About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 27 அக்டோபர், 2019

காரணம் தெரிய 27 வருடங்களானது!

நான் சொல்லும் இப்பதிவு சற்று ஆச்சரியமானதாக இருக்கும். அது 1992-93. கல்லூரி மாணவனாக இருந்தபோது நான் கண்ட கனவைப்பற்றிச் சொல்கிறேன்.
விடியற்காலை கனவில் நான் காஞ்சி மகாபெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னே நின்றுள்ளேன். அவர் பிரம்பு நாற்காலியில் கால் நீட்டி அமர்ந்துள்ளார். அவருக்கு முன்னே தரையில் பழைய டேப்ரிகார்டிங் நாடா சுற்றிக்கொண்டிருக்க அவரை BBCயின் ஒரு நிருபர் பேட்டி காண்கிறார். இந்த ஆங்கிலேயர் கேள்வி கேட்க அதற்குப் பெரியவர் வாய்திறந்து பதில் சொன்னாலும் அது எனக்குக் கேட்கவில்லை. வலது உள்ளங்கையைப் புருவத்தின்மீது குவித்து அதிக ஒளியால் கண்கள் கூசாமல் இருக்க மறைப்பாக வைத்துக்கொண்டு என்னையும் பார்த்தார். ஆனால் அவருடைய குரல் சற்றும் எனக்குக் கேட்கவில்லை. ஆங்கிலேயர்க்கும் கேட்கவில்லை. ஆனால் ஒலிப்பதிவு நாடா சற்றிக் கொண்டிருந்தது. எனக்கு ஒரே தவிப்பு! அவர் சொன்னது எனக்கு ஏற்புடையதாக இருந்து நமக்குக் கேட்கவில்லையோ என்று மன சஞ்சலம். இதுதான் நான் கண்ட கனவு.
அன்று சீக்கிரமே எழுந்து விட்டேன். வீட்டு வாயிலில் அன்றைய ஆங்கிலச் செய்தித்தாள் கிடந்ததை எடுத்து வந்து செய்தித்தாளை முழுதுமாக விரித்துப் பார்க்கும்போது, கீழே ஒரு கட்டம்போட்ட விளம்பரம் இருந்தது. “The Voice of Sankara” Audio release at Narada Gana Sabha என்று அதில் செய்தி இருந்ததைப் பார்த்ததும் அதிர்ச்சி. நாம் கண்ட அந்த பேட்டியின் ஒலிநாடாவோ என்று நினைத்தேன். பிறகு சமயம் கிடைக்கும்போது அதை வாங்கிக் கேட்கவேண்டும் என்று நினைத்து அப்படியே காலம் ஓடியது. பிற்பாடு ‘தெய்வத்தின் குரல்’ புத்தகம் ஒன்றிரண்டை நூலகத்தில் படித்தேன். முழுதுமாக ஆறு பாகங்கள் வாங்கவில்லை.
நேற்று எதேச்சையாக ஒரு மருத்துவரின் பேட்டியைக் கண்டேன். அவர் டாக்டர். பிஸ்வகுமார், நரம்பியல் நிபுணர். இந்திய இராணுவத்தில் மருத்துவராகப் பணிபுரிந்தவர். மகாசுவாமியின் உடல்நலம் சோதிக்க பிரத்தியேகமாக வரவழைக்கபட்டார். பரமாச்சாரியர்க்கு 97 வது வயதில் ஆரம்ப நிலை ஸ்ட்ரோக் வந்துள்ளதைக் கண்டறிந்து மருந்து கொடுக்கலானார். இது வெளிவட்டத்தில் யாருக்கும் தெரியாமலே இருந்தது. மூப்பின் காரணமாக உடல்நலம் சரியில்லை என்றே நம்பப்பட்டு வந்ததாம். அதன்பின் வாராவாரம் வியாழக்கிழமையில் இவர் சென்னையிலிருந்து காஞ்சி மடத்திற்குச் சென்று அவரைத்தொட்டுப் பார்த்துப் பரிசோதனை செய்யும் பாக்கியத்தைப் பெற்றார். ஸ்ட்ரோக் வந்ததன் காரணமாக மகாசுவாமியின் குரல்வளை பாதித்திருந்ததால் அவர் தன் 98 முதல் 100வது வயதுவரை அதிகம் பேசாமல் மௌனம் காத்ததையும் டாக்டர் வெளிப்படுத்தினார். அவர் தன் கனகாபிஷேகத்திற்கு முன்பு அவசியம் இருந்தால் மட்டுமே பேசினாராம். 1994 ஆம் ஆண்டு நூறாவது வயதை பூர்த்தி செய்ய நான்கு மாதங்கள் இருக்கும்போது மார்கழி மாதத்தில் சித்தியடைந்தார்.
மஹாதேவ அம்சமாக இருந்தாலும் மனித சரீரத்தின் வினைப்பயனை அனுபவிக்க வேண்டியதுள்ளது என்பதற்கு இவர் உதாரணம். 1993ல் அவர் என் கனவில் பேச முற்பட்டும் அப்பேச்சு எதுவும் எனக்குக் கேட்காமல் போனதன் காரணத்தை இன்று 27 வருடங்கள் கழித்து அறியப்படுத்தினார்! இனி என் மனதில் நெருடல் இல்லை.
Image may contain: one or more people, people standing, beard, eyeglasses and closeup

