About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 31 ஜூலை, 2020

ஆடி வெள்ளி அலங்கார வேப்பிலைக்காரி

அருள் அள்ளித்தரும் குலதெய்வ மகாமாரி!

இன்று எங்கள் குலதெய்வம் கோயிலில் பூசாரி சிறப்பான அபிஷேகம் செய்து படம் எடுத்து அனுப்பினார்.

Image may contain: one or more people and flower

செவ்வாய், 21 ஜூலை, 2020

ஒலிக்கும் பெயர்!

ஒரு முகநூல் பக்கத்தில் இருந்த மீம் பதிவு எனக்குச் சிரிப்பை வரவழைத்தது. ‘கறுப்பர் கூட்டத்தை எதிர்க்கும் இந்துக்களே! முருகன் என்ற தமிழ்ப் பெயரை எந்த பார்ப்பனராவது வைத்துக் கொண்டதுண்டா?’ என்று அதில் இருந்தது. சஷ்டி கவசத்தைத் தரக்குறைவாக விமர்சித்த காரணத்திற்காக அவர்களைக் கண்டித்த முருக பத்தர்களிடம் தங்கள் கோபத்தை இவ்விதம் காட்டியுள்ளனர்.

பாட்டன், முப்பாட்டன் பெயர்களையே ஒரு குடும்பத்தில் சுழற்சியில் வைப்பது பொதுவான வழக்கம். தொட்டிலில் நாமகரணம் செய்தபிறகு காலத்திற்குத் தக்கபடி வேறு பெயர் வைப்போர் உண்டு. நமக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் அப்படியான தமிழ்ப் பெயர்களை வைத்துள்ளனரா என்று யோசித்தேன். குணவதி, முருகபூபதி, செங்கமலவல்லி, வேம்பு ஐயர், வள்ளி, சடலாண்டி, மலையம்மா, செல்லம், கொழுந்து ஐயர், என்று ஏகப்பட்ட பெயர்கள் பளிச்சென்று நினைவில் வந்து போயின. பெயரில் வடமொழி/தெம்மொழி என்று வகைப்படுத்திப் பார்ப்பது மடமை. ஜாதிகள் எதுவாயினும் அவரவர் மூதாதையர்களின் பெயரோ அல்லது அவ்வூர் கிராம தேவதையின் பெயரோதான் பெரும்பாலும் இருக்கும்.
தாமரையை 'கமலம்' என்று சொல்லாமல் ‘மலம்’ என்றால் அது பூசைக்குரிய மலர் ஆகாதா? ஆம்பலைச் சோம்பல் என்றால் அதன் வளரியல் தன்மை மாறிவிடுமா என்ன? எங்கள் ஊரில் காவேரிக்கரை கொரம்பு அருகே பணி செய்தவர் முருகு சுப்பிரமணியம். நாளடைவில் அவர் மூசுமணி, சுப்பாமணி, சுப்புணி என படிப்படியாய்ச் சுருங்கி காலவோட்டத்தில் ‘கொரம்பு சுப்பு’ என்று நிலைத்து விட்டது.
நம் மக்கள் வல்லி/வள்ளி பெயரை இன்னும் சரியாகச் சொல்வதில்லை. கனகவல்லி, பூவிருந்தவல்லி, நாகவல்லி போன்ற பெயர்களை, கனகவள்ளி, நாகவள்ளி என மாற்றி எழுதுகிறார்கள். முருகனின் வள்ளிதான் வள்ளி. அம்மன் பெயர்களிலுள்ள வல்லியைச் செம்மான் மகளான வள்ளியாக மாற்றுகிறார்கள். பொருள் தராது!
கறுப்பரோ வெளுப்பரோ, யாராக இருந்தாலும் இறைவனின் பெயர்களில் பேதம் பார்க்கும் எண்ணம் இருந்தால் இன்னும் பல பிறவிகள் எடுத்துப் பெயர் சூட்டிக்கொண்டு ஊழ்வினையைக் கழித்துத் தெளிவு பெற வேண்டியதுதான்.

திங்கள், 20 ஜூலை, 2020

யார் காரணம்?

கவசம், காப்பு, ரட்சை என்றால் என்னவென்றே அடிப்படையில் அறியாத ஒரு கூட்டம் தமிழில் கொச்சையாய் கலாய்க்கிறது. பக்தன் தன் உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் குறிப்பிட்டு அந்த ஒவ்வொன்றையும் நோயணுகாமல் காக்கக் கோருகிறான். எந்த ஒரு பூசை செய்யும் முன் தன் தேகத்தின் ஆறாதார சக்கர உறுப்புகளை விரலால் தொட்டு மந்திரம் சொல்லி அங்க வந்தனம் செய்து கொள்கிறான்.

இவ்வுடல் என்னும் ஆலயத்தில் இறைவன் குடியிருக்க அவனே கவசமாக இருந்து காக்க வேண்டும் என்பதே பொருள். கோயிலில் விக்ரகத்திற்குத் தீபாராதனை காண்பிக்கும் போது பாதம், நாபி, இதயம், முகம், நெற்றி வரை சக்கரங்கள் தோறும் படிப்படியாய் மூன்று முறை சுற்றிக் காட்டுவார்கள். எதற்கு? நம் நன்மைக்காக!
ஆனால் இது எதுவும் புரியாத முற்போக்கு மூடர்கள் பிரச்சனை செய்வதற்காகவே நம் கவச தோத்திரத்தையும் பூசை முறைகளையும் கையில் எடுத்துக்கொண்டு ஒவ்வொருமுறையும் அவமதித்தால் அவனை மன்னித்தருள்வதா? இது போன்றவர்களை IPC Section 295A கீழ் இதுவரை துணிந்து தண்டிக்காதது ஏன்?
வடமொழி/ வேதம்/ வேதியர் எதிர்ப்பு என்று ஆரம்பித்துப் படிப்படியாய் முன்னேறி கடவுள் சிலைக்குச் செருப்பு மாலை போட்டு, தமிழ் மொழியையே தங்களுக்குக் கேடயமாக்கி அவதூறு பிரச்சாரம் செய்யும் அளவுக்குத் துணிவூட்டி ஊக்கப்படுத்தியது யார்? தமிழ் நேசர்கள்தான்! தேவர் பெருமானார் இருந்திருந்தால் சவுக்கடி தந்திருப்பார். அவர் சித்த லட்சணங்கள் பொருந்தியவர் என்று என் தாத்தா சொல்லக் கேட்டுள்ளேன்.
ஆதிசங்கரர், பாலதேவராயர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் முதலான மகான்கள் இயற்றிப் பாடிய சக்திவாய்ந்த தேவி/ முருகன் கவச தோத்திர மாலைகளை இகழ விதியில்லை. உடல் முழுவதற்குமாக ஒரு வேல் காக்க என்று சொன்னால் போதாதா? சிலைக்கு ஒரு தீபம் போதாதா? என தங்களுக்குச் சற்றும் தொடர்பில்லாத சங்கதியைக் கீழ்த்தரமாக விமர்சிப்பது போக்கிரிதனம்! எல்லா நோய்களுக்கும் ஒரு பொது மருத்துவர் போதாதா? எதற்காக அங்கங்களுக்கான சிறப்பு மருத்துவர்? என்று ஏனோ கேட்கவில்லை.
அவனும் அவனை ஒழுக்கத்துடன் பேணி வளர்க்காத அவன் பெற்றோரும் ஏழேழு பிறவிக்கும் சாபம் ஏற்பார்கள்!

புதன், 15 ஜூலை, 2020

சக்தி தாசன்!

மஹாகவி என்றாலே நம் நினைவுக்கு வருவது காளிதாசன். காஷ்மீரத்தில் பிறந்து வளர்ந்து பிற்பாடு விதியின் போக்கில் கலிங்கம் வந்து சேர்ந்தான். உஜ்ஜைன் நகரத்தில் காளிதேவி பிரத்தியட்சமாகி களிதாசனுக்குப் புலமையை பூரணமாக அருளினாள். கிமு.3 காலகட்டத்தில் சந்திரகுப்த விக்ரமாதித்யன் அவையில் மஹாகவியாக உலா வந்து ரகுவம்சம், மேகதூதம், குமாரசம்பவம், அபிக்ஞானசகுந்தலம் போன்ற தலைச்சிறந்த சம்ஸ்கிருத இலக்கியங்களைப் படைத்தான்.

