About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 14 நவம்பர், 2019

தமிழும் சன்மார்க்கமும்

"தமிழனுக்கு கடவுள் இல்லை..."
"வழிபாடு இல்லை.."
"மதம் இல்லை."
"தமிழ் மட்டும் தான் எங்கள் உயிர்."
இப்படி கூறும் நாத்திக வாதிகளுக்கும், பகுத்தறிவு வாதிகளுக்கும். இதோ சில உண்மைகள்.

சிவன் இல்லை எனில் நக்கீரனும் பொய்.
முத்தமிழ் சங்கங்களும் பொய்யே...

பிள்ளையார், முருகன் கடவுள் இல்லை எனில் ஔவையும் பொய். அவரின் தமிழ்க் கவியும் பொய்யே...

கண்ணகி இந்து கடவுள் இல்லை எனில் ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களும் பொய்யே...

பெருமாள் கடவுள் இல்லை எனில் ஆழ்வார்களும் பொய்.  அவர்களின் தமிழ் திவ்வியப் பிரபந்தங்களும் பொய்யே...

இந்து கடவுள் இராமர் இல்லை எனில் கம்பனும் பொய்.  அவனின் தமிழ்க் காவியமும் பொய்யே...

இந்து மதம் பொய் எனில் திருவள்ளுவரும் பொய். அவரின் திருக்குறளும் பொய்யே...

இந்து கடவுள்கள் பொய் எனில் திருமுறைகளும் பொய். திருமந்திரமும் பொய். தமிழும் பொய். தமிழ் வரலாறும் பொய்யே.

மொத்தத்தில் இந்து சமயமும்,  இந்துக் கடவுள்களும்,  இந்து சமய வழிபாடுகளும் இரண்டறக் கலந்ததே தமிழ் என்பது இப்போது புரிகிறதா?

உடனே..........
இந்து என்பது அண்மையில் வந்தது.
இந்து என்பது தமிழனுக்குரியதல்ல.
இந்து என்பது வடநாட்டுக்குரியது என்று சொல்ல வருவீர்களே!

இந்து என்பது நமது எல்லா சன்மார்க்க தெய்வ வழிபாடுகளுக்கும் வழங்கப்பட்ட பொதுவான பெயர். இதில் தமிழரின்..இ

சூரிய வழிபாடு..
நடுகல் வழிபாடு..
சந்திரன் வழிபாடு..
மர வழிபாடு..
மலை வழிபாடு..
பஞ்ச பூத வழிபாடு..
பேய் வழிபாடு..
குலதெய்வ வழிபாடு..
நாக வழிபாடு..
காளை வழிபாடு..
யக்ஷ வழிபாடு...
சிவ வழிபாடு..
முருக வழிபாடு..
மாயோன் வழிபாடு..
அம்மன் வழிபாடு..
இந்திரன் வழிபாடு..
வருணன் வழிபாடு..
விநாயகர் வழிபாடு..

ஆகிய வழிபாடுகள் அனைத்தும் உள்ளடங்கியுள்ளது. மேலே குறிப்பிட்டது போல இதையெல்லாம் தனித்தனியாக சொல்லிக் கொண்டிருக்க முடியாது. எனவேதான் இந்து என்ற பொதுவான சொல்லைப் பயன்படுத்துகிறோம்.!!