செவ்வாய், 22 அக்டோபர், 2019

பழசென்ன புதுசென்ன?

சமையல் செய்யாவிட்டால் ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டுக்கொள்ளலாம். வங்கி வேலைநேரம் முடிந்தபின் பணம் எடுக்க ஏடிஎம் சென்று எடுக்கலாம்.தேசிய பண்டிகை ஞாயிறன்று வந்தால் மறுநாள் விடுமுறை அறிவிக்கலாம். தின்பண்டம் செய்ய முடியாவிட்டால் கடைசி நேரத்தில் கடையில் வாங்கிடலாம். பண்டிகைக்குப் புத்தாடை வாங்க ஜவுளிக் கடைக்குச் சென்றிடலாம். ஆனால் புதுத்துணி வாங்கி தைக்கக் கொடுத்துவிட்டு கெடு தேதிக்குக் காத்திருக்கும்போது அந்த தையல்காரரே இறந்துவிட்டால், ஐயோ பாவம்! துணி இன்னும் வெட்டப்படாமல் தைக்கப்படாமல் அப்படியே மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டால் டெலிவரிக்குக் காத்திருந்த வாடிக்கையாளர்கள் வேறெங்கும் கொடுத்து தைக்க அவகாசமின்றி ஏமாற்றம் அடைவார்கள்.
எங்கள் பகுதியில் இருந்த டெய்லர்க்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை அங்காடி வீதியெங்கும் அஞ்சலி சுவரொட்டியில் காணப்பட்டார். சிறிய கடையின் ஷட்டர் மூடியே இருந்தது. உடனே அவருடன் உரையாடிய நினைவுகள் ஓடியது. முன்னொரு சமயம் ஒரு மாலைப்பொழுதில் கடைக்குச் சென்றேன்.
நான்: "சார், இந்த பேன்ட் கொஞ்சம் டக் பிரிச்சு தைக்கணும்'
அவர்: "பழைய துணி எல்லாம் விளக்கு வைக்கிற நேரத்துல எடுக்க மாட்டேன்"
நான்: "இன்னைய பொழுதுக்கு மட்டும்தானா இல்ல எப்பவுமே தைக்கிறது இல்லையா?"
அவர்: "எப்பவுமே தைக்கமாட்டேன். வேற யார்கிட்டேயாவது கொடுங்க" என்று சொல்லிக்கொண்டே மேசைமீது விரித்திருந்த அளவு மார்கிங் செய்த பிளவுஸ் துணியை டர்...டர் என்று வெட்டிக்கொண்டு இருந்தார்.
நான்: "அச்சச்சோ.. விளக்கு வெச்ச நேரத்துல ஒரு நல்ல துணியை இப்படி அபசகுணமா கிழிச்சு வெட்றீன்களே.. சென்டிமென்ட் பேசுறீங்க.. இது மட்டும் பரவாயில்லையா?" என்று கலாய்த்தேன்.
துணி கத்தரிப்பதை நிறுத்தி விட்டு ஏறெடுத்து என்னை முறைத்தார்.
அவர்: "தைக்க மாட்டேன். பிரச்சனை பண்ணாம போங்க சார்' என்றார்.
தொழில் என்று வந்தபின் துணியில் புதிதென்ன பழையதென்ன? இதுபோல் நம்மைக் கடந்து போகும் கதாபாத்திரங்கள்தான் எத்தனை விதம்!
No photo description available.

