About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 24 டிசம்பர், 2021

கிறிஸ்துமஸ்!

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்! Merry Christmas! 🎄🌠



திங்கள், 20 டிசம்பர், 2021

மங்கல வரிகள்!

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை மறைந்த ஆண்டு 1897. மகாகவி பாரதி மறைந்த ஆண்டு 1921. 

'ஆரியம் வழக்கழிந்து ஒழிந்தது' என்று முன்னவர் சொன்னார். பாமர மக்கள் மத்தியில் என்றுமே பேசப்படாத ஒரு மறை மொழி திடீரென எப்படி அழிந்து ஒழியும்?  

ஆனால் 'சுதேச கீதங்கள்' என்று தலைப்பிட்ட பகுதியில் தமிழின் குரலாகப் பாரதியார் எழுதியதாவது:

"ஆதிசிவன் பெற்றுவிட்டான் - என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்து - நிறை

மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்

மூன்று குலத்தமிழ் மன்னர் - என்னை

மூண்ட நல்அன்பொடு நித்தம் வளர்த்தார்;

ஆன்ற மொழிகளினுள்ளே - உயர்

ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்” (10)

ஆதி சிவனின் ஆரிய மொழிக்கு நிகராக (ஆதி சக்தி) தமிழ் வாழ்வதாய்ச் சொன்னதை எல்லோரும் மறந்து போனார்கள். ஆரிய கவிஞனுக்கு என்ன தெரியுமென இப்பாடலை எழுதினான் என்று அந்தச் சித்தனைத் தூற்றியவர்கள் உண்டு. 'செந்தமிழ் நாடெனும் போதினிலே' பாடலில் வேதம் நிறைந்த, வீரம் செறிந்த தமிழ்நாடு என்று போற்றுகிறார்.

சுந்தரம் பிள்ளை அமங்கலமாக எழுதிய வரிகளையும், பாரதியார் சுபமாக எழுதிய வரிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். நம் ஞானபானுவுக்கு இணை யாருமில்லை!

தமிழ்த்தாய்க்கு உருவச்சிலை அமைக்க அன்றைய தமிழ்நாடு அரசு திட்டம் வகுத்தபோது, அதற்காக ஸ்தபதிகள் தேர்ந்தெடுத்தது கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் உள்ள சோழர் காலத்திய 'ஞான சரஸ்வதி' உருவத்தைத் தான் என்கின்றனர். இது நமக்குத் தெரியாத ஒரு சங்கதி!