About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

திரிகோணவியல் மாயன் கட்டுமானம்

பிரமிட் என்றால் எகிப்து மட்டுமே என்று பலபேர் நினைப்போர் உண்டு. அப்படி இல்லை. தஞ்சாவூர் கோயில் விமானம் முதற்கொண்டு உலகில் பல கட்டுமானங்கள் மயன் காலத்து சூத்திரங்கள் என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். காலங்கி போகர் கருவூரார் எல்லோருமே ‘மயன் வம்ச விஸ்வகர்மா எனலாகும்’ என்பது பல பாடல்களில் குறிப்பு உள்ளது.

பலபேருக்கு இந்த விஸ்வகர்மா என்ற பெயர் கேட்டாலே புதிராக இருக்கும். சிலர் ஏளனமாக பார்ப்பதுண்டு. நான் பார்த்தவரை, முகநூலிலேயே ஆரியர்கள் அல்லாத குறிசொல்லும் மருளாளிகள் சிலர் சந்தடிசாக்கில் விஸ்வகர்மாக்களையும் சித்த நூல்களையும் பழித்துப் பேசுவதைக் கண்டுள்ளேன். என்னதான் அருளாளர்கள் என்றாலும் ஜாதி துவேஷம், மறை எதிர்ப்பு, மொழி வெறி, சித்த நிந்தனை என்பது இருக்கத்தான் செய்கிறது. அவர்கள் தி.க. கட்சியினரோ என்ற சந்தேகம்கூட வரும். நாம் இதுகாறும் பாதுகாத்து படித்த சித்த நூல்கள் எல்லாமே பொய் புரட்டு என்று இத்தகையவர்கள் கிளப்புவது சகஜமாகிவிட்டது. அரசாங்க ஆவண காப்பகத்திலும், தஞ்சை சரஸ்வதி மஹாலிலும் உறங்கும் பல எண்ணற்ற சுவடிகளின் ரிஷிமூலம் நதிமூலம் கண்டறிவது கடினம். அப்படி என்றால் திருக்குறளும் இந்த சந்தேக பட்டியலில் வரும் போல! அத்தகைய அரிதான நூல்கள் எல்லாம் எப்படி யார் மூலம் அங்கு போய் சேர்கிறது, பின்னணியிலுள்ளவர்கள் யார் என்பதைப்பற்றி முன்பு விளக்கமாக ஒரு பதிவிட்டேன். சரி, நாம் விஷயத்துக்கு வருவோம்.

ஆக்கங்கள் எல்லாமே தேவ தச்சர்கள் வழியில் வந்த பஞ்சமகலை என்பதைக் முன்பே குறிப்பிட்டிருந்தேன். முன்பெல்லாம் எல்லா அரண்மனைகளும் கோயில் கோபுரங்களும் பிரமிட் வடிவம்போல் அகண்ட விமானம் கொண்டிருந்தது. இன்றும் சீன, மலையாள கோயில்கள் எல்லாமே இதனை நன்கு பின்பற்றுகிறது. பிறகு பொருளாதாரத்தையும் இடப் பற்றாக்குறையும் கருத்தில் கொண்டு அதன் அளவு சிறுத்துப்போய் ஓரளவுக்கு இன்று நிலைத்துள்ளது. எகிப்து பிரமிட்களில் இதுவரை பல மேல்நாட்டு ஆய்வாளர்கள் இறங்கி சோதனை செய்தார்கள். அடிக்கடி Netfilx இதைப்பற்றி பறைசாற்றும். ஆனால் அவர்கள் யாரும் நம் இந்துசமய வாஸ்து சாஸ்த்திர நோக்கிலோ, வேதமந்திர சப்த அதிர்வுகள் கோணத்திலோ, புவி ஸ்படிக யந்திர பரீட்சையோ செய்யவில்லை. ஏன்? அங்கு யாரும் நம்மவர்கள் இல்லை. நம்மைப் பொறுத்தவரை ஸ்ரீசக்ரம் (எ) மேரு வடிவமே பிரமிட்தான்.

