரர் கோயில் கருவறைக்கு முன்பாக சிறு கண்ணாடி பெட்டிக்குள் பாதுகைகள் வைக்கப்பட்டுள்ளது. போய் தரிசனம் செய்து இப்பிறவியை அறுத்திடுங்கள்.

தமிழை ஆண்ட கோதை

ஸ்ரீபெரியாழ்வார் வாழ்ந்த அந்த வீடு, ஆண்டாள் ஓடி விளையாடிய வீடு எங்குள்ளது? ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள வென்று கிழியறுத்தான் வீதியில் இன்றும் உள்ளது.
இங்கே நாம் காண்பது பெரியாழ்வாரின் பாதுகைகள், மற்றும் அவர் கையால் ஆராதித்த விக்ரகங்கள். பெரியாழ்வாருடைய 224வது வம்சத்தவர் ஸ்ரீ வேதபிரான் பட்டர் இவற்றை பூசித்து வருகிறார். கோயில் சமீபத்திலேயே ஆண்டாள் வாழ்ந்த திருமாளிகை உள்ளது. அங்கே சென்றால் மறவாது தரிசித்து வாருங்கள்.

வியாழன், 14 டிசம்பர், 2017

குல்கந்து ரெடி


ரோஜா. இதன் சுகந்தம், நிறம், குணம் எல்லாமே நமக்கு பல்வேறு மருத்துவ நலன்களை அள்ளித்தரும். குடல், ரத்தம், இதயம், நுரையீரல், மூளை புத்துணர்வு, ஞாபக சக்தி, கெட்ட கொழுப்பு கட்டுப்பாடு, வயிறு, கருப்பை/ஆண்மை கோளாறு, என்று பலத்துக்கும் நல்ல மருந்து. இதை தினமும் ஒரு ஸ்பூன் உண்டு வந்தால் மருத்துவப் பிரச்சனைகள் தீரும். நான் செய்யும் முறையை இங்கே சொல்கிறேன்.

ரோஜா 25 பூக்கள், தேன் ஒரு பாட்டில் (100கி). பனஞ்சக்கரை 100கி.

இதழ்களை உதிர்த்து, ஈரம் போக நன்கு துடைத்து, துணியில் பரப்பி ஆற விடுங்கள். உலர் பாட்டிலில் கொஞ்சம் இதழ்களை போடுங்கள், அதன் மேலே பனஞ்சக்கரை ஒரு ஸ்பூன் தூவுங்கள், தேன் கொஞ்சம் ஊற்றுங்கள், மீண்டும் இதழ் தூவுங்கள், இப்படியே செய்து முடியுங்கள். ஒரு மண்டலம் ஊறினால் நல்லது. அதற்கு முன்பே நன்றாக ஊறிடும். கிளறினால் இளகல் (அல்வா) போல் வரும். ஒரு ஸ்பூன் எடுத்து உள்ளங்கையில் போட்டு, அதில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு ரசித்து உண்ணுங்கள். அருமை!

விருப்பப்பட்டால் இதோடு பேரிச்சம் பழ சிறு துண்டுகளையும், ஒரு சிட்டிகை கசகசா விதைகளையும், வெள்ளரி விதைகளையும் ஒவ்வொரு layer லும்  தூவி ஊறவிடலாம். கடையில் விற்கும் விலைக்கு நீங்களே செய்திடுங்கள்.

வாசனை /சென்ட்/ பன்னீர்/ நேச்சுரல் ரோஜா வாங்கி பயன் படுத்தவும். விலை சற்று குறைந்துவிட்டது. நான் 20 ரூபாய்க்கு 25 பூ வாங்கினேன். வாசமில்லா அலங்கார ரோஜா இதற்கு உதவாது.

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

இயற்கை நடத்தும் பாடங்கள்

கன்னியாகுமரி கேரளா கடலோரங்களில் பத்து நாட்களாக திமிலங்கள், சிறு மீன்கள் எல்லாமே கொத்துகொத்தாக கரை ஒதுங்கிக்கொண்டிருந்தது. மேலோட்டமாக சீதோஷ்ண மற்றும் பூகோள பரப்பில் ஏதும் அசம்பாவிதமாக நமக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் ஜீவராசிகள் உணர்ந்துள்ளன. மக்கள் அதுபற்றி பேசிவிட்டு சும்மா இருந்தனர். பிற்பாடு பலத்த காற்று தொடங்கியது.
முன்கூட்டியே கணித்துச்சொல்லி அச்சிட்டு விற்கும் பஞ்சாங்கத்தை வானிலை மையம் வழிகாட்டுதலாக பின்பற்றக்கூடாது. அது மூடநம்பிக்கையாகிவிடும். அறிவியலுக்கு உட்பட்டு வானிலை மையம் சொன்னால்தான் பரிசீலனை செய்யலாம் என்ற நிலைதான் இன்றும் உள்ளது. இந்நிலையில்தான் தென்கோடி மாவட்ட மீனவர்கள் ஆழ்கடலுக்குப் போய் மாட்டிக்கொண்டனர். பாதிபேர் திரும்பினர், சிலர் எங்கோ ஒதுங்கினர், சிலர் காணவில்லை. பஞ்சாங்கத்தில் சொன்னதெல்லாம் அப்படியே குறிப்பிட்ட தேதியில் நடக்கவேண்டும் என்று எந்த உத்தரவாதமுமில்லை. கோள்களின் நிலையும் நகர்வும் கணக்கிட்டு சொல்லும் ஒரு அனுமானம்!
நீண்ட கடல்பரப்பைக் கொண்ட தென் பகுதியில் கடல்வாழ் ஜீவராசிகளின் நடவடிக்கைகளில் திடீர் மாற்றம் வந்தால் அதை ஆராய்ந்து பார்த்து காரணம் அறிய முற்படுவதில்லை. கரை ஒதுங்கிய 20 அடி நீள திமிலங்களை நடுக்கடலுக்கு விரட்டினால் அவை மீண்டும் கரைக்கு வந்தது. இதை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அதற்கே கடலுக்குள் போகப் பிடிக்கவில்லை எனும்போது மீனவர்கள் போகலாமா? ஏதோ அசம்பாவிதம் வானிலையிலோ பூமித்தட்டிலோ நிகழ வாய்ப்புண்டு என்பதை எல்லோருமே சொல்கிறோம், பதிவுகளைப் பார்க்கிறோம், அத்தோடு மறந்துபோகிறோம்.
வெளியே புயல் அடிப்பதற்கும் கடலில் திமிங்கிலம் ஒதுங்குவதற்கும் என்னங்க சம்பந்தம்? இதெல்லாம் பழைய முகநூல் பதிவும் செய்தி. மக்கள்.இதை நம்ப வேண்டாம், புரளி கிளப்ப வேண்டாம் என்று ஆட்சியரே சொன்னால், வேறு என்ன செய்ய?
"தெரியுது...பயப்பட்டா முடியுமா? பிழைப்புன்னு இருக்கே. கடலுக்குப் போகாட்டி எப்படி?" என்று மீனவர்கள் சொல்கிறார்கள். அவர்களை குறை சொல்ல முடியாது.
இதுபற்றி டிவியில் செய்தி பார்த்தபின் விமர்சனம் செய்துவிட்டு இருப்பதோடு நம் கடமை முடிந்தது. இனி அடுத்தடுத்து சீற்றங்கள் மிகுதியாகி வருகிற விளம்பி வருடம் (உகாதி) சித்திரையில் உச்சக்கட்ட பிரளயம் நிச்சயம்.

கணித்தது நடந்ததா?