வெள்ளி, 8 நவம்பர், 2019

கோமியம் தங்கமயம்

நம் இந்து சம்பிரதாயப்படி சுத்தி செய்யும் எல்லா சடங்குகளிலும் பசு கோமியம் இடம்பெறும். வீடு முழுதும் புரோட்சணம் செய்ய, அடிபட்ட சிராய்ப்புகளைச் சுத்தம் செய்ய, மருந்தாக உட்கொள்ள, தீயசக்திகளை விரட்ட, மண்வளம் கூட்டும் பஞ்சகவியமாக என்று அநேக பயன்பாடு உண்டு.
பசுவின் ஐந்து பொருட்களான பால் தயிர் நெய் சாணம் கோமியம் ஆகியவற்றின் கலவையே பஞ்சகவ்வியம். இது மனிதனுக்கு கால்நடைகளுக்கு தாவரங்களுக்கு உற்ற மருந்தாக வயிற்றில்/குடலில் தேங்கிய ஆமத்தை நீக்க அருமருந்தாகப் பயன்படுகிறது. சித்த மருத்துவத்தில் ரசவாதம் செய்யும்போது புடம் போட வரட்டியும், மூலிகைத் திருநீறு தயாரிக்கவும் பயன்படுகிறது.
வடக்கே அதிக விலைக்குப் போகும் பசுமாடு என்றால் அது கீர் இனம். எடை கனமானதும், தட்ப வெட்பத்தைத் தாங்கிக் கொள்ளும் திறனும், நோய் எதிர்ப்பு சக்தியும், அதிக பாலும் தரவல்லது. இதனுடைய ஒரு லிட்டர் கோமியத்தில் சுமார் 3-10 மில்லிகிராம் அளவுக்கு தங்கத் துகள்களின் கூறுகள் கரைந்துள்ளதாகப பல்லாண்டுகளுக்கு முன்பே பரிசோதனை முடிவு வெளியானது. இது எப்படியும் மேற்கத்திய நாட்டு ஆய்வாளர்களையும் கார்பரேட் மருந்து நிறுவனங்களையும் கோபப்படச் செய்யும்.
'ஐய்யயே! அந்த பசு எப்படியோ போகட்டும் அது தமிழ்நாட்டு பசு இல்லை' என்ற அளவில் சிந்திக்கும் மாசடைந்த தமிழர்களே அதிகம் உள்ளனர். சாணம் முதல் கோமியம் வரை தமிழாக இருந்தால்தான் மதிக்க வேண்டும் என்ற மூடத்தனத்தை முற்போக்குக் கட்சிகள் விதைத்து விட்டன. இனி காலம் போகிற போக்கில் இதன் மதிப்பு தெற்கே தேயும்.
சாணம், கோமியம், நாட்டுச் சர்க்கரை, தண்ணீரில் கலந்து ஒருநாள் நுரைக்க வைத்து வடிகட்டினாலே அமிர்த கரைசல் தயார். இதை தெளிப்பு உரமாகப் பயன்படுத்த நல்ல பலன் கிட்டும். மதுராந்தகம் அருகே ஒரு வைணவர் தனிப்பட்ட அளவில் பசுக்களை பராமரித்து Medicated Komiyam மற்றும் Distilled Komiyam தயார் செய்து பாட்டிலில் அடைத்து வியாபாரம் செய்கிறார். இதற்கு நல்ல வரவேற்பும் உள்ளது. முன்பெல்லாம் கிராமத்து வீட்டினுள் மண் தரையில் பசுஞ்சாணத்தையும் கோமியத்தையும் கரைத்துப் பூசுவார்கள். அது நாளடைவில் இறுகிப் போய் தரை பசுமையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் ஜொலிக்கும். வீட்டினுள் கிருமி நாசினியாகவும் வெப்பத்தைக் கட்டுப்படுத்தவும் பயன்பட்டது. அதுபோல்தான் கோமியத்தின் மருத்துவ பண்பும்.
சுமார் பத்து ஆண்டுகள் இவ்விதம் தெளித்த மண் தரையை சிறிதளவு பெயர்த்து எடுத்து சோதித்தால் அடர்த்தியாக தங்கத் துகள்கள் கெட்டிப் பட்டிருக்கும் என்பது உறுதி. ஊசி போட்டு அதன் மருத்துவ பண்புகளை கெடுக்காதவரை, வடக்கோ /தெற்கோ கோமாதாவின் எல்லா இன கோமியத்திலும் தங்கத்துகள் பரவலாக இருக்கும். புனிதமான கோமியத்தில் திருமகள் லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்கிறாள். கிராமத்து வீட்டில் பெரிய அலமாரி கப்போர்டுகள் சுவற்றில் வைத்துக் கட்டுவார்கள். அது நாளடைவில் கரையானால் செல்லரித்துப் போகாமல் இருக்க அதை சுவற்றின்மீது வைத்துக் காரைப் பூசும்முன் ஒரு தாமரை இலையை அகலமாக விரித்து சுவற்றில் வைத்து அதன்மீது மரச்சட்ட அலமாரியைப் பதிப்பார்கள். தாமரையில் லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்கிறாள்.
No photo description available.