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

மின்னும் ஆக்கங்கள்

நாம் கையாளும் மின்னியல் சர்கியூட் எல்லாமே மிகவும் பழமையானது. ஏற்கனவே இருந்த சூத்திரங்கள் கலியின் தொடக்கத்தில் காணாமல் போனது. பிறகு ஐரோப்பிய விஞ்ஞானிகள் மூலம் ஒவ்வொன்றாக வெளிப்பட்டது. அக்கால கட்டத்தில் பாரதத்தில் இவை ஒரு சில வைத்திய குடும்பத்திற்கு மட்டும்தான் தெரிந்திருந்தது. அப்படியிருந்தும் அவை பெரிய அளவில் பயன்படவில்லை. எல்லாம் சிவ சித்தம். சித்தர்கள் ராஜ்ஜியத்தில் இப்போது சித்த நூல்களில் உரைக்கபட்டவை எல்லாமே அதிவேகமாகப் புலப்பட்டு வருகிறபடியால் நாம் பிரமித்து நிற்கிறோம். கீழடி கதையும் அப்படித்தான்.

தோண்டிக்கொண்டே போய் வெறும் பானை சில்லுகள், செங்கல் சுவர்கள், பாசி மணிகள், சுடுமண் சுதைகள் மட்டும் கிட்டுவது சரிபடாது. ஊரகக் கட்டுமான குடியிருப்பின் வாஸ்து வரைபடமும் அக்காலத்து பயன்பாட்டுப் பொருட்கள் ஓரளவுக்குத் தெரியவரும். ஆனால் நவீன அறிவியல் உபகரணங்கள் மற்றும் புதைந்த ஆக்கங்கள் தெரியவருவது நம் கையில் இல்லை. அதை அவன்தான் வெளிக்கொண்டு வரவேண்டும். அதுவரை இப்படியெல்லாம் இருந்துள்ளன என்று வேதங்கள்/சித்தநூல்கள் வாயிலாக நாம் தெரிந்து கொள்வதோடு சரி. மாமல்லபுர துறைமுகம் மற்றும் நகரத்தின் கடலடி அகழ்வாராய்ச்சிக்கு மீண்டும் திட்டம் போட்டுள்ளனர். ஆச்சரியமான பொருட்களும் கிடைக்கலாம் முக்கியத்துவம் பெறாதவைகளும் கிடைக்கலாம். 



சனி, 19 அக்டோபர், 2019

குவாங்சு தில்லைவனம்

நான்காம் காண்டத்தில் போகர் தென் சீனப்பகுதியை விவரிக்கிறார். எழிலான தெற்கு சீனபதியோரம் நதிகளும் ஓடைகளும் நிறைந்த ஒரு தில்லைவனம் உண்டு. ஐராவதம் போன்ற பனிமலைகள் சூழ்ந்த இப்பகுதியில் பல தவசிகள் வாழ்ந்துள்ளார்கள். நம் தேசத்தில் நமக்குத் தெரிந்த ஒரே தில்லைவனம் சிதம்பரம் அருகிலுள்ள பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு மட்டும்தான்.

ஆனால் போகர் சுட்டிக்காட்டும் அத்தில்லைவன பூகோளப் பகுதி இன்றைய சீனாவின் குவாங்சு பகுதியில் உள்ளது. அங்குதான் ரிஷி முனிகள் திரண்டு நின்று சிவவாக்கிய சித்தருக்கு உபசாரங்கள் செய்து கைகுவித்து நின்றிருந்தார்கள். குவலயத்தை மறந்து மூன்று யுகம் சமாதியிலிருப்பேன் என்று கூறிய சிவவாக்கியர், இரண்டு கோடி ஆண்டுக்காலம் வரை சமாதியிலிருந்து விட்டு மீண்டும் பூமிதனில் எழுந்து வந்தார் என்கிறார் போகர்.