பிரமிட் என்பது உலகம் முழுக்க இருக்கும் ஒரு இயற்கை /செயற்கை கட்டுமானம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். அதற்கென சில விகிதாசார அளவீடுகள் ஆயாதி கணக்கியலில் உண்டு. அதுதான் காலத்தையும் பிரபஞ்சத்தையும் இணைக்கிறது. இது வெறும் கணிதம் தொழில்நுட்பம் படித்தவர்களுக்கு விளங்காது. அதை மாயன் வாஸ்து சாஸ்திர நுணுக்க கணக்கு வாயிலாக கற்க வேண்டும். இதில் ஸ்தபதிகள் வல்லவர்கள்! காலஞ்சென்ற சிற்பகுரு வை.கணபதி ஸ்தபதி இதில் கரை கண்டவர். சுமேரியா, எகிப்து, தென் அமரிக்கா, போஸ்னியா, ஆஸ்திரேலியா, போன்ற உலகின் பல பகுதிகளில் இவை எல்லாம் சாதாரணமாகக் காணப்படும். அவர்களுக்கு நம்முடைய புராணமும் ஆதிகுடியின் மகோன்னதமும் புரிந்திருக்க வாய்ப்பில்லை. குமரிக்கண்டம், மூழ்கிய தேசம், புலம்பெயர்ந்த குலம் பற்றி நாம் சொல்வதை எல்லாமே கட்டுக்கதை எனலாம்! தஞ்சை விமானத்தை மிஞ்சும் பல கட்டுமானங்கள் உலகின் பிறபகுதில் வேறெங்கேனும் இருக்கலாம், அது நம் தேடலில் இந்நாள்வரை தெரியாமலும் போயிருக்கும். அந்த பிரமிட் வடிவங்களில் அப்படி என்ன சிறப்பு? எப்போதுமே பிரபஞ்ச தொடர்பில் இருப்பது, அதிலிருந்து சக்திவாய்ந்த மின்காந்த அதிர்வலைகள் குறிப்பிட்ட frequency யில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அண்டவெளியில் சூரியனிலிருந்து வெளிவரும் பிரணவ ஒளியின் அதிர்வுகள் இதோடு ஒத்துப்போகும். அந்த சக்திச்சுடரின் beam அகலமே சுமார் பத்து மீட்டர்வரை இருக்கிறது. இவை எந்நேரமும் மோட்டார் போல் இயங்கிக்கொண்டுள்ளது. மனித குலத்துக்கும் இயற்கை வளத்துக்கும் தேவையான சக்தியை அளித்து வருகிறது. பூமியின் சுழற்சியால் அடியிலிருந்து வெளிப்படும் புவி எதிர்மறை சக்தியை அமுக்கிவிடும், மீண்டும் பூமிக்குள்ளேயே பாய்ச்சிவிடும் வல்லமை பெற்றது. பிரமிடுக்குள் உஷ்ணம்/குளிர் சீராக மனிதனின் மனமும் தேகமும் அமைதி பெறுவது இந்த காரணத்தால்தான். முன்னொரு சமயம் வேற்று கிரகம், பிரபஞ்சவெளி இணைப்புப் பாதை பற்றி பதிவிட்டோம் அல்லவா? அதற்கும் இதற்கும் தொடர்பு உண்டு. சப்த சாகரங்களை சுற்றிவந்த சித்தர்கள் இவற்றின் பின்னணியில் இருப்பார்கள். வேற்று கிரகத்திலும் இதுபோல் இயக்கங்கள் உண்டு. அவை என்ன மாதிரியானது என்பதை இன்னொரு பதிவில் பார்ப்போம்.

Image may contain: mountain, sky, outdoor and nature

வியாழன், 27 செப்டம்பர், 2018

தர்மம் காக்கப்படுகிறதா?

“காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அர்ச்சகர்களுக்கு பலமாதங்களாக ஊதியம் தரப்படவில்லை” என்ற ஒரு செய்தியை அண்மையில் படித்தேன்.
கோயில் அர்ச்சகர்களுக்கு மூவாயிரத்துக்கும் குறைவாக அடிமாட்டு சம்பளமும் அதேசமயம் அறநிலயத்துறையில் கடைநிலை ஊழியருக்கு இருபதாயிரமும் உள்ளது. கோயில் பெயர் பலகையில் ‘அருள்மிகு’ என்ற சொல் பொறித்த அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்கள் நீங்கலாக சில கோயில்களில் மட்டும்தான் கவுரதையான ஊதியத்தை அர்ச்சகர்களுக்கு வழங்குகிறார்கள். கோயிலில் உண்டியில் விழும் பணம் அர்ச்சகர்களுக்குப் போய்ச்சேராது. தட்டில் விழுந்தால் மட்டுமே அவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
எல்லா கோயில்களிலும் சேரும் நிதி என்னவாகிறது? அர்ச்சகர்கள் மற்ற நாட்களில் மண்டபத்தில்/ வீடுகளில் வேறு விசேஷங்களுக்கு போயாக வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். இல்லாவிட்டால் எப்படி ஜீவனம் செய்வது? அதனால் தங்கள் குடும்பத்தில் அடுத்த தலைமுறையை வேறு தொழில் கல்விக்கு போகும்படி பணிக்கிறார்கள். இதுபோக நம் அரசு இந்து அறநிலையத்துறைமூலம் சேரும் நிதியைக்கொண்டுதான் மற்ற மதங்களின் பள்ளிவாசல்/தேவாலய தேவைக்கு கொடை செய்கிறது என்பது நாம் அறிந்ததுவே.
ஒருபுறம் அர்ச்சகர்களின் நிலை இழிவாக உள்ளது. இன்னொருபுறம், கலியுகத்தின் பிரதம பாதத்தில் கலி 5000 ஆண்டுகளுக்குப்பிறகு வேதியர்களின் நிலை சீர்கெடும் என்று அன்றே காலக்ஞானத்தில் தீர்க்கதரிசனம் உள்ளது. இது அவர்களுடைய ஊழ்வினைப் பயனே! இல்லாவிட்டால் வேறு ஜாதியில் பிறந்து வேறு தொழில் செய்யாமல் இக்குலத்தில் வந்து பிறப்பானேன்? இனி ‘எல்லா ஜாதியினரும் கோயில் அர்ச்சராகலாம்’ என்ற நிலை வந்தால் அவர்களும் ஆளாளுக்கு கோயில் தூணில் சாய்ந்து கொண்டு அட்டதிக் பாலகர்கலாக அமரவேண்டியதுதான். இறைத்தொண்டு புரிந்து வேதம் ஓதி பூசிக்கும் ஆதிசைவர்களைப்போல் எளிமையாக பொறுமையாக வாழ மற்றவர்களால் இருக்க முடியுமா? ஏதோ, சமூக கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவருவதற்காக கழக ஆட்சியில் இதெல்லாம் வீம்புக்காக செய்யப்பட்டது. கேரளத்தில் இது சாத்தியப்பட்டாலும் இங்கு இது வேலைக்கு ஆகுமா? இதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஆன்மிகத்தை ஆகமங்களை வேதத்தை வேதியனை, எதிர்த்து ஒரு நூற்றாண்டுக்கு முன் ஆரம்பித்த விடுதலை வேட்கையில் கழக தீவட்டிகளே எரிந்துபோகும் அபயாமே உள்ளது. இதுவும் பஞ்சபூதத்தானின் சீற்றத்தை அதிகரிக்கச் செய்யும். ஆரியர் / திராவிடர் என சொல்ல ஆரம்பித்து இறை நிந்தனை செய்து, மறையை எதிர்த்து, எல்லாமே தமிழ்தான் என்று சொல்லிக்கொண்டு பாதகங்களை விளைவித்து விட்டனர். இறை மொழியைக் கொண்டே இறைவனை எதிர்க்கும் தத்துவம் நம் தென்னகத்தில்தான் நடக்கும். நாம் எல்லோரும் இதிலிருந்து தப்பிக்கும் உபாயத்தை அறிந்துள்ளோம்.
என்னதான் ஈசனைத் தொட்டு பூசித்தாலும், மிகஅரிதாக எங்கேனும் தவறு இழைக்கும் அர்ச்சகர் இருக்கத்தான் செய்வார். அது அவருடைய கோள்சார கர்மவிதியாக இருப்பது. நிர்வாகமோ அதன் முக்கியஸ்தரோ இவர்களை மிரட்டிப் பணியவைத்து காரியம் சாதித்தால்தான் உண்டு. அதைத்தாண்டி தனி நபராக எந்தவொரு பெரிய துணிகர கொள்ளையோ, கடத்தலோ செய்துள்ளதாக எனக்குத் தெரிந்து இல்லை. வறுமையின் காரணமாக இவர்கள் வேதம் ஓதுதலை நிறுத்தினாலோ, தங்கள் பணியை செய்யாது போனாலோ குந்தகம் யாருக்கு? இதைப்பற்றி திருமூலர் முதல் திருவள்ளுவர் வரை விரிவாகச் சொல்லியுள்ளனர். அது நாட்டின் இறையாண்மையையும் மக்களையும் பாதிக்கும், வளத்தை சீர்குலைக்கும் என்கிறார்கள்.
‘யானைப்பாகன் பணக்காரன் ஆகிவிட்டான். ஆனால் யானை இன்னும் யாசித்துக்கொண்டு இருக்கிறது’
Image may contain: one or more people and people standing