சுமார் கிமு.2 ஆம் நூற்றாண்டில் காளிதாசன் கச்சி மாநகரதிற்கு விஜயம் செய்தபின் இலங்கைக்கும பயணப்பட்டதாக ஆய்வுக் கட்டுரைகளில் அறியப்படுகிறது. கச்சி (எ) காஞ்சியின் விஸ்தீரணமும், புலமைமிகு சர்வ கலாசாலையும், எங்கு காணினும் சைவம்/சாக்தம்/ வைணவம் உயிர்ப்புடன் இருந்ததையும் கண்டான். இங்கே காமாட்சியையும் வழிபட்டு, தான் தமிழிலும் கவிபாடும் வல்லமையைப் பெற வேண்டும் என்று அம்மனை வேண்டினான். தன்னுடைய இலக்கியத்தில் ‘புஷ்பேஷு ஜாதி, நாரீஷு ரம்பா, நகரேஷு காஞ்சி, நதீஷு கங்கா, புருஷேஷு விஷ்ணு’ என்று உயர்வான உவமைகளை வர்ணித்துள்ளான். அதாவது; பூக்களில் உயர்வான தெய்வீக வாசத்தைக் கொண்டது ஜாதிமல்லி, பெண்களில் உயர்வானவள் ரம்பை, நகரங்களில் உயர்வானது காஞ்சி, நதிகளில் புனிதமானது கங்கை, ஆண்களில் அழகானவன் விஷ்ணு என்றான். சக்தி தலமாம் காஞ்சிமீது காளிதாசனுக்குத் தீராத காதல் உண்டாகியது.
கிபி.4ல் காஞ்சி நகரில் பிறவி ஊமையாக ஓர் ஆண்குழந்தை பிறந்தது. மூக்கன் தினமும் காஞ்சி காமாட்சி சன்னதியில் ஏங்கி வேண்டும்போது ஒருநாள் அம்மனின் உதடுகள் அசைத்துப் பாடுவதைக் கண்டான். அம்மனின் அருளால் உடனே வாய்திறந்து கவிபாடும் வல்லமையைப் பெற்றான். அன்றிலிருந்து மூக்ககவி என்று அழைக்கபட்டான். அம்மனின் முன்னிலையில் நூறு பாடல்கள் வீதம் ஐந்து பிரிவுகளாக மொத்தம் 500 பாடல்களைப் பாடினான். அதுவே பின்னர் ‘மூக்க பஞ்சாசதி’ என்று பெயர் பெற்றது. அதில் முதல் பிரிவுதான் ஆர்ய சதகம்.
காளிதாசனின் ஷியாமளா தண்டகமும், மூக்க கவியின் ஆர்ய சதகமும் வர்ணனைகளில் ஒற்றுமையைக் காட்டின. இந்த மூக்க-கவி பின்னாளில் ஸ்ரீ மூக்கசங்கரா என்ற பெயருடன் காஞ்சி அத்வைத மடத்தின் பீடாதிபதியாக விளங்கினார் என்கிறது சரித்திரம். உஜ்ஜைனி காளியும், காஞ்சி காமாட்சியும் ஒருவனை இரண்டு பிறவிகளில் கவிபாடும் சக்திதாசனாகப் படைத்தது அந்த ஆன்மாவுக்குக் கிட்டிய பேறு. ஓர் ஆன்மாவுக்குப் பல மனிதப் பிறப்புகள் கிட்டினாலும் அது வடமொழியும் தமிழும் கற்றுத் துதித்தாலே அந்தச் சுற்று நிறைவடையும்.

Image may contain: text that says 'உஜ்ஜைன் ஹ மஹாகாளி ரக ளி காஞ்சி காமாட்சி'

திங்கள், 13 ஜூலை, 2020

துணிவே துணை!

எல்லாவற்றையும் கொரோனா அடியோடு புரட்டிப்போட்டு விட்டது. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும்போது சோதனைகளே அதிகம் தாக்கும்.

1. பள்ளிக்கல்வி மாணவர்களுக்குக் கற்றலில் பின்னடைவு ஏற்படும். ஆன்லைன் நேரலை மக்கர் செய்தால் ஐயோ பாவம் மாணவர்கள். படிக்கவேண்டிய பாடங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். படிக்க ஆர்வம் இருக்காது. தர்மப் பிரமோஷனால் கல்லூரியில் சேர்க்கை மற்றும் cut off சர்ச்சையில் குழப்பும்.
2. ஊரடங்கின்போதே பணியோய்வு பெற்றுச் செல்லும் மூத்த பணியாளர்களுக்கு மனக்குறைகள் கூடும், அதிகாரப்பூர்வமான பிரிவு உபசார விழா இருக்காது.
3. ஆறு மாதங்களுக்கு முன்பாகவே சத்திரம் புக் செய்துவிட்டுத் திருமணத்திற்குக் காத்திருக்கும் வரன்களில் யாருக்கேனும் ஜாதக ரீதியாக காலதாமதம் இருந்திருக்கும். அதையும் மீறி தசாபுக்தி சாதகமாக இருந்தோருக்குக் குறித்த நாளில் வீட்டிலோ/கோயில் சன்னதியிலோ எளிமையாக நடந்து முடிந்திருக்கும்.
4. முக்கியமான அறுவை சிகிச்சை செய்துகொள்ள நாள் குறித்த நோயாளிகளுக்கு அதை இந்நேரம் செய்து கொள்வதா வேண்டாமா என்ற திரிசங்கு நிலை.
5. டிவி சேனல்களின் பாடு திண்டாட்டம்தான். சதி சக்குபாய், பக்தமீரா, அசோக் குமார், ஔவையார் போன்ற தேய்ந்துபோன கருப்பு-வெள்ளைப் படங்களை மீண்டும் மீண்டும் ஓட்டியாக வேண்டும்.
6. வீட்டில் சமைக்காமல் இதுநாள்வரை டிமிக்கி அடித்த இல்லத்தரசிகளுக்கு சமையலறை சிறைவாசம்.
7. கடைசியாக மார்ச் மாதம் இறுதியில் 725 ஆவது சீரியல் தொடர்வரை பார்த்த குடும்பப் பெண்கள் மீண்டும் ஆரம்பத்திலிருந்து பார்த்து அழவேண்டும்.
8. தண்ணீர் கேன் வாங்குவதுபோல் மாஸ்க், சானிடைசர் குடும்பம் பூராவுக்கும் வாங்குவது மேலும் செலவை அதிகரிக்கும். இரண்டு மாதத்து மின்சார கட்டணம் எகிறும்.
9. திரையரங்கு உரிமையாளர்களுக்குப் பெருத்த நஷ்டம். இனி படமும் ஓடாது, திருமண மண்டபமாக மாற்றவும் முடியாமல் போகும். மண்டபங்கள் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை மைய்யங்களாக மாறும். இனி பெரிய அளவு கேடரிங் சர்வீஸ்களுக்கு அவசியம் குறையும்.
10. வீட்டுக்கு வந்துபோகும் உறவினர்களுடனான தொடர்பு அப்படியே மெள்ளக் குறைந்து அற்றுப்போகும்.
11. 'அதிவேகமாகப் பரவும் தொற்று' 'கொத்துக் கொத்தாக ஒரே நாளில்' 'சிகிச்சைப் பலனின்றி' 'மக்கள் பீதி' போன்ற அச்சம் தரும் சொற்களை தினமும் எல்லா செய்தியிலும் கேட்டுக்கேட்டே உளவியல்/ உடல்நல பாதிப்பு வரும்.
12. கீழ்நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகும்போது திடமனம் கொண்டவருக்கே விபரீத எண்ணங்கள் எழும்.
இன்னும் யோசித்தால் நிறையவே குமுறல்கள் வரும். மௌன சாட்சியாக நம் வாழ்க்கை அசம்பாவிதமின்றி தெய்வ பலத்தால் கடந்து போகவேண்டும். இறைவா, சக்தி கொடு!

Image may contain: text that says 'God! Give me strength!'

பாலாவின் வளையல்கள்!

தடிபள்ளி ஶ்ரீ ராகவநாராயண சாஸ்திரி (1896-1990) போன நூற்றாண்டில் வாழ்ந்த வேத விற்பன்னர். இவர் பாலாதிரிபுர சுந்தரியின் உபாசகர். சிறுவயது முதலே வாலைத் தெய்வ வழிபாட்டில் ஈர்க்கப்பட்டு, அதன்பின் அவள் அருளால் எல்லா ஞானத்தையும் பெற்றார். காஞ்சி மஹாபெரியவர் இவரை ஓதாமல் உணர்ந்த ஞானி என்று சொல்வாராம்.

