About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 31 ஜூலை, 2017

ஒ... அப்போ வணங்கலாமா?

'படமும் பதிவும்' பகுதியில் ஹோமத்தீயில் ஷிர்டி சாய்பாபா பற்றி அண்மையில் பதிவிட்டேன். அதில் சிலருக்கு சந்தேகம் உள்ளது. அவர் சித்தரா, கடவுளா? ஒரு முஸ்லிம் துறவியை இந்துக்கள் வணங்குவது முறையா? இதுபோன்ற அந்நியமத மனிதரை  வழிபட்டால் அடுக்காது, என்று எண்ணங்களைக் கொண்டோர் இன்னும் உள்ளனர். ஆனால் இவர்கள் secular, integrity என்று சமத்துவக் கொள்கை பேசுவார்கள்.


போகர் ஒரு சித்தர் என்ற அளவில்தான் தெரியும். ஆனால் அவரே தன் முந்தைய  அவதாரங்களில் பிரம்மன், திருமால், முருகன், இந்திரன், ராமன், கிருஷ்ணர்,  நபி என்று இருந்ததாக அவருடைய பாடல் மூலம் அறிந்தோம். இதிலிருந்து என்ன தெரிகிறது?

கலியுகத்தில் கடவுள் நேரடியாக பல கைகள், முகங்கள் கொண்டு அவதரிப்பதில்லை. ஏதோவொரு மதத்தில்  மனிதனாகவே பிறப்பெடுத்து தெய்வீக நிலையை அடைந்து சமாதிக்கு செல்வதுதான் வழக்கமாக  இருந்துள்ளது. அப்படித்தான் சித்தர் போகர் பல அவதார பிறப்புகளை எடுத்தார், எடுத்து வருகிறார்.

கலியுகத்தில் பல மகான்கள் அத்திரி மகரிஷியிடம் வளர்ந்து கல்வி பயின்று ஞானம் பெற்று உயர்நிலையை அடைந்துள்ளனர். அநேகமாக அவர்தான் care taker /guide ஆக இருந்துள்ளார் என்பது ஸ்ரீவீரப்பிரம்மேந்திரர் வாயிலாக அறிகிறோம். போகரே எண்ணற்ற உருவங்களையும் ஜெனனங்களையும் எடுத்து கலியுகத்தில் தொடர்ச்சியாக இருந்துகொண்டே இருக்கிறார். உலகின் பிடிமானத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

ஷிர்டி சாய்பாபாவின் இயற்பெயர் என்ன, பெற்றோர் யார், என்ற விவரம் இதுநாள்வரை அறுதியிட்டு சொல்லும்படி இல்லை. ஒரு நூற்றாண்டாக இப்படித்தான், அப்படித்தான் என்று ஒருவாறு 'சாயி சரித்திரம்' சொல்லபட்டாலும், அது மர்மமே!

அவர்தான் மும்மூர்த்தி ஸ்வரூபமான தத்ராத்ரேயரின் அவதாரம். மும்மூர்த்தி என்றாலே அதில் போகரும் சம்பந்தப்டுகிறார், அல்லவா? பாரதம், அரேபியா, சீனா என்று எல்லா தேசங்களிலும் குரு போகரம்-சீடர் புலிப்பாணியும் அதே உறவு முறையிலேயே பல்வேறு வேடங்கள் ஏற்று வந்துள்ளனர். இதை பழைய பதிவில்கூட விளக்கமாகப் பார்த்தோம்.

ஷிர்டி மகான், குணங்குடியார் போன்றோர் முஸ்லிம் துறவி  என்றால், நபியாக இருந்த போகரும் முஸ்லிம்தானே? இவரை மட்டும் பதினெட்டு சித்தர்களில் பிரசித்தமாக சொல்கிறோமே? அப்போ இதுவும் தவறுதானே?

எல்லா மதங்களிலும் இவர் ஜெனனம் எடுத்து அந்தந்த சமயத்தவர்களை நல்வழிப்படுத்தி வருகிறார். சிலுவைக்காரனும்  போகனே என்கிறார் அகத்தியர். ஆனால் தீவிரவாதமும், மதமாற்றமும் மட்டுமே நம் கண்களுக்குப் படுவதால் நபியையும், ஏசுவையும்  வெறுப்புடனே  பார்க்கிறோம். கலியுக தோஷங்கள் என்பது அந்த மதத்தவர்களிடமும் உண்டு. ஆனால்  முஸ்லிம் போகரையும், கிறிஸ்து போகரையும் நாம் ஏற்பதில்லை.

ஆகவே, ஷிர்டி சாய்பாபா அந்த ஹோமத்தீயில் வெளிப்பட்டு அருளினார். நாம் இதுகாறும் சிலையில், ஓவியங்களில் பார்த்த  உருவத்துடன்தான் தெய்வங்கள் தீயில் வெளிப்பட்டது நம் சந்தேகத்தை தீர்ப்பதற்காகவே!

சனி, 29 ஜூலை, 2017

வெள்ளி, 28 ஜூலை, 2017

தாவரங்களே சாட்சி.


முதல் சங்க நூலான பெரும்பாணாற்றுப்படையில் பதிவாகியுள்ள தாவரங்கள், உயிரினங்கள் நமக்கு வியப்பைத் தரும். கடம்பம், இலவம், கமுகு, ஈந்து, காஞ்சி, கொன்றை, தென்னை, தேக்கு, தாழை, பலா, பனை, புன்னை, மருதம், மா, மூங்கில், வாழை, வேம்பு, வேங்கை, கறிவேப்பிலை என்று இன்னும் எத்தனையோ உள்ளது.
ஆனால், பல தாவரங்களும் மரங்களும் நம்மூரில் சர்வ சாதாரணமாக வளரும் பண்பு கொண்டது. ஆனால் அவை எல்லாம் மடகாஸ்கர் நிலப்பகுதி பயிர்வகைகள் என்று புத்தகத்திலும் Native species கீழ் போட்டிருக்கும். அதெப்படி அந்த ஊர் பெயர் உள்ளது. அப்படிபார்த்தால் அங்கிருந்து பல வகைகள் இங்கே எப்போது கொண்டுவரப்பட்டது? ஆனால் பழம் நூல்களிலும், புராணங்களிலுமே இந்த தாவரம் மற்றும் பழ வகைகளின் பெயர்கள் உள்ளதுவே. இதில் எங்கோ இடிக்கிறது என்று நினைப்பீர்கள்.
ஆம், அண்மைப் பதிவில் தென்னாட்டு நிலப்பகுதி (குமரிக்கண்டம்) பற்றி பார்த்தோமே, அந்த நிலப்பகுதியைச் சேர்ந்ததுதான் இன்றைய மடகாஸ்கர் Madagascar. உலகின் மொத்த தாவரங்களில் சுமார் 70% வகைகள் இந்த நாட்டைச் சேர்ந்தது என்று ஆங்கிலேய ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளார்கள். அவர்களுக்கு நம் குமரிக்கண்ட தொன்மை பற்றி அன்றைய காலகட்டத்தில் தெரிந்திருக்க ஞாயமில்லை. அப்படித்தான் சுற்றுப்புறத்து தீவுகளில் உள்ள பழங்குடியினரின் மொழியில் தொன்மை தமிழ் சொற்கள் இன்றும் இடம்பெற்றுள்ளது.
Image may contain: plant, flower, outdoor and nature

தென்னாட்டு நிலப்பகுதி


பல மில்லியன் வருடங்களுக்கு முன் பூமித்தட்டுகள் நகர்ந்து போயுள்ளது நாம் அறிந்ததே. ஒரு பெரிய நிலப்பகுதி பிய்த்துக் கொண்டுபோய் தனி கண்டங்களாக உருவாவது இப்படித்தான்.
ஆனால், இதுபோன்றவை நீளமாக இழுத்துக் கொண்டு பிரிந்து போனாலும், தட்டுகளின் பருமன் குறைவது இயற்கையே. (பரோட்டா மாவு உருண்டையை இழுத்து இழுத்து சன்னமாக்குவது போல!). இதுபோன்ற அசைவுகள் அவ்வளவு எளிதில் பிளவு படுமா என்றால் இல்லை. ஏன்?
நம் ஆழமான இந்து மகாசமுத்திரத்தின் அடியில் ஆகர்ஷன சக்தி மிக அதிகம் என்பது ஆய்வில் தெரிந்துள்ளது. சேது பாலமே இன்னும் குலையாமல் அப்படியே இருக்கிறது என்றால், லெமுரியா (எ) குமரிக்கண்டமும் அப்படியேதானே இருக்க வேண்டும்? பாலம் முற்றிலும் கற்பாறைகளால் ஆனது என்பதால் பேரிடர்கள் ஏதும் செய்யவில்லை. ஆனால் குமரிக் கண்டம் நிலப்பகுதியில் பல கட்டுமானங்கள் நிலை குலைந்து போயிருந்தாலும், அவை அங்கேதான் இருக்க சாத்தியங்கள் உண்டு. செயற்கைக்கோள் மூலம் நிலத்திட்டுகளை கண்டு கொள்ளலாம்.
படத்திலுள்ளபடி, தென்னாடுடை பகுதியான குமரிக்கு கீழேவரை பரந்துபட்ட நிலப்பகுதி தான் குமரிகண்டம். இராமாயண காலத்திற்கு முன்னரே இதை கடல் கொண்டிருக்கும். இது தென்மேற்கே, மடகாஸ்கர் வரையிலும் தென்கிழக்கே ஆஸ்த்ரேலியா வரை போயிருக்க சாத்தியங்கள் உண்டு. சில பலவீன தட்டுகள் கீழே துருவப்பகுதி வரை நகர்ந்து போயிருக்கும்.
போகர் பாடல்களில் தக்ஷிணத்தின் (தென்னாட்டு) தென்கிழக்கே நிறைய அக்னிமலைகள் / குன்றுகள், இருந்துள்ளன என்பதை பழைய பதிவுகளில் பார்த்தோம். அதுபோக, முதல் /இரண்டாம் சங்க நூல்களில் நிறையவே ஆதாரங்கள் உள்ளன. அது நம் மூதாதையர் நிலம். காலத்தின் கோலத்தில் நாம்தான் புலம்பெயர்ந்துள்ளோம். ஆகவேதான், அந்த தென்னாட்டு பரம்பரையினரை 'தென்புலத்தார்' என்று பெயரிட்டு வணங்குகிறோம்.
ஆகவே, இன்று கீழடி போல் நிறைய நாகரிக ஊர்கள், மீனாட்சி பட்டணத்தை மையமாககேக்கொண்டு இருந்திருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இப்படியே, தோண்டிக்கொண்டு போனால் கீழடி புறநகர் தாண்டி புது குறிச்சிகள், பட்டணங்கள் என்று கணக்கின்றி வெளிபட்டுகொண்டு வரும். இது எதை காட்டுகிறது? தமிழர் நாகரிகம் முடிவற்ற தொடக்கத்தைக் கொண்டது என்பது விளங்கும்.
ஆனால் இதில் அச்சுறுத்தலான ஒரு சிக்கலும் வரும்.. சென்னை (பல்லாவரம்) அனகாபுத்தூரை தொல்லியல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த மாதிரி கீழடிசுற்றுப் பகுதிகளிலும் நடக்கும். அதுவே அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். இது நல்லதல்ல.

