About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 19 ஜூலை, 2019

பயன்தரும் கழிவுகள்!

உணவுக் கழிவுகளிலிருந்து பயோ மீதனஷன் (Biomethanation) முறையில் எரிவாயு தயாரிக்கும் BioUrja என்ற காப்புரிமை பெற்ற தொழில்நுட்பம் மூலம் எரிவாயு கலனை GPS Renewables Private Limited தயாரித்து வருகிறது. நகரத்திலுள்ள பல கார்பரேட் நிறுவனங்களுக்கும், ஓட்டல்களுக்கும், சமய ஸ்தாபனங்களுக்கும், பள்ளி /கல்லூரி விடுதிகளுக்கு, மாநகராட்சியின் மக்கும் திடக் கழிவு மேலாண்மை மையங்களுக்கும் (OFMSW) இது ஏற்றது. தினசரி உணவு/ சமையலறை திடக்கழிவுகளை கையாளும் வகையில் கலன்கள் வடிவமைக்கப் பட்டுள்ளது.
சுற்றுப்புறச் சூழலையும் சுகாதார சீர்கேடுகளையம் கருத்தில் கொண்டு இயற்றப்பட்ட சட்டமானது (Solid Waste Management Rules, 2016), வெளியேறும் ஈரமான மக்கும் கழிவுகள் நிறுவனங்களுக்குள்ளேயே கையாளப் படவேண்டும் என்று வலியுறுத்துகிறது. சந்தையில் கிடைக்கும் மாற்று எரிபொருள் கலன்களின் 5 ஆண்டுகளுக்கான முதலீடு மற்றும் இயக்கவிலையொடு ஒப்பிடும்போது இக்கலன் சிக்கனமானது மற்றும் இது வெளியிடும் எரிபொருளின் உற்பத்தி அளவும், மதிப்பும் அதிகம். அதில் இடப்படும் ஒவ்வொரு நூறு கிலோ அளவு உணவுக் கழிவானது ஏழு கிலோ LPG இணையான Biogas எரிவாயுவை உற்பத்தி செய்து வெளியேற்றும். இதனுடைய நீடித்த இயக்கம் கணிசமான எரிபொருளைத் தந்து முதலீட்டின் இலாபத்தை ஈட்டித் தருகிறது. எரிவாயு உற்பத்திக்குப்பின் இதிலிருந்து வெளியேறும் இறுதிநிலை வண்டல் கழிவுகள் உரமாகப் பயன்படுகிறது.

சிறப்பம்சங்கள்
• நிர்மாணம் செய்து இயத்திற்குத் தயாராக உள்ள கலன்
• பிரத்தியேகமான கட்டுமானப் பணிகள் இல்லை
• தினசரி 1000 கிலோ கழிவுகளைக் கையாளும் கலனுக்கு 500 சதுரடி இடம் போதுமானது
• மிகக்குறைந்த அளவில் நீர் தேவை - தினசரி 1000 கிலோ கழிவுகளைக் கையாளும் கலனுக்கு 100-150 லிட்டர் நீர் போதுமானது
• 24x7 முறையில் கலனின் இயக்கத்தை கண்காணிக்கும் ஆன்லைன் Cloud-based monitoring of system health முறை கையாளப்படுகிறது. இயக்க நிலை, எரிவாயு உற்பத்தி அளவுகளின் மாத அறிக்கையும், காலாண்டு செயல் திறன் அறிக்கையும் இதில் அடங்கும்.
வர்த்தகத் தேவைகளுக்குத் தொடர்பு கொள்ள: bala@gpsrenewables.com
  
Image may contain: fire 
Image may contain: sky and outdoor

வர்மமும் அணிகலன்களும்

கிராமத்துக் கிழவிகள் கையாண்ட வர்மம் புள்ளிகளைத் தூண்டும் விதமாக காதில் பலவித அணிகலன்களை மாட்டிக் கொண்டனர். கருவறையில் சிசு தலைக் கவிழ்ந்து இருப்பதுபோல் நம் காதின் அமைப்பு உள்ளது. காதின் சோனை முதல் குரும்பு வரையுள்ள அமைப்பு தலை முதல் பாதம் வரையான பகுதிகளைக் குறிக்கும்.



வியாழன், 11 ஜூலை, 2019

வழி தவறிய இந்துக்கள்!

விளக்கு வைக்கும் அந்தி/சந்தி வேளையில் உட்கார்ந்து மும்முரமாகப் பேன் பார்ப்பது, நிலைப்படியில் அமர்ந்து தலைமுடியைச் சீவிக் கோதுவது, நாரையைப்போல் ஒற்றைக் காலில் தலைவாசலில் நின்றபடி நகம் வெட்டுவது, கண்ணாடி வைத்து மீசையைத் திருத்துவது, என இவையெல்லாம் சமய நெறிக்கு ஒவ்வாத செயல்கள். இதைப் பார்க்கும்போது மூன்றாவது நபரான நமக்கே எரிச்சல் வரும்.