பெரிய அளவில் வர்த்தகங்கள் நடந்துவந்த துறைமுகப் பட்டினம்தான் குவாங்சு. இங்குதான் போகர் தன் முந்தைய ஜெனனங்களில் லாவோசு @ போயாங் என்ற பெயருடன் கிமு12000 - கிமு4 வரை பன்னிரண்டாயிரம் வருடங்கள் வாழ்ந்தார். பிறகு தேசம் பெயர்ந்து இங்கே வந்தார். இந்த குவாங்சு  பட்டினத்திலிருந்து உயர்தரமான பட்டு மற்றும் வாசனாதி திரவியங்கள் ஏற்றுமதியாகி கப்பல் மூலம் நம் மாமல்லபுரம் கடல் முகத்திற்கு வந்தது. இதுதான் silk route பட்டு வர்த்தக வழி என்றானது.

மல்லனின் நீர்ப்பெயற்று துறைமுகத்திலிருந்து பாலாறு வழியே சரக்குகள் படகுமூலம் சிரமமின்றி பல்லவர் தலைநகராம் காஞ்சியைச் சென்றடைந்தது. இதன் காரணமாகவே பண்டைய காலந்தொட்டு இன்றுவரை காஞ்சியில் பட்டு நெசவு பிரசித்தம். பாலாற்றின் கிளை நதிதான் வேகவதி. சீன யாத்திரிகர் யுவான் சுவாங் தன் பயணக் கட்டுரையில் காஞ்சியின் பெருமைகளை உரைத்ததை நாம் அறிவோம். இன்றைக்கு நாம் கேள்விப்படும் பட்டினம் என்று பெயர் தாங்கிய ஊர்கள் எல்லாமே கடலோர துறைமுகங்களாக, அதன் தொடர்புடைய வர்த்தக மையங்களாக ஒரு காலத்தில் இருந்தவை என்பதை மறக்ககூடாது.


வெள்ளி, 18 அக்டோபர், 2019

ஷிலின் பவளக்குன்று

போகர் தன்னுடைய பெருநூலில் சீனாவிலுள்ள சுவாரசியமான ஓர் இடத்தைப்பற்றி விளக்குகிறார். அஷ்டதிசையில் பறக்கும்போது வடக்கு முகத்தில் ஒரு கானகத்தில் கடுவெளி சித்தரைக் கண்டார். காலாங்கியின் சீடன் போகர் என்று கூறி அவர் வணங்கியதும், கானகத்தைக் காணவந்த நோக்கம் என்ன என்று கேட்க, பவளக்காட்டைப் பார்க்க வேண்டுமென்று விண்ணப்பத்தை வைத்தார்.
சித்த நாதாக்கள் யாரும் அறியாத அக்காட்டில் கூறான பாறைகள் நிறையவுண்டு. குதிரையின் சிரசுபோல் பாறையின் முனைகளிருக்க ஆளை விழுங்கிடும் வகையில் நெடும் உயரத்திற்கு வளர்ந்துள்ளது என்கிறார் போகர். கதண்டு மகரிஷியாரிடம் சென்றால் பவள மலையைக் காண்பிப்பார் என்று கடுவெளி சித்தர் கருத்துச் சொல்ல, தன்னை அழைத்துச் சென்று உதவும்படி வேண்டினார். அப்படியே கதண்டு மகரிஷியும் இவருக்குப் பவளக் காட்டின் ரகசியத்தைச் சொல்லலானார்.
சீனாவின் யுனன் மாகாணத்தில் 400sqkm பரப்பளவில் உள்ள 270 மில்லியன் ஆண்டுகள் பழமையான சுண்ணாம்பு மலைகளான Shilin (எ) Stone Forestஐ தான் இங்கே போகர் குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்ட இன்னும் பல இடங்களை நான் கண்டு ஆய்வு செய்ததை பின்வரும் பதிவுகளில் சொல்கிறேன்.
Image may contain: plant, outdoor and nature

