About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 25 ஆகஸ்ட், 2018

சூட்சுமம் உணராதோர்

கேரளாவில் கடும்வெள்ளம் ஏற்படும் என்று போன வருடமே ஒருவர் கோள்களின் சஞ்சாரம் மற்றும் பஞ்சாங்க சூத்திரங்களை வைத்து கணித்திருந்தார். அதற்கெல்லாம் சாத்தியமில்லை என்று வானிலை ஆய்வு மையம் அப்போது மறுத்தது.
அண்மையில் அனைத்து வயது பெண்களும் 'சுத்தபத்தமாக' தங்கள் சௌகரியம்போல் சபரிமலைக்கு செல்லலாம். 12-50 வயது பெண்களுக்கு இனி கட்டுப்பாடில்லை என்று உச்சநீதி மன்றம் ஆணை பிரப்பித்தது. இன்றைக்கு எல்லோரும் கல்வியில் முன்னேற்றம் கண்டுவிட்டதால் கோள் என் செய்யும், கடவுள்தான் என் செய்யும் என்ற மூட தத்துவம் பேசி வருகிறார்கள். இவற்றை இன்னும் பின்பற்றுவது சரியில்லை என்பார்கள். ஆக, பக்தியும் உண்டு சிலசமயம் நாத்திகமும் உண்டு என்பதுபோல் சூழல் அமைந்து வருகிறது. அதை மீறிப்போனால் சாதிகள், அடக்குமுறை என்று பிரச்னை எழுப்புவார்கள்.
கேரளாவில் பாதுகாப்பற்ற அணைகளும், பராமரிப்பில் அக்கறைக் காட்டாத பொதுப்பணித் துறையும் இருப்பதால் இந்த அளவுக்கு வெள்ளச் சேதம் ஆகியது. இதில் ஆருடமும் ஐயப்பனும் எப்படி வரும்? என்று சுப்ரதீபமாக பேசும் கூட்டமும் உண்டு.
கேரளாவில் நடந்த பேரிடர் போனவருடம் கணித்த ஆருடத்தாலா? ஐயப்பனின் கோபத்தாலா? கேரள பொதுப்பணித் துறையின் அலட்சியத்தாலா? காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதைதான் என்று சிம்பிளாக சொல்லிடலாம். காக்கை உட்கார பனம் விழவேண்டும் என்பது விதி.
மேற்கூறிய எல்லாமே ஒருங்கே நடந்தது. அதுதான் கடவுளின் சித்தம். பஞ்சபூதனின் சூத்திரத்தை அறியாதோர் எல்லாம் பேசுவார்கள். செரித்த உணவும் குடித்த நீரும் மலமும் சிறுநீருமாக பிரிந்து வெளியேறும் என்பது சரீர விதி. உணவு செரிக்க நெட்டை குட்டை, பணக்காரன் ஏழை, புத்திமான் முட்டாள் என்ற பாகுபாடு ஏதுமில்லை. மணமுள்ள உணவை சக்தியாக மாற்றி, துர்நாற்றமிக்க மலத்தை வெளியே தள்ளவும் உடலுக்கு எப்படித் தெரியும்? குடலில் இதை யார் பிரிக்கிறார்கள்? பிரியாவிட்டால் என்னவாகும்? உணவு உண்டு செரித்து சத்துகள் கிரகித்து அதை உடலுக்கு சக்தியாகித் தருவது யாருடைய வேலை? தன்னிச்சையாக நடப்பதா? இதற்கு விடை தெரிந்தால் அவனவன் வாயை மூடிக்கொள்வான்.
Image may contain: text

வெள்ளம் அங்கே வீண்பழி இங்கே!

Image may contain: 1 person, text

வியாழன், 23 ஆகஸ்ட், 2018

Sri Varalakshmi

வரம் தரும் மகாலக்ஷ்மி, ஸ்ரீ வரலக்ஷ்மி 

புதன், 22 ஆகஸ்ட், 2018

தெரிந்த சங்கதிதான்!

"இப்படி இரு அப்படி இரு. மும்மலங்களை நீக்கு, நல்ல மனதோடு இரு. கெட்ட குணம் கூடாது, உற்றுப்பார்த்து மெய்ப்பொருள் அறிந்துகொள். உன் குருவை உணர உனக்கு ஞானம் வேண்டும். பற்று இல்லாமல் இரு, அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் குணம் கூடாது. நல்லவனாக இரு."
எத்தனை வேதாந்திகள் எத்தனை உபதேசங்கள்! இப்படி ஆளாளுக்கு சொல்வதை எல்லாம் யார் செவி கொடுத்து கேட்பது? நான் யாரையும் கிண்டல் செய்வதாய் நினைக்கக்கூடாது. மேலே சொன்னவை எல்லாமே எல்லோரும் அறிந்த விஷயங்கள்தான். ஆன்மிகம் என்பது அனைவரிடமும் உள்ளொளியாய் இருப்பதுவே. அதை கர்ம வினையின் பலன்கள்தான் திரையிட்டு மறைத்து அஞ்ஞானியாக வைக்கிறது.
ஆன்மிக அன்பர்கள் உபதேசித்தபடி எல்லாம் நாம் கற்று அதன்படி இருக்கமுடியுமா? நாளை என்ற கவலை எல்லோர் மனதிலும் மேலோட்டமாகவோ ஆழ்மனதிலோ இருக்கும். அதை முதலில் எப்போது களைவது? அந்த அச்சம் போனால்தான் மற்றவை கைக்கூடும். வாழ்க்கையில் இதெல்லாம் சௌகரியமாக இருந்தால் மற்ற நெறிகளும் ஆன்மிக பற்றும் தன்னாலே வரும். அவன் எப்போது சாதிப்பது? ஏதோவொரு பிரச்சனை அவனுக்கு வந்துக்கொண்டே இருக்கும். அகக்கடல் எப்போது அடங்குவது? எல்லோருமே சுயம்புதான்! தக்க நேரம் வந்தால்தான் அவன் தன்னை உணர முடியும். தனக்கும் தன்னை சார்ந்தவர்களின் எதிர்கால தேவைகளை பொருளீட்டி பூர்த்தி செய்யவேண்டி இருப்பதால் விசாரங்கள் வந்து வாட்டும். சொத்து சுகம், நிலம் வீடு எல்லாம் சேர்த்து வைத்து, ஓய்வூதியமும் பெற்று மலையடிவாரத்தில் ஒரு ஆசிரமம் நிறுவி செட்டில் ஆகிவிட்டு, 'வாங்க, கடவுளை உணரலாம்!' என்று சொல்லி காலத்தைக் கழிக்க எல்லோராலும் இயலாது. அங்கு உட்கார்ந்தபடி உபதேசம் செய்வது அனைவருக்கும் எளிதே!
பற்றற்ற நிலையை கைக்கொள்ளவும் குருவை உணரவும் ஞானியாகவும் தக்க சமயம் வரவேண்டும். என்னதான் பக்திமானாக வேதாந்தியாக ஆசிர்வதிக்கப்பட்ட அருளாளராக இருந்தாலும், அவனும் மனிதனே! அவனுடைய ஆழ்மனம் அமைதியுற்று தன் புறச்சூழலில் நடக்கும் எதுவும் தன்னை பாதிக்காமல் இருக்குமாறு வைத்துக்கொண்டு தினமும் இயங்கினால்தான் மனம் தெளிவடையும். ஆன்மிகத்தில் உயர்நிலையை அடையவேண்டும் என்றால் அது தன்போக்கில் எந்த உந்துதலும் இல்லாமல் தானே நடக்கும். அதுவரை மந்திரம் தந்திரம் உபதேசங்கள் எல்லாமே வீண்தான். பக்தி நம்பிக்கை பொறுமை, இவைதான் முக்கியம்!
கோடிக்கரையில் பூங்குழலியின் கானம் பலபொருள் கொண்டு கல்கியின் புதினத்தில் நம் காதுகளில் ஒலிக்கிறது.
"அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?
நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?"