ஒரு நவராத்திரி சமயத்தில் இவர் வீட்டில் சக்தி பூஜை நடந்தது. அப்போது வீட்டில் இருந்த பெண்களுக்கு வளையல்கள் தரவேண்டி வளையல்காரர் தருவிக்கப்பட்டார். தலைக்கு ஒரு டஜன் என அவர் ரூ.12 பெற்றுக்கொண்டு 72 வளையல்கள் தந்தார். 'மொத்தமே ஐந்து பெண்கள்தான் இருக்கிறோம்… நீ ஆறு பேருக்குக் கணக்கு சொல்றியே' என்று சாஸ்திரியின் மனைவி தேவம்மா கேட்டுள்ளார். 'ஆமாம்மா… அஞ்சு வயசு பாப்பாவுக்கும் தந்தேன். நீங்க அவளை மறந்துடீங்களே! வளையல் போட்டுட்டு அந்த குழந்தை உள்ளே ஓடிப்போயிடுச்சு' என்றார். நமக்குத் தெரிந்து எந்த குழந்தையும் பூஜைக்கு வரலையே என்ற குழப்பத்தில் வளையல்காரருக்கப் பணம் தந்து அனுப்பினர்.
சாஸ்திரி வந்து பூஜையில் அமர்ந்தபோது தான் அதை கவனித்தார். வாலை விக்ரகத்தின் கீழே ஐந்து வயது சிறுமியின் கை அளவுக்கு வளையல்கள் இருந்தன. வந்தது அவள்தான் எனபதைப் புரிந்து கொண்டார். அன்று நவராத்திரி சுமங்கலிப் பூஜையைப் படம்பிடிக்க புகைப்படக்காரர் வாசல் பக்கம் வந்து துளசி மாடத்தைப் படம் பிடித்தார். அப்போது அங்கே படத்தில் யாரும் இருக்கவில்லை. பிற்பாடு படச்சுருளைக் கழுவி பிரின்ட் போட்டதில் தான் எடுத்த பிரேம்மில் சிவப்பு/பச்சைப் பட்டணிந்த ஒரு சிறுமி கதவருகே நின்றுள்ளது தெரிந்தது. அவள் யாரென அவ்வீட்டாருக்கோ பக்கத்து வீட்டுக்காரர்களுக்கோ தெரியவில்லை... வளையல் அணிந்து கதவருகே நிற்பதுதான் பாலா திரிபுர சுந்தரி! அவளுடைய வளையல்களே பூஜையில் இருந்தன. அவர் காலத்திலேயே தெனாலியில் கோயில் கட்டினார். ஓம் சக்தி.



ஞாயிறு, 12 ஜூலை, 2020

எண்ணமும் செயலும் மாசடைந்தால்!

வாசக நண்பர் ஒருவர் நீண்டநாள் விருப்பமாக என்னுடைய புத்தகத்தை முதல்முறை வாங்கினார். ஜூன் தொடக்கத்தில் புத்தகத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்தபின் அது கூரியர் அலுவலகத்திலேயே பட்டுவாடா ஆகாமல் பதினெட்டு நாள்கள் இருந்துள்ளது. கடந்த வாரம் இவரே நேரில் போய் வாங்கி வந்துள்ளார். மாலையில் சித்தர் நூலை வாங்கி வந்து பயபக்தியுடன் அதைப் பூஜை அடுக்கில் வைத்தபின் எடுத்துப் படித்தார். அன்று முன்னுரை மட்டுமே படிக்க முடிந்ததாம்.

மறுநாள் முழு ஊரடங்கு நிலவியதால் அவருடைய வடநாட்டுச் சமையல்காரர் தேவையான உணவுப் பண்டங்களை வாங்கி வைத்துவிட்டார். ஞாயிறன்று மதிய உணவுக்குக் கோழிக் குழம்பும் மீன் வறுவலும் சமைத்து அமர்க்களப்படுத்தி விட்டார். நம் நண்பர் அன்று மாலை புத்தகம் வாசிக்கலாம் என்று கையில் எடுத்தபோது அவசர அழைப்பு வரவே படிக்க வாய்ப்பு கிட்டவில்லை. அதன்பின் இன்று வரை புத்தகத்தை வாசிக்க வேண்டுமென அவர் நினைத்தபோதெல்லாம் ஏதோ காரணத்தால் தடங்கல் வந்து வாசிக்க முடியவில்லை என்று நேற்று சங்கடப்பட்டார்.
"புத்தகத்தை பூஜையில் வெச்சீங்க சரி. அதுக்கப்புறம் மறுநாளே மாமிசம் சாப்பிட்டீங்க. அது வயிற்றில் இருக்கும்போதே பூஜை அறையிலிருந்த சித்தர் நூலை எடுத்ததால அதன் புனிதம் கெட்டுப்போகிற மாதிரி ஆயிடுச்சு... இதைப்பத்தி சிந்திச்சிருக்க மாட்டீங்க. ஆனால் கைக்கு வந்தும் இன்னி வரைக்கும் படிக்க சந்தர்ப்பம் வாய்க்கல பாத்தீங்களா?" என்றேன்.
"சார், தப்பு பண்ணிட்டேனோ? திரும்பி எப்போ படிக்க முடியும்?"
"இனி படிச்சு முடிக்கிற வரைக்கும் மீன் மாமிசம் தொடாதீங்க. அடுத்த வாரம் புதன் (அ) வெள்ளிக் கிழமையில தொடங்குங்க. அந்த சமையல்காரருக்குப் புரியறா மாதிரி சொல்லி வையுங்க. பூஜை அறையில சுத்தபத்தமா நுழையணும். போகரிடம் மன்னிப்பு கேட்டுட்டு படிக்க ஆரம்பிங்க" என்றேன்.
"சார், இதை அனுபவபூர்வமா நல்லா உணர்ந்துட்டேன். அதை வெறும் புத்தகமா நான் பாத்ததுதான் தப்பு போல... நாக்கை என்னால கட்டுப்படுத்த முடியலை... நடந்ததை என்னாலேயே நம்ப முடியலை, சார்!" என்றார்.
முன்னொரு சமயம் திருப்பூரைச் சேர்ந்த ஒரு வாசகர் தனக்கு நூல் கூரியரில் வந்ததும் அதைப் பிரித்துப் பார்த்து நுகரும்போது அதில் அச்சுமை வாசத்திற்குப் பதில் திருநீறு வாசமே இருந்தது. அது எப்படி? என்றார். எண்ணமே சக்தி வாய்ந்த அனுபவத்தைத் தருகிறது என்றேன். ஆக, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம். சிவ சித்தம்!


வெள்ளி, 10 ஜூலை, 2020

குவான்சு நமக்குச் சொந்தம்!

தன் அண்டை நாடுகளின் எல்லைக்குள் அத்துமீறி நிலம் ஆக்கிரமிக்கும் சீனாவின் தாகம் தணிவதாகத் தெரியவில்லை. இந்தியா மங்கோலியா பூட்டான் என பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் நீண்டபடி போகிறது. கல்வெட்டு மற்றும் தொல்லியல் சரித்திர ஆய்வுகள்படி சீனாவின் கடலோர Fujian மாவட்டத்தின் Quanzhou பட்டணம் நமக்குத்தான் சொந்தம். எப்படி?

கிபி.6 மற்றும் 10, 12 ஆம் நூற்றாண்டுகளில் அங்குப்போய் நிரந்தரமாகக் குடியேறிய நம் வர்த்தகர்கள் அங்கே பிரம்மாண்டமான கோயில்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் கைவினைச் சாலைகளை நிறுவியதாகத் தெரிகிறது. பின்னாளில் Song மற்றும் Yuan dynasty ஆளும்போது இவை எல்லாம் உரிமை சாசனத்துடன் நடந்துள்ளன. 😇
முதலில் பல்லவனின் காலத்தில் நம் காஞ்சியின் சிங்கப்பெருமாள் கோயிலில் உள்ளதுபோன்ற நரசிம்மர் சிலையை வடித்து அங்கே பிரதிஷ்டை செய்தனர். அதுபோக மிகப்பெரிய ஜம்புலிங்க சிவ ஆலயமாம் திருக்கதலீஸ்வரம் Kaiyuan ல் உள்ளது. அங்கே மாரியம்மனுக்குத் திருவிழாவும் எடுத்துள்ளனர். குடமுழுக்கு நடந்து அக்கோயிலுக்கு மானியமும் நிலங்களும் குப்லாய்கான் காலத்தில் தரப்பட்டன. பின்னாளில் சோழர் காலம் முடிவுக்கு வரும்வரை அவ்வூருடன் வர்த்தகம் நடந்துள்ளதும் தெரிகிறது.
பல்லவர்கள் காஞ்சியிலிருந்து வேகவதி ஆற்றின் வழியே பயணித்து மாமல்லபுரம் துறைமுகத்தை அடைந்து அங்கிருந்து சீனாவின் குவான்சு பட்டணத்தை அடைந்தனர். இப்படித்தான் அன்றைக்குப் பட்டு மற்றும் வாசனாதி பொருட்கள் நம் நகரேஷு காஞ்சியை வந்தடைந்தது. பல்லவர் ஆட்சியில் சமஸ்கிருதமும் தமிழும் நிலவியதால் சீனாவிலும் அம்மொழிகளில் கல்வெட்டுகள் உள்ளன. 2013 ஆம் ஆண்டு தி இந்து நாளேட்டில் சீனாவில் ஹிந்துக் கோயில்கள் பற்றி என் கருத்துகளை எழுதியிருந்தேன்.
ஆகவே, நியாயப்படி அவ்விடம் நமக்கு உரிமையானது என தொல்லியல் ஆதாரங்களைக்காட்டி நம் பங்கிற்கு FB/Twitter தளங்களில் பதிவுகள் போட்டு ரகளை செய்ய வேண்டும்.

நியாபகம் வருதே!

இலந்தை, கொடுக்காய்புளி, அரைநெல்லி, நாவல்பழம், களாக்காய், தேன் மிட்டாய், குச்சிக் கிழங்கு, மாங்காய் பத்தை, நுங்கு, கடலை உருண்டை, சேமியா பால் ஐஸ், கம்மர்கட், பிண்ணாக்கு பர்பி, வறுகடலை ...😋 இவை எல்லாம் என் பள்ளிக்கூட பிராயத்தை நினைவூட்டியது.👌10 பைசா முதல் அதிகபட்சம் 50 பைசா வரை விற்றது.