இரகுவம்ச ராஜ்ஜியம்

இராமனுக்குப் பிறகு மகன்கள் அரசாட்சி செய்தனர். மகன் குசா அரசாட்சி செய்த காலத்தில் நம் தேசத்தை ஒட்டியபடி இருந்தவொரு மஹா துவீபத்தை இரு பிரிவாக பிரித்து ஆண்டான். அவை, சிவதான் மற்றும் குஷ் த்வீப். துவாபர யுகத்தில் இருந்த இவ்விரண்டும் இன்றைக்கு சூடான் மற்றும் அபிரிக்காவாக உள்ளது. குசாவுக்குப் பிறகு சுமார் 28 தலைமுறைகள் கழிந்தபின் பிருகத்பாலனோடு ரகுவம்சம் வாரிசில்லாமல் முடிவுக்கு வந்து நின்றது என்று பாகவத புராணம் கூறுகிறது. இந்த பிருஹத்பாலன் பின்னாளில் குருக்ஷேத்திர போரில் கௌரவர்களுக்கு ஆதரவாக போரிட்டான். அவன் அபிமன்யுவால் சக்ரவியூகத்தில் கொல்லப்பட்டான்.
அதெல்லாம் சரி. புராணங்களில் சொல்லப்பட்டதை நாம் பார்த்தோமா? எப்படி நம்புவது? ஒவ்வொரு துவாபர யுகத்திலும் வியாசர் என்பவர் அவதரித்து அனைத்து சுருதி-ஸ்மிருதி நூல்களை செப்பனிடுவார் என்பதை கடந்த பதிவில் பார்த்தோம். இதெல்லாம் மனித சக்திக்கு அப்பாற்பட்டது. துவாபர யுகத்தில் ஒவ்வொருவரும் ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தனர் என்று போகர் சொல்கிறார். அப்படிப் பார்த்தால் இராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் இரண்டிற்கும் சுமார் 20,000 வருடங்கள் இருக்கவேண்டும். என் ஆய்வுப்படி இராவணன் இராமனைவிட பல்லாயிரம் வருடங்கள் மூத்தவர். ஆகவே மனிதனால் இத்தனை புராணங்களையும் எழுதி நிர்மாணித்து, இன்று நாம் படித்துத் தெரிந்து கொள்ளும்வரை அதை காப்பது என்பது கடவுள் செயல்.
வேத காலம் என்பதே சுமார் 3000 வருடங்கள்தான் ஆகிறது. நீங்கள் சொல்வதற்கு தக்க தொல்லியல் ஆதாரங்கள் உண்டா? அதெப்படி காக்கப்படும்? என்று இன்றைக்கும் நம்மவர்கள் கேட்பதால் மேல்நாட்டு பாதிரிகளும் இஸ்லாமியர்களும் குதர்க்கமாக கேட்கத்தான் செய்வார்கள். குகையில் நபி நாதருக்கு ஜிப்ரேல் அசரீரியாக குரான் அளித்தார் என்று சொன்னால் மட்டும் நாம் ஏன் ஏற்கவேண்டும்? நேரில் பார்த்தோமா? இயேசு விஸ்வகர்ம ஆச்சாரி என்று நாம் சொன்னால் மேல்நாட்டினர் எற்பார்களோ? நாம் இன்றைக்குப் படிக்கும் வால்மீகி/ கம்பன் இராமகாதைகளில் பல வேற்றுமைகள் உள்ளதால் அவற்றை கற்பனை என்கிறோம். ஆனால் புராணங்கள் அப்படியல்ல.
இலங்கையில் பிரம்மாஸ்திரம் எய்தும்போது இராமனுக்கு முருகன் நின்று அருள் புரிந்தான். இராமன் வெற்றிபெற அகத்தியர் மந்திர உபதேசம் செய்தார். முருகன் இருந்தால் தமிழ் இருக்கும். அப்போது இராமன்/இராவணன் ஆகியோர் தமிழையும் அறிந்திருப்பார்கள். அப்படி என்றால் இன்றைக்கு இந்தியாவுக்கு மேற்கே/வடக்கே ஆரிய பகுதிகள் என்று நாம் சொல்லும் தேசங்களில் எல்லாம் தமிழே இருந்தது. அதெப்படி திடீரென்று ஆரியர்கள் என்ற சொல் பிரயோகத்தில் வரும்? பொதுவாக ஆரிய என்றால் மேன்மை, உயர்வு, முதன்மை