ஆடியில் வளை அலங்காரம்

Image may contain: 1 personஆடியில் வண்ணவளை ஆடைச் சாற்றி 
அடியார்கள் பரவசித்து உற்று நோக்கி
தோடியில் சாமரமாய் பண்ணிசைக்க
திகட்டாத அழகம்மை கொலுவிருக்கும்
நாடியில் உறைகின்ற வாலைப்பெண்ணே
நயமாக சக்கரங்களை இயக்கும் சக்தியே
பாடியில் அருளும் திருவலித அம்பிகையே
பதமலர் போற்றினேன் வல்லீசர் நாயகியே



சனி, 18 ஆகஸ்ட், 2018

ஜலப் பிரளயம், ஒரு பாடம்

பஞ்சபூதங்களை உரிமைக் கோரலாமா? கூடாது. அது எல்லோரும் ஜீவித்து வாழ்வதற்காக உள்ளது. கடந்த ஒருவாரமாக அண்டை மாநிலமான கேரளா படும் இன்னலைப் பார்க்கும்போது இருவேறு உணர்வுகள் மேலோங்கும். ஒருபுறம், 'தமிழ்நாட்டைவிட சின்ன மாநிலம். ஐயோ, இத்தனை மழை வெள்ளத்தை அது தாங்குமா?' என்றும், இன்னொருபுறம் 'எல்லா நதிநீரும் தனக்கேனு சொல்லி அணைகள் கட்டிச்சே!' என்று ஏளனமும் வரும்.
உண்மையில் இத்தனை அணைகள் தேவையா? தேவையில்லை. தரை மட்டத்திலுள்ள ஏரி தாங்கல் குளம் கண்மாய்கள் நிரம்பினாலே போதும். அதெல்லாம் தாண்டி எங்கேனும் நதி பெருக்கின் கட்டுப்பாட்டை சீராக்க அணை வேண்டும். மூன்று ஜில்லாவுக்கு ஒன்று என்ற அளவில் சிறிய தடுப்பணைப்போல் இருந்தாலே போதும். பூமிக்கு மேலே சுவர் எழுப்பி நீர் தேக்குவதற்கும், பூமிக்கு சமன்பாட்டில் நீர் தேக்குவதற்கும் நிறைய வேற்றுமை உண்டு. கரிகாலன் தன்னிடம் இருந்த படைபலம்கொண்டு பல அணைகளை கட்டியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. உறுதியாக, எளிமையாக, பயன்பாட்டுக்குத் தக்கபடி கல்லணை ஆயிரம் வருடங்களைக் கடந்து கம்பீரமாக உள்ளது.
இடுக்கி அணைபோல் நீர் தேக்கி வைக்க அதி பயங்கர அணை ஒன்று கேரளாவுக்குத் தேவையில்லை. இயற்கையானது உடனே தன்னுடைய எதிர்மறை போக்கைக் காட்டாது. ஒரு தலைமுறை காலம் எடுக்கிறது. கேரளாவில் நடந்ததும் அப்படியே. குறவன்- குறத்தி மலைகளுக்கு குறுக்கே மத்தியில் சுவர் எழுப்பி, 550 அடிக்கு நீர் தேக்கும் கிண்ணமாக வைத்ததுதான் தவறு. அப்படியே கட்டினாலும் 200 அடி போதுமென கட்டியிருக்கலாம். நீர்தக்கத்தின் உயரம் கூடக்கூட புவியழுத்தத்திலும் பூகோள தட்டுகளின் ஸ்திரமற்ற போக்கு அதிகரித்தது. பேராசை பெரு நஷ்டம்! அங்கு மழை வெள்ளம் அடித்தால், தமிழகத்தில் வலிக்கும். அதுதான் இயற்கையின் நீதி. ஏதோ தமிழகத்தில் வெள்ளப் பேரிடர் நடந்ததுபோல் இங்கு நம்மூருக்குள் பாயும் நதிகள் எல்லாமே பெருக்கெடுத்து பொங்கி ஓடுகிறது.
எல்லா நதிகளையும் இணைக்கும் திட்டம் வந்தால் கடல் முகத்திலுள்ள நமக்கு அது அனுகூலமா ஆபத்தா என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். பல கிராமங்கள் மூழ்கியதால் மீட்பும் நிவாரணமும் நடக்கிறது. நம் மாநிலத்தில் எல்லா நீர்நிலை வழிகளும் கச்சிதமாக பராமரிக்கப் பட்டிருந்தால், கடைமடை பகுதிவரை இண்டு இடுக்கு நீர் நிலைகள் நிரம்பி, பூமி கிரகித்ததுபோக எஞ்சியது எல்லாமே தன்னிச்சையாகவே கடுலுக்குப் போயிருக்கும். நமக்கும் நிறைய தடுப்பணைகள் கட்ட அவசியம் இருக்காது. மணல் திருடியதால் சமனற்ற நதிப்படுகையே உள்ளது. ஆனால் பல நீர்நிலைகள் பதிவு ஆவணங்களில் இன்றும் இடம்பெற்றுள்ளன, பூகோளத்தில் இல்லை. நாம் சுயமாக பாடம் கற்க இதோ டிசம்பர் மாதம் வருகிறது.
'கலியுகத்தில் கடுங்குளிர், புயல், கடும்வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம், பூகம்பம் போன்ற பல இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பார்கள். இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடும் துன்பங்களில் சிக்கி இறப்பார்கள்' என்கிறது பாகவத புராணம்.
Image may contain: mountain, sky, outdoor and nature