பள்ளிக்கூடச் சுவற்றின் சந்து வழியே மறுபக்கத்திலிருந்து மாலை மூன்று மணிக்கு விற்பனை களைகட்டத் தொடங்கும். என் வகுப்பில் சிலர் தள்ளுவண்டிக்காரரிடம் கடன் வைத்துக்கொண்டனர்.
என் பக்கத்து பெஞ்சு பஞ்சாட்சரம் எப்படியும் ரூ.5 மாதக் கடன் வைத்துருப்பான். 'டேய் பஞ்சு, நீயும் அஞ்சாங் கிளாஸ் குமாரும் தான் கடன் பாக்கி தரணும்... தரலைனா உன் ஹெட்மாஷ்டர் கிட்ட வந்து சொல்லிடுவேன்' என்று மிரட்டுவார். 'அணா.. ணா... எப்படியும் இந்தவாரம் தரேன். இப்ப ஒரு பேரிக்காய் குடுணா' என்று இவன் கெஞ்சிக்கேட்டு வாங்கியது இப்போது என் நினைவுக்கு வந்ததது.
இது போன்ற நினைவுகளின் மகிழ்ச்சி அலையில் மனம் ஆரோக்கியமாக மூழ்கித் திளைக்கும். Nostalgic! 😍


வியாழன், 9 ஜூலை, 2020

அறிந்தும் அறியாமலும்!

எனக்குத் தெரிந்த ஒருவர் ரயில்வேயில் பரிசோதகராகப் பணி செய்கிறார் ஓய்வு பெறும் தருவாயில் இருக்கிறார். அவர் வெளியே நின்று மொபைலில் தன் சகா யாரிடமோ உரக்கப் பேசும்போது, 'நீ சேலத்துல அவன்கிட்டே வாங்கிக்க, உனக்கு மூணு எனக்கு ரெண்டு, வரும்போது கோயம்புத்தூர்ல நான் பாத்துகிறேன். எனக்கு ரெண்டு உனக்கு ரெண்டு' என்று பேசுவார். சரிதான்! வியாபாரிகள் கொண்டுவரும் சரக்கிற்கு எடை குறைத்துச் சலுகையில் கட்டணம் வாங்கும்போது அதற்குப் பிரதிபலனாக அந்த வியாபாரியே கடலை, துண்டு, வெண்ணெய், பருப்பு என்று சகலமும் தந்து கவனிக்க வேண்டும் என்பது புரிந்தது. இத்தனைக்கும் லகரத்திற்குக் கூடுதலாக மாத ஊதியம் பெறுகிறார். இருந்தாலும் வாங்கும் கை நீளம்!

அவர் நெற்றியில் ஒருநாள்கூட திருநீறு அணிந்து நான் பார்த்ததில்லை. நேற்று மந்திரகோஷம் அதிர அயோத்தி பூமிபூஜை நேரடி ஒளிபரப்பு எல்லோர் வீடுகளிலும் முழங்கின. 'மோடிக்கு வேற இன்னா வேலை? எதைப் பத்தியும் கவலையில்லாம அங்கேபோய் உக்காந்துகினாரு" என்று யாரிடமோ எதிர்ப்பைக் காட்டிப் பேசிக் கொண்டிருந்தார். அவர் வீட்டில் ஷிர்டி பாபாவின் கேலண்டர் தொங்கிக் கொண்டிருக்கும். அது எதற்கோ?!
சென்றவருடம் அவருடைய ஒரே மகன் வெளிநாட்டில் படித்துவிட்டு வந்தார். இதுவரை சரியாக வேலை கிடைக்காமல் உண்டு உறங்கிப் பொழுதை ஓட்டிக்கொண்டிருக்கிறார். 'ஒரு கோடிக்கு மேலேயே செலவு செய்து படிக்க வெச்சோம். மாசம் ஒரு லட்சம் குறையாம சம்பளத்துக்குதான் அவன் போவணும்னு சொல்ட்டேன்' என்றார். 'நீங்கவேற.. கம்பனிங்க இப்போ இருக்கிற நிலையில வருஷத்துக்கு ஒன்று- ஒன்றரை லட்சம் கிடைச்சாலே பெரிசுங்க. நிதிச்சுமையைக் குறைக்க ஒப்பந்தப் பணியாளர்களைத்தான் எடுக்கிறாங்க' என்றேன்.
'உனக்கு ரெண்டு எனக்கு நாலு' என்று இத்தனை வருடங்களாக வாங்கியதன் மொத்த மதிப்பு எப்போது பைசா மீதமின்றித் தீருமோ அப்போதுதான் அவர் மகன் வேலைக்குப் போவார் என்பதை அவர் இன்னும் அறியவில்லை. அவர் பணியோய்வு பெற்றாலும் ஊழ்வினை தொடர்ந்து பணியில் இருக்கும்! இவருடைய பாவங்களின் சுமை தாங்கியாக ஏகபோக உரிமையுடன் அவருடைய மகன் திகழ்வார்.

செவ்வாய், 7 ஜூலை, 2020

கவனம் தேவை!

மக்கள் தொலைக்காட்சியில் சனி/ஞாயிறு கிழமைகளில் காலை 7-7.30 வரை 'சித்தி தரும் சித்தர்கள்' என்ற தலைப்பில் திரு.மீனாட்சிசுந்தரம் அவர்கள் உரை நிகழ்த்தி வருகிறார். சித்தர்கள் பற்றியும் அவர்களது லீலைகள் பற்றியும் விளக்கமாகச் சொல்லி வருகிறார்.
கடந்தவார நிகழ்ச்சியில் பேசும்போது, 'சுப்பிரமணியனும் முருகனும் ஒருவரல்ல வேறுவேறு என்று உரை ஆசிரியர்கள் சொல்வது தெரிகிறது' என்றார். இங்குதான் பலபேர் தவறு செய்கிறார்கள். புத்தகங்கள் ஒருபுறம் படித்தாலும் சுயமாகப் பாடல்களை ஆராய்ந்து ஒப்பிட்டுத் தனியாக எழுதிக்கொண்டு மெய்ஞானத்திற்கு எது தெளிவாகிறதோ அதைக் கூறவேண்டும். அக்காலத்தில் (கழக) நூலாசிரியர்கள் தம் போக்கில் ஏதோவொன்றை சந்தேகமாக எழுதியதும், பிற்பாடு அதைப் படிக்கும் மக்கள், அப்பெயர்களில் ஆரியம்- தமிழ் என்று குழம்பிய நிலையில் விவாதம் செய்வார்கள்.
அகத்தியருக்கு அருளப்பட்ட 'சுப்பிரமணியர் ஞானம் 550' என்ற நூலில் முருகப்பெருமான் தன்னுடைய ஆதார ரகசியங்களையும் பெயர் காரணங்களையும் விவரித்து உரைத்துள்ளார். அது தெளிவாக உள்ளது. அப்படி இருக்க, தொலைக்காட்சியில் உரையாற்றுவோர் அருளப்பட்ட நூல்களிலுள்ள பாடல்களை மெனக்கெட வாசிக்காமல் எங்கோ படித்த புத்தகத்தில் சொல்லப்பட்டதை இங்கே சொன்னால், நிகழ்ச்சியைப் பார்க்கும் நேயர்கள் அதையே உண்மை என்று நம்பிடுவார்கள். அதுவே சர்ச்சைக்கு வழி வகுக்கும்!
எனக்குத் தெரிந்து இதுபோல் வேறுபடுத்திப் பேசியவர்கள் திரு.சுகி சிவம், திரு. மீனாட்சிசுந்தரம். என்னைப்போன்ற வெகுசாமானியன் கண்களுக்குப் புலப்படும் கருப்பொருள் பாடல்களை இவர்கள் தவறவிட்டது ஏன் எனத் தெரியவில்லை. பூரண பிரம்மக்ஞானம் பெற்ற வாசி மயிலேறும் சுப்பிரமணியர் தனக்கு முருகா என்ற நாமம் எப்படி வந்தது என்பதை இப்பாடலில் சொல்கிறார்.


திங்கள், 6 ஜூலை, 2020

கெடுதலிலும் ஒரு நன்மை!

கொரோனா தாக்கத்தால் இறக்குமதி வெகுவாகக் குறைந்ததால் வேறுபாட்டு மிகை பெரிதும் குறைந்துள்ளது. கடந்த மாதங்களில் தங்கம், கச்சா எண்ணெய், மின்னணுப் பொருட்கள், கனிமங்கள் மற்றும் இயந்திரங்கள் இறக்குமதி குறைந்ததால் இது சாத்தியமானது. இயல்பு நிலை திரும்பிய பின்பும் இந்த நிலை நீடித்தால் நம் நாடு ஆரோக்கியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சீனப் பொருட்களைப் புறக்கணிக்கும் போக்கு இனி நிரந்தர நிலைப்பாடாக இருக்கும் என்பதால் அதற்கு ஈடான உள்நாட்டு உற்பத்தி உயர்ந்து அதனால் கணிசமான வர்த்தகம் நாட்டுக்குள்ளேயே புழங்கும். அந்த உற்பத்தி தன்னிறைவு எட்டும்வரை மற்ற நாடுகளிலிருந்து சில அத்தியாவசிய இறக்குமதிகள் நடந்தாக வேண்டும்.
அடுத்த அரையாண்டில் அந்நிய செலாவணி கையிருப்பு உயரும் என்பதால் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி ஏறுமுகமாக இருக்கும் என்பது கண்கூடு.