என்று பல பொருள்படும். கடந்த யுகங்களில் எல்லாம் ஒன்றுபட்ட பூமியாகவே பெரிய துவீபமாக திகழ்ந்தது. எல்லாவற்றுக்கும் குமரிக்கண்டம்தான் அஸ்திவாரம். அதன் எஞ்சிய பகுதியே இன்றைய குமரி. அங்குதான் சுயம்பு மனு மனித குலத்தை சிருஷ்டித்தான். ஆக, ஏன் நம்மை பிறர் எதிர்கிறார்கள்? நாம் நம்முடைய தெய்வாம்ச புராணங்களை மட்டமாக பேசுவதாலும், நம்ப மறுப்பதாலும் மற்றவர்கள் கையோங்கிவிட்டது. ருஷியா அப்கானிஸ்தான் எகிப்து சுமேரியா தென்னமரிகா முதலான பிராந்தியங்களில் வேதம் மந்திர கோஷமாகவும், தமிழ் சமூக மொழியாகவும் நிலைத்து இருந்தது. அங்கு எடுக்கப்பட்ட பானைகள் கல்வெட்டுகள் எல்லாமே நம் தென்கோடி கீழடி வரை பேதமின்றி ஒத்துப்போகிறது. சமஸ்கிருதம்/ தமிழ் மொழிகளிருந்து பிற்பாடு பரந்துபட்ட ஆரிய தேசங்களில் பல மொழிகள் பிறந்தன.
ஈசனின் வேதத்தை வியாசர் தொகுத்தார். ஆனால் ஏன் இத்தனைப் புராணங்களை அளிக்கவேண்டும்? கடந்துவந்த பாதையையும் நடந்த நிகழ்வுகளையும் கலியுக மக்கள் அறியவேண்டும் என்பதற்காக ஈசனே பணித்த தொகுப்புப் பணிதான் இவை. ஒரு பேச்சுக்கு அச்சு/மின்னூல்/ஒலி/ஒளி முறைகளிலுள்ள வேதங்களையும் புராணங்களையும் எப்பாடுபட்டாவது அழித்துவிடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் என்னவாகும்? அரூபமாக ஈசனின் கட்டுப்பாட்டில் உள்ள அத்தனையும் மீண்டும் சிருஷ்டியாகும். மேருவுக்கு உத்தரத்தில் (வடக்கே/வட மேற்கே) எல்லாமே ஆரிய பகுதி என்றும், கீழே தென்னாடு அனைத்தும் தக்ஷிணபாதம் என்று கொள்ளப்பட்டது. எல்லாமே வேதமறை போற்றிய மனுமொழி தமிழ் சமூகமே! முற்போக்கு நாத்திகர்கள் மற்றும் அயல் மதத்தினர்கள் இங்கே சர்ச்சை கிளப்பி நம் தொல் தத்துவத்தை புறம் தள்ளுகிறார்கள். வடக்கே நம் சகோதர்களுக்குத் தெரியாத பல ரகசியங்களை நாம் தெரிந்து வைத்துள்ளோம்.
ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் எத்தனைப்பேர் மாண்டார்கள் என்பதை காலாங்கி பார்த்துள்ளார். அதுபற்றி போகர் கூறுகிறார். கிருத யுகத்தில் கோடி சங்கம், திரேதா யுகத்தில் லட்சத்து நூறு சங்கம், த்வாபர யுகத்தில் லட்சமது எண்பத்திரண்டு சங்கம். கலி யுகத்தில் அவர் சமாதிக்குப் போகும் வரை பார்த்தது லட்சமது நாற்பத்திரண்டு சங்கம் என்று விவரிக்கிறார். (சங்கம் =1015, quadrillion) இத்தனை ஜனத்தொகை அப்போதிருந்ததா என்ற ஐயம் சிலருக்கு எழும். இதில் மறு ஜென்ம பிறப்பு/ இறப்பு அடங்கும் என்று அனுமானித்துக் கொள்ளவேண்டும். கலியுக முடிவில் மனிதனின் ஆயுள் நூறு மட்டுமே என்கிறார் போகர்.
(கற்பகம் புத்தகாலயம் வெளியீட்டில் அடுத்து வரவுள்ள என்னுடைய புத்தகத்தில் ஒரு சிறு பகுதியை கருத்துப் பதிவாக இட்டேன்.)
No automatic alt text available.
No automatic alt text available.

