About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 20 மே, 2020

பஞ்சாட்சரன்!

ஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரம்தான் ஆதிசிவனின் மொத்த உருவம். இப்பிரபஞ்சம் தோன்றியது அவனது சிருஷ்டியினாலே. இடகலை பிங்கலை சுழுமுனை சங்கமிக்கும் முச்சந்திதான் ஆக்ஞா சக்கரம். ஹூன் என்ற பீஜம் சொல்லி மூன்றாவது கண்ணிலிருந்து சிருஷ்டிகள் தொடங்கின. அஷ்ட சித்திகளும் சித்திக்கும் ஆதித்தலம் அதுவே. வாசியின் பாதை ஓட்டமெடுத்து ஆக்ஞா சக்கரத்தில் சுடர்விட்டு எரியும் அகத்தீயால் அவன் சுடலை என்றும், உடலெங்கும் வெண்ணீறு பூசி சுடுகாட்டில் சுடலையாக அலைந்து திரிந்ததால் பித்தன் எனப்படுகிறான். பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட விஷத்தைப் பருகி அதைத் தொண்டையில் நிறுத்தியதால் ஸ்ரீகண்டன் Srikandan எனப்படுகிறான்.

(ஸ்ரீ என்றால் திருமகள், மேன்மை, இனிப்பு, விஷம் என்று பல பொருளுண்டு. நீங்கள் நினைக்கும் Srikanth ஸ்ரீகாந்தன் என்பது வேறு. திருமகள் மனம் கவர்ந்த மாதவன் என்பது பொருள். நமக்கு இனிப்புதான் விஷம். அதை உண்டால் கபம் சேரும். ‘கபம் சிவத்துக்கு எமன்’ என்ற முதுமொழி நினைவுக்கு வருகிறதா? கபம் /வழலை விலகினால்தான் முச்சந்தி சக்கர வாசல் (பிரம்மரந்திரம்) திறக்க ஆகாய அம்பலமே வெளிப்படும். அங்குதான் மஹாபத்மம் என்ற தாமரைக் காட்டில் ஆயிரத்தெட்டு இதழ்கள் நடுவே சிவன் சச்சிதானந்தமாகத் திரிந்து சக்தியுடன் ஐக்கியப் படுகிறான். வழக்காடு மன்றத்தில் சித்த சுவாதீனமில்லாதவர்போல் பேசி வம்புக்கிழுத்த ஈசனைப்பார்த்து சுந்தரர் 'நீர் பித்தன்' என்றார்.)

Image may contain: text that says 'மூட்டுகின்ற படாட்சரமே யாதிநாதன் முச்சந்தி வீதியிலே முழங்கிபோகும் ஆடுகின்ற படாட்சரமா ரறியப்போறார் அஷ்டமா சித்திக்கு மாதியாகும் வீட்டிலே ருக்காமற் சுடுகாடாகி விடமுண்ட கண்டனென்று பெயருண்டாகிக் காட்டிே திரிகின்ற பித்தனென்றுங் கருத்துவைத்தே யலைந்தவிடங் கருதிப்பாரே சுப்பிரமணியர் ஞானம், பா: 340'

சனி, 16 மே, 2020

ஏழையின் மனம்!

பள்ளியில் என்னுடன் எட்டாம் வகுப்பில் பரத்குமார் என்ற மாணவன் படித்தான். அவன் சிறுவயதிலேயே தந்தையை இழந்தவன். உடன்பிறந்த அண்ணன் அக்கா உண்டு. அவனுடைய அம்மா வெளியுலகம் அறியாதவர். அவனுடைய அண்ணனும் அக்காவும் பத்தாம் வகுப்புவரைதான் படிக்க முடிந்தது. இருவரும் காலையிலேயே வேலைக்குப் போவார்கள். இருவரும் சேர்ந்து மொத்தமாக மாதம் ரூ.250 ஊதியம் ஈட்டினர்.