Image may contain: text that says 'Import USD Billion -2000 Export -4000 -6000 8000 30000 -10000 25000 -12000 -14000 20000 Jul 2019 Oct 2019 Jan 2020 Apr 2020 India Balance ofTrade 16000 15000 Jul 2019 Oct 2019 Jan 2020 Apr 2020 ஏற்றுமதி இறக்குமதி வேறுபாட்டு மிகை 10000'

அவர்கள் அப்படியே இருக்கட்டும்!

முகநூலில் எதையோ அடித்துத் தேடும்போது என்னுடைய பழைய மற்றும் அண்மைப் பதிவுகள் ஏதேதோ குழுக்களில் பகிரப்பட்டிருந்ததைப் பார்த்தேன். அங்கே வெவ்வேறு பதிவுகளுக்கு அவ்வுறுப்பினர்கள் போட்டிருந்த கமெண்ட்ஸ் மிகுந்த சுவாரசியமாக, கிண்டலாக, நகைப்புமிக்கதாய் இருந்தன. இதோ சில சாம்பிள்கள்.

1. சித்தர்கள் எல்லோருமே வேதம்/ வடமொழிக்கு எதிரானவர்கள். அப்படி இருக்க அவர்களுடைய பாடல்களில் பீஜ மந்திரங்கள், ஓமத்தீ வளர்ப்பது, வேதங்களின் பெருமையை உரைப்பது பற்றி இருப்பது எல்லாமே கட்டுக்கதை. அகத்தியருக்கே சமஸ்கிருதம் தெரியாது. தமிழ்தான்! அப்படி இருக்க சித்தர்களை சங்கியாகச் சித்தரித்து நம் காதில் பூ சுற்றுகிறார்கள்.
2. வியாசர் என்பவர் சிவனின் அவதாரமா? விஷ்ணுதான் வியாசராக வருகிறார் என்று எங்கள் வைணவ இலக்கியம் சொல்கிறது. ஒவ்வொரு மகா யுகத்திலும் வியாசங்களை மாற்றித் தொகுத்துச் செப்பனிடுவது சிவன் என்பது பொய்.
3. இஸ்லாம் மதம் வந்தே சுமார் ஐநூறு வருடங்கள்தான் ஆகிறது!? அப்படி இருக்க போகர் எப்படி மெக்கா போனார், மேரியைப் பார்ப்பார்? யாரை ஏமாற்ற இப்படியான பதிவு? அவருக்கும் நபிக்கும் என்ன சம்பந்தம்?
4. மாயன் கதையே பொய். விஸ்வகர்மா என்ற இனமே இல்லை. நம் நாட்டில் கட்டுக்கதையாக அதைத் திரித்து விட்டவன் யூதன்.
5. தேவாரம் தந்த நால்வர் எல்லோருமே அந்தணர்கள். அவர்கள் எப்படி உண்மை பேசி இருப்பார்கள்?
6. திருக்குறள் ஒன்றுதான் வேதம். அதைத்தவிர நான்கு வேதங்கள் இருந்தது எல்லாமே ஆரியக் கதை.
7. தஞ்சை குடமுழுக்கில் பொதுவான தேவாரப் பாடல்கள் பாடினால் போதாதா? சமஸ்கிருத மந்திரம் எதற்கு? அப்போ தமிழுக்கு வீரியம் இல்லையா? வேள்வி /பீஜ மந்திரங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் என்ன?
8. சிவன் வேறு முருகன் வேறு. முருகனுக்கும் வேத மந்திரங்களுக்கும் தொடர்பு இல்லை. ஆர்எஸ்எஸ் போட்ட பதிவுபோல் உள்ளது.
9. கயிலாயம்/மேரு என்பதே கற்பனை. அது நம் தலையில் உள்ளது. அதெப்படி சித்தர்கள் எல்லோரும் வடக்கே போய் வணங்குவார்கள்?
இன்னும் தேடினால் பல ருசிகர விமர்சனங்கள் இருக்கும். ஆனால் மேம்போக்காக கண்ணில் பட்டதைப் படித்துக்கொண்டு போனேன். அகத்தியர்/ திருமூலரே வந்து சத்தியப் பிரமாணம் செய்தாலும், நபியே வந்து குல்லா போட்டுத் தாண்டினாலும், மேரி/இயேசு வந்து சாதித்தாலும், நம் சுப்ரதீப மக்களுக்கு இவை விளங்கப் போவதில்லை. தங்களுக்கென ஒரு கொள்கை வட்டம் அமைத்துக்கொண்டு வேறெதுவும் ஆய்ந்து அறிந்திடாமல் இருக்கும் போக்கே வெளிப்பட்டது. அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும்!
போகர் உரைத்த தத்துவப்படி ‘கோப்பை நிரம்பிவிட்டது இனி அதில் ஊற்ற முடியாது என்று நினைப்பது அறிவீனம். படித்தவற்றை அழித்துவிட்டு மீண்டும் புதிதாக ஏற்றிக்கோள்” என்பதே நிதர்சனம். Learn and unlearn!

Image may contain: one or more people and coffee cup, text that says 'இன்னும் ஊற்ற எங்கே இடம் இருக்கு?'

சனி, 4 ஜூலை, 2020

இளைய சமுதாயமே.. புதிய அத்தியாயம் படைக்க வா!

 நம் கண்ணுக்குப் புலப்படாத ஒரு கிருமி தன் அழிவாற்றலைக் கட்டவிழ்த்து விட்ட நிலையில், இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். நான்கு மாதங்களுக்கு முன், இங்கொன்று அங்கொன்று என்று ஆரம்பித்தத் தொற்று, ஆனைக்கொண்டான் பாம்பைப்போல் மெள்ள இவ்வுலகையே தன்வசம் கொண்டது. இது செய்த கபளீகரத்தில், வல்லரசு முதல் சிற்றரசு வரை கதிகலங்கிப்போய் நிற்பது உண்மை.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியே நிலைகுலைந்து, பொருளாதாரம் வீழ்ந்து, தனிநபர் வாழ்வாதாரமே கேள்விக்குறியானது. எல்லா துறைகளிலும் பாதிப்பின் எதிரொலி கேட்க, பட்ஜெட்டுக்கு இணையான புதிய திட்டங்களும் நிதி ஒதுக்கீடும் அதிரடியாக செயல்படுத்தப்பட்டன. பல துறைகளில் அவசரகால மாற்றங்கள் நடந்தன. முதல்முறை சுனாமி வந்தபோது எப்படி இருந்ததோ, அதுபோல் இது இல்லை என்பதை ஊரடங்குக் காலம் புகட்டிய வெறுமையில் புரிந்துகொண்டோம். நித்தமும் அச்சத்தின் பிடியில் மக்கள். எதிர்காலத்தப் பற்றிய கவலையில், திடமனம் கொண்டவர்களையும் அசைத்துப் பார்த்தது. பெரும்பாலானோருக்கு இச்சூழல் சோதனை மிகுந்த சாபக்கேடாகவும், இன்னும் பலருக்குப் புதிய அத்தியாயத்தைத் துவங்கும் தருணமாகவும் வாய்த்தது என்றால் மிகையில்லை.

நிரந்தரப் பணியும் ஊதியமும் பெறுவோருக்கு நெருக்கடி இல்லை. ஆனால், Safe zone எனப்படும் பாதுகாப்பான வட்டத்திலேயே இதுவரை பழகியவர்களுக்குப் பணி உத்தரவாதமில்லை என்றதும், செய்வதறியாது தடுமாறினார். நம் இளைஞர்களிடம் அளவிடமுடியாத மாபெரும் ஆற்றல் கொட்டிக்கிடக்கின்றது. சரியான வழியில் அதைப் பயன்படுத்தி முன்னேறும் உபாயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். கல்வி கற்றபின் புதிதாக வேலை தேடுவோருக்கும், சொந்தமாகத் தொழில் தொடங்குவோருக்கும் இத்தருணம் வித்தியாசமாகத்தான் தெரியும். பட்டயப் படிப்பு முடித்த என் வாசகர், தன் நிலைமையை விளக்கிச்சொல்லி, தான் மேற்கொண்டு என்ன செய்வது என்று என்னைக் கேட்டார். கல்வி கற்ற/கற்காத, தொழில் அனுபவம் பெற்ற/பெறாத பலருமே, புதியதொரு சூழலில் தற்சமயம் இருக்கிறோம். சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட உலகப் பொருளாதார வீழ்ச்சியைப் போன்றே இப்போதைய நிலை உள்ளது. அவருடன் உரையாடியதை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

தனிமனித வாழ்க்கையில் எதிர்பார்ப்பு இருக்க வேண்டியதுதான் ஆனால், அது வரம்புக்குள் சாதிக்கக்கூடிய இயல்பான இலக்காக இருக்க வேண்டியது அவசியம். எதிர்காலத்தில் தான் இன்னவாக ஆக வேண்டும் என்று பள்ளிக்கூடப் பருவத்தில் நினைத்து வைத்திருந்த கனவு வசப்பட வேண்டும் என்றால், அதற்காக உழைக்க வேண்டும். மாறும் சமூகப் பொருளாதார வாழ்க்கைச் சூழலில் சிக்கியுள்ளோம்.