~~~~~~~~~~~~

ஆற்காடு திருக்கணித பஞ்சாகத்தில் கணித்தபடி எவையெல்லாம் இந்த கார்த்திகை மாதத்தில் நடந்துள்ளது?
1) ஓக்கி புயல்  - குமரி மாவட்டம் பாதிப்பு
2) சூரியனிச் சுற்றி பரிவேடம் என்னும் Halo தோன்றும்போது 'பரிவேடம் பலத்த மழை' என்பது தமிழர்களின் சொற்றொடர்.
3) அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை விரைவாக தயாரிக்க ஒப்புதல் போனவாரம் கையெழுத்தானது.
4) தெற்காசிய பகுதி இந்தோனேசியாவின் பாலி தீவில் Mt.Agung எரிமலை வெடித்துச் சிதறியது.
5) தூத்துக்குடி-குமரிமாவட்டத்தைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான மீனவர்கள் நடுக்கடலில் புயலில் சிக்கி, அதில் பலர் இறந்ததாக அசுப செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.  
6) புதிதாக 'சாகர்' புயல் அந்தமான் அருகே உருவாகியுள்ளது. நாளை முதல் வட தமிழகம்- ஆந்திராவை நோக்கி நகர்ந்து வந்து மிரட்டும்.

புதன், 29 நவம்பர், 2017

நகர்ச்சி விதிகள் - Laws of motion

இரண்டாம் நூற்றாண்டில் ரிஷி கானட், தன்னுடைய ‘வைசேஷிக சூத்திரம்’ என்ற நூலில் கீழ்கண்ட சூத்திரங்களை 'பொருளின் நகர்வு சார்ந்த விதிகளை' கூறியுள்ளார். இதை Laws of motion என்ற தலைப்பில் ஐசக் நியூட்டன் அப்படியே தனதாக்கிக் கொண்டதாக மேன்செஸ்டர் பல்கலைக் கழகம் கண்டுபிடித்து அறிவித்துள்ளது. அவர் இவ்விதியை 1687 இல் இலத்தீன் மொழியில் எழுதிய ‘பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா’ என்னும் நூலில் அப்படியே காப்பியடித்து எழுதியுள்ளார். ஆனால் நாமோ இன்றும் சம்ஸ்கிருதமா? தமிழா? என்று காலிசட்டிக்குள் குதிரையைத் தேடுகிறோம்.

ஒரு பொருளின் மீது விசைகள் ஏற்படுத்தும் விளைவைப் பற்றிக் குறிப்பிடுவது நியூட்டனின் இயக்க விதிகள் (அ) பொருளின் நகர்ச்சி விதிகள்".

1.முதல் விதி:
"ஒரு பொருளின் மீது விசை செலுத்தாதிருந்தால், அப்பொருள் தான் இருந்த தன் அசையா நிலையிலோ அல்லது தான் ஒரு நேர்க்கோட்டில் ஒரே சீரான விரைவோடு முன்பு சென்று கொண்டிருந்த தன் நிலையிலோதான் தொடர்ந்து இருந்துவரும்".

2.இரண்டாம் விதி:
"ஒரு பொருளின் மீது செயல்படும் விசை அதன் நகர்வு விசையின் சக்தியையும் திசையையும் ஒத்ததாக இருக்கும், பொருளின் நகர்வு வேகம் அதன் எடைக்கு நேர் எதிர்மாறாக இருக்கும்."

3.மூன்றாம் விதி:
"ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு. "

ரிஷிக்கு தோன்றிய கருத்து நியூட்டனுக்கும் தோன்றி இருக்க வாய்ப்புண்டு. ஆனால் அப்படியே அடுத்தடுத்து மூன்று சூத்திரங்களும் உள்ளதுதான் சந்தேகத்தை எழுப்புகிறது.



வியாழன், 23 நவம்பர், 2017

ஏன் இந்த அவல நிலை?

இன்று பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்தேன். பின்வரிசை நாற்காலியில் அமரந்திருந்த ஒரு நடுத்தரவயது ஆண், காரசாரமாக மனைவியிடம் ஃபோன் பேசிக்கொண்டிருந்தான். அது பொது இடம் என்றும் பார்க்காமல் ஜோராக சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அவன் பேசிய டயலாகுகளைக் கேட்கும்போது 'இது வன்கொடுமைதான்' என்று நினைக்கத் தோன்றியது.
"அடியேய்! உன்னை கல்யாணம் கட்டி இருபத்தஞ்சு வருஷம் ஆச்சு. இன்னும் என்னோட சம்பாதியத்துல உக்காந்து சோறு திங்கிறியே, வெக்கமா இல்ல?"
எதிர்முனையில் அந்தக் குரல் ஏதோ பேசுகிறது.
"நாங்க அப்படித்தாண்டி.என் அண்ணிய வேலைக்கு போன்னு அண்ணன் விரட்டினான். நாங்க சொன்னபடி நீ நடந்துக்கணும். நீ வேலைக்குப்போய் சம்பாதிச்சியா? உனக்கு எதுக்குடி நான் சோறு போடணும்? எனக்கு பேங்கு டெபாசிட் பணத்துல வருசத்துக்கு ஆறு லட்சம் வட்டி வருது.. அதுல உனக்கு சல்லிக்காசு குடுக்கணும்னு அவசியமில்ல. அது கூடபொறந்த அண்ணனுங்க அக்காவுக்கு மட்டும் தான். நம்ம பையனுக்கும் தரமாட்டேன். உன்னை வூட்டவிட்டு தெரத்திட்டுதான் மறுவேலை ... பொண்ணெடுக்க ஊரெல்லாம் தேடிட்டு உன்ன இஷ்டமில்லாமத்தான் கட்டுனேண்டி.. பத்து வயசு வித்யாசம் வேற... போன மாசம் உன் துணிமணிய தெருல கடாசியும் உனக்கு புத்தி வரல... கை ஒங்குறது என்னோட ஸ்டைலுடி"
இதெல்லாம் கேட்கவே பகீர் என்றது. வலியப்போய் விருப்பமின்றி அவன் மணம் செய்துகொண்டு பழங்கதை பேசி அவனே சண்டை வளர்க்கிறான். கணவன் தன் மனைவிக்கு சோறு போட அவசியமில்லை என்ற புதிய கொள்கையை வகுத்துள்ளான். கலியுக மக்களின் அடுக்கடுக்கான பாவச்செயல்கள் என்னென்ன என்று போகர் அன்றே சொன்னார். கண்ணில்பட்ட இது ஒரு சாம்பிள்தான். தேசம் முழுதும் இவளைப்போன்ற பெண்கள் படும்பாடு என்னவோ?!
கந்துவட்டி கொடுமை என்று காரணம் சொல்லி அவன்மீது அவளே பெட்ரோல் ஊற்றி எரித்தால் தப்பே இல்லை! ஊர் உலகம் நம்பும்.


சனி, 18 நவம்பர், 2017

நவீன பயோ கழிப்பறைகள்

தொலைதூர விரைவு ரயில் வண்டிகளில் bio toilets உண்டு என்பதைப் பார்த்தோம். ஆனால் அது எப்படி இயங்குகிறது. மனித கழிவுகளை suction மூலம் உறிஞ்சு சேமிக்க ரயில் பெட்டியின் அடியில் bio digester என்ற ஒரு கருவி உண்டு அதில் தான் எல்லாமே விழும்.