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

ஸ்ரீசக்கரை அம்மா

ஒரு நூற்றாண்டுப் பிறகுதான் தன் சமாதி கோயில் பிரசித்தமாகும் என்று அன்றே கூறியவர். சென்னை திருவான்மியூர் கலாக்ஷேத்ரா சாலையில் உள்ளது அவருடைய ஜீவ சமாதி கோயில். அங்கு தரிசிக்க வருவோர்க்கு சிறு வெல்லக் கட்டிகளை விநியோகம் செய்யுங்கள். உங்கள் கஷ்டங்கள் நிவர்த்தியாகும். அங்கே உண்டியல் கிடையாது. ஸ்ரீ சக்கரை அம்மா என் குருநாதர் பாம்பன் சுவாமிகளின் சமகாலத்தவர். இந்த இருவருடைய ஜீவ சமாதிகளும் அடுத்தடுத்த தெருவில் உள்ளன.

Image may contain: text

Image may contain: 1 person, text

புதன், 15 ஆகஸ்ட், 2018

தெரு நாய்

தெரு நாய் என சித்தரிக்கப்பட்ட நம் நாட்டு நாய்கள் பற்றிய ஒரு தொகுப்பு...
“நாட்டு நாய்கள் மிகவும் நன்றி கொண்டவை. நாம் என்றாவது ஒரு நாள் உணவு போட்டுவிட்டு, பின்பு கல்லால் அடித்தால்கூட நம்மை பார்த்ததும் வாலை ஆட்டிக்கொண்டு பின்னால் ஓடிவரும். பட்டி நாய்கள் எனப்படும் நாட்டு நாய்களிடம், வெளிநாட்டு நாய்களிடம் இல்லாத பல்வேறு விசேஷ குணங்கள் இருக்கின்றன..” என்கிறார், நாட்டு இன நாய் ஆய்வாளர் பொன் தீபங்கர். இவருக்கு 29 வயது. டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் கற்றுவிட்டு ஈரோடு வந்திருக்கும் இவர், இந்தியாவின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதில் விவசாயம், நாட்டு இன நாய்கள் போன்ற விஷயங்களும் இடம் பெற்றிருக்கின்றன.
*நாட்டு இன நாய்கள் பற்றி அவர் கூறும் அபூர்வ தகவல்களின் தொகுப்பு:*
“எனது சிறுவயது பருவத்தில், எங்கள் தோட்டத்தில் உள்ள கால் நடைகளை பாதுகாக்க ராஜபாளையம் நாய் இருந்தது. அது நாம் சிந்தும் உணவை மட்டுமே சாப்பிட்டாலும் நம்மையே சுற்றி வரும். நம்மை மீறி நமது வீட்டிற்குள் நுழையாது. தோட்டத்துக்குள் எங்கேனும் ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டால் பதிலுக்கு முதல் குரல் அந்த நாயிடம் இருந்துதான் எழும்.
தமிழகத்தில் ஆடு, மாடுகளை அடைத்து வைத்திருக்கும் இடத்தை தொழுவம் அல்லது பட்டி என்று கூறுவோம். அந்த பட்டியை பாதுகாக்கும் நாய்கள்தான் அந்த காலத்தில் பட்டிநாய்கள் என்று அழைக்கப்பட்டன. மலையாள மொழியில் நாய்களை பட்டி என்று அழைப்பதற்கும் இது காரணமாக இருக்கலாம்.
எனக்கு தெரிந்தவரை பட்டி நாய்களில் கருவாய் செவலை, கருநாய், பச்ச நாய் ஆகிய மூன்று இனங்கள் இருந்திருக்கின்றன. உடல் முழுக்க செவலையும் வாய் பகுதி கருப்பாகவும் இருக்கும் கருவாய் செவலை அதிக மவுசாக இருந்திருக்கிறது. இது காவலுக்காகவும், செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்பட்டிருக்கிறது.
கருநாய் முழுக்க முழுக்க கறுப்பு நிறத்தில் இருக்கும். பட்டிகளில் காவல் காக்க இந்த நாய்கள்தான் மிகச்சிறந்தவை. இருளோடு இருளாக இந்த நாய்கள் படுத்து இருந்தால் பிற மிருகங்களுக்கு காவல் நாய் இருப்பது தெரியாமல் வந்து மாட்டிக் கொள்ளும்.
பச்ச நாய் என்றால் துரத்தித்துரத்தி கடிக்கும் ஆற்றல் கொண்டது. இந்த நாய்கள் இருக்கும் சுற்று வட்டார பகுதிக்கு யாரும் செல்ல முடியாது. பாய்ந்து வந்து கடித்து விடும். இதுபோன்று வேறு சில நாட்டு இன நாய்களும் இருந்துள்ளன.
ஆனால் இன்று வெளிநாட்டு இன நாய்களின் மோகத்தால் *நம் நாட்டு நாய்களை தெருவுக்கு துரத்தி, தெரு நாய்களாக்கி விட்டோம்.*
நமது விவசாய நிலங்களில் நச்சுப்பாம்புகளும், தேள்களும், வேறு பல விஷ ஜந்துகளும் உள்ளன. இவற்றில் இருந்து விவசாயிகளை பெரிதளவும் காத்து வந்திருப்பவை பட்டி நாய்கள்தான். முன்பு விவசாயிகள் தங்கள் தோட்டத்துக்கு செல்லும்போது பட்டி நாய்கள் அவர்களுக்கு முன்னால் நடந்து செல்லும். பாம்புகள் வந்தால் அவற்றின் குரைப்பு சத்தம் வித்தியாசமாக இருக்கும். அதை விவசாயிகள் உணர்ந்து, தங்களை காத்துக்கொள்வார்கள். எல்லா விதமான விஷ ஜந்துக்களையும் நாய்களுக்கு அடையாளம் தெரியும். அவைகளை தங்கள் எஜமானர் அருகே அணுக விடாமல் பார்த்துக்கொள்ளும். அதுபோலவே மாட்டுப்பட்டிகளை காவல் காக்கும் இந்த நாய்கள், மாடுகளை எந்த ஜந்துவும் அணுகாமல் பார்த்துக் கொள்ளும். நாட்டு நாய்கள், முன்பின் தெரியாதவர்கள் போடும் உணவுகளை உண்பதில்லை. வீட்டை மட்டுமல்ல, ஒரு கிராமத்தையே கட்டிக்காக்கும் திறன் பட்டி நாய்களிடம் உண்டு.