திங்கள், 4 நவம்பர், 2019

திருக்குறள் நான்காம் பால்: வீடு

வீடு என்னும் மோட்ச காண்டம் பற்றி தனித்தொகுப்பு உள்ளது. அதை அச்சேற்றாமல் பதிப்பில் முடக்கியதாக திருவள்ளுவரின் வம்சத்தில் குல மடாதிபதி பல வருடங்களுக்குமுன் சொன்னதாக நாம் கேள்விப்பட்ட செய்தி. அறம் கடைபிடித்தால் பொருளும் இன்பமும் இறுதியில் வீடும் கிட்டும், இதற்கென தனியாக ஒரு காண்டம் உண்டா என்ன? உண்டு. இதற்கு என்ன ஆதாரம்?

திருவள்ளுவரின் மருமகன் ஏலேல சிங்கன் வகையறா திருவள்ளுவ நாயனார் மடத்தின் மடாதிபதியாக 1900ல் அலங்கரித்தவர் இதுபற்றிக் கூறியிருந்தார். தனியாக மோட்ச காண்டம் உண்டு என்றும் அதில் வள்ளுவ குலதினற்கு ஏற்ப ஜோதிடமும் சேர்ந்து வரும். இது சமயம் சார்ந்த மூட நம்பிக்கை என்று அக்கால ஆங்கிலேயர்களும் நம் திராவிட எழுச்சிக்கு வித்திட்ட கூட்டமும் சேர்ந்து இதை பதிப்பாக விடாமல் தடை போட்டதாக மடாதிபதி பிற்பாடு 1960 ல் சொன்னதாக அறிகிறோம்.   .

"தமிழ்ச் சங்க நூல்களில் திருக்குறள் என்ற பெயர் மட்டும் தொகை என்ற சங்க நூல் பட்டியலில் பெயர் குறிப்பு மட்டும் இருந்தது. ஆனால் முழு ஓலைச் சுவடியும் எங்கும் கிடைக்கவில்லை.

அன்றைய பிரிக்கப் படாத கோயமுத்தூர் மாவட்டத்தில் ஈரோடு அருகே முடவாண்டி சத்தியமங்கலம் என்ற ஊரில் கள்ள கவுண்டன் பாளையம் என்ற ஊரில் திருவள்ளுவரின் மருமகனும் ஒரே வாரிசுமான ஏலேல சிங்கனின் வாரிசுகள் அரசர்களிடம் பட்டயங்கள் பெற்று மடாதிபதிகளாக உள்ளதாக தமிழ் அறிஞர்களுக்குத் தகவல் கிடைத்தது. இவர்களுக்கு கொங்கு வள்ளுவர், கொங்கு பறையர் உட்பட அப்பகுதியில் வாழும் பல்வேறு ஜாதியினர் குல சீடர்களாக உள்ளதாக தமிழ் அறிஞர்கள் அங்கு சென்ற போது அறிந்து கொண்டனர். மேலும் இந்த மடம் கரூர் பரமத்தி அருகே நடந்தை,அந்தியூர் ,குள்ளவீரம் பாளையம்,பாலக்காடு எல்லை ஆகிய இடங்களில் தங்களைப் போலவே உறவு முறை மடங்களை கொண்டிருந்ததாகவும் அறிந்து கொண்டனர்.