இதில் anaerobic bacteria க்கள் சிறப்பாக செயல்பட்டு, கழிவுகளை வேதிப் பொருட்களாக உடைத்து மாற்றுகிறது. அவை குறிப்பிட்ட மணிநேரத்தில் நொதித்து, இறுதியில் மீதேன் மற்றும் கரியமில வாயுவாக மாற்றப்பட்டு வெளியேறுகிறது, எஞ்சிய தண்ணீர் குளோரின் கலக்கப்பட்டு துர்நாற்றம் ஏதுமே இல்லாமல் இருப்புப் பாதையில் கொட்டப்படுகிறது. குறைந்த அளவு சீதோஷ்ண வெப்பத்திலும் இது நன்றாக இயங்குகிறது. பாரம்பரிய முறைக்கும் இதற்கும் ஒப்பிட்டால், இங்கு 90% தண்ணீர் தேவை குறைகிறதாம்.
உடனே ஒரு குறள் பாடவேண்டும்போல் இருந்தது.
"கழிவு கலக்கலாய் கழியவே கழிந்தபின்
இழிவு தராத பயன்
."
இதுதான் ரயிலின் அடிப்பக்கமுள்ள அந்த நவீன பெட்டி. இந்த வாரம் முழுக்க ஒரே கழிவறை பதிவுகளா இருக்கேன்னு ஆச்சரியமா? Ding-Dong- DUNG!

மோர் சர்பத் வாட்டர்பாக்கட் வேணுமா?

ரயில் வண்டி ஆந்திர மாநிலத்தின் தாடிபத்ரி-எர்ரகுண்ட்லா இடையே ஓடிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு 3 பெட்டிகளுக்கு ஒரு கண்காணிப்பாளர் என்ற எண்ணிக்கையில் இருந்தார்கள். அது போக எப்போதும்போல் கருப்பு-வெள்ளையில் டிக்கட் பரிசோதகர் நடமாடிக்கொண்டு இருந்தார்.
ஆங்காங்கே ஸ்டேஷன்களில் 2-3 நிமிடங்கள் வண்டி நின்றது. பழம், சமோசா, கர்சீப், பூ, பிஸ்கட், புத்தகம், காய்கறிகள் விற்கும் வியாபாரிகள் ஏறினார்கள். சிலர் மாதாந்திர சீசன் டிக்கட் வைத்திருக்க சிலர் அதுவும் இல்லை. இவர்களுக்குப் பரிச்சயமான கண்காணிப்பாளர்கள் என்றால் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. பிரதி உபகாரமாக வெண்ணெய், நிலக்கடலை, பழம், காய்கறிகள், துவட்டும் துண்டு, என்று அன்பளிப்புகள் கைமாறுகிறது. நம் கண்ணில் பட்டால் கட்டுரைக்கு நல்ல தீனிதான்.
"கியோன் அந்தர் கி பிக்ரி? இவ்வனியும் லோபலகி தீஸ்கு ராக்கா" என்று உச்ச ஸ்தாயியில் ஒரு RPF காவலர் சத்தம் போட்டார். திடீரென்று ரயில்வே போலீஸ் சோதனைக்கு வந்ததும், ஒரு பெண் தான் கொண்டுவந்த மோர் பானையை அவசரமாக வெஸ்டர்ன் கழிப்பறைக்குள் கொண்டு சென்று கச்சிதமாக கிளாசெட் உள்ளே மறைத்து வைத்து சும்மா நடமாடிக் கொண்டிருந்தாள். இவளை முறைத்து அவர் பார்க்கும்போது, 'நேனு ஏமியும் அம்மலேது சார்' என்றாள். அடுத்த ஸ்டேஷனில் பானையோடு இறங்கினாள். இதுபோல் இன்னும் எத்தனைப்பேர் எதை எங்கு வைத்து விட்டு வந்து விற்பார்களோ..#?! பார்க்க ஜோராக அலங்காரம் செய்துகொண்டு வந்து இந்த சரக்குகளை விற்றால் உங்களுக்கு என்ன தெரியப்போகிறது? Bio toilets உள்ள தொலைதூர ஷதாப்தி விரைவு வண்டியில் இத்தொல்லைகள் இல்லை.
அதோனி ரயில் நிலையத்தில் இறங்கி அங்கே VLR சிற்றுண்டி ஸ்டாலில் சூடாக உப்புமா இட்லி பொட்டலங்களையும், ரயில் நீர் பாட்டிலையும், கொய்யா பழங்களும் வாங்கினேன். வேண்டிய அளவுக்கு பிஸ்கட் பழங்கள் ப்ரெட் ஜாம் + (ஆங்கில, சித்த) அவசர மருந்துகள் கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். எப்போதும் பிரயாணத்தில்
குறைவாக இலகுவான உணவையே உண்ணுங்கள்.
அசுத்த உணவால் வயிறு கெட்டுப்போவதைவிட உபவாசம் இருந்தாலே நன்று. ரயிலில் உள்ளே விற்றுக்கொண்டு வரும் அத்தனையையும் சிலர் தீனிப் பண்டாரமாய் வாங்கி வாங்கி விழுங்கிக் கொண்டிருப்பார்கள். இனி மோர், சர்பத், வாட்டர் பாக்கட் வாங்கிக் குடிப்பீர்களா? நீங்கள் குடிப்பீர்களா?

செவ்வாய், 14 நவம்பர், 2017

பளிங்கினாலான கழிப்பறைகள்

நமக்குத் தெரிந்து கிமு 5ம் நூற்றாண்டில் சித்தர் போகர் சீனாவில் பீங்கான்-கண்ணாடி அறிமுகம் செய்தார். அதில் பல உபயோகப்பொருட்களை கண்டு பிடித்தார். அண்மையில் கீழடியில் அடுக்குமாடி குடியிருப்பு, சமையற்கட்டு, குளியலறை, கழிவுநீர் குழாய்கள் கண்டுபிடித்ததை நாம் அறிவோம்.
அதுபோல் இலங்கையில் 9-10ம் நூற்றாண்டில் சோழர்களின் தலைநகரான Polannaruva பொலநறுவையில் (சனாதமங்கலம்) காணப்படும் மிகப் பழமையான கழிப்பறைகள்தான் இப்படத்தில் உள்ளது. அதிலும் வேலைப்பாடு கொண்ட வெள்ளை பளிங்குக் கல்லில் அலங்கார கழிப்பறை அபாரம்! அன்றே Wet & Dry toilets இரண்டுமே பயன்பாட்டில் இருந்துள்ளதாம். எங்கும் விஸ்வகர்மனின் கைவண்ணம்தான்!
ஆனால் இதற்குப்பின் எப்படி நாகரிகம் சீர்குலைந்து மைதானம் நோக்கி படையெடுத்தது என்றுதான் விளங்கவில்லை. வீட்டுக்கு ஒரு கழிப்பறை இருக்க வேண்டும் என்று இன்றும் மத்திய அரசு டிவியில் விளம்பரம் செய்வதுதான் வெட்கம்.



சிருஷ்டியை என்னவென்பது?

கொசு நம் உடலில் அம்ரந்ததும் உடனே கடிப்பதில்லை. அது தோலின் மீது எங்கே வளமான இலகுவான நரம்பு இருக்கிறது என்பதை ஆராயும். அதன்பிறகுதான் தன் உறிஞ்சுகுழல் ஊசியைக் குத்தும். சில சமயம் தடிமனான தோலாகவோ  நரம்பு இல்லாத இடமாகவோ இருந்தால் அதன் ஊசி வளைந்துவிடும். தக்க இடம் தெரிந்ததும், சுமார் 140 வினாடிகள் வரை பொறுமையாக அமர்ந்து காலூன்றி தலைகுனிந்து அழுத்தம் தந்து உறிஞ்சும். 3 - 6mN மில்லி நியுடன்) அளவுக்கு அழுத்தம் தந்து ஊசி போடுகிறது.