படிப்பினை

இருக்கும் நிலைக்கேற்ப தன்னை தயார்படுத்திக்கொண்டு முன்னேற கற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் நம்மைக் கடந்துபோகும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நமக்குப் பாடம்தான். அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய உத்திகள் உண்டு. அவர்கள் பட்ட இன்னல்கள், அவர்களுக்குக் கிட்டிய படிப்பினைகள் நமக்கும் பொருந்தும். இவனிடமிருந்து நாம் பெரிதாகக் கற்றுக்கொள்ள அப்படி என்ன இருக்கிறது? இவ்வாறு நீங்கள் கருதினால் வரட்டுப் பிடிவாதத்துடன் இருப்பதைக் காட்டும். ஓர் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், காக்கை, கழுகு, அணில், நாய் போன்ற ஜீவராசிகளும் எனக்கு ஆசான்களாக இருந்து போதித்துள்ளன.

கண்மூடித்தனமாக வளர்ச்சி வேகமாக நிகழ வேண்டும் என்ற பேராசையில், அவசரகதியில் முயன்று, கடைசியில் தோல்வியில் முடிந்து சூடுபோட்டுக் கொள்வதுண்டு. ஆகவே, வேகம் முக்கியமல்ல; விவேகம் வேண்டும். எப்போதும் வாழ்க்கையில் நிதானமன ஒரு போக்கைக் கடைப்பிடித்து, கவனத்துடன் முன்னேற வேண்டும். இந்த உரையாடல், உங்களில் பலருக்கும் ஒற்றையடிப் பாதையில் துணைவரும் கைவிளக்காக இருந்து பயன்தரும் என்பதில் சந்தேகமில்லை.

உங்களில் பலருக்கும் நிறைய ஆசைகள் இருக்கும். தன்னம்பிக்கை பெற வேண்டும், சுயமாக முன்னேற வேண்டும், சொந்தக் காலில் நிற்க வேண்டும், சமுதாயத்தில் முத்திரை பதிக்க வேண்டும், மனித உறவுகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், கவலைகள் இல்லாமல் வாழ வேண்டும், சூழ்நிலைகளைக் கையாளத் தெரிய வேண்டும், மன அழுத்தமின்றி வாழ வேண்டும், நேரத்தை அருமையாக நிர்வகிக்க வேண்டும், ஆக்கப்பூர்வமான எண்ணங்களைப் பெற வேண்டும் என்று பலவிதமான சிந்தனைகளும் எதிர்பார்ப்புகளும் நிறைந்த கனவுகளுடன் இருப்பீர்கள்.

வாழ்க்கையைத் திட்டமிடுவதே, வெற்றிப்பாதையில் முதல் அடி வைப்பது போன்றதாகும். அவரவர் வாழ்க்கைப் பயணம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். அலுங்காமல் குலுங்காமல், கசப்பான அனுபவம் பெறாமல், வெகு சிலருக்குத்தான் வாழ்க்கைப்படகு கச்சிதமாக அமைவதுண்டு. அவர்களுக்கு அதிர்ஷ்டவசமாகவோ, யாருடைய தயவிலோ எந்தவொரு பிரச்னையுமின்றி அமையும். ஆனால், அவர்களுக்கு வாழ்வில் நல்ல படிப்பினையோ அனுபவங்களோ ஒருபோதும் கிடைக்காது. ஏன்? முயன்று சிரமப்படாமல், யார் உழைப்பிலோ பயணித்தால், சுயமாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுகிறது. சிலருடைய வாழ்க்கையில், இலக்கின் மார்க்கம் தெரியும். ஆனால், செல்வதற்குப் பாதையின்றி கட்டாந்தரையாக இருக்கும். அந்நிலையில், உழைத்து மேலும் கீழும் விழுந்து எழுந்து, நம்பிக்கையுடன் தொடர்ந்து பயணிக்கும்போது, அங்கே அத்தடத்தில் நடந்துபோக, எதிர்காலத்தில் ஒற்றையடிப்பாதை பிறந்துவிடும். அந்தப் பாதை என்ன? யாருடைய உழைப்பின் கால்சுவடுகளிலோ பதிவான பாதை என்பதை மறக்கக் கூடாது. பாதை உள்ளது! அதில் நீங்கள்தான் சுயமாகப் பயணித்தாக வேண்டும்.

பாதையை உருவாக்க வேண்டும்

ஆகவே, நாம் செல்லும் ஊருக்குப் பயணிக்கவல்ல, பாதை இல்லாமல் போனாலும், அதை உருவாக்க வேண்டிய கட்டாயம் இன்றைய சூழலில் உள்ளது. உங்களுக்கேற்றதொரு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், அதனை உருவாக்கிக்கொள்ள வேண்டும். கண்ணுக்கு எட்டிய தூரம்வரை நீர்நிலைகள் எங்குமே தென்படவில்லை என்னும் பட்சத்தில், நம் கால்களுக்குக் கீழே தோண்டினால் நீர் கிடைக்குமா என்று சிந்திக்க வேண்டும். கொஞ்சம் முயன்று உழைத்தால், பத்தடியில் நீர் கிடைக்கும் சாத்தியம் உண்டு. மேகம் திறந்துகொண்டு பெய்தாலும், அதைத் தேக்கிவைக்க குளத்தையாவது வெட்ட வேண்டும். ஆகவே, உழைக்க அஞ்சக் கூடாது!

முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும், எப்போதுமே வாய்ப்புகள் கண்ணெதிரே இலாகவமாகக் கையில் வந்து மாட்டும் என்று சொல்லிட முடியாது. கிரிக்கெட்டில், பேட்ஸ்மேன் அடித்த பந்தைத் துரத்திப் பிடித்து, அதை பவுண்டரிகுள்ளே தாவிக் குதித்து எம்பிப் பிடிப்பதுபோல்தான் இதுவும். வாழ்க்கையே ஆடுகளம்தான்! உழைப்பின் சுகமும் மனநிறைவும், சொகுசான வாழ்க்கையில் கிடைக்காது. எல்லா வசதிகளும் இருக்கும்; ஆனால், நெஞ்சுறுதியும் அனுபவமும் கிட்டாது.

ஆகவே, உழைப்புக்கு அடித்தளமாக விளங்குவது தன்னம்பிக்கை, லட்சியம், விடாமுயற்சி. இவையெல்லாமே, உந்துசக்தியாக உள்ளிருந்து கட்டளையிட்டுச் செயல்படுத்துகின்றன. உள்மனம் உங்களுக்கு உணர்த்துவதை உன்னிப்பாகக் கூர்ந்து கவனிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், சோம்பல் உங்கள் ஊக்கத்தைக் குறைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், உங்களுடைய ஆரோக்கியச் சிந்தனைக்கு மனம் அடிபணியும் என்றாலும், அதைவிட தாழ்நிலை எண்ணத்துக்கும், அதனால் உடல் பெறும் சுகத்துக்கும் அடிபணிந்தால், பின்னடைவுதான் ஏற்படும். ஆகவே, மனதும்-உடலும் ஒன்றையொன்று புரிந்துகொண்ட, பரஸ்பரம் உதவிக்கொள்வதை ஆக்கப்பூர்வ செயல்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

வழிகாட்டி அவசியம்

திட்டமிட்டபடி வாழ்க்கையைச் செவ்வனே வகுத்துக்கொள்ள, மூன்று அம்சங்கள் அத்தியாவசியமானது. அவை, பணம் – நேரம் – சக்தி. இவை சரியான விகிதத்தில் அமைந்துவிட்டால், அந்நபர் வெற்றியாளராவது உறுதி. கல்வி கற்கும் பருவத்தில் இருப்பவர்களுக்கும், வேலைதேடும் பிராயத்தில் உள்ளவர்களுக்கும், அதிகப்படியான நேரமும், உடலில் சக்தியும் இருக்கும். இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்திலேயே அதிகப்படியான நேரம் இருந்ததையும், என்ன செய்வதென்று தெரியாமல் வெட்டியாக உண்டு உறங்கிக் கழித்தவர்கள் ஏராளம். சிலருக்கு ஊதியமாவது வந்தது, பலருக்கு அதுவும் இல்லை. சிலருக்குச் சுயசம்பாதியம் இல்லாதபோதும், வாழ்க்கையின் லட்சியத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற வெறியும், சாதிக்க வேண்டும் என்ற கனலும் கண்ணில் தெரியும். இக்கூட்டத்தில், அப்போதும்போல் விதிவிலக்காக சோம்பேறிகளும் உண்டு. சுமார் முப்பது வயதுவரை இதுபோன்ற உத்வேகம் குறையாது. அந்தக் காலகட்டம்வரை, அவர்களைச் சரியாக வழிநடத்தவும், அவர்களது அபரிமிதமான நேரத்தையும் சக்தியையும் சரியாக நெறிபடுத்தத்தக்க வழிகாட்டி அவசியம்.