குழந்தை ஆனந்தர் மடம் என்று அழைக்கப்பட்ட இந்த மடங்களில் திருவள்ளுவர் தன் கையால் பூஜை செய்து, பிறகு மருமகன் ஏலேல சிங்கனிடம் அளித்த மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் விக்ரஹங்கள் பூஜை செய்யப்பட்டு வந்ததாகவும் அறிந்து கொண்டனர். ஏன்? காரணம் திருவள்ளுவரின் பூர்வீக ஊர் மதுரை ஆகும்.

கொங்கு பறையர்களின் புரோகிதர்களான கொங்கு வள்ளுவர்களுக்கே குருவாக விளங்கியதால் திருவள்ளுவர் என்ற பட்டப் பெயர்களையும் கொண்டு இருந்தனர் இம்மடாதிபதிகள். ஜோதிடம் குறித்து இவர்கள் நிமித்தம் பார்ப்பதற்காக, அதாவது ஓலைச் சுவடிக்கட்டில் நடுவில் நூலைப் போட்டுப் பார்த்தால் எந்தப் பக்கம் வருகிறதோ அந்தப் பக்கத்தில் ஒரு திருக்குறளும், ஓரத்தில் ஒரு ஜோதிடக் குறிப்பும் இருக்கும். அந்த ஜோதிடக் குறிப்பை பார்ப்பதற்கான ஒரு புனித நூலாக மட்டுமே திருக்குறளை இம்மடாதிபதிகள் அப்போது பார்த்து வந்தனர்.

தற்போது இந்த சுவடிகள் 3 பிரதிகளாகவும் உள்ளன. ஆனால் இம்மூன்று சுவடியிலும் அறத்துப்பால்,பொருட்பால்,காமத்துப்பால் இவை மட்டுமே இருந்தன. சுவடியில் இருக்கும் ஜோதிட குறிப்பு ஆன்மிக குறிப்பாக இருந்ததால் மோட்சத்துப்பாலாக இருந்தது. இதை பின்னாளில் சம்பந்தப்பட்ட முற்போக்கு கூட்டம் மத மூட நம்பிக்கை என்று நிராகரித்து திருக்குறளில் சேர்க்காமல் இருட்டடிப்பு செய்தனர்.

நமக்குத் தெரிந்து அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கு மேலும் ஒன்று உண்டு. 'அப்பாலும் அடி சார்ந்தார்.' கபிலர், பரணர், திருவள்ளுவர் முதலான நாற்பத்து ஒன்பது கடைச்சங்கத் தமிழ் புலவர்கள்தான் 'பொய்யடிமை இல்லாத புலவர்கள்' என்ற நாயன்மார்கள். திருவள்ளுவரும் மேற்கூறிய 49 புலவர்களைப் போல விபூதி, ருத்ராட்சம் அணிந்து பஞ்சாட்சரம் என்ற நமச்சிவாய மந்திரத்தை ஓதி மதுரை சங்கத் தலைவனான சொக்கநாதரை இரு கையை கூப்பி வணங்கியவாரே அகத்தியம்,தொல்காப்பியம் ஆகிய இலக்கண நூல்களின் வழிகாட்டுதலின் படி சங்க இலக்கியங்கள் பாடியதை சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகிறார்.

பொய்யாமொழிப் புலவர் என்று போற்றப்பட திருவள்ளுவ நாயனார் என்றே, திருவள்ளுவர் பூஜித்த லிங்கத்தை இன்று வரை பூஜித்து வரும் திருவள்ளுவரின் பெண் வழி பேரன்களான இந்த மடாதிபதிகள் கூறி வருகின்றனர். சில புலவர்களின் சூழ்ச்சியால் சேர நாட்டுக்குத் தஞ்சம் போக வேண்டியனாது. இன்றும் கேரளா பக்கம் திருவள்ளுவ நாயனாருக்குக் கோயில்கள் உண்டு. சடையப்ப வள்ளல் ஆதரவுடன் ஏலேல சிங்கன் வாரிசில் ஒருவர்தான் மைலாப்பூரில் இருந்து கரூர் பரமத்தியிலுள்ள நடந்தை, முடவாண்டி, சத்தியமங்கலம் ஆகிய ஊர்களில் குடியேறியதாக அறிகிறோம். ஏலேல சிங்கனிடம் இருந்த லிங்கம் இந்திரனுக்கு அறும் பாவம் தீர்த்த லிங்கம், தந்திரத்தில் கொடிய விஷத்தை அறுத்த லிங்கம், சதா சிவானுக்கேற்ற லிங்கம், சொக்கலிங்கம் என்ற குறிப்பும் மடத்தில் உள்ளது.