அது ரத்தத்தை குடிக்கும்போது நம் ரத்தத்தில் தட்டணுக்கள் உறைந்திடாமல் இருக்க முதலில் தன் எச்சிலை அங்கே செலுத்தி, உறிஞ்சும்வரை சூடானா ரத்தம் நீர்த்து போகாமல் வைக்குமாம். அது உட்கார்ந்து துளை போடும்போது 15Hz அதிர்வலையும், குடிக்கக் குடிக்க அதிர்வலை குறைந்து 6Hz அளவுக்கு வந்திடுமாம். ஓஹோ, முக்கிய வேலையில் கண்ணுங்கருத்துமாக இருக்கும்போது அது ஒலி எழுப்புவதில்லை போலிருக்கு.

அதன் 2mm நீளமான உறிஞ்சுகுழல் Proboscis முனை எப்படி இருக்கும் என்பதை நுண்பெருக்கி மூலம் படம் பிடிக்கபட்டது. நம் மருத்துவத்தில் குத்தும் syringe needle முனைபோன்றே V-வடிவத்தில் உள்ளது.  என்ன சிருஷ்டி! என்ன சிருஷ்டி!

கொசுவுக்குள்ளும் ஈசன் ஜீவனாக இருக்கிறான். 'ஓம்' என்ற சப்தத்தோடு பறக்கும்அதை அடித்தால் பாவமாகுமா? கொசு நம்மீது வந்து உடகார்ந்து கடிக்கும்போது ஓங்கி அடித்து நசுக்கினால் அது பாவமில்லை. மருந்து  புகைப்போட்டு அதை விரட்டினால் பாவமில்லை. ஆனால் அதை மின்சார bat கொண்டு 'படபட' என்று பொசுக்குவது, அதைப் பிடித்து எரியும் கொசுவத்தி சுருளின் தீயிலிடுவதும் பாவம்.

வியாழன், 9 நவம்பர், 2017

உடையவர் நம்மவர் இவர்!

ஆதிசேஷன் அவதாரமாகக் கருதப்படும் லக்ஷ்மணர் அம்சம்தான் வைணவ மகான் ஸ்ரீமத் ராமானுஜர். இவருக்கு இளைய ஆழ்வார், உடையவர், யதிராஜர், பாஷ்யகாரர் என்று பல திருப்பெயர்கள் உண்டு. 120 வருடங்கள் வாழ்ந்தார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பெருமாளின் அசரீரி கட்டளைப்படி இவருடைய திருமேனி 5-வது 'திருச்சுற்று' எனப்படும் அகளங்கன் திருச்சுற்றில் வசந்த மண்டபத்தில் இன்றைக்கு 880 வருடங்களுக்குமுன் புதைக்கப்பட்டது. பிறகு தானாகவே அவரது திருமேனி பூமிக்கு வெளியே தோன்றியது என்கிறார்கள். இந்த ஆண்டு அவருடைய 1000 வது ஜெயந்தி ஏப்ரலில் கொண்டாடப்பட்டது.
ஜீவசமாதியில் திரிதண்டம் கொண்டு, திருமால் அளித்த வஸ்திரம் தரித்து சின்முத்திரை காட்டும் நிலையில் காணப்படுகிறார். பார்ப்பதற்கு சிலைக்கு பற்று போட்டது போல் தெரியும். இதை நம்பாத பலர், இங்கே ஒரு சுதை உருவம் நகங்களோடும், கண் புருவங்களோடும், இமைகளோடும், நாசித் துவாரங்களோடும், குமிழ் உதடுகளோடும் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறது என்றுதான் சொல்கிறார்கள். சுடுமண் சிலைதான் என்றால் இந்த preservative பந்தனம் பூச்சு எதற்கு? ஆறு மாதத்திற்கு ஒருமுறை குங்குமப்பூ சாந்து-பச்சை கற்பூரம் காப்பு சாற்றப்படுகிறது, மற்றபடி திருமஞ்ஜனம் ஏதுமில்லை என்று பட்டர் தெரிவித்தார்.
அவர் கட்டித்தழுவி தன்னுடைய சக்தியை பாய்ச்சிய திருவுருவச்லை (தானுகந்த திருமேனி) இன்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் உள்ளது. நான் சென்ற சமயம் காலையில் ராமானுஜருக்கு திருவாதிரை அன்று விசேஷ திருமஞ்சனம் நடந்து கொண்டிருந்தது.


புதன், 1 நவம்பர், 2017

அலோகத்தில் கண்ணாடி

முகம் பார்க்கும் 'கிளாசு' கண்ணாடியை சித்தர் போகர் முதன்முதலில் அறிமுகம் செய்தார். தான் செய்த plain glass ன் பின்புறம் ஈயம்-ரசம் பூச்சு தந்து செய்தார். ஆனால் இதற்கு முன்னமே நம் நாட்டில் 'செம்பு-வெள்ளீயம்' (Copper-Tin) கலவையில் செய்த வெண்கல பிடிகொண்ட முகம் பார்க்கும் கைக் கண்ணாடி சுமார் கிமு.2800 முந்தய காலத்திலேயே புழக்கத்தில் இருந்துள்ளது. இதை தர்பன், ஆயினா, ஆரசி என்று வடக்கே அழைப்பர்.
நமக்குத் தெரிந்து ராமாயணம், மகாபாரதம் ஆகிய காவியங்களில் கண்ணாடி பார்க்கும் வர்ணனைகள் வருகிறது. அந்த அலோகக் கண்ணாடியானது Glass கண்ணாடியைவிட பளபளக்கும் பிரதிபலிப்பைத் தந்தது. இதை தென்னக விஸ்வகர்மா கன்னார்கள் ரகசியமாகவே வைத்துள்ளார்கள். முதன்முதலில் கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா அருகே ஆரன்முல ஊரில்தான் இது பிரசித்தம். அதனால் இதற்கு 'ஆரன்முல கண்ணாடி' என்ற பெயருண்டு. அக்காலத்தில் மணப்பெண்ணுக்கு தரும் எட்டு மங்கலப் பொருட்களில் இதுவும் உண்டு.
இந்த கேரள விஸ்வகர்மாவினர்க்கு இந்த மெழுகு வார்ப்பு முறை (சரஸ்வதி-சிந்து சமவெளி நாகரிகம்) ரகசியம் எப்படித் தெரியும்? அவர்களுக்கு முதலில் இது தெரிந்திருக்கவில்லையாம். திருநெல்வேலி (அகத்தியர் மலை) பகுதியைச் சேர்ந்த கன்னார்களை அழைத்து வந்து இதை கேரளத்தில் அறிமுகம் செய்ததாக ஆரன்முல ஸ்ரீ பார்த்தசாரதி கோயில் ஆவணங்கள் கூறுகிறது. பிற்பாடு இத்தாலி, சீனா, எகிப்து, கிரேக்கம், பாரசீகம், அரேபியா, என்று உலகம் முழுதும் பரவியது என்பது ஆராய்ச்சியில் தெரிந்தது.
சமீபத்தில் ஒரு ஐரோப்பிய ஆய்வுக் கட்டுரையை படித்தேன். அதிலிருந்த சங்கதியை இங்கே பதிவிட்டேன்.

திங்கள், 30 அக்டோபர், 2017

சுவர்ணத்து இல்லம்

ஆதிசங்கரர் பிக்ஷம் எடுக்க வீடுகளுக்குச் சென்ற போது, ஓர் ஏழை பிராமணனின் குடில் முன்னே நின்று 'அம்பா! பவதி பிக்ஷாம் தேஹி' என்று கூவினார். அந்த வீட்டில் தரித்திரம் நிலவியதால், அவ்வீட்டு பெண்மணி காய்ந்த நெல்லியை வாழை இலையில் வைத்துக் கொடுத்தாள். அவர்களுடைய ஏழ்மையைக் கண்டு சங்கரர் மனம் வருந்தி செல்வத் திருமகளை நோக்கி 'கனகதார ஸ்தோத்ரம்' 21 பாடல்களை இயற்றிப்பாட, அங்கே தங்க நெல்லிக்கனிகள் மழையென பொழிந்தது.