வியாழன், 27 ஜூலை, 2017

கீழடி ஆய்வு.


சுமார் 2200 ஆண்டுகள் பழமையானது என்று சொல்லப்படும் மதுரையின் சங்க காலத்தில் இது பெரிய ஊராக இருந்துள்ளது. அங்கே விஸ்வகர்மா மயன் தலைமுறையினர் இருந்து, ஊர்கட்டுமானம் முதலான அனைத்து தொழில்களையும் இக்காலத்து முன்னேறிய நாகரிக அளவுக்கு செய்தனர்.
இதற்கென்ன சான்று? அங்கு வாஸ்து அமைப்பில் சதுர வடிவ கட்டுமானங்களே கண்டெடுக்கப்பட்டும், ஊரின் அமைப்பும் ஏறக்குறைய சதுர சந்திப்பு சந்துகளை பெற்றிருந்தது என்று தெரிகிறது. திரிகோண வடிவியல், புவிகணித பண்டிதம், ஸ்தபதிய முறைகள், உலோக உருக்கு மற்றும் தொழிற்கூட உத்திகள், வைத்திய கருவி கரணங்கள், போன்றவை பயன்பட்டது.
அடுக்குமாடி கட்டிடங்கள் (G+1), புழங்கும் அறை (hall/room), சமையற் கூடம், புகைபோக்கி, குளியல்-கழிப்பறை, கழிவுநீர் வெளியேற சுடுமண் குழாய்கள், நாட்டு சொருகோடு, பத்தாயம், அடித்தளம், என்று சகலமும் இருந்துள்ளது. இத்தனையும் இருந்த அன்று மின்சார வசதியும் இருந்திருக்காதா என்ன? பல்பு இருந்ததா இல்லையா என்று தெரியவில்லை! (சிலப்பதிகாரம்- ஊர்காண் காதை பகுதியில் மதுரை அல்லங்காடி இரவுநேர சந்தை வீதிகளில் தீப்பந்தங்கள்தான் கம்பத்தில் இருந்தது என்று தெரிகிறது.) ஆனால் Circuit பின்னல், dielectric, glass, electroplating, welding, gases, composition, என்று சகலமும் அன்றே இருந்துள்ளது என்பது அகத்தியர்/ போகரின் பாடல்களில் உள்ளது.
சதகும்ப முறையில் அகத்தியரின் battery அங்கே நிர்மாணம் செய்யப்பட்டு எல்லா பொன், இரும்பு பட்டறை தொழில்களுக்கும் சுமார் 160 volt DC மின்சாரம் பயன்பட்டிருக்கும். நாம் சற்றும் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் ஊர் திகழ்ந்து, வளர்ந்து, செழித்து, வேரூன்றி, புதைந்து அழிந்தது. தமிழும் வடமொழியும் பயன்பாட்டில் இருந்துள்ளது என்பதற்கு பானையின் ஓட்டின் மீது வடிக்கப் பட்டிருக்கும் சொல்லே சான்று (படத்தைக் காண்க).

உடைந்த பானை, வளையல், ஊசிமணி, இரும்பு, வெண்கலம், சுதை பொருள்களை மட்டுமே வைத்துக்கொண்டு இதெல்லாம் routine findings தானே என்று குறைவாக மதிப்பிட வேண்டாம்.
குமரிக்கண்டம் எப்படி இருந்திருக்கும் என்பதற்கு கீழடி, ஒரு சோறு பதம். சித்தர்களின் நூலில் இதன் சுவடு எங்கேனும் கண்ணில் படுகிறதா என்று நானும் பார்கிறேன்.

புதன், 26 ஜூலை, 2017

சும்மா... 1

இந்த வாரம் நான் பதிவிட்ட கருத்துப்படங்கள் (Illustration)


















திங்கள், 24 ஜூலை, 2017

திரணாக்கிய முனிவர்

நேற்றைய பதிவில் திருவள்ளுவரைப்பற்றி பார்த்தோம். இன்று திரணாக்கிய முனிவர் பற்றி காண்போம். ஆமா, இவன் என்ன புதுசா சொல்லப் போறான்? என்று நீங்கள் நினைக்கலாம். சித்தர் போகர் உரைத்த பாடல்களின் வாயிலாக கண்டறியபட்டதை மட்டுமே இங்கே இடுகிறேன்.
போகர் எழாயிரத்தை தன் சீடர் புலிப்பாணிக்காக இயற்றினார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதில் ஒவ்வொரு சித்தரைப் பற்றி பல குறிப்புகள் தருகிறார். அவருக்காக உரைத்ததை நாமும் அறிந்து கொள்வோமே!
ஜமதக்னிக்கும் குறத்திக்கும் பிறந்த புத்திரனான திரணாக்கிய முனிவர் தமிழ்ச் சங்கத்தில் இடம் பெற்றவர். 'பிரதிலோமன்' என்றால் தந்தை உயர்குடி, தாய் தாழ் குலம். இவர் சமணம் தழுவியவர். (போகர் ஜாதி பற்றி சொன்னதற்காக என்னிடம் சண்டைக்கு வராதீர்!) அவருக்கு தலைமுறைகள் பதினேழு, அவர் வாழ்ந்த காலங்கள் தொள்ளாயிரத்து எண்பது ஆண்டுகள், அவ்வப்போது பல நூறாண்டுகள் சமாதியில் இருந்துவிட்டு வருவதுண்டு. அதுபோல் மொத்தம் இருபத்திரண்டு முறை சமாதியில் இருந்துவிட்டு வந்தார். அப்படிப் பார்த்தால் மொத்த காலங்கள் பல்லாயிரம் வருடங்களைத் தாண்டும்.
இவருடைய ஆத்மார்த்த சீடன்தான் சமால்தனி முனிவர். திரணாக்கியருக்கு பத்தாண்டுகளாக இருந்த தலைநோவை அகத்தியரிடம் சங்கப் புலவர்கள் எடுத்துக் கூற, அகத்தியர் தன் சீடர் பொன்னுரங்கனோடு (தேரையர்) சென்று தீர்த்து வைத்தார். திரணாக்கியரின் பேரன்தான் வரரிஷி. பின்னாளில் 'அகத்தியம்' என்ற இலக்கண நூலுக்கு அடுத்தபடியாக தொல்காப்பியம் இலக்கண நூலை தந்ததும் திரணாக்கியரே.
போகர் பாடலின்படி அவர் சமணத்திற்கு மாறும் வரை வேறு என்ன நூல்கள் எல்லாம் செய்தார் என்று இங்கே தெரியவில்லை. 'பிரபுலிங்க லீலை' என்ற நூலை இயற்றினார் என்று சொல்கிறார். ஆனால் நாம் கேள்விப்பட்ட வரை இது சிவபிரகாசர் இயற்றிய நூல். திரணாக்கியர் வேறு என்ன பெயர்களில் இயற்றினார் என்று போகரின் நூலில் அறியமுடியவில்லை.
இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், இவரை சமணர் என்று சொன்ன போகர், திருவள்ளுவரை அப்படிச் சொல்லவில்லை. வள்ளுவ குலம் என்று சொல்லியுள்ளார். திருக்குறளில் சைவ சமய சுவடு மறைப்பாக இருப்பதால் பிற்காலத்து ஆய்வாளர்கள் திருவள்ளுவரையும் சமணர் என்று முத்திரை அடித்து, இன்றுவரை அதையே ஏற்றுள்ளோம். ஆக, ஔவையார் போன்ற சித்தர்கள் ஆங்காங்கே சைவ சமய நூல்கள் பற்றி குறிப்புகள் தந்ததால் திருவள்ளுவர் சமணர் அல்ல என்று தெளிவடைந்தோம்.

Image may contain: text

ஞாயிறு, 23 ஜூலை, 2017

நானும் வாங்கி வெச்சிருக்கேன் !

என் நண்பர் ஒருவர் தேடிப்பிடித்து சைவ சமய நூல்கள் பலதை விருப்பமோடு வாங்குவர். அவருடைய அலமாரியில் பல நூல்கள் கண்ணாடிக்குப் பின்னே வண்ணமயமாகத் தெரியும்.
நான்: 'இதெல்லாம் எப்போ வாங்கினீங்க?'
அவர்: 'ஒவ்வொரு புத்தக கண்காட்சில தள்ளுபடில வாங்கிட்டு வந்து வெச்சேன்.'
நான்: 'வாங்கி வெச்சீங்க சரி... அதைஎல்லாம் முழுசா படிச்சிட்டு வெச்சீங்களா?'
அவர்: 'அதுக்கு எங்க நேரம்? ரெண்டு பக்கம் படிகிறதுகுள்ள தூக்கம் வருது. இப்போ ஏதும் அவசரம் இல்லை. வயசானபின்தான் பொறுமையா இதெல்லாம் படிக்கணும்'
நான்: 'இப்போவே முடியலையே.. வயசானபிறகு என்னத்தைப் படிப்பீங்க? கண்ணு கேட்ராக்ட், பீபி, சுகர், ஞாபக மறதி எல்லாம் வந்திடுமே.!'
அவர்: 'அதை நான் படிக்கணும்னு இருந்தா அவன் படிக்க வெக்கமாட்டானா?'
நான்: 'ஆமாம். நிச்சயமா.'
எனக்குத் தெரிந்து பலபேரிடம் பல சித்த நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டு அலங்காரமாக உள்ளது. கைக்கு எட்டும் தூரத்தில் எல்லாம் இருந்தும் படிக்க பிராப்தம் இல்லை. ஆனால் முகநூலில் நேரம் செலவழிக்க அவர்களுக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. வயதானபின் நோய்நொடி வந்தபின் அவசர அவசரமாக அதை எப்படியேனும் இந்த ஜென்மத்தில் ஒரு முறையேனும் புரட்டிட வேண்டும் என்ற ஒரு வேகத்தில், மனம் ஈடுபடாமல் சும்மா படிப்பவர்கள் உண்டு.
'இளமையில் கல்' 'முதுமையில் கற்பி'. பிரம்மக்ஞானம் அடைய வேண்டுமென்றால் அதை இளம்வயதில் பெற்றால்தான் உண்டு. பணியோய்வு பெற்றபின் படிக்கலாம் என்று யோசித்து செயல்படுவதற்குள் மூச்சுக்கு ஓய்வு கொடுத்து விடுவதற்கும் சாத்தியம் உண்டு.