சனி, 12 அக்டோபர், 2019

காஞ்சி போதிதர்ம புத்த விஹாரம்

சீன அதிபர் வருகைக்குப்பின் பல்லவன்- காஞ்சி- போதிதர்மர்- பட்டு- கடல்வழி- வர்த்தகம் என எல்லா அம்சங்களும் தூசி தட்டப்பட்டு உயிர்த்தெழுந்து விட்டன. இதுவரை சாதாரண சுற்றுலா தலமாக விளங்கிய தலம் இன்று உலக அளவில் பார்வையைப் பெற்றுள்ளது.
தொலைக்காட்சியில் நேற்று ஒரு நேர்காணல் பார்த்தேன். அதில் ‘போதி தர்மரை சீனாவில் பௌத்த பிக்குகள் போற்றுகிறார்கள். ஏன் தமிழகத்தில் பல்லவ இளவரசரை நாம் கொண்டாடவில்லை?’ என்று அவர் கேட்டார். புறக்கணித்தது இந்துக்களா பௌத்தர்களா? அதற்குச் சரியான விளக்கத்தை ஆன்மிகம் மற்றும் சித்தவியல் கண்ணோட்டத்தில் அவர் தரவில்லை. போதிதர்மரை ஏதோ இங்கே நாம் புறக்கணித்ததுபோல் சொன்னார். சன்மார்க்க இந்துக்கள் தினமும் காஞ்சி விஹாரத்திற்குப்போய் புத்தரையும் போதிதர்மரையும் போற்றுவதற்கு எந்த அவசியமுமில்லை. சைவமும் வைணவமும் தழைத்த ‘நகரேஷு காஞ்சியில்’ பௌத்தமும் வேரூன்றியது. அவையவை அதனதன் மார்க்கத்தில் போய்க்கொண்டிருந்தது. காஞ்சியில் பல்லாயிரக்கணக்கான பிக்குகள் விஹாரத்தில் தங்கியுள்ளனர் என்று அன்றே யுவான் சுவாங் தன் பயணக் குறிப்பில் எழுதியிருந்தார்.
சீன நாகரிகம் பற்றிய நூலில் நான் படித்தபோது பௌத்த மார்க்கத்தின் உட்பிரிவான தாவோ மதம் நிறுவிய லவோசு மற்றும் குரு கன்பூசியஸ் பற்றி விளக்கம் உள்ளது. அந்த லவோசு @ போயாங் நம் சித்தர் போகர் தான் என்பதை அவர்கள் அறியார். லவோசு இதுவரை பதிமூன்று பிறவிகள் எடுத்ததாகச் சீன வரலாற்றுப் பக்கங்கள் சொல்கின்றன. ‘பரங்கியர் தேசத்தில் பன்னிரெண்டாயிரம் வருடங்கள் வாழ்ந்தேன்’ என்று போகர் சொன்னபோது அது கிமு 5ம் நூற்றாண்டு. பதிமூன்றாம் ஜெனனமாக போகர் அங்கே லாவோசுவாக இருக்கும்போதுதான் நாட்டைவிட்டே வெளியேறி சீனப்பெருஞ்சுவரைத் தாண்டி மேருவிற்கு நிரந்தரமாக வந்தார். இன்றும் அதே சீனராகாவே சமாதியில் உள்ளார். ஆனால் இந்த புத்தவர்ம பல்லவன் @ போதிதர்மர் இங்கிருந்து போனதே கிபி 5-6 நூற்றாண்டில்தான். பின்னாளில் சீனாவில் ஜென் தத்துவ ஞானியானார்.
இத்தனை உண்மைகள் தெரிந்தும் பழனியில் போகரை நாம் கொண்டாடுவதைப்போல் லாவோசுவைக் கொண்டாடுவதில்லை. அதற்கு அவசியமுமில்லை. ஆதிபுத்தரை கண்ட காலாங்கியின் சீடர் போகரை வேறு விதமாக நாம் பார்க்கவில்லை. அவர் தானேதான் நபி இயேசு என்று உரைத்தும் நாம் ஏற்பதற்கில்லை. ஏன்? நம்முடைய கலாச்சாரம் பண்பாடு சிவபக்தி சித்தநெறி அடிப்படையில் என்ன தகுமோ அதன்படிதான் வழிபடுகிறோம். இதில் ஒரு தவறுமில்லை. இங்கே புதிதாய் என் பதிவுகளைப் படிப்போர்க்கு நான் மேலே சொன்னது விளங்குமா என்பது தெரியவில்லை. தேவாரம் பாடியவர்களும் சமண/பௌத்த மதத்தை ஏற்கவில்லை. இதுபற்றிய குறிப்புகள் அதில் நிறைய உள்ளது.
திருமழிசையிலுள்ள மருந்தீஸ்வரர் கோயிலுக்குப் பிரதோஷ வேளையில் முன் எப்போதோ சென்றிருந்தேன். அங்கே பூஜைகள் முடிந்து அலங்காரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும்வரை திரை மூடியிருந்தது. திரை விலகும்வரை அங்கே உத்தரத்திலும் இண்டுயிடுக்கு உயர் தூண்களிலும் என் பார்வையை மேயவிட்டுக் கொண்டிருந்தபோது. அங்கே மேலே பிள்ளையாருக்குப் பக்கத்தில் புத்தர் சிலைகள் இருந்ததைக் கண்டேன். அதற்கு யாரும் பிரத்யேகமாய் மஞ்சள் குங்குமம் பூசி வஸ்திரம் சாற்றி வழிபடவில்லை. புத்தர் சிற்பம் கருவறையில் மூலவராக இல்லாமல் அது அதுவாகவே உள்ளது. அவ்வளவுதான்! படத்தில் நீங்கள் பார்ப்பது காஞ்சியிலுள்ள பழமையான போதிதர்ம புத்த விஹாரம்.