அந்த ஏழை பிராமணின் சந்ததிதான் இங்கே படத்தில் காண்கிறீர்கள். இந்த வீடு 'பொன்னோர்த்துகொட்டு மனா' என்றும் அழைக்கபடுகிறது. காலடியிலிருந்து 22கிமீ தூரத்தில் பெரும்பாவூர்- சோட்டானிக்கர போகும் வழியில் பழந்தோட்டாம் என்ற பகுதியில் உள்ளது. இங்கே படத்தில் இருப்பவர்தான் குடும்பத் தலைவர் ஸ்ரீ நாராயணன் நம்பூதிரிபாட். அவ்வீட்டில் வசிப்பவர்கள் இவர்கள்தான்.
இப்பதிவை தட்டச்சு செய்யும்போது ஒரே மகிழ்ச்சி. ஏதோ நானே அந்த ஊரில் அந்த வீட்டில் பிறந்து சங்கரரின் மஹாத்மியத்தை சொல்வதுபோல ஒரு சிலிர்ப்பு. ஆம், என் பூர்வ ஜென்மத்தில் நான் அந்தக் குடும்பத் தொடர்பில் இருந்திருக்கணும்! அப்படி இல்லாவிட்டால் மீன்குளத்தி பகவதி 2013ல் எனக்கு மலையாளத்தை ஒரே நாளில் எழுத படிக்க நினைவு படுத்தியிருக்க மாட்டாள்.
'அம்பா மீனாக்ஷி மதுரபாஷினி சரணம் சரணம்.'

திங்கள், 23 அக்டோபர், 2017

நிஜ வாழ்க்கை கதாநாயகர்தான் பிடிக்கும்!

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் (2007) ஒரு நாள் திரைப்பட இயக்குனர் திரு ஏ. பாலகிருஷ்ணன் அவர்களிடமிருந்து ஒரு மின்னஞ்சலும் தொலைபேசி அழைப்பும் வந்தது. அப்போது நான் கர்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டு வார இறுதி விடுமுறைகளில் இதழியலாளராக இருந்தேன்.
பின்மாலை நேரம். மகாலிங்கபுரத்தில் ஒரு சிறிய அலுவலகம். காமராஜ் திரைப்படம் எடுத்தவர் என்று தன்னைஅறிமுகம் செய்துகொண்டார். தான் ஒரு இணையதளம் தொடங்கவிருப்பதாகவும், அதில் நான் கட்டுரைகள் எழுத முடியுமா என்று கேட்டுக்கொண்டார். அதற்கான சந்திப்புதான் இது.
அவரோடு பேசுகையில், 'நீங்க காமராஜ் ரோல் தேர்வு எப்படி செய்தீங்க சார்? என்றேன். அவர், 'நான் மதுரை விமான நிலையத்துல உட்கார்ந்திருந்தபோது என்னைத் தாண்டி ஒரு பயணி போனார். அப்போதே இவர்தான் என் சரியான தேர்வுன்னு முடிவு செய்துட்டேன். என் படத்துல வரும் ஹீரோ நடிகரா இருக்கக்கூடாது... முகச்சாயல் இருக்கணும்... நான் சொல்றபடி இயல்பா பேசி செயல்பட்டா போதும்' என்றார். அலுவலகத்தில் அவரைச் சுற்றி பட சுருள் பெட்டிகள் அடிக்க வைக்கபட்டிருந்தன.
'படம் உங்களுக்கு பெரிய அளவில் பேர் வாங்கிக் கொடுத்திருக்கும். ஆனால் பெரிய ஹீரோ நடித்த படங்கள் அளவுக்கு உங்களுக்கு வசூல் கொடுத்ததா?' என்றேன்.
'அந்த வகையில பார்த்தா வசூலை அள்ளித்தரலை. அரசு ஏதோ உபகாரம் செய்தாங்க அவ்வளவுதான். திரைப்பட ஹீரோக்களைவிட எனக்கு நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக இருந்தவங்களைத்தான் பிடிக்கும். அவர்களைப் பற்றிய படம்தான் எடுக்க விருப்பம். எதிர்காலத்துல காந்தியைப் பற்றி படம் எடுக்க எண்ணம் இருக்கு... பாப்போம்' என்றார்.
அப்படம் 2012ல் வெளிவந்தது என அறிந்தேன். இப்போது எம்ஜிஆர் (biopic) வாழ்க்கை சித்திரம் பற்றி ஒரு படம் செய்யப் போவதாக இன்றைய டைம்ஸ் செய்தித்தாளில் படித்தேன். அவர் முயற்சி வெற்றி பெறட்டும்!


புகைப்போக்கி

Image result for electric crematorium
சாலையில் போகும்போது ஒரு மின்சார மயான பூமியைக் கடக்க நேரும். அங்கு மேலேயுள்ள புகைப்போக்கி (சிம்னி) என் கண்ணில் படும். அங்கு உயர்ந்து நிற்கும் அதன் வாயிலிருந்து கரும்புகை வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். உள்ளே ஒரு சகாப்தம் முடிந்தது என்று மெளனமாக பறை சாற்றும். சில சமயம் அது புகை கக்காமல் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது எனக்குள் ஒர் ஆனந்தம்.
நானும் ஒரு நாள் இப்படி புகைந்து கொண்டிருப்பதை என் ஆன்மா நின்று காணும். ஊழ்வினைகள் கழிந்ததா இல்லையா? நல்லவனா கெட்டவனா? இறைவனின் தர்மநெறிப்படி வாழ்ந்தேனா, இல்லையா? புதைந்தும் எரிந்தும் பல பிறவிகள் கண்ட என் ஆன்மாவுக்கு வீடுபேறு கிட்டுமா இல்லையா? இதை அவன் ஒருவனே தீர்மானிக்கிறான்.
ஆமா, போனபின் என்ன தெரியப்போகிறது என்று சொன்னாலும், தச வாயுக்களில் இறுதிகட்ட வாயு தன் வேலையை செய்யத் தொடங்கும் அத்தருணம் ஆன்மாவுக்கு அச்சமூட்டுவதாகவே அமையும். ஆன்ம பலம் அப்போதுதான் உண்மையாகவே வேண்டும். பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அந்த இறுதிப் பயணமே சாஸ்வதமானது என்றாலும் அதை ஏனோ உற்று நோக்க எப்போதுமே நான் விரும்பியதில்லை. 'இதுவும் கடந்துபோகும்' என்றாலும் இந்த மனநிலை எனக்கு வினோதம்தான்!
என் ஆசிரியரும் வைத்தியருமான சித்தர் போகர் என்னை பத்திரமாக அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையில் தினமும் உறங்கி காலையில் எழுகிறேன். இவ்வரியை இப்போது இங்கே டைப் செய்யும்போது SMS ரிங் அடித்தது. இப்பதிவை என் குருநாதர் ஆமோதிக்கிறார்.

திங்கள், 16 அக்டோபர், 2017

மா ஒளி

நாங்கள் இருந்த பகுதியில் ராஜேந்திரன் (S/o கன்னியம்மா) என்ற கூலித்தொழிலாளி இருந்தார். அவர் நாட்டு வெடி தயாரிப்பு, சாராயம் காய்ச்சுதல் முதல் நடமாடும் இஸ்த்ரி வண்டி வரை எல்லா வேலையும் செய்தார். அக்கம்பக்கம் நடப்பதை எல்லாம் நான் சிறுவனாக இருந்தபோது கூர்ந்து பார்த்துள்ளேன், நினைவில் வைத்துக்கொள்வேன்.