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

மறைந்துவரும் ‘லென்டிங் லைப்ரரி’

பல வருடங்களுக்குப்பிறகு இன்றுதான் ஒரு லென்டிங் நூலகத்திற்குச் சென்றேன். ‘விக்னேஸ்வரா லென்டிங் லைப்ரரி, வளசரவாக்கம்.' பழுப்பாகிப்போன பல புத்தகங்கள் அங்கே புத்தக அடுக்குகளில் சோம்பிக் கிடந்தது. சாண்டில்யன், லட்சுமி, தீபம் பார்த்தசாரதி, சிவசங்கரி முதல் இக்கால எழுத்தாளர்கள் வரை பலதும் அடுக்கி வைத்திருந்தார். இன்னொருபுறம் ஹேட்லி சேஸ், அகதா கிறிஸ்டி, டின்டின், முதல் ஹாரி பாட்டர் வரை இருந்தன. எங்களை யாரேனும் வந்து புரட்டிப் பாருங்கள் என்று கூவாத குறையாக அங்கே ரசகற்பூரம் மணக்க புத்தகங்கள் ஏங்கிக்கொண்டு இருந்தன.
“சார், இப்பல்லாம் மின்னமாதிரி அதிகமா யாரும் படிக்க வருவதில்லை. சித்தர்கள், அமானுஷ்யம், சுயமுன்னேற்றம், இதை மாதிரி படிக்கும் சிறு கூட்டம் உண்டு. மத்தவங்க எல்லாம் கல்கண்டு, ராணி, குரு பெயர்ச்சி பலன்கள் போன்றதை தேடுகிறார்கள். இன்னும் சில பசங்க வந்து காதல் கவிதைகள் புக்ஸ் இருக்கானு கேக்குறாங்க” என்று கூறினார் அதன் உரிமையாளர் திரு.சுப்பிரமணியன்.
“வரும் சந்தா பணமும், சர்குலேஷனில் வரும் லென்டிங் பணமும் போதவில்லை. கடை வாடகைக்கே வரும் தொகை போய்விடுகிறது. சிலர் படித்துவிட்டு அப்படியே அபேஸ் செய்வார்கள், வீடு மாற்றிக்கொண்டு கொடுக்காமல் போய் விடுவார்கள், தொலைந்து போச்சு என்பார்கள், இப்படியே முக்கால்வாசி புத்தகங்கள் போய்விடுவதுண்டு. அத்தனையும் என்னுடைய 50 வருட சேகரிப்பு சார் என்றார். 1990ல் சுமார் இரண்டாயிரம் சந்தாதாரர்கள் இருந்தார்கள். இப்போது முன்னூறு பேர் இருந்தால் அதிகம். இப்போதெல்லாம் எந்த புதிய புத்தகத்தையும் நான் லாமினேட் செய்வதில்லை. போன மழையில் கடையில் தண்ணீர் ஒழுகி மெஷின் கெட்டுப்போச்சு. ரிபேர் செய்ய செலவு ஆவதால் அப்படியே விட்டுட்டேன்.
இங்கே ஆண்டு சந்தா ரூ.400, அதுபோக வாசிக்க எடுத்துப்போகும் ஒவ்வொரு புத்தகத்துக்கும் குறைந்தது ரூ.25 - 35 வரை ரீடிங் சார்ஜஸ் வாங்குவேன். அந்த புக்ஸ் நம் கடைக்கு திரும்பி வரும்வரை நிச்சயமில்லை. குறித்த தேதியில் வராவிட்டால் அதைத்தேடி நான் அவங்க வீட்டைத்தேடிக் கண்டு பிடித்து சிரமப்படுவதும் உண்டு. இந்த காலத்துல எந்த பசங்களும் நோட்ஸ் எடுப்பதில்லை. ஸ்கூல் பசங்க இன்டர்நெட்டில் காப்பி அடித்து ஹோம்வர்க் செய்யறாங்க. இன்டர்நெட்டில் டவுன்லோட் செய்துகிற e-books ஐ நிறையபேர் முழுதும் படிப்பதில்லை. வாசிப்பு சுத்தமா மாறிப்போச்சு சார். நூலகத்தை என் ஆத்ம திருப்திக்காக நடத்துறேன்” என்று ஆதங்கத்துடன் பேசினார்.
அப்போது காரில் வந்து இறங்கிய மெத்தப் படித்த நடுத்தர வயது பெண்மணி ஒருவர் ஐந்து தமிழ் புத்தகங்களை திருப்பிக் கொடுக்க வந்தார். மேசையில் வைக்கும்போது அவை என்னவென்று பார்த்தேன். அத்தனையும் அக்கால எழுத்தாளர்களின் நாவல்கள் மற்றும் ஆன்மிக புத்தகங்கள். ஆக, இதுபோன்ற தலைப்புகள்தான் இவர் கடைக்கு சுவாசம் ஊட்டிக் கொண்டிருக்கிறது. புத்தகத் திருட்டை ஒழிக்க முடியாது. வாசிப்பு உலகில் இதெல்லாம் சகஜம்! ஆனால் சற்று காது கேளாத இவருக்கு வாசகர்களின் செயல் நஷ்டப்படுத்தும்.
அவருக்கு நான் எழுதிய சில சித்தவியல், சமூகவியல், தன்னம்பிக்கை புத்தகங்களை அன்பளிப்பாக கொடுத்துவிட்டு வந்தேன். ‘சார், ரொம்ப தேங்க்ஸ். இன்னைக்கே அதை கேட்டலாக் போட்டு ஷெல்ஃப்ல வெச்சிடுறேன் சார்” என்றார். மனிதர் மிகவும் நெகிழ்ந்து போனார்.

தெய்வப் பழம் நீ

பழனி தவத்திரு தங்கவேல் சித்தர் சுவாமிகள் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் எழுதிய நூல் 'தெய்வப் பழம் நீ' என்னிடம் இருந்தது. அதை ஒளிநகல் எடுத்து மின்னூலாக மாற்றி இங்கே பதிவேற்றி உள்ளேன். வாசிக்க விருப்பம் உள்ளோர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

https://drive.google.com/open?id=1P0l0-wdxWnceoh-lLvwnmKFqlPaSepdU


வியாழன், 20 செப்டம்பர், 2018

Vintage collection

From the pages of my old philately book. Thanks to my grandpa for his meticulous collection and passing on to me. Special postage stamps on Nataraja, Rameswaram temple, Victoria, George VI, Edward, are displayed here.