அவன் படிப்பில் சராசரிதான் என்றாலும் பள்ளிக்கு ஃபீஸ் கட்டமுடியாத காரணத்தால் குடும்ப ஏழ்மையை விளக்கிச்சொல்லி அவன் அம்மா பள்ளியின் தாளாளர் காலில் விழுந்து எப்படியேனும் கட்டணமின்றி படிக்க வைக்க உபகாரம் செய்யுமாறு கெஞ்சினார். அவனுக்குச் சீருடை மற்றும் பாடப் புத்தகங்களை அவரே இலவசமாகக் கொடுத்தார். மழைக்காலம் வந்தாலோ சீருடை அழுக்காகி விட்டாலோ அதை துவைத்து உலர்த்திப் போட்டுக்கொள்ள வேண்டிய நெருக்கடியான சூழ்நிலை.
மாலையில் ஒருநாள் பள்ளிவிட்டுப் போகும்போது ‘சந்துரு எங்க வீட்டுக்கு வாடா, இங்கிருந்து தூரமில்லை’ என்றான். ‘சரி வர்றேன்’ என்று சொல்லிவிட்டு அவனுடன் போனேன். சிறிய காம்பவுண்டுக்குள் ஓடு வேய்ந்த ஓர் அறையை இவர்களுக்கு வாடகைக்கு விட்டிருந்தனர். உள்ளே போனதும் அவன் அம்மாவுக்கு என்னை அறிமுகம் செய்தான். நாங்கள் தரையில் உட்கார்ந்தோம். அவருடைய காது மூக்கு கழுத்தில் ஒரு குந்துமணி தங்கமில்லை. அவர்கள் பரிதாபமான வாழ்க்கைச் சூழலில் உள்ளது அப்போதுதான் எனக்கே தெரியும்.
அவர்கள் குடியிருந்த வீடு 10x10 அளவுதான் இருக்கும். வாடகை ரூ.75. ஒரு சதுர அறையின் மூலையில் தரையில் மண்ணெண்ணெய் அடுப்பு, இன்னொருபக்கம் மர பீரோ மற்றும் சில பாத்திரங்கள். சிறிய டிரான்சிஸ்டர் மட்டும் என் கண்ணில் பட்டது. மேஜை நாற்காலி ஏதுமில்லை, கால்நீட்டிப் படுத்தாலே வீடு நிரம்பிவிடும்.
அவன் அம்மா பேசும்போது எங்கள் பள்ளித் தாளாளர் அவனுக்குச் செய்யும் உதவியைச் சொன்னார். தன் மகனும்/மகளும் வீட்டுக்கு வந்ததும் சிற்றுண்டி தரவேண்டும் என்பதால் அவன் அம்மா அடுப்பில் சப்பாத்தியும் கீரை கூட்டும் செய்து கொண்டிருந்தார். எனக்கும் அவனுக்கும் தட்டில் சூடாக இரண்டு சப்பாத்தியும் கீரை கூட்டும் வைத்துக் கொடுத்தார். ‘சாப்பிடுப்பா’ என்றார். சந்தோஷமாய் சாப்பிட்டேன். தலையைத் தூக்கித் தண்ணீர் குடித்தபோது எதிரே சுவற்றில் அவனுடைய தந்தையின் படம் தூசியில் தொங்கிக் கொண்டிருந்தது.
‘பாடத்துல இவனுக்கு ஏதேனும் புரியலைனா கொஞ்சம் சொல்லிக்குடுப்பா... மத்த பசங்க இவனோட பழகுறதில்லைன்னு சொல்வான்’ என்றார். ‘சரி.. நான் வரேன்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன். நான் ஒன்பதாம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கு மாறினேன். பிறகு அவனைப்பற்றிய எந்த செய்தியும் தெரியாது.
எப்போதெல்லாம் சப்பாத்தி-குர்மா சாப்பிடுகிறேனோ அப்போது சட்டென்று அவர்களுடைய நினைவு ஒருகணம் வந்துபோகும். ‘என்றென்றும் உணவுக்குக் குறையின்றி அவர்களுக்குப் படியளந்திடு இறைவா’ என்று உடனே என் மனம் வேண்டிக்கொள்ளும். நம் வாழ்க்கைப் பயணத்தில் எத்தனை விதமான மனிதர்களை நாம் கடந்து செல்கிறோம்!

Image may contain: food