கார்த்திகை தீபத்தன்று அவர் ஒருமுறை கையில் பிடித்தபடி 'சூம்ம்..சூம்ம்..' என்ற ஓசை எழுப்பிய எதையோ சுற்றினார். தலைக்கு மேலே தீப்பொறிகள் வட்ட வட்டமாய் சிதறியது கண்டு எனக்கு ஒரே மகிழ்ச்சி. வேடிக்கைப் பார்த்த நான் சுவரோரம் கேட் மீது அமர்ந்தபடி 'அது என்ன?' என்று கேட்டேன். இது 'சுளுந்து / மாவுளி' என்றார். அது என்னவென்று அவ்வயதில் எனக்குத் தெரியாது. உன் வயசுக்கு இது புரியாது என்று சொல்லாமல் அதை பொறுமையாக விளக்கினார்.
'அதுக்குள்ள என்ன பட்டாசு இருக்கு?' என்றேன்.
'இதுல டப்பாசு இல்லை. இதுக்குள்ள காய்ஞ்ச பனங்காய் குலை தண்டு, புல்லு, இஸ்த்ரிக்கு போடுற பற்றவெச்ச கரித்துண்டு போட்டு பெரிய ஓட்டை சாக்கு துணிகுள்ள கட்டிவெச்சு, முடிச்சு போட்டு, அதோட நுனில கயிறு கட்டி இப்படி சுத்துவோம். சரி, கீழ இறங்கிபோய் நீ தள்ளி நின்னு பாரு, தீபொறி படும்மில்ல' என்றார். 
அதுதான் 'மா ஒளி', பெரிய ஜோதி என்று பொருள்பட அழைத்தனர். அதன்பின் காய்ந்த பனை ஓலைகளை குவியலாகப் போட்டு கொளுத்தும் சொக்கபனை நிகழ்ச்சி நடக்கும். (பேச்சு வழக்கில் 'சொக்கப்பனை' பானையாக மாறியது.) முன்னாளில் காடுகளில் பயணிக்கும்போது இந்த சுளுந்தை தீபந்தம்போல் சுற்றிக்கொண்டே போவார்கள் என்று படித்துள்ளேன். தீபாவளி சமயத்தில் இன்று இதெல்லாம் நினைவுக்கு வந்தது.

வியாழன், 12 அக்டோபர், 2017

நினைவில் நின்ற புதினம்


Image result for கல்கி கிருஷ்ணமூர்த்தி

'கல்கி' கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய மறக்கமுடியாத ஒரு வரலாற்றுப் புதினமே 'பொன்னியின் செல்வன்'. அதை மீண்டும் வாசிக்க வாய்ப்பு கிடைத்தால் அருமை. முதலில் 1950-54 வரை கல்கியில் தொடராக வந்த பிறகு 2014 வரை அதே நாவல் ஐந்து முறை மீண்டும் மீண்டும் அதே இதழில் பிரசுரமானது. புத்தக வடிவில் வெளியாகும் சமயம் அதை பார்க்காமல் 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி 1954 ல் மறைந்தார்.

ஓவியர் மணியம் கைவண்ணத்தில் ஒவ்வொரு கதா பாத்திரமும் மிளிர்ந்தது. இவர் ஓவியம் வரையும் போது பக்கத்திலேயே  ஆசிரியரும் அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பாராம். தன் கதாபாத்திரங்களை வண்ணத்தில் காண அவ்வளவு ஆர்வம்!

நாவலின் இறுதியில் இடம்பெற்ற சில சுவாரசியமான 'கேள்வி- பதில்' சுருக்கமாக இங்கே. என் நினைவில் நின்றவை இவை.

கே: 'என்ன சார், இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சு போச்ச்சு?'
ப: 'இதுவே ரொம்ப வருஷ காலம் போயிருக்கு. மூன்றரை வருடங்களாக உங்களோடு கதாபாத்திரங்கள் பயணித்தது. வாசகர்கள் பொருமைசாலிகள்தான். '

கே: 'குந்தவை வந்தியத்தேவனை மணந்தாளா?'
ப: 'மணந்தார். 'ராஜராஜ தேவரின் திருத் தமக்கையார் வல்லவரையர் வந்தியத்தேவரின் மகாதேவியார், ஆழ்வார் பராந்தகக் குந்தவையார்' என்று கல்வெட்டில் குறிப்பு காணக் கிடைக்கிறது.'

கே: 'கல்யாணி என்னவானாள்?'
ப: 'சித்த சுவாதீனம் இல்லாமல் அவள் அங்கேயே திரிந்து கொண்டிருந்தாள் போலிருக்கு.'

கே: 'வைணவன் ஆழ்வார்க்கடியான் என்ன ஆனான்?'
ப: 'தனது ஒற்றறியும் வேலையை நடத்திக்கொண்டிருக்கிறான்.'

கே: 'மேற்கொண்டு அந்த கதா பாத்திரங்களை ஏன் வளர்க்கவில்லை?'
ப: 'கதையை எந்தக் காலத்தில் முடிக்கிறோமோ, அந்தக் காலத்தில் பாத்திரங்களை இருந்த நிலையிலேயே விட்டு விடுவதுதான் முறையென்று கருதினேன்.'

கே: 'வானதியின் கதி என்ன? குடந்தை சோதிடரின் வாக்கு பலித்ததா?'
ப: 'வானதியின் விஷயத்தில் பலிக்கிறது. வானதிக்குப் பிறக்கும் குழந்தையான இராஜேந்திரன் 'கங்கையும் கடாரமும் கொண்ட சோழன்' என்று பிற்காலத்தில் சரித்திரத்தில் புகழ் பெறுகிறான்.'

கே: 'வரலாறு சம்பந்தமாக இவ்வளவு ஆழமாக ஆராய்ந்து எழுத எப்படி சாத்தியமானது?
ப: 'நூல்கள்தான் எனக்குப் பெரிதும் உதவியது. நூலகங்களில் சோழ சாம்ராஜ்யம் பற்றிய பல விஷயங்களை குறிப்பெடுத்தேன். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பொன்னியின் செல்வன்
கதை நிகழ்ந்த இடங்களான தஞ்சாவூர், வீராணம் ஏரி, கொடும்பாளூர், பழையாரை, கோடிக்கரை, இலங்கை – போன்ற அத்தனை இடங்களிலும் வரலாற்று சரித்திர சான்றுகள் இன்றும் உள்ளன.'

இவைபோக இன்னும் பல கேள்விகளுக்கு பத்தி சொல்லியுள்ளார்.
'இந்தக் கதையின் ஆசிரியரைக் காட்டிலும் அறிவிலும் ஆற்றலிலும் ஆராய்ச்சியிலும் மிக்கவர்கள் வருங்காலத்தில் மேலும் நவீனங்கள் படைப்பார்கள் என்று நம்புகிறேன்' இப்படியாக கல்கி எழுதி முடிக்கும் அந்த இறுதி வரிகள், அவர் எத்தனை எளிமையானவர் என்பதை நமக்குப் புரிய வைக்கும்.


திங்கள், 2 அக்டோபர், 2017

அறியாதவன் வாயில் மண்!

ஒரு நண்பர் கீழ்கண்ட கேள்வியை என்னிடம் கேட்டார்.