புதன், 19 செப்டம்பர், 2018

நீயும் பொம்மை நானும் பொம்மை

எங்கள் தெருவில் ஒரு Play school உள்ளது. காலையில் 8 மணிக்கெல்லாம் குழந்தைகளை வீட்டிலிருந்து அள்ளிக்கொண்டுவந்து பெற்றோர்கள் இறக்கி விடுவார்கள். காலையில் தவறாமல் 8.30க்கு ஒரு குழந்தை வீரிட்டு அழுவது தெரு முழுக்க ஒலிக்கும்.
அதுபோல் இரவு 8 மணிவரைக்கூட சில குழந்தைகள் வாசல் கதவை பிடித்துக் கொண்டு அழுதுகொண்டு வேடிக்கைப் பார்க்கும். பணிக்கு செல்லவேண்டிய கட்டாயத்திலுள்ள பெற்றோர்கள் வந்து கூட்டிச் செல்லும்வரை நிலை இதுதான். எனக்குத் தெரிந்து அது பெரிய வீடுதான், வராண்டா பகுதியில் பொம்மைகள் விளையாட்டு சாமான்கள் உள்ளது. நாள் முழுக்க அவை என்னதான் விளையாடும்? அலுத்துப்போகும். அங்கே மண்டசோரி ஆசிரியைகள் இருவர், மேய்க்க ஒரு ஆயா உள்ளாள், வாசலில் ஒரு செக்யுரிட்டி. ஆசிரியைகள் போனபின் அடைந்து கிடக்கும் குழந்தைகள் என்னதான் செய்யும்?
கேட்டைத் திறந்துக்கொண்டு சாலையில் இறங்கி விளையாடவும் முடியாது. வாசலில் நின்றால் கொசு கடிக்கும். அவை மிருககாட்சிசாலை கூண்டில் அடைபட்ட பிராணிகளைப்போல் சோர்ந்துபோன முகத்தோடு அங்கேயே திரிந்துகொண்டு இருக்கிறது. இந்த அவஸ்தைகளை குழந்தைகள் அனுபவிக்க வருடத்திற்கு ரூபாய் 1 லட்சம் பீஸ் கட்டுகிறார்கள். இக்குழந்தைகள் ஞாயிறு மட்டும் வீட்டில் தாய் தந்தையோடு விளையாடினால் அதிகம். அதற்குள் தொலைகாட்சி/ வீடியோ கேம்ஸ் போட்டு அதற்கு வெளியுலகம் அறியாமல் செய்து விடுகிறார்கள். கணவன்-மனைவி பொருளீட்ட வேண்டும், குழந்தை பெறவேண்டும், பொருளாதார அந்தஸ்த்து அடைய வேண்டும் என்றால் எப்படி? ஓய்வுபெற்ற நிலையில் எத்தனை பாட்டி தாத்தா இதுபோல் பேரக் குழந்தைகளோடு சரிசமமாக விளையாட முடியும்? அவர்களுக்கே ஒரு காப்பாளர் வேண்டிய நிலைதான் உள்ளது.
இப்போது தெருவில் வரும்போது அக்குழந்தைகள் என் கணில்பட்டனர். குழந்தைப் பருவம் என்னவென்பதை அறியாமலே வளர்ந்து விடுவார்கள். ஐயோ பாவம்!

Image may contain: one or more people

திங்கள், 17 செப்டம்பர், 2018

ஆனந்தக் களிப்பு

1988 ல்  கருவறை பூட்டப்பட்டது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று செப் 16, 2018 திருவான்மியூரில் பாம்பன் சுவாமிகளின் சமாதி கோயில் கருவறை திறக்கப்பட்டது. இரவு முதல் அதிகாலைவரை மழை பொழிந்து குளிரிவித்தது. சுவாமிகளின் படத்தை அகற்றினால் பெரிய கதவு புலப்படும். இந்நாள்வரை அக்கதவு வெளியே தெரியாதவாறு படத்தை வைத்து மறைத்திருந்தனர். நீதிமன்றம் சாவியை ஒப்படைக்க வாயில் திறக்கப்பட்டது. குருநாதர் பாதங்களுக்குப் போற்றி. 'வேலும் மயிலும் துணை'

No automatic alt text available.

No automatic alt text available.

ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

பாதாள நரகம்!