Image may contain: 3 people

வெள்ளி, 21 ஜூலை, 2017

அருள்தரும் தெய்வம்

இன்று ஆடிவெள்ளி. இன்றுதான் முதன்முதலாக எங்கள் குலதெய்வத்தைப் போற்றிப்பாட அவள் அனுமதித்தாள்.



சித்தர்களும் ஜாதிகளும்

விராட் விஸ்வகர்மா பஞ்சமுகத்தில் மயன் மூலம் ஐந்தொழிலைப் படைக்கும் போதே, பிரம்மனின் சத்யோஜாத முகத்திலிருந்து /தோளிலிருந்து/ தொடையிலிருந்து/ பாதத்திலிருந்து ஏனைய வர்ணங்களையும் உபதொழில் சார்ந்த பிரிவுகளையும் சிருஷ்டித்தார். அதை பழைய பதிவுகளில் நாம் பார்த்தோம். ஆனால் என்னென்ன குலங்கள் பல யுகங்களுக்கு முன்பே இருந்தது என்பதை, சப்த காண்ட பெருங்காவியத்தில் போகர் ஒவ்வொன்றாக பார்த்துச் சொல்லியுள்ளார்.

பல சித்தர்களின் பிறப்பு ரகசியம், பெற்றோர், நட்சத்திரம், கோத்ரம், ஜாதி /மரபு, பூமியில் வாழ்ந்த ஆயுள் காலம், சமாதியில் இருந்த காலம், எத்தனை தலைமுறைகள் என்று பல்வேறு விஷயங்களை கூறியுள்ளார். தான் விஸ்வகர்மா-பொற்கொல்லர் என்கிறார். இதில் ராமதேவர் (எ) யாக்கோபு மட்டும் குலம் மாறி துலுக்கர ஆனார். சித்தர் திருவள்ளுவரின் (வள்ளுவ) ஜாதி என்ன என்பதை அவருடைய நூலே சொல்லும் என்கிறார். அவை என்னென என்பதை படத்தில் காண்க. இவ்வளவு ஜாதிகளா? இதில் சில சித்தர்களின் ஜாதி விவரம் தந்துள்ளேன். இது முழு பட்டியல் அல்ல. ஹும்ம்.. இப்போவே கண்ண கட்டுதே!

அக்காலங்களில் யார் வேண்டுமானாலும் எந்த வர்ணத்தவராகவும் ஆகலாம் என்ற நிலை system இருந்தது. பிராமணனாக வேண்டும் என்றால் என்ன நியம இயமங்கள் வேண்டும் என்று திருமந்திர (பா.1665) பாடலில் திருமூலரே நன்கு சொல்லியுள்ளார். நூலையும், சிகையையும் பற்றி அறியாதோர் மூடர்களாக இருக்கட்டும் என்று சாடுகிறார். ஜெனன சாகரத்தில் இக்கோட்பாடை போகரும் உறுதி செய்துள்ளனர், காயத்திரி மந்திரத்தின் மேன்மையையும் உரைத்துள்ளார். வேத வியாசர், வால்மீகி காலத்தில் மறை பின்பற்றப்பட்டது. ஆனால் இவையெல்லாமே ஆரியர் கலாசாரம் என்று இதுகாறும் திராவிடர்கள் முழங்குகிறார்கள். அப்படி என்றால் அகத்தியர் போகர் காலத்தில் இதுபோன்ற நியமங்களைக் குறிப்பிட்டு முக்கியத்துவம் தந்திருக்கக் கூடாதே!

பிராமணர் என்றாலே ஆரியர் என்று பொருத்தி விட்டோம். Aryan invasion என்பதை கலியுகத்தின் பாதிக்குப்பிறகுதான் சொல்கிறோம். ஆனால் பஞ்சபிரம்ம தத்துவம் இதை பொய்யாக்குகிறதே. நாம் நினைப்பது தவறு என்பதை விஸ்வப்பிரம்ம புராணம் காட்டுகிறது. இதை மறுப்போர் பலருண்டு.

ஆக, ஜாதிகள் எல்லாம் நாம் நினைத்தபடியோ திராவிடகட்சிகள் பிரச்சாரம் செய்வது போலவோ பிராமண சூழ்ச்சியால் வரவில்லை என்பது நன்கு விளங்குகிறதா? இதெல்லாம் அன்றே இருந்துள்ளது என்பது புலப்படுகிறது.



வியாழன், 20 ஜூலை, 2017

எல்லோருமே பிராமணனாக வேண்டுமா?

போகர் ஜெனன சாகரம் என்ற நூலில் 'ஜகன்னாதர் உற்பவம் கூறல்' என்ற பகுதியில், 'ஆறுமுகன்' முருகன் எப்படி தன்னை  பாண்டவர்கள் + கிருஷ்ணர் என்று மாற்றிக்கொண்டார் என்பதை விவரிக்கிறார்.

வேதங்கள் பற்றியும் அதன் முக்கியத்துவம் குறித்தும் போகர் சொல்கிறார். அகத்தியர் போகர் இருவருமே  சிருஷ்டித்த  தத்தம் புதலவர்களுக்கு என்னவெல்லாம் பாரம்பரிய கிரமப்படி செய்தார்கள் என்று விவரிக்கிறார்.

குண்டலினி சக்தியானது மூலத்திலிருந்து மேலெழும்பி  கபால தளத்தில் மேல்நோக்கிட பிரம்மோபதேசம் செய்தார் என்றும், அவனுக்கு மொட்டை அடித்து சிகை வைத்து, பூணூல் போட்டு, காயத்ரி ஜெபிக்க கற்றுத் தந்ததையும் சொல்கிறார்.

இதை எதற்குச் சொல்கிறேன்? அகத்தியரும் போகரும் பிராமணர்களா? வேளாளரும் விஸ்வகர்மாவுமான இவர்கள் இந்த உபநயனம் பற்றி சொல்கிறார்கள் என்றால், யுகங்களாக நம் தேசத்தில் பிரம்மத்தை அறியும் வழியை எல்லா வர்ணத்தவர்களுமே கடைபிடித்தனர் என்று தெரிகிறது அல்லவா?

இது optional எல்லோருமே பிரம்மத்தை உணர வேண்டும் என்ற நியதி இல்லை. பிராமணனாக வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் அதற்கான பயிற்சி எடுக்கவேண்டும் என்று புலப்படுகிறது. ஆக இந்த கோட்பாடுபடி  ஒரே குடும்பத்தில் எல்லா வர்ணத்தினர்களும் இருக்கலாம் . அல்லவா? இப்படி எல்லாம் flexible லாக அன்று இருந்துள்ளதை நினைத்தால் நமக்கு ஆச்சரியமாக இருக்கும்.

ராணுவம் போலீஸ் போன்ற துறைகளில் சேரவேண்டும் என்றால் உடற்கட்டு விளையாட்டு என்று தகுதி இருந்தால்தானே போகமுடியும்? அப்படித்தான் வாசிக்கால் கைகூட 'இடகலை-பிங்கலை-சுழுமுனை' என்பதை சிரசில்  தக்கவைத்திட போதிய பயிற்சியே இந்த உபநயன-பிராணாயாம -வாசியோக முறையில் வருகிறது என்பதற்கு இந்த பதிவை இட்டேன்.

இன்று பூணூல் போட்டவர்கள் எல்லோருமே தன்னுள் பிரம்மத்தை உணர்ந்து யோக்கியமாக இருக்கிறார்களா? என்னிடம் பதில் இல்லை. hahahah!

புதன், 19 ஜூலை, 2017

உபநயன சடங்கு எதற்கு?

'நான்தான் பிரம்மன்' என்பதை இரகசிய மந்திர உபதேசம் மூலம்   உணர்த்தப்படும். யஞகோபவீதம் என்ற பவித்திர முப்பிரி நூலை அணிவிக்கும் உபநயன சடங்கில் அவன் பிரம்ச்சரியம் ஏற்க   தீட்சை வழங்கப்படுகிறது. முற்காலத்தில் எல்லா வர்ணத்தவர்களும் அணிந்தனர். இக்காலத்தில்தான் அது தேய்ந்துபோய் விஸ்வகர்மர், மற்றும் பிராமணர், ஷத்ரியர், வைஸ்யர் அளவில் நின்றுவிட்டது.  'அஹம் பிரம்மாஸ்மி' என்பதை எப்படியோ உணர்ந்தால் சரி.

பூணூலில் உள்ள முடிச்சை 'பிரம்மா முடிச்சு' என்பார்கள். அதில் மிகசிறிய (கிருஷ்ணாநிஜம்)  மான்தோல் செருகி இருப்பார்கள். அவன் இடுப்பில் மரவுரி (மௌஞ்சி) அணிவித்து கையில் தக்க மரகிளை தண்டம் தந்து பிரம்மச்சரிய கோலம் தருவார்கள். இக்காலத்தில் இது ஒரு நாள் கூத்து என்ற அளவில் மட்டுமே!

எப்போதும் அணிவது போய், ஆவணி அவிட்டம் அன்றுமட்டும் அணியும் அளவுக்கு வந்துவிட்டது. அதனால்தான் எந்த ஜாதியாக இருந்தாலும், மணமகனுக்கு திருமணத்தின் போது பூணூல் அணிவித்தபின்தான் மணப்பெண்ணுக்குத் தாலி கட்டசொல்வார்கள். கெட்ட காரியத்திற்குமட்டும் அனைத்து பிரிவினரும் வலமிருந்து இடமாக பூணூலை மாற்றி அணிந்து செய்வார்கள்.