"முருகன் தமிழ்க் கடவுள், அவர் வள்ளி என்ற குறத்தியை மணந்தார். ஆனால் இந்திரன் என்பது ஆரியர் கடவுள் ஆயிற்றே, இவருடைய மகள் தெய்வானையை முருகன் மணம்செய்து கொண்டதாக உள்ளது. வடக்கே வள்ளி பற்றி சொல்வதில்லை. ஸ்கந்தன் என்று வடக்கே வணங்குவர். அப்படி என்றால் இங்கு நாம் இந்திரனை ஏன் ஏற்க வேண்டும்? " என்று கேட்டிருந்தார்.
இவரைப் போன்றவர்களுக்கு நீண்ட விளக்கம் சொல்லி புரிய வைப்பது நேர விரயம் என்பதால் 'ஆமாங்க. கந்தனை கும்பிடாதீங்க. தெய்வானை சீன்லயே இல்லை. முருகனின் அறுபடைவீடுகளில் திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் எப்படியோ சேர்த்துட்டாங்க. இந்திரன் சூரியன் எல்லாம் கணக்குலேயே வெச்சுக்காதீங்க' என்று பதிலளித்தேன். அவர் ஆறுதல் அடைந்திருப்பார்!
முருகன் (நாகை) சிக்கிலில் சக்திவேல் பெற்று, அதைக்கொண்டு (கன்னியாகுமரி) திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்தபின், இந்திரன் அளித்த வாக்குபடி தெய்வானையை திருப்பரங்குன்றத்தில் (மதுரை) மணந்தான். இதெல்லாம் ஆரியர் கதைகள் என்றால் இவை தென்னாட்டில் நடக்க வேண்டாமே. வடக்கே சூரனுடன் போர் புரிய முருகனுக்கு இடமா இல்லை? இதையெல்லாம் நம்மவர்களுக்கு புரிய வைப்பது இயலாது. அவர்களும் தெரிந்துகொண்டு ஒன்றும் ஆகப்போவதில்லை.
கலியுகத் தெய்வம் நம்மக்களிடம் படாத பாடு படுகிறார். முருகன் @ கார்த்திகேயன் @ கந்தன் என்ற கதாபாத்திரம் தேர்வில் கேட்கப்படும் objective type கேள்வி போல் ஆகிவிட்டது. பிரம்மன், திருமால், இந்திரன், சுப்பிரமணியன், ராமன், கிருஷ்ணன் என்று எல்லோருமே ஆரிய கடவுள் என்றால், இத்தனை ஜெனனங்கள் எடுத்த தமிழ் சித்தர் போகரை எதில் சேர்த்துக் கொள்வது? நம் இந்திய அரசியல் போலவே ஆன்மிகத்திலும் வடக்கு-தெற்கு என்ற அளவில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.
பஞ்சமுக விஸ்வகர்மாவின் தோற்றம் பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. விஸ்வகர்மா என்றால் காயத்ரி வருகிறாள். காயத்ரி மந்திரம் என்றால் அது ஆரியர் கலாசாரம். பஞ்சமுகத்தில் தோன்றிய பிரம்மன், விஷ்ணு, சிவன், இந்திரன், சூரியன் எல்லாரும் ஆரியர்கள். அதில் தமிழ்க் கடவுள் மட்டும் எங்களுக்கு வேண்டும் என்ற எண்ணமே உள்ளது. வேணுங்கிற முகத்தை பிச்சிக்க வேண்டியதுதான். ஆனாலும் அதில் தமிழ் முகம் என்று ஏதுமில்லையே! அங்கே முருகனும், தமிழும் புலப்படாது. பஞ்சமுகத்தோடு மற்றவர்களுக்கு புலப்படாத ஆறாவது முகத்தையும் (அதோமுகம்) சேர்த்து முருகனாக உத்தித்துக் கொண்டார், பிறகே தமிழ் படைத்தார்.
மொழி வேற்றுமை வந்தாலும் வந்தது. இந்த கூட்டம் புராணங்களை நம்புவதில்லை. அப்படியானால் இங்கு பிறந்து சீனம் போன போகரும் ஆரியர் தானே? அவருடைய நூல்களை வாசித்து போற்றுவதும் தமிழ் மரபுப்படி குற்றம்தானே?
எல்லாமே ஊழிக்காலத்தில் மீண்டும் அவருள் ஒடுங்கும். ஈசன் வேறு முருகன் வேறில்லை. இந்த எளிய தத்துவம் புரியாத வரை 'அறியாதவன் வாயில வண்டி லோடு மண்ணு'தான்!

வியாழன், 28 செப்டம்பர், 2017

நீல நிற ஊற்று எங்கே?

துபாயில் இருக்கும் என் முகநூல் நண்பர் திரு. பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட்-6 சதுரகிரிக்கு பயணம் மேற்கொண்டார். அங்கே போகும்முன் தனக்கு அங்கே சித்த தரிசனங்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படுமா என்று என்னிடம் கேட்டார். அது அவர்கள் சித்தம். எதிர்பார்ப்பு இல்லாமல் போய்வாருங்கள் என்றேன்.
சதுரகிரியில் நாவல் ஊற்று இடத்தில் நீர் ஏதும் இல்லாமல் காய்ந்த தரையாகத்தான் இருந்தது. இறங்கி closeup படங்கள் எடுத்துள்ளார்.
ஊருக்கு வந்த பிறகு படங்களை பார்க்கும்போது, அங்கே ஊற்றுப் பகுதியில் காய்ந்த இடத்தில் ஊதா-நீலம் நிறத்தில் நீர் மட்டும் தேங்கியபடி இருந்துள்ளது. "இது எப்படி எங்கள் வெறும் கண்ணுக்கு சற்றும் தென்படவில்லை? அங்குதானே நின்றிருந்தேன்" என்று ஆச்சரியபட்டார். சதுரகிரியில் பல விஷயங்கள் நம் கண்களுக்கு புலப்படாமல் சித்தர்கள் மறைத்திடுவார்கள். சித்த பூமியில் எதுவும் நடக்கும். 
முன்பெல்லாம் வந்த DSLR கேமிராவில் லென்ஸ் அட்ஜஸ்ட்மென்ட் சரியில்லாமல் போனால், சூரிய வெளிச்சத்தின் ஊடுருவலால் (color fringing) சில வண்ணங்களைக் காட்டும். ஆனால் இப்போது எல்லோரும் அதிநவீன மொபைல் கேமிராவில் எடுப்பதால் இதெல்லாம் வர வாய்ப்பில்லை படத்தில் மரங்கள், காய்ந்த குச்சிகள், பச்சை இலைகள் எல்லாம் அதனதன் நிறத்தில் இருக்க, அங்கே இல்லாத நீர் ஊற்று சுனை தோன்றியது எப்படி? வெளிச்சத்தால்தான் இந்த நீல நிறம் பட்டையாக தெரிகிறது என்று வைத்துக் கொண்டாலும், சரியாக அந்த இடத்தில் இப்படி அமைந்தது அமானுஷ்யமே! 

புதன், 27 செப்டம்பர், 2017

எந்த உருவில் வருவார்கள்?

சித்தர்களின் தரிசனம் வேண்டி பலபேர் சதுரகிரிக்கு சென்று வருவார்கள். அப்படித்தான் அண்மையில் பெரம்பலூரைச் சேர்ந்த என்னுடைய வாசகர் திரு.சிவகுமார் தன் நண்பரோடு போய்வந்தார்.
அங்கே தாணிப்பாறை பூங்கா முன்பு நின்று திரு.சிவகுமாரை அவர் நண்பர் தன் மொபைலில் படம் பிடித்தார். நின்று நிலைத்து எடுத்தும் முதல் முறை எடுத்ததில் தெளிவில்லை. இரண்டாம் முறை தன் கை அசைக்காமல் எடுத்தும் தெளிவாக விழவில்லை. அதில் புகையோட்டமும் மின்னல் கீற்றுபோல் குறுக்கீடு ஏதோ உள்ளது என்றார். அதற்கு என் நண்பர் 'என்னத்த எடுக்குற? இப்போதாவது சரியாக எடு' என்று கோபித்து கொண்டாராம். மூன்றாவது முறை எடுத்தது சரியாக வந்தது.