*இப்போது தெரு நாய்களாக்கப் பட்ட பின்பு கூட, அந்த வீதியில் தினமும் வந்து செல்பவர்களை தவிர இரவு நேரத்தில் புதிய நபர் ஒருவர் வந்தால் அதை பார்த்ததும் நாட்டு நாய் உடனடியாக குரைக்கும்.*
அதைத்தொடர்ந்து ஆங்காங்கே நிற்கும் நாய்களும் குரைக்கும். இப்படி தகவலை பரப்பி, ஒருசேர உஷாராக்கி தகவலை பரப்பும் ஆற்றல் நாட்டு நாய்களுக்கு மட்டுமே உண்டு. வேட்டிக்கட்டிக்கொண்டு செல்லும் நபர்களை பார்த்து பெரும்பாலும் நமது பட்டி நாய்கள் குரைப்பதில்லை. காரணம், வேட்டி கட்டியவன் தன்னை தாக்க மாட்டான் என்பது பட்டி நாய்களின் ஜீனில் பதிவாகி இருக்க வேண்டும்.
*இன்று நாம் கொண்டாடும் வெளிநாட்டு நாய்களின் மூலம் ஆஸ்துமா, சைனஸ் நோய்கள் உருவாகும். தொற்று நோய்கள் பரவும்.* குளிர் பிரதேசத்தில் வாழும் தன்மை கொண்ட அவைகளை, அதற்கேற்றபடி பராமரிக்கவும் வேண்டும். ஆனால், வெப்ப நாடுகளின் காலநிலைக்கு தகுந்தாற்போல *நம்மோடு வாழும் பட்டி நாய்களால் எந்த நோயும் பரவாது. அவை நோயால் பாதிக்கப்பட்டால் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு தானாகவே சென்று செத்துவிடும் அறிவாற்றல் கொண்டது.*
*கிராமங்களில் நாய் வளர்த்தவரின் வீட்டில் ஒருவர் உடல்நலமில்லாமல் இறக்கும் தருவாயில் இருந்தால், அவருக்கு பதிலாக நாய் தனது உயிரைக்கொடுத்து காப்பாற்றும் என்பார்கள்.*
எனவேதான் காலபைரவரின் வாகனமாக பட்டி நாய் அமைக்கப்பட்டு உள்ளது.
பட்டி நாய்களை சற்று உற்றுநோக்கி கவனியுங்கள். அது ஒவ்வொரு சூழலிலும் வெவ்வேறு விதமாக குரல் எழுப்பும். சிறு குழந்தைகளை கடிக்காது. பாதுகாப்பற்ற சூழலில் வீட்டைவிட்டு வெளியே செல்லும் குழந்தைகளை பார்த்தால் குரைத்து மிரட்டி மீண்டும் வீட்டுக்குள் வரும்படி செய்துவிடும். இதற்கு காரணம், முன்பு பட்டியில் இருந்து தொலைந்து போகும் கன்றுகளை, பட்டி நாய்கள்தான் தேடிக் கண்டுபிடித்து திரும்ப கொண்டு வந்து சேர்க்கும். கால்நடைகளுக்கும், மக்களுக்கும், விவசாயத்திற்கும் நாட்டு நாய்கள் காவல் அரணாகும்.
நமது கலாசாரத்தோடும், வாழ்வியல் ஆதாரங்களோடும் பின்னிப் பிணைந்த பட்டி நாய்களை பாதுகாப்பது நம் சமூக கடமை” என்கிறார், ஆய்வாளர் பொன் தீபங்கர்.
தேள் மற்றும் விஷ பூச்சிகளை பட்டி நாய்கள் எந்த பயமுமின்றி கடித்து தின்றுவிடும். பாம்புகளையும் எதிர்த்து நின்று கடித்து விரட்டும். *நாட்டு நாய்கள் விஷப்பாம்புகளையும் கடித்து கொல்லும் ஆற்றல் கொண்டவை மட்டுமல்ல, பாம்புகள் கடித்தாலும் அவற்றுக்கு எளிதில் மரணம் ஏற்படாது.*
ஏன் என்றால் உடனே அதற்குரிய பச்சிலையை தேடிச் சென்று கடித்து தின்றுவிட்டு, தரையில் மல்லாந்து படுத்துக்கொள்ளும். யோகாசனத்தில் சவாசனம் என்பார்களே அதுபோல எந்த அசைவும் இல்லாமல் சில மணி நேரம் கிடக்கும். நாம் பார்த்தால் கூட அது செத்து விட்டதோ என்று தான் தோன்றும். அருகில் சென்று பார்த்தால்தான் அதன் உடல் அசைவு தெரியும். ஏன் அது அப்படி கிடக்கிறது என்றால், பாம்பின் விஷம் தலைக்கு ஏறி மூளையில் கலந்து விட்டால் உயிரிழப்பு ஏற்பட்டு விடும்.
எனவேதான் அறிவுள்ள அந்த நாய்கள் சவாசனம்போல படுத்துக்கொள்கின்றன. அப்படி படுத்துக்கொள்ளும்போது, ரத்தம் இயற்கையாகவே சிறுநீரகத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு விஷம் சிறுநீராக வெளியேறும். சிறுநீர் வெளியேறியதும் எந்த பிரச்சினையும் இல்லாமல் அது தொடர்ந்து தனது காவல் பணியை செய்யும்.