அண்டை வீட்டின் முன்னால் துளசி மாடத்தில் சிறிய அகல் தீபம் எரிந்து கொண்டிருக்க, அதன் பக்கவாட்டில் அந்தக் குடும்பத்தின் மூத்த மருமகள் தன் மூத்த பெண்ணுக்கும் அவள் தன் தங்கைக்கும் பேன் பார்த்துக் கொண்டிருந்தனர். குரங்குகள் வரிசையாகப் பேன் பார்க்கும் மாமல்லபுர சிற்பம் என் நினைவுக்கு வர சிரித்துக் கொண்டேன். பீடையும் தரித்திரமும் அண்டும் அளவுக்கு மேற்சொன்ன அத்தனைவித செயல்களையும் அவர்கள் செய்வார்கள். குடும்பத்தில் சண்டை, பிளவு, நிதி நெருக்கடி, சுகவீனம், நிம்மதியின்மை என எல்லாம் நிலவுகிறது. அவர்கள் சுத்த முற்போக்காக உதய சூரியனில் ஐக்கியமானவர்கள். யாருடைய அறிவுரையினாலோ கடவுளுக்கு விளக்கேற்றும் நிலைக்கு முன்னேறியுள்ளனர். பக்தி சிந்தனைகளும் சமய நெறிகளும் அதிகம் பரவியுள்ள இக்காலத்தில் இன்னமும் நெறிதவறிய பழக்கங்கள் நிலவுவதற்கு அவ்வீட்டுப் பெரியவர்களே காரணம்.

ஐம்பது வயதான அவ்வீட்டு மகன் என்னிடம் ஒருசமயம் "நீங்க புக்ஸ் எல்லாம் எழுதற ஆத்தராமே... என்ன மாதிரி புக்ஸ்?" என்றார். "சித்தர்கள் பத்தினது" என்றேன். "அவங்கெல்லாம் யாரு?" என்றார். "அகத்தியர் திருமூலர் போகர் கேள்விப் பட்டிருப்பீங்களே அவங்கல்லாம் சித்தர்கள்" என்றேன். "இவங்க இன்டியன்ஸா... பக்தி லெக்சர் தந்து கச்சேரி செய்றவங்களா?" என்றார். "இல்லீங்க. அவங்க மிஸ்டிக் மென்" என்றேன். அவருக்கு என்ன புரிந்ததோ? ஐயோ பாவம்! இத்தனைக் காலமும் எதைப்பற்றியும் அறியாமல் சுப்ரதீபமாக இருந்துவிட்டார். 😥 ஒரு பள்ளிக்கூட மாணவனைக் கேட்டால்கூட அகத்தியரைப் பற்றி நன்கு சொல்வான். ஆக இவருக்கு என் புத்தகத்தைப் படிக்கத் தந்து கஷ்டப்படுத்தக் கூடாது என்று இருந்துவிட்டேன். 😜

விளக்கேற்றும் நேரத்திலும், நாள்-கிழமைகளிலும் எதைச் செய்வது/ செய்யக்கூடாது என்ற சமய நெறிகளை நம் கிராமங்களில் இன்றும் கடைப்பிடிக்கிறார்கள். இந்த நகரவாசிகளுக்கு இது புரியாதது ஏனோ?


சனி, 6 ஜூலை, 2019

மீண்டும் அதே முகம்!