முற்காலத்தில் சிறுவர்,சிறுமியர் என்று எல்லோருக்குமே 10 வயதுக்குள்ளாகவே இதை நடத்தினார்கள் என்கிறது புராணம் வாயிலாக தெரிகிறது.  ஒருவன் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும் முன், தன்னுள் இருப்பது எது என்ற  புரிதலில் இருந்தே அந்த அனுபவத்துடன்தான், வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும்.  இப்போதெல்லாம் 30-40 வயது வரை சமயம் சார்ந்த பக்திநெறி ஏதும் தேவையில்லை என்று பெற்றோர்களே தீர்மானித்து விடுகிறார்கள். 'இப்போவே அதெல்லாம் தெரிஞ்சு சாமியாராகப் போறியா?' என்று கேட்பார்கள். அப்படி ஆகவேண்டும் என்பது எல்லோருக்கும் வாய்க்காது.

'பள்ளிக்கூட படிப்பை படிக்கும்போதே இதையும் சேர்த்து கத்துக்கணும். பிறகு வேலை, குடும்பம், வயோதிகம், நோய் என்று ஆனபின் எங்கிருந்து இதை படித்து தெரிந்துகொள்ள நேரம் கிடைக்கும்? 'தோடுடைய செவியன்..' என்று பாடும் அளவுக்கு ஞானசம்பந்த பெருமானுக்கு அப்படி என்ன வயதாகி விட்டது? பால்குடித்த ஒரு மூன்று வயது குழந்தை செய்யும் வேலையா இது? 'ஆஹ்... அது ஞானக் குழந்தை, எதுவும் செய்யும்' என்று உடனே சப்பைக் கட்டு பதில். அப்போ அதை நாம் செய்யக்கூடாதா? செய்தால் தவறா?

சரி.. கலியின் காலப்போக்கில்  ஏன் சிறுமிகளுக்கு பூணூல் போடுவது நின்றுபோனது? ஏனென்றால்... அவர்கள் காயத்ரி மந்திரம் ஜெபிக்கவேண்டும்... அப்படி ஜெபித்தால் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும். இது அவர்களுடைய பருவத்திற்கு உகந்தது அல்ல என்று கைவிட்டிருக்கவேண்டும். இது என் கருத்து.

அய்ய..அது எப்படி சூடு வரும்.. அப்படி என்ன அந்த மந்திரத்தில் இருக்கு?

"ஓம்: பூர் புவ  ஸுவ, தத்ஸ விதுர்வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, த்யோ யோ ந:  ப்ரசோதயாத்"   இதுதான் காயத்ரி மந்திரம். 'ஓங்காரப் பொருளாய்  மூன்று உலகங்களிலும் நிறைந்து விளங்கும் எவரோ, அறிவாற்றலைத் தூண்டி அனைத்தையும் படைகின்றாரோ, அவிறைவனை ஜோதி வடவமாய் தியானிப்போம்' இதுதான் காயத்ரி மந்திரத்தின் பொருள்.

காயத்திரி மந்திரம் சொல்லி உரு ஏற்றி வரும்போது அகவொளிச் சுடர் சுயம் பிரகாசமாய் வளரும். அது புறத்தே முகத்திலும் கண்களிலும் ஒரு தேஜஸ் தரும்.   லட்சம், கோடிகள் என்று உரு ஏற்றிய முதியவர்கள் இருக்கிறார்கள். அப்போது அவர்கள் வாக்கில் அவளே வந்து அமர்ந்துவிடுகிராள். அவரே பூரண பிரம்மமாக மாறிவிடுகிறார். மனிதனிடம் இயல்பாக காணப்படும் பேராசை பொறாமை ஆத்திரம் வெறுப்பு போன்றவை இவர்களிடம் இருக்காது. அமைதியாக தனித்தே ஒட்டாமல் இருப்பார்கள்.

இன்று ஓரளவுக்கு இந்த பதிவு உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

Image may contain: 1 person, sitting

மேருமலையில் நூலகம்

நமக்குத் தெரிந்து மயன் காலத்தில் இயற்றப்பட்ட எண்ணிலடங்கா நூல்கள் எல்லா தலைப்புகளிலும் இருந்துள்ளது. இயற்கையின் மாற்றங்களும் அழிவுகளும் நேரும்போது அவை பாதிப்புக்குள்ளானது. தொன்மை காலத்தில் கபாடபுரம், தென்மதுரை,  ஆகிய நகரங்களில் முச்சங்கம்  நடந்து. அங்கு அறிமுகமான பல நூல்களில் சிலதைச் சொல்கிறேன்.

முதல் சங்க நூல்கள்: - அகத்தியம்-1, ஐந்திறம், பிரணவ வேதம்
இரண்டாம் சங்க நூல்கள் :- அகத்தியம்-2, தொல்காப்பியம், ரிக்/ யசுர்/சாம/அதர்வ வேதங்கள், வால்மீகி ராமாயணம், கம்பராமாயணம்
மூன்றாம் சங்க நூல்கள் :- சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள், சீவக சிந்தாமணி, நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல் அகநானூறு, புறநானூறு,  போன்றவை.

ஆனால் தொல்காப்பியத்தில் வடமொழி பற்றிய மேற்கோள் வருகிறது. இந்த காலகட்டத்தில்தான் பல இலக்கண, அறிவியல், கலை, ஐந்திறமைகள் மற்றும் வேதங்கள் சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது புலப்படுகிறது . முதல் சங்கத்திற்கு முன்பே எழுதப்பட்ட நூல்கள் தென்மதுரை & கபாடபுரத்தில் அரங்கேற்றம் ஆகியிருக்கும். அதன்பிற்பாடு பேரிடர்கள் வந்து எல்லாமெ கொள்ளப்பட்டது. ஒவ்வொரு முறையும் சித்தர்களின் சீடர்கள் பிரதி எடுத்தும் வீணானது என்பது தெரிகிறது.  அதனால் இதுபோன்ற நூல்கள் எல்லாமே தெற்கிலிருந்து வடக்கே கொண்டுபோய் மயன்ரிஷிகள் மற்றும்  சித்தர்கள் மேருவில் ஈசனின் காவலில் வைத்து விட்டதாக தெரிகிறது. இப்படித்தான் நடந்தது என்பதற்கு என்ன ஆதாரம்?

விஸ்வகர்மா மயன் வம்ச பொற்கொல்லரான சித்தர் போகர், தன்னுடைய 'போகர் ஏழாயிரம்' என்ற சப்தகாண்டத்தில் இது சம்பந்தமாகச் சொன்ன சில பாடல்களைக் கண்டேன். இங்கு தெற்கே இயற்றப்பட்ட  அனேக நூல்களை இமய மலையில் பாதுகாப்பாக நூலக சமாதியில் வைத்துள்ளார்கள் என்று சொல்கிறார். இவர் மேருமலையில் நான்கு திசைகளிலும் அடுக்கி வைக்கப்பட்ட நூல்களே மலைபோல் குவிந்திருக்கிறது என்கிறார். இலக்கியம், மருத்துவம், விஞ்ஞானம், குறித்து தமிழ் மற்றும் வடமொழியில் இயற்றப்பட்ட பலகோடிநூல்கள் உள்ளதாகவும், அதில் இயன்றவரை அனைத்தையும் தான் படித்ததாக கூறுகிறார். அப்படியும் முழுதும் வாசித்து ஆராய அவகாசம் இருக்கவில்லை என்று வருத்தப்பட்டுள்ளார். 'நான் படித்த நூல்களில் ஒரு பங்கு இந்த கலியுகத்து மாண்பர்கள் கைக்கு கிட்டினாலே அரிது' என்கிறார்.

மறைந்த நூல்கள் எப்படி கலியுகத்தில் நம் கைக்கு கிடைக்கும் என்று நேற்றைய பதிவில் பார்த்தோமே, அதற்கான விடையை போகரே தருகிறார். தக்க நேரத்தில் அது சப்தசாகரத்தில் மிதந்து வரும், ஆசிர்வதிக்கபட்டோர் கையில் அது கிடைக்கபெற, பிறகு மூலநூல், பதவுரை என்று அச்சுநூலாக படிப்பதற்கு வெளிவரும். இதுதான் சூட்சுமம்.  இப்படித்தான் மயன் இயற்றிய எல்லா நூல்களும் தக்க நேரத்தில் வெளிப்படும்.
Image may contain: text

தெய்வ நூல்களை மனிதர்கள் அழித்தார்கள்,  மாற்றிப் போட்டார்கள்,  என்றெல்லாம் இப்படி வாய்க்கு வந்தபடி பேசி பழிபாவம் ஏற்க 'தில் இருக்கும் அஞ்சா நெஞ்சங்கள்' மட்டுமே விமர்சிக்கட்டும். அப்படிப் பேசுவோரை போகர் சபித்துள்ளார்.  நாம் வேடிக்கை மட்டும் பார்ப்போம்!

அதுபோலவே தென்னகத்து சதுரகிரியில் ஒரு நூலகம் உண்டு. இது நம் கண்களுக்குப் புலப்படாது. அதன் நூலகர் (Librarian) அஸ்வினி மகரிஷி. அப்பகுதியை பிலாவடி கருப்பண்ண சாமியும், வன பத்ரகாளியும், மாருதியும் காவல் காக்கிறார்கள். இது தெரியாமல் பலபேர் அமானுஷ்யம் உணரவேண்டி சரியான இடம் தெரியாமல் சதுரகிரியிலுள்ள பல குகைக்குள் போகிறேன், ரசவாத தைல கிணறு தேடுகிறேன், சுனை நீர் குடிக்கிறேன், சித்தர்களை படம் பிடிக்கிறேன் என்று புத்திகெட்டு போகக்கூடாது. 

செவ்வாய், 18 ஜூலை, 2017

இவர்களுக்கு எப்படியோ பொழுதுபோகிறது!

அண்மையில் திராவிட கழகம் அறிவித்த ஒரு வினோதமான எதிர்ப்பு போராட்டம் என்னவென்றால் வரும் மாதம் ஆவணி அவிட்டம் அன்று பன்றிக்கு பூணூல் அணிவிக்க இருக்கிறார்களாம்.
திவ்யமா அமக்களமா ஆனந்தமா அமோகமா போட்டு விடட்டுங்கிறேன்.