எனக்குத் தெரிந்த ஒரு கிழவி அண்மையில் தன் 95வது வயதில் மாண்டாள். அவள் இருந்தவரை தன் மகளுடன் கூட்டு சேர்ந்து தன் மருமகளுக்கு சொல்லொணா துயரங்கள் தந்தாள். அக்கிழவியின் குணத்தை அவள் மகனும் ஆதரித்ததுதான் கொடுமை. ஒரு கட்டத்தில் மருமகளை வீட்டை விட்டு துரத்தியும் விட்டாள். காலம் முழுக்க கிழவி பிரச்சனையாகவே இருந்தாள். அவள் எங்கே உள்ளாள் என்பதை அதிகாலை கனவில் பார்த்தேன்.
அவளை யாரோ புதைக்குழிக்குள் இழுப்பதும் அவள் வாய் மூக்கு காது எல்லாம் மண் அடைத்து, கீழே இழுக்கப்படுவதைக் கண்டேன். அவள் என்ன ஆனாள் என்று பார்க்க பாதாள உலகம்வரை பயணித்தேன். அங்கே ஒரு தடாகம் இருக்க சிறு சுறா ஒன்று என் முன்னே வந்து நின்றது. அது தன் வாயை எனக்குத் திறந்துகாட்ட, அங்கே மேல்/ கீழ்த்தாடை கூர் பற்களுக்கு இடையே இக்கிழவி சிக்கிக்கொண்டு திணறுகிறாள். என்னைப் பார்த்ததும் 'நானே விருப்பப்பட்டுத்தான் இங்கே வந்தேன்' என்றாள். உடனே சுறா மீன் போய்விட்டது.
கெத்துதான்! அக்கிழவி இப்படிச் சொன்னது எனக்கு நகைச்சுவையாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ஆனால் நாம் புரிந்து கொள்ளவேண்டியது என்ன?
"பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ் செய்தே யமன் கொண்டோடிப் போவான்
வேத விதிப்படி நில்லு - நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு"
பாவங்கள் செய்வதால் அல்லல்பட்டு இறக்க நேரிடும், அந்த ஊழ்வினைக்கேற்ப பிறவிகள் துரத்தும், யமன் துரத்துவான். இப்படியே இந்த ஓட்டம் தொடரும். கோபத்தையும் அதன் காரணிகளையும் விட்டொழித்தால் பிறப்பு-இறப்பு அறுபடும். வேதம் உரைத்த தர்மநெறிப்படி வாழ்ந்தால் மேன்மையான இடத்தை அடையலாம் என்ற கடுவெளி சித்தர் பாடல் என் நினைவுக்கு வந்தது. சொர்க்க/ நரக பதியில் என்ன நடக்கிறது என்பதை பார்த்த குருநாதர் போகரும் இதையேதான் வலியுறுத்தியுள்ளார்.
No automatic alt text available.

Divine photo 4

At the Naga-Valli நாகவல்லி ritual function of the wedding, when I clicked, a naga sarpam appeared in the flame with a long projecting split tongue. This homam is done in the afternoon, to propitiate nagadevas and purify the generation without any sarpa dosham. This ritual is widely followed by smartha brahmins of Andhra and Karnataka.

Miniature models from the kitchen

Here you see a plate full of sugar dolls in different shades and waxy tiffin snacks. A special thamboolam is also at sight. Thanks to my cousin Prema whose hard work had made it realistic.




ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

புது தம்பதி

ஓரினச் சேர்க்கை LGBT சம்பந்தமாக ஒரு தீர்ப்பைக் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திவிட்டது உச்ச நீதிமன்றம்! இனி ஊரெல்லாம் ஒற்றைத் தோடு படு ஜரூராக வியாபாரமாகும். ஆங்காங்கு முகநூல் வாட்ஸப் பக்கங்களில் ஆண்களின் வலதுகாது பளபளக்க நிறைய படங்கள் பதிவேற்றம் ஆகிறதாம். மறைவாக செயல்பட்டவர்கள் இனி பகிரங்கமாக உலா வருவார்கள். புறத்தே ஒன்றுமாக, அகத்தே ஒன்றுமாக உருவம்கொண்ட மனிதர்களை நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. 'ஒரே குலம் ஒரே இனம்' 'சுதந்திர சுவாசம்' என்று பதாகைகள் ஏந்தி கொண்டாடிய தம்பதியர்கள் அதிகம் இருந்தனர். நேற்றைய டிவி செய்தியில் இதுதான் பிரதானம்.
வாசிக்கலை, நினைவாற்றல், மருத்துவ வர்மம் செயல்பாட்டிற்கு இரு காதுகளிலும் ஆண்கள் கடுக்கன் போட்ட காலம் மலையேறிவிட்டது. ஒற்றைக் காதில் மட்டும் கடுக்கன் /தோடு அணியக்கூடாது என்பது விதி.
அமலுக்கு வரும் புதிய சட்டத்தைக் கொண்டாடும் பிரஜைகளுக்காக ஒரு திருமண வாழ்த்து மடல்.
"ஆணும் ஆணும் நித்திய சிரஞ்ஜீவியாய்
பெண்ணும் பெண்ணும் சுமங்கலியாய்
காணும் ஓரினத்தில் தம்பதி சமேதமாய்
பூணும் வாழ்க்கையில் நீடூழி வாழுங்கள்."

No automatic alt text available.