முற்பிறவியிலிருந்த முகச்சாயலே மீண்டும் மறுபிறவியில் தொடர்கிறது என்பதை என்னுடைய அனுபவம் வெளிக்காட்டியதுப்பற்றி முன்பு ஒரு பதிவில் சொல்லியிருந்தேன். அது இன்றைக்கும் எனக்கு ஆச்சரியமூட்டும் புதிர்தான். ஒவ்வொரு பிறவியில் ஒவ்வொரு வருணத்தில் ஏதோவொரு சாதியில் பிறந்து வாழ்ந்து மறிக்கிறோம். பிறகு வேறொரு இடத்தில் நம் ஊழ்வினைக்கேற்ப ஏதோவொரு குடும்பத்தில் உயர்/தாழ் பொருளாதாரச் சூழலில் பிறந்து வளர்ந்து, படித்து/படிக்காமல், வேலைக்குப் போய்/போகாகாமல், திருமணம் ஆகி/ ஆகாமல், பிள்ளைப் பேறு கிட்டி/கிட்டாமல் போகலாம். நாம் பிறந்த அந்த சந்ததியில் முன்னோரின் உடலமைப்பு முகச்சாயல், நடை, குரல் என்று பலவற்றைப் பெறுகிறோம். ராகு-கேது வழியே இப்பண்புகள் கடத்தப்படுவது நியாயமக உள்ளதுதான். விட்டகுறை தொட்டகுறையாக ஊழ்வினையை அனுபவித்துத் தீர்த்திட அவர்களே நாமாக பிறந்திருப்போம் என்ற காரணம் இருப்பதால் அவர்களுடைய பெயரையும் நமக்கு வைக்கிறார்கள்.
சரி. அவர்கள் எப்போதோ இறந்தபிறகு நேரடியாக இப்போதுதான் நாமாகப் பிறக்கிறார்களா? இல்லை! அவர்கள் இறப்புக்கும் நம் பிறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் இதற்குமுன் அவர் எடுத்த வேறு ஜெனனங்களில் அந்தந்த சந்ததியில் பிறந்து ஊழ்வினையைத் தீர்த்துவிட்டு இறந்தபின், அடுத்து நாமாக இக்குடும்பத்தில் தக்க சமயத்தில் வந்து பிறக்கிறார்கள் என்பது என் மதியில் உணர்ந்த பொருள். சிக்னல் விழுவதற்குத் தக்கபடி ஒரே தண்டவாளத்தை வெவ்வேறு ரயில்களுக்கு மாற்றி வளைத்து வழி செய்வதைபோல்தான் இதுவும். இப்படியிருக்க அதே முகமும் உருவ ஒற்றுமையும் ஒவ்வொரு பிறவியிலும் வருமா என்பது நம்பும்படி இல்லையே என்று நானே நினைத்ததுண்டு. ஆனால் அது அப்படித்தான் என்பது பாலக்காடு பகவதி கோயிலில் தெரிந்தது. இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.
பல வருடங்களுக்குமுன் தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் மகள் திருமதி.அருணா அவர்கள் அளித்த பேட்டியில், ஒரு முற்பிறவியில் தான் அக்பரின் மனைவி ஜோதாபாய் என்பதை டிவி நிகழ்ச்சியில் உறுதியாகச் சொன்னதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். வடநாட்டுப் பெண்ணான இவரை சிறு வயதிலேயே ஆதித்தனார் தன் மகளாக சுவீகாரம் ஏற்றார். அவர் தன் பிறந்த வீட்டு நபர்களுடன் சுற்றுலா போனபோது, ஃபதேபூர் சிக்ரியில் தான் வாழ்ந்ததாகவும் அக்பர் பாதுஷா தனக்காகத்தான் ஜோதா மஹால் கட்டித் தந்தார் என்றும் சொன்னார். அதை அப்போது யாரும் நம்பவில்லை.
பிறகு டிவி குழு இப்பெண்மணியை அங்கு அழைத்துச் சென்றது. அங்கு அரண்மனையில் ஒவ்வொரு இடத்திலும் நின்று தேம்பித் தேம்பி அழுதார். திடீரென டூரிஸ்ட் guide யிடம் ‘நான் அங்கு பிரசவித்த நினைவு வருகிறது, இப்போது அது என்ன இடம்?’ என்று கேட்டறிந்தார். காலவோட்டத்தில் அது கொத்தளம் குளியலறை என்று மாறியதாக ஏதோ ஹிந்தியில் சொன்னார். உள்ளே ஆங்காங்கு வண்ணச் சித்திர வேலைப்பாடுகள் நிறைய இருந்தது.
அருணா அவர்கள் கல்லூரியில் படிக்கும்போது மாறுவேடப் போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்றாராம். அப்போது அவரது சிறுவயது புகைப்படத்தைக் காட்டினார்கள். அதோடு ஃபதேபூர் சிக்ரி கோட்டையின் சுவற்றிலுள்ள ஓவியத்தையும் காட்டினார்கள். என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. இவருடைய முகம் அச்சு அசலாக அங்கு ஓவியத்தில் இருந்தது. இப்போது இவருக்கு வயது கூடியுள்ளதே தவிர அதே முகம்தான். இது எப்படி சாத்தியம் என்று அப்போதே என்னுள் கேள்வி எழுந்தது. ரஜபுத்திர ராணி ஜோதா பாய்க்கும், இந்த அருணாக்குவும் ஐந்து நூற்றாண்டுகள் இடைவெளி. ஓர் ஆன்மா தன் ஓட்டத்தை முடித்துக்கொண்டு விடுதலையாகும் வரை அந்த முகச்சாயலுடன் தொடர்கிறது என்பது என்னுடைய புரிதல். இக்கருத்தை நிராகரிப்போரும் உண்டு.