Image result for பன்னிக்கு பூணூல்
பூவராகவ பெருமாள் தான் பன்றி, அப்போ விஸ்வகர்மாவின் பஞ்சமுகத்தில் வாமதேவ விஷ்ணுவைப் பற்றிதான் சொல்றாங்க.. பெருமையா இருக்கு.. முப்பிரி நூல் பூண்ட பன்றியை சேவித்துக் கொள்ளுங்கள்!

பார்வதி தேவி ஒரு சமயம் சிவனிடம், ' ஸ்ரீமுஷ்ண வராஹ சுவாமியின் அவதார பெருமைகளை இன்னும் விளக்குங்கள்' என்கிறாள். 'ஓம் நமோபகவதே வராஹா ரூபாய பூஹ்பூர்வ ஸ்வ, சியாத்பதே பூபதி த்யம் தேஹயதே ததாபய சுவாஹா'. (வராஹ அவதார மூர்த்தியானவரை, ஐஸ்வர்யம் வழங்கும் அந்த த்ரிவிக்ரமனை வணங்குகிறேன்.)

Related image

சுமார் 50 வருடங்களுக்கு முன் காஞ்சி சங்கரமடம் வெளியே பெரியாரின் சிலை நிறுவப்பட்டதை பலர் கண்டித்தார்களாம். ஆனால் மகாபெரியவரோ 'அவரைப் பார்த்தா இராமாயண காலத்து நாஸ்திகம் பேசும் ஜாபாலி ரிஷியைதான் எனக்கு நினைவூட்டுகிறது. அது அங்கேயே ஓரமா இருக்கட்டுமே!' என்றாராம்.

'கடவுள் இல்லை' என்பார்கள் ஆனால் 'கோயிலில் தமிழ் அர்ச்சனைத்தான் வேண்டும்' என்று ஆர்பாட்ட கோஷம் போடுவார்கள். இரும்புப்பட்டறையில் ஈக்கு என்ன வேலை? 'மறை ஓதி திருமணம் நடத்தக் கூடாது' என்பார்கள் ஆனால் 'சீர்திருத்த திருமணத்தில் குத்துவிளக்கு (அக்னி) ஏற்றுவது தமிழர் பண்பாடு' என்பார்கள். வெந்ததைத் தின்று வேகாததை கழியும் கூட்டத்தினரே இவர்கள். வயிற்றுப் பிழைப்பிற்காக தி.க. கூட்டம் அப்படி பேசியே பழகிவிட்டது.. அதை எதற்கு மதிப்பானேன்?

அவர்கள் எந்தவித கோணத்தில் பழித்தாலும் அதிலிருந்து நாம் நன்மையை மட்டுமே எடுத்துக்கொள்வோம்.

பிரணவ வேதம் அழிந்ததா?

Image may contain: 1 person

ஈசனின் ஆசிபெற்ற பாடல் சுவடிகளை/ நூல்களை யார் பதவுரை எழுதவேண்டும், தொகுக்க வேண்டும், அச்சிட்டு வெளியிட வேண்டும் என்பவை முன்பே தீர்மானிக்கப்பட்டது என்பதை அண்மைப் பதிவில் பார்த்தோம். தக்கவர் கண்களுக்கே அது படும்.
இயற்றப்பட்ட எல்லா நூல்களும் எங்கோ மறைவாக இருக்கும். அது தக்க நேரம் வரும்போதுதான் வெளிப்படும் என்று சித்தர்கள் சொல்கிறார்கள். ஆனால் பல விஸ்வகர்மா இணையதளங்களில் கண்ணைமூடிக்கொண்டு பரப்பப்படும் செய்திதான் 'சிலரால் அழிக்கப்பட்டது' என்று சொல்லப்பட்ட ஐந்தாம் வேதமான 'பிரணவ வேதம்' ஆகும். பிரம்மனின் ஐந்தாவது தலையை ஈசன் அழித்துவிட வில்லை, அதை அரூபமாக்கிவிட்டார். ஆனால் இருக்கிறது. அதற்கேற்றபடி இந்த ஐந்தாம் வேதமும் மறைவில் உள்ளது.

காலஞ்சென்ற சில்பகுரு V.கணபதி ஸ்தபதி அவர்கள் தொகுத்து vastu vedic trust அமைப்பு வெளியிட்ட 'பிரணவ வேதம்' (விலை ரூ.1000) புத்தகத்தை இங்கு காட்டுகிறேன். சுமார் ஐம்பதாயிரம் வாக்கியங்களுக்குமேல் கொண்ட மூல நூலை அவர் ஆய்ந்து தொகுக்க எப்படி சிரமப்பட்டார் என்ற விபரங்கள் நான் இட்ட பழைய பதிவில் இருக்கும். ஆங்கிலம்/ சமஸ்கிருதம் /தமிழ், மொழிகளில் மெத்த புலமை பெற்றவர். மற்ற நான்கு வேதங்களின் சாரம்தான் (சப்தம், கந்தர்வம், நாட்டியம், ஸ்தபதியம்) இந்த வேதத்தின் கிளைகளாக உள்ளது என்கிறார். இப்போது இது அச்சில் உள்ளதா என்று தெரியவில்லை. அழிந்து போனதாக கருதப்பட்ட முக்கிய நூல் இவர் கையில் எப்படி? அதுதான் சூட்சுமம்.
பல நூல்கள் பல காலகட்டங்களில் பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளாவது இயற்கையே. இந்த சித்தர் அந்த குலத்தைச் சேர்ந்தவர், சித்தர் பெயர் ஒன்றுதான் ஆனால் அவரும் ஐவரும் வேறு, அவர் கூறிய கருத்து இதுதான் அதுதான், அவர் வாழ்ந்த காலம் இதுவல்ல அது... என்றெல்லாம் திரித்து மறுத்துப் பேசி குழப்பங்கள் வருவதும், அவரவர் சௌகரியத்திற்கு ஏற்றபடி சாயத்தைப்பூசுவது இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் ஒரு தெய்வ நூலை அழிக்க சாமானிய மனிதனால் முடியாது. அது அழிந்தது போல் மறைப்பில் இருக்கும்.
இதையெல்லாம் ஏன் உங்களுக்குச் சொல்கிறேன் என்று புரிந்திருக்கும். திராவிட இயக்கங்களின் பிரச்சார மாயையில் விழுந்திடாமல் இருப்பதற்கே!

பிரம்மனுக்கு ஐந்தாவது தலை இல்லையே!


வியாசர், வேதத்தைக்கேட்டு தொகுத்தவர். ஆனால் அதை இயற்றிய ரிஷிகள்: சானக ரிஷி – ரிக் வேதம், சனாதன ரிஷி – யஜுர் வேதம், அஹபூனச ரிஷி – சாம வேதம், ப்ரத்னச ரிஷி – அதர்வண வேதம், ஸுபர்னச ரிஷி - ப்ரணவ வேதம். ஆனால் ப்ரணவ வேதம் என்று ஒரு வேதம் இருப்பதையே அழித்து விட்டார்கள். எவர்கள் அழித்துவிட்டார்கள் என்று இணையத்தில் எங்குமே சொல்லப்படவில்லை. ஆனால் த்விஜ பிராமணர்களைத்தான் சொல்வதாக உணரமுடிகிறது.
அதை இவர்கள் யாரும் மறைக்கவில்லை. அந்த ஈசன்தான் மறைத்தான். மறையையே மறைத்த மறையோன் அல்லவா? பிரணவவேதம் அழிக்கப்படவில்லை. ஐந்து தலைகளால் ஆணவம் பெற்ற பிரம்மனை, சிவபெருமான் பைரவரைக் கொண்டு ஐந்தாவது தலையைக் கொய்தார். அட்டவீரட்ட தலங்களில் ஒன்றான திருக்கண்டியூர் (Thanjavur Dt.) தலத்தில் இது நடந்தது. பிரம்மதேவனின் அகந்தை நீங்கியது. அன்றுமுதல் நான்முகன், நான்மறை என்றே நிலவியது.
அதுபோல் பிரம்மனுக்கு 'ஓம்' பிரணவத்தின் பொருள் தெரியவில்லை என்றதால் முருகன் பிரம்மனை சிறையில் இட்டான் என்கிறது புராணம். பிறகு முருகன் சிவபெருமானை கேட்க, தனக்கு விளக்கம் தெரியாதது போல் நடிக்க, சிவனை மண்டியிட்டு தன்னிடம் உபதேசம் பெறச்செய்தான் சுவாமிநாதன். இப்படி பிரம்மனோடு இவர்கள் விளையாடினார்கள்.
பல விஸ்வகர்மா இணையதளங்களில் ஐந்தாம் வேதத்தை அழித்தது சில பிரிவினர்கள் என்று ஊரார் மீது பழி போடுவது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அப்படி பிரணவ வேதம் அழிந்து போயிருந்தால் காலஞ்சென்ற சில்பகுரு கணபதி ஸ்தபதி அவர்கள் எப்படி அதை தொகுத்து பதிப்பு செய்திருக்க முடியும்? ஐந்திறம் என்ற நூலை எப்படி அவர் வெளியிட்டார்? இவ்வேதத்தின் சாரமே மற்ற நான்கிலும் உள்ளது என்கிறார். அவற்றுக்கு இதுவே மூல வேதம். இதுகாறும் மறைந்திருந்த ஒரு நூல் எப்போது யாரால் எழுதப்பட வேண்டும், பதிப்பாக வேண்டும் என்பது தெய்வ சங்கல்பம்.
ஆக, விஸ்வகர்மா குலத்தினர் எதைச் சொன்னாலும் நம்புவார்கள் என்று இத்தனை ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள் இந்த துஷ்பிரச்சாரத்தின் பின்னே இருந்து இயக்கியுள்ளது தெரிகிறது. சென்ற நூற்றாண்டின் முற்பகுதி வரை பரிமளித்த விஸ்வப்பிராமண குலம் அப்படியே ஓடுங்கியதும் இவர்களின் சூழ்ச்சியே. இந்த அரை நூறாண்டில் மங்காத்தா ஆட்டம் ஆடிவிட்டார்கள்.