Related image

பாபர் முதல் டாபர் வரை

நான் பள்ளி மெட்ரிகுலேஷன் படிக்கும்போது வரலாறு பாடத்தை ஆழ்ந்து படிக்காமல் தேர்ச்சிபெற வேண்டும் என்ற அளவில்தான் படித்தேன். எங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட புத்தகம் Dr.Eswari Prasad அவர்களின் History Of Medieval India from 1526 AD to 1947. இது சற்றும் எனக்கு இலயிக்கவில்லை.

அப்புத்தகத்தில் முந்தய மன்னர்கள் கதையில் மௌரியர், குப்தர் அறிமுகம் தந்த பின், முகலாயர் பிரதாபம் விளக்கி அவன் இவன் என பொழுதுபோகாத வடநாட்டு அரச வம்ச கதைகளும், அவனுடைய மற்ற மனைவியரின் குழந்தைகள் யார், சூழ்ச்சிகள் செய்தது, போர் தொடுத்தது, யாரை யார் அடித்துக்கொண்டு இறந்தது என்று மனப்பாடம் செய்ய வேண்டி இருந்தது. சத்ரபதி சிவாஜி கதையும் அப்படித்தான். அவனுடைய சிற்றன்னையின் மகன்களின் கதை தஞ்சாவூர்வரை வந்து சேரவே கொஞ்சம் சுவாரசியம் ஓங்கியது. வகுப்புத்தேர்வில் ஒரு வினாவுக்கு 'Shajahan killed Kanjan khan' என்று வேண்டுமென்று எழுதினேன். 'கஞ்சன் இல்லை கான்ஜஹான்' என்று என் ஆசிரியர் திருத்திவிட்டு வாய்விட்டுச் சிரித்தார். இப்படி அந்த முகலாயர்கள் என் வெறுப்பை சம்பாதித்தனர். முகலாயர்கள் பட்டியலில் Babur, Dabur என்று எதுகை மோனை குறையாமல் சேர்த்து விடுவேன்.

தமிழ் உரைநடை நூலில்தான் மூவேந்தர்கள் பற்றிய பாடம் வரும். வரலாறு போல் இதில் முகலாயர் வரமாட்டார்கள். ஏனோ, எனக்கு பல்லவ சேர சோழ பாண்டிய மன்னர்களின் வரலாறுதான் பிடித்திருந்தது. அதுபோக திப்பு சுல்தான் பிடிக்கும். ஆங்கிலேயர் வரலாறு முகலாயர்போல் சோர்வைத் தரவில்லை. நான் பள்ளி மாணவனாக இருந்தபோதே பாரம்பரிய தலங்கள், புகைப்படங்கள் எடுப்பது, அகழ்வாராய்ச்சி, சுவடிகள் சேகரிப்பது போன்றவற்றில் ஆர்வம் இருந்தது. அதுவும் தென்னகம் சார்ந்த சங்கதியாக இருக்கும் வரைதான். இன்னும் என்னுடைய பத்தாம் வகுப்பு வரலாறு புத்தகத்தை டிரங்கு பெட்டியில் பத்திரமாக வைத்துள்ளேன். நேரம் கிடைக்கும்போது முழுதுமாகப் படிக்கத்தான்! ஹிஹிஹ்ஹி.


No automatic alt text available.

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

சங்கேதி மொழி

எனக்கு நீண்ட காலமாகவே சங்கேதி மொழி சவாலாக இருந்து வருகிறது. என்னதான் தென்னக (திராவிட) குடும்பத்தைச் சேர்ந்தது என்றாலும், அதை பன்மொழிகள் அறியாமல் புரிந்துகொள்வது சவால்தான். சமயத்தில் அதுவும் புரியாது. நம் கொங்கு மண்டலத்தில் இம்மொழி பேசுகிறார்கள். மதுரையில்கூட நிரம்பியுள்ளனராம்.
என் முன்னே ஒருவர் ஓட்டலில் யாரிடமோ "அவ்விய சாப்படன வராஹளா?" என்று கேட்டுவிட்டு "ந தோய்சி வரட்டே?" என்பதுபோல் ஏதோ சொன்னார். (அவர் பேசியது 'அவங்க சாப்பிட வராங்களா? நா கை கழுவிட்டு வரட்டா?' என்பது புரிந்தது.) தமிழ் கன்னடம் மலையாளம் கலந்தடித்து, சமயத்தில் தெலுங்கும் தலை நீட்டிவிட்டுப் போகும்போல. தமிழை அடிப்படையாகவும் மற்ற திராவிட மொழிகளின் கலப்போடு சமஸ்கிருத உச்சாடனமும் அமைந்துள்ளது ஒரு சிறப்பு. தென் மொழிகளின் கூட்டு அவியலாக உள்ளது.
இந்த மொழியில் நிறைய ஒட்டு அட்சரங்கள் வந்து போகிறது. நிஜமாகவே பரிபாசை சங்கேத மொழிபோல்தான் இருந்தது. அம்மொழியும் கேட்க இனிமையாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. இலக்கணமும் சொற்றொடர்களும் கடினமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறன். பன்மொழிகள் அறிந்திருந்தாலும், சங்கேதியில் எந்த சொல்லுக்கு எந்த மொழியின் இணையை பிரயோகம் செய்கிறார்கள் என்பதை சற்றும் யூகிக்க இயலாது. எழுத்து வடிவம் இல்லாத மொழியைக் கற்பதும் கடினம்தான். சந்கேதிகளிடம் பேச்சு மொழியாக கற்றுக்கொண்டால்தான் உண்டு.
No automatic alt text available.