அதன்பிறகு அவ்வயதைக் கடந்தபின், நடுவயதுவரை உள்ளவர்கள் வெளியே ஓடியாடிப்போய் பணம் பொருள் சம்பாதித்துச் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். பகுதிநேர வேலைக்குப் போகலாமா, சொத்து சேர்க்கலாமா என்று எப்போதும் எண்ணம் இருக்கும். எத்தனை வயதுக்குள் என்ன வேண்டும் என்பதைச் சற்றும் பிராக்டிகலாக நினைத்துப் பார்க்காமல், கண்மூடித்தனமாக எல்லாவற்றுக்கும் ஆசைப்படுவோர் இச்சமுதாயத்தில் உண்டு. அது போன்றவர்களிடம் ஓரளவுக்குப் பணமும் சக்தியும் இருக்கும். ஆனால், 24 மணிநேரம் அதிகம் இருந்தால்கூட அவர்களுக்குப் போதாது. மன உளைச்சலால் அழுத்தம் எழ, அனைத்தையும் சாதிக்க வேண்டும் என பிரயாசைப்பட்டு, உடலைக் கெடுத்துக் கொள்வோர் உண்டு. என்னமோ நாளைக்கே பூகம்பமும் சுனாமியும் வந்து கொண்டுப்போய்விடும் என்பதுபோல், இவர்களுடைய அவசரமும் பதற்றமும் இருக்கும். இந்த வயதினர், அகலக்கால் வைத்து அதில் சறுக்கிடாமல் இருக்கவும், உடல்நலம் குன்றிடாமலும் இருக்க, சரியான திட்ட நிரலை வகுத்துக்கொண்டு, நிதானமாகச் சீராக முன்னேறினாலே போதுமானது.

முதுமையை நோக்கி அறுபதுகளைக் கடந்தபின், உடலும் மனமும் தளர்ந்துபோயிருக்கும் ஆனால், நேரமும் பணமும் ஓரளவுக்கு இருக்கும். ஓய்வுபெற்றும்கூட, பணிக்குச் செல்ல குடும்பச் சூழல் வற்புறுத்தினாலும், அதை எடுத்துச் செய்ய மனம் நினைத்தாலும், உடலில் சக்தி இருக்காது. இது வேடிக்கையாக இருக்கிறது, அல்லவா? ஒவ்வொரு வாழ்க்கைப் பருவத்திலும் மூன்று அம்சங்களில் ஏதோவொன்று இல்லாமல் போகும் நிலை இருக்கும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த மூன்றும் ஒருசேரக் கிடைக்கப்பெறுவது என்பது அபூர்வம். இந்த ரகசியத்தை இப்போது தெரிந்துகொண்டீர்களா? ஆகவே, இளைஞர்களே உங்கள் கையில் இருக்கும் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்காமல், அதை வைத்துக்கொண்டு, அடுத்தகட்டத்தில் என்ன பெறலாம் என்பதை ஆக்கப்பூர்வமாக சிந்தித்துச் செயலாற்றுங்கள். நீங்கள் உழைத்த கொஞ்ச காலத்திலேயே, பயண மார்க்கத்தில், இப்போது ஒரு சன்னமான ஒற்றையடிப்பாதை உங்கள் கால்தடத்தால் உருவாகியிருப்பது கண்ணுக்குத் தெரியும். அதிலிருந்து கிளைப் பாதைகள் உங்களை வேறு இடங்களுக்கு இட்டுச் செல்லும்.

கொரோனா பிடியிலிருந்து மீண்டு எழும் இந்தியா மிகப்பெரிய வல்லரசாகத் திகழப்போவது உறுதி. ஒரு நாடோ/நபரோ புதிய பாதையை வகுத்துக்கொண்டு வளர்ச்சியடைய இயற்கையே கொடுத்த ஒரு தருணம்தான் இது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புதிய அத்தியாயம் உதயமாகும். இந்தியப் பொருளாதாரம் அதிவிரைவாக முன்னேறி உலக அரங்கையே கலக்கப்போகிறது. நாட்டின் முன்னேற்றத்தில் பங்கு வகிக்கும் நீங்களும் சாதனையாளரே! தொடர்ந்து முன்னேறுங்கள்!


way to succeed

வெள்ளி, 3 ஜூலை, 2020

சித்ரகுப்த எண்

தியானத்திலிருந்த ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் கண் திறந்து, “விருபாக்ஷா! ஜெர்மானியர் ஒருவர் என்னை சந்திக்கக் காத்துக்கொண்டிருக்கிறார். தொலைவிலிருந்து இவ்விடத்திற்குப் பிரயாசைப்பட்டு அவர் வந்து சேர்ந்தது ஆச்சரியம்தான்! போய் அவரை அழைத்துவா” என்றார்.

விருபாக்ஷர் தன்னுள் ஸ்ரீபாதர் மற்றும் நந்தீசரின் அம்சங்களைப் பெற்றிருந்தார். ஸ்ரீபாதருக்கு முன்பாகப் பரங்கி தேசத்தவர் விழுந்து வணங்கினார். உடனே ஸ்ரீபாதர், “ஜான்!” என்று அழைத்து அவருடைய புருவ மத்தியில் தன் விரலை வைத்தார். எல்லோரையும் அண்ணாந்து வானைப் பார்க்கும்படி சொன்னார். அங்கே சித்ரகுப்தரின் 170141183460469231731687303715884105727 என்ற ஞான எண் நீளமாகத் தவழ்ந்து போய்க்கொண்டிருந்தது. “இந்த எண் வருங்காலத்தில் புகழ்பெறும். மானிடர்களின் கணிதவியல் புத்திக்குத் தக்கபடி இதன் சூட்சுமம் விளங்கிக்கொள்ளப்படும்” என்றார்.
மேலே ஸ்ரீபாதர் வெளிப்படுத்திய அந்த ஞான எண் என்பது பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மாரின் மெர்சென் என்ற கணிதவியலாளர் அதே இலக்க வரிசையில் ‘பகாத எண்கள்’ என்று வரையறை செய்தார். அதுதான் Mersenne Prime Number என்ற அழைக்கப்பட்டது. இது என்ன எண்? வேறெந்த எண்ணாலும் வகுபட முடியாத எண்ணாக இருக்கவேண்டும். அதாவது இரண்டின் அடுக்குப்படியாக வருவது பகாத தனி எண்ணாக இருக்கும். Mn=2n-1 என்ற சூத்திரத்தால் இதைக் கண்டறியலாம். அப்படி கணக்கிட்டுப் பார்த்தால் இன்றைய தேதியில் ஸ்ரீபாதர் வெளிப்படுத்தியதே நீளமான மெர்சென் பகாத தனி எண்ணாகும். கடந்த 25 ஆண்டுகளாக இதில் மேற்கொண்டு ஆய்வுகள் மேல்நாட்டில் நடந்துள்ளதை அறிந்துகொண்டேன். இன்னும் ஆழமாகப் போனால் நமக்குப் புரிதல் கடினம் என்பதால் இதை இப்படியே விட்டுவிடுகிறேன்.

புதன், 1 ஜூலை, 2020

ஊதித் தள்ளிட்டோமில்ல!

நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஹிந்தி மூன்றாம் மொழியாக இருந்தது. அதில் பாடங்களை எப்படிப் படித்தேன் தேர்வில் எப்படித் தேறினேன் என்பது மர்மம்தான். புலவர் இராஜலட்சுமி எங்களுக்குத் தமிழ் வகுப்பு நடத்தி முடிக்கும்போது வெளியே வகுப்பு வாயிலில் ஹிந்தி ஆசிரியை பண்டிட் ஆஷா சதுர்வேதி காத்துக்கொண்டிருப்பார்.
என்னுடைய வகுப்பில் என்னைப்போல் சில மாணவர்கள் முதன்முறையாக ஹிந்திக்கு அறிமுகமானவர்கள். அரையாண்டுத் தேர்வில் ஒருவிதமாக அ ஆ இ ஈ.. என ஸ்வரம்/ வ்யாஞ்சன அட்சரங்களைக் கூட்டிப் படித்து எழுதும் அளவுக்கு முன்னேறி இருந்தேன். ஆனால் எளிய வாக்கியத்தைச் சொந்தமாக ‘வாக்யோன் மே ப்ரயோக் கரோ’ கேள்விக்கு எழுதச் சொன்னால்... பெப்பே! எங்கள் ஒவ்வொருவரையும் பாடத்தின் ஒரு பத்தி வாசிக்கச் சொல்வார். நான் தட்டுத்தடுமாறி ஒப்பேற்றிவிட்டு வாக்கியத்தின் ஈற்றுச் சொல்லை ‘ஹையான்’ என்று ஜோராகப் படிப்பேன். What did you read? It is Hein, not Haiyaan. அது ஹேன் என்று திருத்துவார்.
ஆண்டுத் தேர்வில் ஹிந்தி பாடத்திற்கு மொத்த மதிப்பெண் 50. அது written / oral என இருந்தது. ஒப்புவித்தல் மனப்பாடப் பகுதி எனக்கு என்றுமே சிம்ம சொப்பனமாக இருந்தது. எங்களுக்கு மீராபாய், சந்த் கபீர் ஆகியோருடைய பாடல்கள் மனப்பாடச் செய்யுள் பகுதியில் இருந்தன. அவ்வயதில் எனக்கு அவை மறைப்புமிக்க சித்தர் பாடல்களுக்கு ஒப்பானது.
சந்த் கபீர் இயற்றிய ஈரடி குறட்பாக்களான ‘தோஹே’ மிகவும் பிரசித்தம். அதில் ஒன்றை ஒப்பிக்கச் சொன்னார். அந்நேரம் பார்த்து மறந்து போனது. Tell me one or two words, it is enough என்றார். யோசித்தபின் ‘Miss, it comes like Sathya barber thappu nahin (சத்யா பார்பர் தப்பு நஹின்) என்றேன். தலையில் அடித்துக் கொண்டார். Okay, tell me another dohe என்றார். Govind Paaya kadai (கோவிந்த் பாயா கடை) என்று இழுக்க, Uff... You are making my life miserable! என்று நொந்துக் கொண்டார்.😂 எப்படியோ ஹிந்தியில் முப்பத்தைந்து மதிப்பெண் பெற்று ஏழாம் வகுப்பிற்குச் சென்றேன். எட்டாம் வகுப்பு முடிக்கும்போது சரளமாக எழுத/ படிக்கத் தயாரானேன்.
இன்றும் அந்த couplets சிலவற்றை நினைவில் வைத்துக் கொண்டுள்ளேன். நான் சொதப்பிய அந்த தோஹே படத்திலுள்ளது. அது ;
‘சான்ச் பராபர் தப் நஹின், ஜூத் பராபர் பாப்...' - உண்மை பேசுவதைவிட பெரிய தவம் கிடையாது, பொய் பேசுவதைவிட பெரிய பாவம் கிடையாது.
‘குரு கோவிந்த் தோஹூன் கடேன், காகே லாகூன் பாய்ன்...' – குரு/ தெய்வம், இருவரின் போதனைகளில் யாருக்கு மதிப்பளிக்க வேண்டும்? குரு மூலமாக தெய்வத்தை அறிவதால் குருவின் சொல்லே மந்திரம்.
படிக்கவும் எழுதவும் கொஞ்சம் கொஞ்சம் பேசவும் ஹிந்தி இன்று எனக்குப் பயன்படுகிறது. மற்றபடி பெரிதாக என்ன கற்றேன் என்றால் எதுவுமில்லை! 😴 வடக்கே போகும்போது ஓரளவுக்கு எல்லோருக்கும் பேசுமளவில் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்பேன்.

கல்வி என்பது தவம்!

கல்வி ஒருவருக்கு வாய்க்குமா? எந்த வயதில்  எந்த நிலைவரை வாய்க்கும் என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. எல்லோரும் சர்வசாதாரணமாக 10/ +2/ பட்டயம்/ இளங்கலை/ முதுகலைப் பட்டம் வரை சிரமமின்றிப் படித்துத் தேர்ச்சியடைவது என்பது அவரவர்க்கு விதிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியே ஒரு நிலைவரை கல்வி கற்றாலும் அது வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருமா? அல்லது கல்விக்குத் தொடர்பில்லாத தொழில் வாய்க்குமா என்பதும் மர்மமே!  

பலர் ஏதோவொரு காரணத்தால் பள்ளி இறுதித் தேர்வைக்கூட முடிக்க முடியாமல் அப்படியே காலங்கள் ஓடிப்போனதைப் பார்க்கிறோம். காசு கொடுத்துக் கல்வியை வாங்கினாலும் அது பெயரளவில் பயன்படுமா பயன்படாதா என்பதும் கேள்விக்குறிதான். அடுப்பூதும் பெண்களுக்குக் கல்வி எதற்கு என்று இருந்த காலம்போய் இன்று ஓரளவுக்குப் படித்து முன்னுக்கு வந்து தற்சார்பாக நிற்க முடிந்துள்ளது. கள்ளிப்பால் குடித்தும் நெல்லை விழுங்கியும் எப்படியோ தெய்வாதீனமாகப் பிழைத்துச் சாதனைப் படைப்போருமுண்டு.  

சரியாக ஐந்து வருடங்களுக்குமுன் கர்நாடகாவிலுள்ள ஒரு ஆசிரியை தன்னுடைய முனைவர் ஆய்வுப் படிப்பு சம்பந்தமாக இணையத்தில் ஆதாரங்கள் கிடைக்குமா எனத் தேடியுள்ளார். ஒரு மாதமாகியும் இன்னும் ஆரம்பக்கட்ட செயலில்கூட இறங்காமல்  இருக்கிறீர்களே என்று அவருடைய வழிகாட்டி Guide கேட்டுள்ளார். மன வேதனையுடன் அவர் அன்று ஒரு கோயிலுக்குச் சென்று தன் ஆய்வுக்கான ஆதாரக் களஞ்சியம் கிடைக்க வேண்டிக்கொண்டுள்ளார். அங்கு வயதான ஒரு பெரியவர் ‘இன்று போய் தேடிப்பார். உனக்குக் கண்ணில்படும்’ என்று கன்னடத்தில் சொல்லி ஆசிர்வதித்துள்ளார்.  அன்று அவர் தீவிரமாக இணையத்தில் எதையோ தேடப்போய் என்னுடைய ஆங்கிலக் கட்டுரைகள் மற்றும் வம்சாவெளியியல் பற்றிய தகவல்கள் முதல் தேடலிலேயே கிடைத்துள்ளது. அது தொடர்பாக என்னையும் இன்னும் சில மூத்தவர்களையும் பேட்டி எடுத்து ஆவணங்கள் திரட்டி Framework methodology உருவாக்கினார். நடுநடுவே ஆய்வு தொடர்பாக பல்வேறு மாடல்கள் அடிப்படையில் எங்களிடம் followup செய்து தகவல்களை பதிவுசெய்தார்.

இந்த ஐந்து ஆண்டுகளில் தனக்கு அளிக்கப்பட்ட guide மாறியாகிவிட்டது. அதன் பிற்பாடு வேறொருவரை நியமிக்க தன் ஆய்வு தொடர்ந்தது.  தான் இதுவரை செய்ததை அப் புதியவர் படித்துப் பார்த்து அங்கீகரித்து மேற்கொண்டு வழிகாட்ட மூன்று மாதங்கள் ஓடிவிட்டன.  நேற்று முன்தினம் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு ‘ஜூலை 2, வியாழக் கிழமை காலை 11 மணிக்கு என் ஆய்வுத் தேர்வுக்கான இறுதி viva-voice நடக்கவுள்ளது. பல்கலைக்கழக External Examiner, Guide, SME, மற்றும் PhD துறையின் அங்கத்தினர்கள் முன்னிலையில் என்னுடைய Research work ஐ விளக்கி, அவர்களுடைய கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும். அதனால் நீங்கள் என் Special Invitee யாக ஆன்லைனில் வந்திருந்து கலந்துகொள்ள வேண்டும் என்றார். என்னுடைய ஆய்வை உங்களுடைய கட்டுரைகளுடன் தொடங்கினேன். இறுதிச் சுற்றில் நீங்களும் இருக்க ஆசைப்படுகிறேன் என்றார். மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன்!

குறித்த நேரத்திற்குப் பதினைந்து நிமிடங்களுக்கு முன்பாகவே ஆஜராகி விட்டேன்.  நான் அறிமுகம் செய்துவைக்கப் பட்டேன். வணக்கங்கள் பரிமாறிக் கொண்டபின் மொழித்துறைத் தலைவர் Now Ms.Srimathi, Ph.D. Scholar in English will defend her Ph.D. thesis titled 'An enquiry into the language proficiency of the migrated community down the geneology' என்று அறிவிக்க, அவர் தன்னுடைய presentation தந்தார். அது முடிந்ததும் ஒவ்வொருவரும் கேள்விகளையும் ஒப்பீடுகளையும் கேட்டுக் குடைந்தனர். இறுதியாக என்னைப் பேசச்சொல்லி சில கருத்துகளைக் கேட்டறிந்தனர். அத்தனை நேரம் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த தாவனகரே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் தன் மதிப்பீட்டைத் தேர்வுக்குழுத் தலைவருக்குத் தெரிவிக்க, ‘We hereby announce that the Ph.D. Scholar has successfully defended her thesis work. The committee has approved to confer the degree on her’ என்று அறிவித்தார்.  பிற்பாடு அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தேன். சிவ சித்தம்!