வெள்ளி, 14 ஜூலை, 2017

ஆதாரத் தொழில்கள் மற்றும் கிளைகள்

விஸ்வகர்மா படைத்த ஐந்து அடிப்படை தொழில்கள் பற்றி இதற்கு முந்தைய பதிவுகளில் பார்த்தோம். இவர்கள் எல்லோருமே சமூக கட்டுமானம் மற்றும் வாழ்வாதாரம் காத்து தத்தம் பணிகளைச் செய்தனர். அப்படிப் பார்த்தால் இன்றுவரை இந்த ஐந்து பிரிவுகள் மட்டுமே இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் அப்படி இல்லாமல் எண்ணிலடங்காத அளவில் மற்ற ஜாதிகள், பிரிவுகள் உட்பிரிவுகள் இருக்கிறது. இதெல்லாம் காலப்போக்கில் எப்படி வந்தன?
ஒரு நண்பர் கீழ்கண்ட அருமையான கேள்வியைக் கேட்டிருந்தார் . அதன் சாரம் கீழே தந்துள்ளேன்.
கம்மாளர் மட்டும்தான் அடிப்படை என்றால் பிராமணர், ஷத்ரியர், வைசியர், சூத்திரர் பிரிவுகளும் அப்போதே வந்ததா? இன்று செட்டியார், கோனார், வன்னியர், முதலியார், நாடார், ரெட்டியார், பிள்ளை, வண்ணான், நாவிதர் என்று பல்வேறு ஜாதி அமைப்புகளும் அதில் உட்பிரிவுகளும் உள்ளதே, இவர்கள் எல்லோரும் எங்கிருந்து வந்தனர்? இவர்கள் எல்லோருக்குமே கோத்திரம் உண்டா? அப்படி என்றால் விஸ்வகர்ம மானசீக புத்திரர்களின் முகத்தில் வந்த ரிஷிதானே இவர்களுக்கும் மூலமாக இருக்கவேண்டும்? விஸ்வகர்மா தொழிலுக்கு துணைபோகும் இவர்கள் தங்களை ஏன் விஸ்வகர்மா குலம் என்று சொல்லிக் கொள்வது இல்லை?
அவர் கேட்ட கேள்விகள் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. இதைப் பற்றி பின்னொரு சமயம் அகண்ட பதிவாக நாம் பார்ப்பதற்கு முன், அதற்கான சில சுருக்கமான பதில்களைத் தந்துவிடுகிறேன். உங்களுக்கும் சஸ்பென்ஸ் விலகும்.
ஐந்தொழில்கள் படைக்கப்படும்போதே இவை எல்லாமே பிரம்மனிடமிருந்து படைக்கப்பட்டது. பஞ்ச முகங்கள் தோன்றும்போதே அதற்கான ரிஷிகளும் தோன்றினர். அந்தந்த ரிஷிகளின் வழியே பல பிரிவுகள் தோன்றி வாழ்வாதாரத்திற்கு உபகாரமாக இருந்தது. கல்வி, நெசவு, விவசாயம், உணவு, வைத்தியம், ஆருடம், நீதிநெறி, காவல், நிர்வாகம், பொதுசேவை, சமயத்தொண்டு, கலைகள், என்று எத்தனையோ ஜாதிகள் சமுதாயம் சார்ந்த பல வேலைகளைச் செய்து வந்தது. இவர்களுக்கும் ரிஷி கோத்திரம் உண்டு. தற்போது இதை யாரும் அவ்வளவாக தெரிந்துக் கொள்ளாததால் 'சிவ கோத்ரம்' 'விஷ்ணு கோத்ரம்' என்று மட்டும் சொல்லும் அளவுக்கு வந்துவிட்டது. 'கோத்ரம் என்றாலே பிராமணர்கள் சங்கதி' என்று காலப்போக்கில் இவர்களாகவே முடிவுசெய்து பழியை அவர்கள் தலையில் போட்டுவிட்டனர்.
காலபோக்கில் பல சாம்ராஜ்யங்களின் படையெடுப்பு மற்றும் விரிவாக்கம் ஆகும்போது மன்னர்கள் அதில் தேர்ந்தெடுத்த சில பிரிவுகளுக்கு சலுகையும் கூடுதல் பணிகளையும் தந்து கௌரவப் படுத்தினர். பின்னாளில் அந்த வம்சாவளியினர் தங்கள் மூதாதையர் குலத்தொழில் மறந்து புதிய பரிமாணத்தில் வாழ்ந்து வருகின்றவர்கள் உண்டு. அது அவர்களுக்கேகூட தெரியாது.
பஞ்சமுகத்திலிருந்து தோன்றிய ரிஷிகளின் வழியிலேயே ஏனைய மற்ற ஜாதிகளும் வருகிறது. அந்த ரிஷிகளில் சில பெயர்கள் 'சப்த ரிஷி' குழுவில் இடம்பெறுகிறது. யுகம்தோறும் ஒவ்வொரு மனு ( 1 மன்வந்திர =71 மகாயுகங்கள்= 71* 4 யுகங்கள்) சுழற்சி மாறும்போதும் இந்த சப்த ரிஷி அங்கத்தினர்கள் மாறுகிறார்கள் என்று புராணங்கள் சொல்கிறது. இதைப் பொருத்தே பல பிராமணர்களின் கோத்ரம் வருகிறது. விஸ்வகர்மா ஐந்து ரிஷி கோத்ரம் இவர்களுக்கு வருவதில்லை. உண்மையில் இந்த சப்தரிஷிகள் பிராமணர்கள் இல்லை. வேறு வர்ணத்தவர்கள்.. ஞான தவ தர்மநெறி வலிமையால் பிராமண அந்தஸ்து அடைந்தனர். பிராமணன் என்றால் பிரம்மத்தை உணர்ந்தவன் என்று சுருக்கமாகச் சொல்லலாம். காலமாற்றத்தில்ல் இவர்களிலும் பல உட்பிரிவுகள் வந்தன. 

சிவபெருமான் யோகசூத்திரங்களை ஏழு ரிஷிகளுக்கு சொல்லிக்கொடுத்தார் என்றும் அவர்கள் வடதிசை வானில் 'சப்தரிஷி மண்டலம்' Ursa major என்று நிலைத்துள்ளதாகவும் புராணம் சொல்கிறது.. ஸ்ருதி-ஸ்ம்ருதி கற்று ஞான தவ தர்மநெறி வலிமையால் பிராமண அந்தஸ்து அடைந்தனர். பிராமணன் என்றால் 'பிரம்மத்தை உணர்ந்தவன்' என்று சுருக்கமாகச் சொல்லலாம். யார் வேண்டுமானாலும் பிரம்மத்தை உணர்ந்து பிராமணன் ஆகலாம். தன் நிலையை உயர்த்திக்கொள்ளும்போது வரும் தகுதியே இது. யுக
மாற்றத்தில் இந்த வம்சாவளி ஒரு சமூக பிரிவாகவே மாறிவிட்டது. அப்படித்தான் மற்ற ஜாதிப் பிரிவுகளும். அதனால் பிறப்பால்தான் வர்ணங்கள் வருவதான ஒரு மாயை நமக்கு வந்து நிலைத்து விடுகிறது!

ஆக, ஐந்தொழில் மற்றும் மற்ற பிரிவுகள், கோத்திரம் மற்றும் ரிஷி மூலம் பற்றி இப்போது ஓரளவுக்கு சுமாராகப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

கோவூர் தலம்

கோவூர் கிழார் என்று சொன்னால் புதிதாக இருக்கும். இவர்தான் நாம் கேள்விப்பட்ட 'பெரியபுராணம்' சேக்கிழார் பெருமான். காஞ்சிபுர மாவட்டம் கோவூர் கோட்டம் குன்றத்தூர் பகுதியில் இத்தலம் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டு பல சுற்றுப்புற கிராமங்கள் உள்ளன.

அனைவரும் அறிந்த ஒன்றுதான் குன்றின்மேல் இருக்கும் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில். இது சோழ மன்னர்களால் புனரைமைக்கபட்டது. தற்சமயம் மண்டபங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
Related image

குன்றின் எதிர் சாலையின் ஓரத்தில் இரண்டு கோயில்கள் உண்டு. அவை திரு ஊரகப் பெருமாள்-பூவிருந்தவல்லித் தாயார் கோயில். இங்கு திருமலையில் உள்ள வேங்கடவன் போன்றே நின்ற கோலத்தில் உள்ளார். அதன் பக்கத்து தெருவிலேயே 'நகமுகைவல்லி சமேத கந்தழீஸ்வரர் திருகோயில்' உள்ளது. இக்கோயில் சேக்கிழார் வந்து வழிபட்டு பாடல்பெற்ற ஸ்தலமாகும். இங்கு கருவறை விமானம் கஜப்ருஷ்ட (யானையின் பின்புறம்) கட்டமைப்பில் 2ம் குலோத்துங்கனால் கட்டப்பட்டது.
  


  

அங்கிருந்து சுமார் 2கிமீ தொலைவில் தேரடி சமீபத்தில் ராகுத்தலமாம் அருள்மிகு காமாட்சி அம்மன் உடனாய ஸ்ரீ நாகேஸ்வரசுவாமி கோயில் உள்ளது. இதை சேக்கிழாரே 'வடதிருநாகேஸ்வரம்' என்று அழைத்துள்ளார். ஏன்? இங்கு மூலவரான நாகேஸ்வரரை சேக்கிழாரே லிங்கரூப பிரதிஷ்டை செய்து வைத்தார் என்று தல வரலாறு சொல்கிறது. கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் போலவே இங்கு இறைவனை எழுந்தருளச் செய்யவேண்டி இதை நிறுவினாராம். இங்கு பெரிய தெப்பகுளமும் உள்ளது. அதன் அருகிலே சேக்கிழார் பெருமானின் மணிமண்டபம் ஒன்றை அழகாகக்கட்டி நிர்மாணித்துள்ளனர்.

என் மனதில் தோன்றிய பாடல்.

"கோவூர் கோட்டம் தோரணவாயில் கடந்து
குன்றத்தூர் கந்தனை களிப்புடன் தரிசித்து
ஈசனும் கேசவனும் அருள்தர நின்றவூரில்
இம்மனம் குளிரக் காண்."

ஒரே கோட்டத்தில் இத்தனை கோயில்களையும் தரிசித்து வாருங்கள்.

இறையருள் உயிர் காக்கும்!