சனி, 11 ஆகஸ்ட், 2018

வேடம் தரித்து...

'தமிழ்த்தாய்' என்று பிரத்தேயகமாக ஒரு சிலையை பலகாலமாகப் போற்றி வணங்குவதும், அதைச் சார்ந்து சர்ச்சைகள் எழுப்புவதும் தொன்றுதொட்டு நடந்து வருகிறது. திராவிட அரசியலாளர்களால் உருவாக்கப்பட்ட இந்தத் தாய், ஏன் இறை அம்சம் பெற்றவளாகக் காட்டப்படவில்லை? அவளை நாடகத்தில் வேடம் கட்டும் பெண்போல் சித்தரித்ததே உண்மை. நம் ஆசாமிகளைப் பார்த்து அண்டை மாநிலங்களும் கெட்டன. அவர்களும் இதேபோல் காப்பி அடித்து ஆளுக்கொரு தாயை உருவாக்கி வைத்துள்ளனர்.
மொழி என்பது சிவனிடமிருந்து வெளிப்பட்டது. சிவனின் வாசிக்கால் சப்தமே அக்கலைகள். அந்த மொழியை சக்தியின் வடிவாக வழிபடுவது ஆதிகாலம் முதலே மரபு. திருமுறைகளில் தேவி என்ன பெயர்களால் பாடப்பட்டுள்ளாள்? தேன்மொழி அம்மை, மதுரபாஷினி, வாக்குதேவி, ஒசைக்கொடுத்த நாயகி, பன்மொழி அம்மை, மந்திரநலத்தாள், பண்ணுறை நாயகி, இப்படி பல திருப்பெயர்களால் அவள் அழைக்கப்படுகிறாள். சிவசக்தி பெண்மையின் வடிவெய்தி தேசம், நதிகள், மலைகள், என எல்லாமுமாக இருக்கிறாள். 
முப்பெரும்தேவியரின் கைகளிலுள்ள ஆயுதங்கள் ஏன் இவள் கைகளில் வெளிப்படவில்லை? தெய்வீக அடையாளங்கள் வெளிப்படாமல் திராவிடத் தலைவர்கள் சிருஷ்டித்தனர். அவளை சக்தியின் வடிவாக சித்தரித்ததே திராவிட கொள்கைக்கு எதிரானது. இன்னும் எதற்கு கேலிக்காக ஒரு மொழித்தாய்?

Image may contain: 1 person

மழை வெள்ளம்

இந்த மழை போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா? என்று கேரளத்தில் நக்கலாக இயற்கை கேட்பதுபோல் இருக்கிறது. தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி நிவாரண நிதி தந்துள்ளது.

கூடுதல் மொழி, பலம்!

மலையாளி தமிழகத்தின் முதல்வர் ஆகலாம்
கன்னடர் தமிழகத்தின் முதல்வர் ஆகலாம்
தெலுங்கர் தமிழகத்தின் முதல்வர் ஆகலாம்
ஆனால் தமிழரால் பிற மாநிலத்தில் முதல்வர் ஆக முடியுமா? ஆக முடியாது. ஏன்? தமிழைத் தவிர பிற மொழிகள் வேண்டாம், தமிழனுக்குப் பேராசை இல்லை அதனால் பிற மாநிலத்தை ஆள விருப்பமில்லை. ஆகவே, செந்தமிழ் மட்டும் போதும். போனால் போகிறது என்று ஆங்கிலம் தெரிந்து கொள்ளலாம். மற்றபடி மூத்தகுடிக்கு மற்ற மொழிகள் தேவையில்லை. "தமிழாய்ந்த தமிழ் மகன்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும்" என்று பாவேந்தர் பாரதிதாசன் முன்னொரு சமயம் சொன்னார். அப்படிப்பார்த்தால் அவருடைய மகன் திரு. மன்னர் மன்னன் அல்லவா ஆளவேண்டும்? வானொலியில் பணிசெய்துவிட்டு ஓய்வூதியம் பெறுகிறார்.
இது மாதிரியான கொள்கைகள் தமிழரல்லாத முதல்வர்கள் வைத்துக் கொள்ளவில்லை. சினிமாவில் ஈடுபட்டாலே பன்மொழிகளும் வந்துவிடும், நாங்கள் விரும்பிக் கற்கவில்லை என்று பூசிமெழுகிச் சொல்லிடுவார்கள். எம்ஜிஆர்-கலைஞர் போட்டுக்கொண்ட 'நீ தமிழனல்ல' என்ற சண்டையில் பல உண்மைகள் பழைய தினமணி-முரசொலி செய்தித்தாள்களில் அம்பலாமாயின. சுமார் 60 ஆண்டுகளுக்குமுன் மொழியும் பகுத்தறிவும் சினிமாவும் சேர்ந்து சமூக கட்டமைப்பையே குட்டிச்சுவர் ஆக்கியது. இதை செப்பனிடவே இன்னும் காலம் பிடிக்கும்.
எது எப்படியோ, இனியாவது ஒவ்வொரு மாணவரும் பத்தாம் வகுப்புவரையாவது பன்மொழிகளைக் கட்டாயம் கற்கவேண்டும். அதன்பின் தொடர்வதும் விடுவதும் அவரவர் விருப்பம். எதற்கு? ஆட்சியைப் பிடிக்க அல்ல, வேலை வாய்ப்பையும் ஆளுமையையும் உயர்த்திக்கொள்ள!


செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

போய்வா முத்தமிழே!