அந்தப் படங்களை எனக்கு அனுப்பி கருத்து கேட்டார். சூறாவளி சுழல்காற்று வீசாத, தெரு விளக்கு எரியாத அந்தப் பொழுதில் இப்படியொரு விசித்திர படம் வர சாத்தியமில்லை. முதல் இரண்டிலும் சிறிய மின்னல் கோடுகள் இவர் அருகே வந்து சுழன்று போயுள்ளது. அது சித்தர்களே என்று அவரிடம் சொன்னேன். இருமுறையும் படம் பிடிப்பதை தடுத்துள்ளார்கள். போனால் போகிறது என்று மூன்றாம்முறை அனுமதித்தது தெரிகிறது.
சித்தர்கள் எந்த ரூபத்திலும் வருவார்கள். உங்களை கண்காணிப்பார்கள் என்பதை கவனத்தில் கொள்க.


சனி, 23 செப்டம்பர், 2017

இன்னும் வேகவில்லை!

இறையருள், சித்தர்கள் அருள் பெற்றவர்களிடம் ஒரு விதமான பொறாமை குணம் நிலவுகிறதே. அது ஏன்? என்று ஒரு நண்பர் கேட்டார்.

அது சமூகச் சூழல் கருதியோ, தன் ஆழமான வெளிப்பாtடினாலோ அப்படி இருக்க வாய்ப்புண்டு என்று சொன்னேன். அருள் பெற்றவர்கள் என்றாலே அவர்களிடம் உயர்ந்த பண்புதானே குடிகொள்ள வேண்டும், பின் ஏனிந்த வஞ்சம், அசூயை, பொறாமை, கோபம்? நானும் இதை சிலரிடம்  கவனித்துள்ளேன்.

தன்னை யாரேனும் ஓரங்கட்டிவிடுவார்களோ, புகழ் போய்விடுமோ, இருட்டடிப்பு செய்து விடுவார்களோ, நமக்கு போட்டியாக வந்திடுவாங்களோ, என்ற அச்சம் குடிகொண்டு விடுவதே காரணம். இந்த நினைப்பே சிரிப்பாக உள்ளது.. அவர்களிடம் இந்த குணம் இருக்கக் கூடாதே.. அல்லவா?

ஆனால் நான் பார்த்தவரை, பலரிடம் இந்த ஆபத்தான குணம் உள்ளது. 'உன்னைவிட நான் அனைத்தும் அறிவேன், நானே கடவுளின் அஜென்ட், என்னிடம் என்ன தவறு கண்டாய்,  குறைகூற உனக்கு என்ன விஷயம் தெரியும்?' இப்படியான மனோபாவமே உள்ளது.

இப்படி இருந்தா அவருக்கு அருள் இருந்து என்ன பிரயோஜனம்? தன்னுணர்ச்சி எப்போதுமே தலைதூக்கிக்கொண்டு இருந்தால் ஆபத்துதான். 'அவர் சித்து வேலை செய்பவர், நான் அப்படி இல்லை. நான் அழைத்தால் அந்த இறைவன் வருவார்' என்ற ரீதியில் பேசிய ஒருவரை பார்த்ததும், எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. பகவான் ரமணரை பொறுத்தவரை 'நான்' என்பது முக்கியமான சொல். அதுதான் தேடலைத் தரும். அந்த நான் என்பதை உணராதவரை அது ஆணவமா, கோவணமா என்று அறியாமலே இருக்கும் மனிதர்களே அதிகம்.

என் பார்வையில் எல்லோருமே சதாசிவ ரூபம்தான். 'நல்லோர் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை' போல, ஒருவருக்கு கிட்டிய இறை தரிசனமும் அருளும்,  மற்றவர்களுக்கும் கிடைக்கும் வகையில் சிந்தித்து செயல்பட்டாலே போதுமானது. எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் புலபட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அதற்கு அவசியமுமில்லை. கற்றது விரல் நுனி அளவுதான் அதற்கே இந்த அமர்க்களம். இன்னும் கைமண் அளவு கற்றால் என்ன ஆகுமோ? அந்த ஔவையாரே என் மாணவிதான் என்று சொல்லும் காலமாகிவிடும்.

இறையருள் என்பது ஓடும் நதி. எல்லோருக்கும் பொது. அதிலிருந்து நீங்களும் முகந்து எடுக்கலாம், உங்களிடம் அதுவாகவும் கசிந்து வரலாம். இதில் உரிமை கொண்டாட என்ன இருக்கு? நதியின் தண்ணீர் தடையின்றி கிடைக்கிறதா என்பதே முக்கியம். குயவன் பூரணமாக வடிவம் தந்தும்கூட சரியாக சுடப்படாத மண்பானைகள் ஏராளம் உண்டு!

No automatic alt text available.

புதன், 20 செப்டம்பர், 2017

எழுந்து நிற்கவும் என்று சொல்லவேண்டிய நிலை!

Image result for please stand up for national anthem
திரையரங்கில் என் முன்புற இருக்கையில் ஒரு மூட்டுவலி ஆசாமி இருளில் சீட் நம்பர் தேடிக்கண்டு பிடித்து ஒருவழியாக வந்தமர்ந்து செட்டில் ஆனார். அதற்குள் 'தேசிய கீதம்' என்ற ஸ்லைட் போட்டு பாட்டு ஆரம்பித்தது. ஐயோ பாவம், எழுந்திருக்க கஷ்டப்பட்டு விட்டார். சட்டம் சிலருக்கு விலக்கு தந்துள்ளது. அப்படிபட்டோரின் உடல் தகுதியை யார் அங்கே பரிசோதிப்பது? சிரமம்தான். இப்படி எழாதவர்களைப் பற்றி காவல் நிலையத்தில் புகார் செய்ததுவரை செய்தித்தாளில் படித்துள்ளோம்.
இங்கே எழாவிட்டால் 'திமிர்புடிச்ச ஆளு.. பாக்க நல்லாதானே இருக்கான், கொடியை அவமரியாதை செய்யிறான்.. ரெண்டு நிமிஷம் நிக்கமுடியாதாமா?' என்று விமர்சனங்கள் வந்து விழும். கேளிக்கைக்காக வரும்போது, எல்லாவித உடல்நிலை மக்களும் ஒரு பொது இடத்தில் கூடும் இடத்தில் இது என்ன உபத்ரவம்? என்றுதான் நாம் நினைப்போம். பல அசௌகரியத்தால் எழ முடியாதவர்கள் 'கால் வலி, மூட்டுவலி, ஆணி, ஆஸ்டியோ, வெரிகோஸ் அதனால் நான் எழுந்துக்கலை' என்று பக்கத்தில் முகம் தெரியாதவர்களிடம் எதற்கு விளக்கணும்?
கீதம் இசைக்கும்போது அனைவரும் நிற்கும் சமயம் அங்கே எழ முடியாதவர்களின் மனம் மட்டும் குற்ற உணர்ச்சியில் கிடந்து தவிப்பதை நம்மால் உணர முடிகிறது. அரசு விழா மேடை, கல்விக்கூடம், அலுவலகம் இங்கெல்லாம் இசைப்பது அவசியம்தான். மற்றபடி.?
தேசிய கீதம் பாடிக்கொண்டே தேச துரோக செயலில் ஈடுபடுவோர் இல்லையா என்ன? மனதில் பக்தி இருந்தால் இருந்தால் போதும்.