அது 1790. திப்பு சுல்தான் அதிரடியாக கரூர், கோயம்பத்தூர், பாலக்காடு பகுதிகளை கைப்பற்றினான். மைசூர் சமஸ்தானத்தில் பல்லாயிரக் கணக்கான இந்துக்களை வதைத்தான். அது போதாதென்று இந்தப் பக்கம் கொங்கு மண்டலத்திலும் கைவரசியைக் காட்டினான். என்னுடைய சேயோன் சோமேஸ்வரனையும் அவர் தந்தை அனந்தராமனையும் சிறையில் தள்ளினான். பின்னர் (என் பரன்) அனந்தராமனை மட்டும் விடுவித்தான். பத்து நாட்கள் ஆகியும் சோமேஸ்வரன் எந்த உணவையும் சிறையில் உட்கொள்ளவில்லை. மயங்கி விட்டார்.
திப்பு சுல்தானின் மனைவியின் கனவில் ஈசனே அசரீரியாக 'சோமேஸ்வரன் எந்த தவறும் செய்யாதவன் அவனை விடுவி' என்று உரைத்துள்ளார். அதன்பின் சிறையில் இவரை எழுப்ப சுய நினைவின்றி கிடந்தார். உடனே வைத்தியர்களை அழைத்தான். குழைத்த தயிரையும் அன்னத்தையும் மூன்று தினங்களுக்கு உடல்மேல் பூச்சு தந்து அந்த சத்து சரும துவாரங்கள் வழியே கிரகிக்கப்பட சக்தி வந்து எழுந்தார்.
அதன்பின், நடந்த தவறை மனிக்கவேண்டும் என்று காலில் விழுந்து, 'நவாப் சோமயாஜுலு' என்ற பட்டம் சூட்டி, காவேரி நதிக்கரையில் ஒரு கிராமத்தையே சாசனம் எழுதி, ஒரு மரகத லிங்கத்தையும் இனாமகாத் தந்து அனுப்பினான். இந்த லிங்கத்தை எந்த கோயிலில் சூரையாடினானோ, அந்த கடவுளுக்கே வெளிச்சம்! இன்றைக்கு அந்த கிராமமும் நிலங்களும் தங்காமல் சுவடு தெரியாமல் வந்தவழியே போனது.. மரகத லிங்கம் மட்டும் புதுவை பக்கத்தில் ஏதோவொரு பங்காளி வீட்டில் உள்ளதாம். அதற்கு பால், அன்னம் நிவேதனம் வைத்து நித்திய பூசை செய்து வருவதாக அண்மையில் கேள்விப்பட்டேன். சோமேஸ்வரனின் தர்மபத்தினி சுப்புலட்சுமிதான் வம்சத்தை காத்து வருகிறாள் என்பது அருள்வாக்குகளில் தெரிய வந்தது.

புதன், 12 ஜூலை, 2017

ரிஷி மூலம் கண்டறிந்து



விஸ்வகர்மா ஐந்தொழில் பிரிவினரின் ப்ரவரம் பற்றிய ஒரு பதிவு இது.

சுபர்னச ரிஷி கோத்திரம் என்பார்கள் ஆனால் அவர்கள் சில்பியாக, பொற்கொல்லராக தொழிலில் இருப்பார்கள். சானக ரிஷி கோத்ரம் என்பார்கள், ஆனால் அவர்கள் செய்யும் தொழில் மரவேலை, உலோக வேலையாக இருக்கும். ஆக, இக்காலத்தில் தொழிலை வைத்து கோத்ரம் கண்டுபிடிப்பதோ, கோத்ரத்தை வைத்து தொழிலை யூகிப்பதோ சற்றும் சாத்தியப்படுவதில்லை.  எதனால் இந்த நிலை?

* குடும்பத்து மூதாதையர்கள் பிரவரம் சொல்லாமல் போனது
* வேறு கோத்ரத்தில் ஸ்வீகாரம் போயிருக்கலாம்
* மாமனார் வீட்டின் குடும்ப தொழிலையே ஏற்றுக்கொண்டது
* வந்த வம்சாவளியே மறந்துபோயிருக்கலாம்
* வம்சமும் கோத்திரமும் தெரிந்தும் அபிவாதயே /பிரவரம் சொல்லுவதில் நாட்டமிமை
* விஸ்வகர்ம என்று வெளிக்காட்டாமல் இருந்திருக்கலாம்

எனக்குத் தெரிந்த ஒரு Tailor தையல்காரர். சானக ரிஷி கோத்திரம். அவருடைய பாட்டன் கொல்லர், தந்தை தச்சர், மகன் ராணுவத்தில் ஷத்ரியன், பெயரன் தட்டான் (Artificial Jewellery making படித்து தொழில் செய்கிறான்). இதை என்னவென்று சொல்லுவீர்கள்?

இவர்களுடைய ப்ரவரம் "பஞ்சாரிஷேய ப்ரவரான்வித சானகரிஷி கோத்ர.." என்று வரும். சானகரிஷி  கீழே 5 உபகோத்ரம் வரும். அந்த பஞ்ச ரிஷிகள்தான் உபசானாக, விப்ரஜா, காஸ்யப, மனுவிஸ்வகர்மா,விஸ்வத்மகா என்று வரும். இவர்கள் ஒவ்வொருவருக்கும் 5 மகன்கள் என்று வரும்.

Image may contain: one or more people
அதாவது, மூல மயன் 5 ரிஷிகளுக்கு, 5 மகன்கள், அவர்களுக்கு 5 மகன்கள் என்று இப்படியாக  மொத்தம் 125 எணிக்கை வரும். அந்தந்த மூல ரிஷிக்கு கீழே வருபவர்கள்  பஞ்சரிஷிகள் குழு. இக்குழு பெயர்கள் மாறும். இதை குடும்பத்தில் பெரியவர்கள் தலைமுறையாக சொல்லிக்கொடுத்திருந்தால் தான் தெரியும்.  இப்போது ப்ரவரம் என்ன என்பது விளங்கியிருக்கும்.

பெரியவர்களை நமஸ்கரிக்கும்போது இந்த விபரங்கள் சொல்லி கடைசியில் உங்கள் பெயரோடு ஷர்மா என்று சேர்த்து அபிவாதயே சொல்லவேண்டும். இந்த சுய அறிமுகம் தான் 'அபிவாதயே' . இது தேவ/த்விஜ பிராமணர்களுக்கு மட்டுமே உள்ளது.

இதை இங்கே உதாரணத்திற்காக சொன்னேன். பலபேருக்கு இந்த சந்தேகம் இருக்கிறது என்பதால்தான் இப்பதிவு இட்டேன். இது சற்று கடினமான சுப்ஜெக்ட் போல தெரியும். இருந்தாலும் முடிந்தவரை எளிமை படுத்தியுள்ளேன். 

ஓசையின்றி மௌனமாய்...

Image result for butterfly mud puddling


பூச்சிகளின் 'சேற்றுழவு' Mud puddling பற்றி நான் கேள்விப்பட்டதோடு சரி ஆனால் இதுவரை பார்த்ததில்லை. நேற்று பெய்த மழைக்குப்பிறகு இன்று வெயில் அடிக்கவே, என்றும் காணாத அளவில் பட்டாம்பூச்சிகள் தற்சமயம் பறந்து கொண்டிருகிறது. அதில் மஞ்சள், ஆரஞ்சு, பிரவுன், நீலம் கலந்த சிவப்பு என இன்னும் பல நிறங்கள் இருந்தன. வடகிழக்கிலிருந்து பட்டாளமாக மேற்கு தென்மேற்கு நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.
பூந்தொட்டியிலும், தெருவில் மண்தரையிலும் போய் அமர்ந்து எல்லாமே மிகவும் கண்ணும் கருத்துமாய் தங்கள் நீளமான Proboscis குழாய்கள் மூலம் எதையோ உறிஞ்சிக் கொண்டிருந்தது. நீர் குடிக்கிறதோ என்று நினைத்தேன், ஆனால் ஈரமான மண்ணின் மேல்புறம் படர்ந்திருந்த வெள்ளை உப்புக்களையும் மற்ற தாது நுண் சத்துக்களைகும் பொறுமையாக உறிஞ்சி விட்டு பறந்து போனது. இவற்றை உடலில் ஏற்றிக்கொண்டு தன் மரபின் சந்ததிகளுக்கு சத்துக்களை வழங்கிட ஓயாமல் பாடுபடுகிறது. அப்படியே சேற்றையும் பிரித்து உழுது விடுகிறது. ஓசையின்றி மௌனமாக ஒரு முக்கியப் பணியை செய்கிறது.
'கன பாடி' கொண்ட கட்சியின் கரைவேட்டிகள் ஊர் குளத்தை தூர்வாரி ஒரு பாண்ட் மண் அள்ளுவதற்குள் கேமிராக்களும், தொண்டர்களும் வந்து ஸ்டன்ட் காட்டுகிறார்கள். ஆனால், அரை கிராம் எடை கூட இல்லாத பட்டாம்பூச்சி எத்தனை பெரிய விஷயத்தை செய்கிறது. ஈசன் சிருஷ்டித்த எல்லாவற்றிலும் தன் சக்தியை வைத்துள்ளான். என்ன விந்தை, என்ன விந்தை!

சனி, 8 ஜூலை, 2017

பாலாம்பா (எ) ஷிவங்மு

நம் சித்தர்கள் எல்லோருமே சீனத்தை சிறப்படமாகக் கொண்டு பல காலங்கள் அங்கேயே ஜனனம் எடுத்து வாழ்ந்தனர். சீன பூமியைப் போற்றும் காரணங்களை நம் பழைய பதிவுகளில் தீர்க்கமாகப் பார்த்துள்ளோம். போகரின் குரு காலாங்கி சீனத்தில் மூதறிஞர் கன்பூசியஸ் என்றார் பெயரில் போர் வீரராக இருந்தார். போகர் சுமார் பன்னீராயிரம் வருடங்கள் லாவோட்சு என்ற பெயரோடு 13 முறை அங்கே ஜெனித்தார் என்பதையும் கடந்த பதிவுகளில் பார்த்தோம். அங்கே போகர் ஒரு சீனத்து முதியவர் உடலில் கூடுவிட்டு கூடு பாய்ந்து தனக்கு 'போயாங்' என்று பெயர் சூட்டிக்கொண்டார். பரங்கியர் தேசத்தில் இப்படி தனக்கு பெயர் சூட்டிக்கொண்டதை சுட்டிக்காட்டி அகத்தியரே போகரை ஒருசமயம் பாராட்டிப் பாடிய பாடலை முன்பே பார்த்துள்ளோம்.