தவறுகள் பல செய்திருக்கலாம், ஈழத் தமிழர்களுக்கு தீங்கிழைத்திருக்கலாம், இறை நிந்தனை செய்திருக்கலாம், சாதி வன்மம் தூண்டியிருக்கலாம், பிராயச்சித்தமும் ரகசியமாகச் செய்திருக்கலாம், கர்மபலனை தட்ட முடியாமல் வேதனை அனுபவித்திருக்கலாம், இறுதிக்காலத்தில் மனவலியில் துடித்திருக்கலாம்... யார் அறிவார் அதை? நெஞ்சுக்கு நீதியும், போர் வாளும், உடன்பிறப்புகளின் உன்னத தலைவராக முன்னிறுத்தியது. இதுவரை செய்த தர்ம /அதர்ம வினைகளுக்கு, நீர் வணங்கி பராமரித்த கோபாலபுர ஆலயத்தில் குடிகொண்ட ஸ்ரீ வேணுகோபாலரே சாட்சி. செய்தவற்றை கணக்கர் ஈசன் எழுத்தறிநாதராக ஏட்டில் பதித்துள்ளான். முரசொலியின் சப்தம் நின்றது, எழுத்தாளரின் பேனாவும் ஓய்வெடுத்தது! சூரியன் அஸ்தமித்தது என்றால் அது உமக்கு இழுக்கல்லவா? உதய சூரியன் மேற்கே உதித்தது இன்று!

Image may contain: 1 person, sunglasses, night, sky, outdoor, closeup and nature

கண்காணிக்கிறான்

கடைக்காரர் பார்க்காத வண்ணம் கிழிந்த நோட்டை நைசாகத் தள்ளுவது, செலுத்தவேண்டிய மீதம் சில்லறையை பிறகு வந்துத் தருகிறேன் என்று சொல்லி அப்படியே விட்டுவிடுவது, வேண்டாத ஒரு பொருளை அன்பளிப்பாகத் தருவது, பணம் போட்டால் வராது என்று தெரிந்தே நண்பனை தவறாக வழிகாட்டுவது,... என இப்படி பல வித செயல்களை அன்றாடம் நாம் எல்லோருமே விளையாட்டாகவோ சாமர்த்தியமாகவோ வெறுப்பிலோ பழிதீர்க்கவோ செய்வோம். ஆனால் பக்தி, தர்மநெறி பற்றி நிறைய பேசுவோம். நாம் எல்லாம் எந்த விதத்தில் தூய்மையானவர்கள்? "இந்த அளவுக்குச் செய்தால் பாதகமில்லை" என்று நாமே ஒரு வரையறை வைத்துக்கொள்வதுதான் தீங்கிழைக்கிறது.
தன்னை வழிபடும் அடியார்களின் வழிபாட்டு நிலையை கணந்தோறும் எழுத்தறிநாதனாக அறிந்து ஏட்டில் குறித்துக் கொள்கிறான். கண்காணியாக உலகெங்கும் நிறைந்து நிற்கும் இறைவனின் தன்மையை உணர்ந்தவர்கள் தவறேதும் செய்ய மாட்டார்கள் என்றகிறார் திருமூலர். (திருமந்திரம், 2067)
கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடம் இல்லை காணுங்கால்
கண்காணியாகக் கலந்து எங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே.
போகரும் இதையே வலியுறுத்தியுள்ளார். விளைந்த தோட்டத்தில் காவல் காக்க யாருமில்லை எனக் கருதி அங்கு புகுந்து களவாடக் கூடாது என்கிறார். அங்கே மாடன் (சிவன்), சங்கிலி கருப்பு, வன துர்கை, காத்தவராயன் என எல்லாமே அரூபமாக காவல் செய்வார்களாம். உஷார்!
இதெல்லாம் சரி. இறை நிந்தனை செய்து, அவனை வணங்க விடாமல் திசை திருப்புவோரின் நிலையை இன்று கண்கூடாக நாம் காண்கிறோம். படத்தில், அருள்மிகு எழுத்தறிநாதர் கோயில், இன்னம்பூர், தஞ்சாவூர் மாவட்டம். 
Image may contain: sky

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

விபரீத 'ஹீலிங்'

யூடுயூப் பார்த்து சுயமாக அறுவை சிகிச்சை செய்யவோ பிரசவம் கையாளும் அளவுக்கோ நம் நாட்டு ஜனங்கள் இன்னும் முன்னேறவில்லை. திடமான நல்ல ஆரோக்கியமான தாய்க்கே திடீரென பேறுகால விபரீதங்கள் நடக்க வாய்ப்புண்டு. கணவனே பனிக்குடத்தை உடைத்து நேரடியாக பையிலிருந்து ஒரு சிசுவை எடுப்பது மாயாஜாலமா? மருத்துவர்/செவிலியர் மேற்பார்வை இல்லாமல், உடலியல் செயல்பாடு /நாடி பரீட்சை பற்றி எதுவும் தெரியாமல், சுயமாக வீட்டில் பிரசவம் பார்ப்பது ஆபத்துதான். காட்டுவாசிகள் சுயமாவே பெத்து நல்லாதான இருக்காங்க, நாம் செய்தா என்ன தவறு? இப்படித்தான் பலபேர் நினைக்கிறார்கள். இப்படி தூண்டி விடுவதற்கு வலைத் தளங்கள்தான் முக்கிய காரணம். எதற்கு என்ன மருத்துவம் வேண்டும் என்பதை பகுத்தறிவுடன் நாம்தான் முடிவு செய்யவேண்டும்.