இக்கட்டுரைக்குச் செய்திகளை வழங்கிய நண்பர் திரு.T. பாலசுப்ரமணிய ஆதித்யன் அவர்களுக்கு நன்றி.

சர்ச்சைக்குள் சித்தர்!

கடந்த இரண்டு நாட்களாக திருவள்ளுவர் Top 5 இடத்தில் பேசப்பட்டு வருகிறார். அவர் காவியா வெள்ளையா? நீறில்லா நெற்றியா திரிபுண்டரமா? முப்புரி நூல் பூண்டாரா இல்லையா? உருத்திராட்சம் தரித்தாரா இல்லையா? குடும்பஸ்தரா சன்னியாசியா? சந்ததி இருந்ததா இல்லையா? 'அறம் பொருள் இன்பம்' என முப்பால் இருக்க நான்காம் பால் குறிக்கும் 'வீடு' தொகுப்பு அழிக்கப்பட்டதா மறைக்கப்பட்டதா? ஆதிக்க ஆங்கிலேயராலா திராவிடக் கூட்டத்தாலா? 
இங்ஙனம் திருவள்ளுவரே திகைக்கும் அளவில் கலி 5120 ஆண்டில் அவரைப் பற்றி விசாரணைகள் நடக்கின்றது. முதன் முதலில் 1812 ல் F.W.எல்லிஸ் பதிப்பித்ததுதான் முதல் பிரதி. அதன் பிறகு பல 'மூலமும் உரையும்' தொகுப்புகள் அச்சாகி வெளிவந்தது. இங்கே படத்தில் நீங்கள் காண்பது 1885 ஆம் ஆண்டு முருகேச முதலியார்வாள் பதிப்பின் அட்டைப்படம்.
எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கும்போது திருவள்ளுவர் சிவசத்தியை பூஜித்த நாயன்மாராகக் கருதப்படுபவர். போகர் இவரை 'அறிவான ஞான சித்து' என்கிறார். போகர் கொங்கணர் திருவள்ளுவர் ஔவையார் கோரக்கர் எல்லோரும் சமகாலத்து சித்தர்கள். குரு- சீடர் மரபில் வருவோர். 'சங்கத்து புலவர்களின் நந்நூலேற்ற அகத்தியர்' என்கிறார் போகர். Agathiyar school of syllabus பின்பற்றப்பட்டு 'தேர்வுபெற்ற சித்தர்' என அங்கீகரிக்கப்பட்டவர் திருவள்ளுவர். அப்படியெனில் அவர் சமஸ்கிருதத்திலும் புலமை பெற்றவராகத்தான் இருந்திருக்க வேண்டும். (இது போகர் உரைக்கும் தகுதி அளவுகோல்படி.)
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் ஓவியர் வேணுகோபால சர்மா பக்திப்பழமாய் வரைந்த திருவள்ளுவரின் படம் நிராகரிக்கப்பட்டது. பிற்பாடு அவரை சமணத் துறவியாக பட்டை கொட்டை இல்லா வெறுமையுடன் வரைந்த படம் ஏற்கப்பட்டது. எப்படி திருமந்திரம் அக்காலத்திலேயே ஶ்ரீமந்த்ரமாலா என்று சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டதோ அவ்வாறே திருக்குறளும் 'ஸ்லோக தோஹே' என்று அந்நாளிலே இயற்றப்பட்டு இன்றும் மறைப்பாக இருக்கலாம். எப்போதும்போல் நடக்கும் கூத்தை நாம் வேடிக்கைப் பார்ப்போம்.
Image may contain: 1 person
No photo description available.