சீனாவில் இவர்கள் எல்லோருமே நம் சித்தர்களாக இருக்கும் பட்சத்தில் இங்குள்ள சிவசக்தி அம்சங்களும், வாலை தெய்வ வழிபாடும் அங்கேயும் இருந்திருக்க வேண்டும் அல்லவா? ஆம். அப்படித்தான் இருந்துள்ளது.
'ஷி வங்மு' என்ற பெண் தெய்வம்தான் வாலை தெய்வத்தின் ஒப்பீடு. தண்டுவட (பூமி) மூலத்தில் தொடங்கி கபாலத்தின் சகஸ்ராரம் (ஆகாயம்) வரை மனிதனின் ஆன்ம சக்தி பயணிக்கும் ஏணிப்படிகள் உச்சியில் அமர்ந்துள்ளாள். சகஸ்ரார இதழ்கள் அடர்ந்த மரத்திற்கு ஒப்பானது. அங்கு வாசம் செய்யும் இவளே மூப்பை தடுத்து இளமையும் ஆரோக்கியமும் தருபவள்.

'மு' என்றால் தாய், 'வங்' என்றால் ஆட்சி புரியும். ஆக, இவள்தான் சகஸ்ரார சக்கர கபால பீடத்தில் அமர்ந்து ராஜராஜேஸ்வரியாக ஞானிகளுக்கு வழி காட்டுபவள் என்பது சீனர்கள் நம்பிக்கை . அவள் சிந்தாமணி ஒளிரும் பீடத்தில், 'ஷெங்' கிரீடம் தரித்து, பிரத்யங்கரா போல காட்சி தருகிறாள். ஏறக்குறைய பல ஒற்றுமைகள் உள்ளது அல்லவா? சீனாவில் இவள் பிரதான தெய்வமாக இல்லாமல், ஞானிகளுக்கான வாலை தெய்வமாக மட்டுமே வணங்கப்படுகிறாள். 'ஷிவங்மு' என்ற பெயர் 'சிவகாமு' போல ஒலிக்கிறது.. கவனித்தீர்களா?

இவள் சிறுபெண்ணாக, யுவதியாக, தாயாக (பகவதி) மூன்று வேடங்களில் சித்தரிக்கப்படுகிறாள் என்பதை கீழ்வரும் பாடலில் காண்போம்.

'பிராதர் பாலா ச மத்யாஹ்னே யௌவனஸ்தா பவேத் புனஹ,
வ்ருத்தா சாயம் பகவதி சிந்த்யதே முனிபி சஹ'

இப்படியாக காயத்திரி மூன்று வேளைகளிலும் (த்ரிகாலம்) வேடம் ஏற்கிறாள் என்பதை நம் சுலோகங்கள் சொல்கின்றன.

திருமூலரின் சீடரான காலங்கிநாதருக்கு வாலாம்பிகை ஞானம் அளித்து 'கமலர்' என பெயர் சூட்டி, வாலை ரசத்திற்கு இணையான அமுதத்தை பொழியச் செய்து, மகாசித்தனென அழைத்து, சகல வித்தைகளையும் அறிந்திடச் செய்தாள் என்பதை காலாங்கி அருளிய 'இந்திரஜால ஞானம்' நூலில் தெளிவாக்குகிறார்.
Image may contain: text


இதுபோல் நாம் அறியாத சீன தெய்வங்கள் எவ்வளவோ இருக்கும்.. அதில் வாலாம்பிகையின் நிலைக்கு சமமாக உள்ள இந்த சிவங்மு இதுவரை நாம் கேள்விப்படாத ஒன்று. அத்தேசத்தில் சக்தி சக்கரங்களை மையப்படுத்தும் தற்காப்புக் கலை சார்ந்தும், குண்டலினி (Dragon) எழுப்பி, காயகற்பம் உண்டு இறவா நிலை நாடும் (Black belt) யோகிகளு இத்தெய்வம் அருள் புரிகிறது.

ஒற்றைச் சிலம்பு படுத்தும் பாடு

சிலப்பதிகாரம் எழுதி பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இந்த சிலம்பு இன்று வரை பிரச்சனையை கிளப்பிவருகிறது. இளங்கோவின் வர்ணனைப்படி மதுரையில் கோவலணின் வழியில் எதிர்பட்ட அரசவை பொற்கொல்லனிடம் கண்ணகியின் ஒற்றைச் சிலம்பை மதிப்பிட காட்டி விற்கும் எண்ணத்தில் அணுகினான். இதை நாமெல்லாம் பள்ளிகூட பாடத்திலேயே படித்து விட்டோம்.
இந்த காவியத்தில் அரச பொற்கொல்லன் பாண்டி மாதேவியின் சிலம்பை திருடிவிட்டு கோவலன் மீது திருட்டுப் பட்டம் கட்டுவதாக வரும் வரிகளை நீக்க வேண்டும் என்றும், பொற்கொல்லர் சமூகம் மோசமாக சித்தரிக்கபடுவது கண்டிக்கத் தக்கது என்று பல்வேறு விஸ்வகர்மா சங்கங்கள் தமிழ்நாடு அரசுக்கு மனு அளித்தது. இதற்கான அரசாணை உத்தரவை பெrruம் பாடத்திட்டத்தில் மாற்றம் வரவில்லையே என்பதுதான் செய்தி.

அதில் திரு.அசோகன் என்பவரின் விளக்கத்தை படித்ததும் எனக்கு சிரிப்புத்தான் வந்தது. அதாகப்பட்டது, ராஜாஜி என்ற பிராமணர்தான் வேண்டுமென்றே இதுபோன்ற ஒரு பாடலை செருகலாக வைத்தார் என்று சொல்லியிருந்தார். அதை படித்துவிட்டுத்தான் இந்தப் பதிவை இடுகிறேன்.  
இலக்கியத்தில் மெனக்கெட்டு ஒரு த்விஜ பிராமணன் இடைச்செருகல் செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. வீடு தோறும் சென்று அதே த்விஜ பிராமண பிரிவைச் சேர்ந்த 'தமிழ் தாத்தா' உ.வே.சாமிநாத ஐயர் கண்டெடுத்து சிரமப்பட்டு தொகுத்ததே ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம். அன்று இருந்த திராவிடர் ஆட்சியில் பிராமண எதிர்ப்புக்கு ஏதோ ஒரு தீனி வேண்டும் என்பதால் இது திரித்து விட்டிருப்பதும் நடக்கும்.. உவேசா பட்ட கஷ்டம் என்ன என்பதை சில்பகுரு கணபதி ஸ்தபதி எப்போது உணர்ந்து வருந்தினார் என்பதை ஐந்திறம் பற்றிய பதிவில் நான் சொல்லி இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். 

No automatic alt text available.அரசியின் கால்சிலம்பு பொற்கொல்லனிடம் கொடுக்கப்பட்டு அங்கு அது காணாமல் போனால், அவன் எடுக்காவிட்டாலும் அவன் மீதுதான் பழிவரும். ஊர் உலகம் அப்படித்தான் நினைக்கும். அன்றைய வாழ்க்கைத் தரம் இருந்த சூழலில் அரசியைத் தவிர செல்வந்த பெண்கள் காலில் சிலம்பு அணியவில்லையா? பிறகு ஏன் பொற்கொல்லனின் சந்தேகம் கோவலன் மீது விழவேண்டும்? இப்படி பின்னோக்கி பல ஆய்வுக் கேள்விகள் கேட்கலாம். அதை இப்போது அலசி ஒரு பயனுமில்லை.
வீடு வீடுவீடாய் சென்று சுவடிகளை யாசித்த ஐயர் இந்த இடைச் செருகலை செய்திருக்க முடியாது. தொகுப்பில் misplaced leaves இருக்கும், விடுபட்ட கொசுறு உதிரி ஓலைகள் எந்த சுவடியில் வரும் என்று ஆராய்வதே கஷ்டம். பிறகு பிற்சேர்க்கையில் விடுபட்டதை கோர்த்து இருக்கலாம். ஆக பல நூற்றாண்டுகளுக்கு முந்தய செல்லரித்த சுவடியில் செருகியது யார் என்பதை கண்டுபிடித்து என்ன ஆகப் போகிறது?
விஸ்வ+த்விஜ பிராமண குலத்தில் மட்டுமல்ல, எல்லா குலத்திலும் யோக்கியர்களும் திருடர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.. சுவடிகளில் ரிஷி மூலம் நதிமூலம் கண்டறிய முடியாது.. வால்மீகி, தொல்காப்பியர், கம்பர், ஒட்டக்கூத்தர், இறையனார், சேக்கிழார், பாடல்களிலேயே இடைசெருகல் உள்ளதே. ஆக, நடந்த உண்மை என்ன என்பது இளங்கோவுக்கும் உவேசா ஐயருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். 
இலக்கிய பக்கங்கள் எல்லா பிரிவினர்களையுமே உயர்த்தி தாழத்தி சொல்லும். தொல்காப்பியத்தில் வடமொழி மேற்கோள் வருகிறது, பைபிள் Old testament ஹிந்துமத கொள்கைகள் வருகிறது, திருக்குறளில் சைவ சித்தாந்தம் வருகிறது, கந்தர் அனுபூதியில் 50 பாடல்களுக்குமேல் செருகல் என்கிறார்கள், பல சித்த நூலிலும் குழப்பம் வருகிறது, வழக்கு போட்டு இப்படி எல்லாவற்றையும் திருத்துவது சாத்தியமாகுமா? மக்களின் மூளை ஏன் விபரீதமாக செயல்படுகிறது என்று தெரியலை. 
'நாட்டாமை பாட்டை மாத்தி எழுது'னு சொல்லிகிட்டே இருந்த எப்படி சாத்தியம்? சித்தர்கள் அனேகம்பேர் ஆச்சாரிகள் என்பதால் விஸ்வகர்மாவினர் சித்தர்கள் ஆகிவிட்டார்களா? பொற்கொல்லன்தான் திருடன் என்பதால் ஆச்சாரிகளுக்கு தலைக்குனிவு வந்திடுமா? இளங்கோவடிகள் கதையை அப்படித்தான் கொண்டு சென்றுள்ளார். இலக்கிய கதையை அத்தோடு விட்டுடணும். இதையெல்லாம் பெரிதுபடுத்தக் கூடாது. சிலம்புதானே இந்த காப்பியத்தின் மூல காரணம்.