விலங்குகள் எல்லாமே சுயமாகத்தானே பிரசவிக்கிறது என்று புத்திசாலியாய் கேட்போர் பல. அது ஐந்தறிவு என்றாலும் நம்மைவிட அதற்கு நிறையவே சூட்சும அறிவை இறைவன் தந்துள்ளான். நாம் ஆறறிவு, நாம் அது செய்வதுபோல் சிசுவை தொப்பென கீழே போட்டு, பனிக்குடத்தை உடைத்து, காலால் எட்டி உதைத்தும், நக்கியும் அதை உயிரூட்ட சாத்தியப்படாது. சித்தர்கள் இப்படியெல்லாம் செய்யுமாறு சொல்லவில்லை.  கர்ப்ப வைத்திய நிகண்டு, ஜெனன சிகிச்சை நூல்கள் எல்லாமே யாருக்கு? மனிதனுக்கா, விலங்குகளுக்கா? மனிதன் அந்நூல்களை முறையாகப் படித்து நடக்கவேண்டும் என்பதற்கு. இதை அறியாத மூடக்கூட்டத்தினர் சமூகத்தில் கூச்சலிடுவார்கள். 
தொல்காப்பியரின் மண்டையிலிருந்து அகத்தியர் தேரை எடுத்தார், நாம் ஏன் செய்யக்கூடாது? காந்தாரி தன் கருப்பிண்டத்தை பானைகளில் போட்டு நூறு பிள்ளைகளை பெற்றாளாமே? நாம் ஏன் முயற்சி செய்யக் கூடாது? இவாறு நாம் படிப்பதை எல்லாம் தகவல் அளவில் மட்டுமே கொள்ளவேண்டும்.
பிரசவம் என்பது 'நீங்களும் சமைக்கலாம்' 'நீங்களும் ஜோதிடம் பார்க்கலாம்' வகையைச் சேர்ந்தது அல்ல. மருத்துவ சோதனைக்கே போகாமல் மனைவியின் பிரசவ நிலை அறியாமல் என்னவென்று அவள் கணவன் பிரசவம் பார்ப்பது? சிசுவின் காது மூக்கு வயிற்றிலுள்ள கெட்ட நீரை எப்படி எடுப்பது? தெரியாது. அதிக இரத்தம் போனால் என்ன செய்வது? தெரியாது. திடீரென தாயின் நாடித்துடிப்பு இறங்கினால் என்ன செய்வது? தெரியாது. பிறந்த சிசு நீண்ட நேரமாக அழவில்லை எனில் என்ன செய்வது? தெரியாது. எதையும் கையாளத் தெரியாமல் வீட்டில் என்ன பிரசவம் பார்ப்பான்?
"வீட்டில் மருத்துவச்சி பிரசவம் பார்க்கட்டும்" என்று ஒரு வரியை பாஸ்கர் அவர்கள் சொல்லி இருக்கலாம். மக்களுடைய அடிப்படை மருத்துவ அறிவு பற்றி யோசிக்காமல், ஹீலர் பாஸ்கர் ஏன் இப்படி ஒரு முகாமுக்கு ஏற்பாடு செய்தார் என்று புரியவில்லை. அண்மையில் நடந்த சம்பவம் இவருக்கு அவப்பெயரை தந்துள்ளது.
"ஏங்க, விளையாட்டா எங்க கிளம்பிடீங்க?"
"அண்ணே! பொழுது போகலை. போய் யாருக்காவது பிரசவம் பாத்துட்டு வரலாம்னு..."
"பிரசவம் பாக்க தெரியுமா?"
"குழந்தைய புடிச்சி இழுத்து தலைகீழா தொங்கவிட்டு ஓங்கி முதுகுல அடிக்கணும், அவ்ளோதானே? எவ்வளவு சினிமாவுல காட்டியிருக்காங்க"
"ஐயையோ... சிசு என்னத்துக்கு ஆகறது? தாய்க்கு வயிற்றை அழுத்தி அழுக்கை எடுத்து சுத்தம் செய்ய வேண்டாமா?"
"வயித்த சுத்தம் செய்வாங்களா? அப்போ சரி, பேதி மருந்து கொடுத்தா போச்சு. என்ன இப்போ? அண்ணே முந்தி உங்களுக்கு வயித்தால போனதுக்கு, வைத்தியர் கொடுத்த இரண்டுநாள் மருந்தை ஒரே வேளைக்கு கொடுத்தேனே! நியாபகமிருக்கா?"
Image may contain: 1 person, sitting

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

ஒரே சிந்தனை

ஒரு வாரமாக நம்மூரின் எல்லா தொலைக்காட்சி செய்திச் சேனல்களிலும் கலைஞரின் உடல்நல சிறப்பு நிகழ்ச்சிதான் ஒளிபரப்பில் அதிக நேரம் எடுத்துக் கொண்டது. 'காவேரியிலிருந்து நேரலை' என்று சன் டிவியில் ஒரு கேப்ஷன் காட்டினார்கள். நான் ஏதோ ஆடிப்பெருக்கு நாளில் காவேரி நதியைக் காட்டப் போகிறார்கள் என்று நினைத்ததுதான் மிச்சம். அது ஆஸ்பத்திரிக்கு வரும் நடிகர்கள் கூட்டத்தின் பெருக்கைத்தான் காட்டினார்கள். எட்டுவழி சாலையால் நில அபகரிப்புப் பிரச்சனை, காவேரி நீர் கடலுக்குபோய் தண்டமான விஷயம், ப்ளஸ்டூ மதிப்பெண் மறுகூட்டல், நீட் சேர்க்கை நிலவரம், அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு, என்று பல பிரச்சனைகளை கலைஞர் விழுங்கி ஜீரணித்துள்ளார். ஆக, உடல்நலம் தேறிவருகிறார் என்பது கண்கூடு. இவர் உடல்நிலையை விழுங்கும் அளவுக்கு திமுகவினரின் 'பிரியாணி சண்டை' நேற்று வரை பரபரப்பாக இருந்தது. இதன் நடுவே தமிழகத்தில் பூகம்பம் வந்தாலோ, இடுக்கி அணை உடைந்தாலோகூட, இவை பெரிய அளவில் செய்தி ஆகியிருக்காது.

புதன், 1 ஆகஸ்ட், 2018

ஆட்டுவிப்பவன் அவனே!

காஞ்சிபுரம் எகாம்பரேஸ்வவர் கோயிலில் உற்சவர் பஞ்சலோகசிலை மோசடியில் பங்குபெற்றவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
'சிலை பழுதுபட்டுள்ளது, மாற்றவேண்டும்' என்று அர்ச்சகர் மனு கொடுப்பது முதல், அதனை சோதித்து அறிக்கை தந்தபின், உலோகங்களை வாங்க அனுமதி தருவது முதல், உலோகங்களை ஸ்தபதியிடம் கொடுத்து சிலை செய்வது வரை, இக்குற்றப் பின்னணியில் யாரெல்லாம் உள்ளனர் என்று பார்த்தால் இது ஒரு சவாலான வழக்காகத்தான் தெரிகிறது. இறைவனே இவர்களை பாவம் செய்ய வைக்கிறான். அவனே சூத்திரதாரி!

No automatic alt text available.