வெள்ளி, 11 அக்டோபர், 2019

பதி சேவை!


நான் காலையில் செய்தித்தாள் வாங்கப்போகும் கடைக்கு 65 வயதான மூதாட்டி வருவர். அவர் தினத்தந்தி பேப்பர், ஒரு பீடி கட்டு, உதிரியாக 3 சிகரெட்டு என எல்லாம் சேர்த்து ரூ.50 க்கு வாங்குவார். அவர் வாங்கும் அரை லிட்டர் பால் விலை ரூ.23தான். ஆனால் அதைவிட இந்த புகைப் பொருட்களின் விலைதான் அதிகம். பீடி கட்டுக்கு ப்ரீ தீப்பெட்டி நேத்து தரலியே... எங்கேனு வூட்ல என்ன கேக்க சொல்ல நியாபம் வந்துச்சுஎன்று கடைக்காரரிடம் சொன்னார். டாஸ்மாக்கில் இதுபோல் எத்தனை மூதாட்டிகள் வந்து வாங்குவார்களோ நமக்குத் தெரியாது. கல்லூரிப் பெண்கள் வாங்கி அங்கேயே சரக்கு அடிக்கும் படத்தைத்தான் பார்த்துள்ளோம்.
இந்த மூதாட்டியின் முகத்தில் எப்போதும் ஒரு சோகம். அது கணவனுக்கா மகனுக்கா மாமனாருக்கா? கணவன் சீக்காளியா அடக்கியாள்பவரா? எதுவும் தெரியாது. இப்படியும் சமூகத்தில் பெண்கள் வாய்மூடிக்கொண்டு தினமும் கடமையைச் செய்கிறார்கள். இவர்களுக்கே மூப்பு வந்தும்கூட கணவன் போடும் சோற்றுக்காக தரும் நிழலுக்காக இதற்கெல்லாம் கட்டுப்படுகிறார்கள். அந்தோ பரிதாபம்!


வியாழன், 10 அக்டோபர், 2019

சம்பவாமி யுகே யுகே!

பகவத்கீதையை முதன் முதலில் உர்துவில் மொழிபெயர்ப்பு செய்தவர் முகம்மது மெஹ்ருல்லாஹ். பிற்பாடு அவர் இந்து மதத்தைத் தழுவினார். அரபு மொழியில் முதல்முறை பெயர்ப்பு செய்தவர் பாலஸ்தீனத்தின் எல் ஃபதே. இவர் இஸ்கான் பக்தி இயக்கத்தில் சேர்ந்தார். ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்தவர் சார்ல்ஸ் வில்கிநோஸ். அவரும் இந்துவாக மாறினார். உலக மதங்களில் இந்து மதம்தான் உயிரோடு இருக்கும் என்று அறிவித்தவர். ஹீப்ரூ மொழியில் முதலில் மொழியாக்கம் செய்தவர் இஸ்ரேல் நாட்டின் பெஸாசிஷன் ஃபானா. பின்னாளில் அவர் இந்துவாக மாறி இந்தியாவிற்கே வந்து தங்கிவிட்டார். ருஷ்ய மொழியில் மொழிபெயர்ப்பு செய்தவர் நோவிகோவ். அவரும் கிருஷ்ண பக்தர் ஆனார்.
இதுவரை 283 ஆசிரியர்கள் பகவத் கீதையை பல்வேறு மொழிகளில் பெயர்ப்பு செய்துள்ளனர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அல்-குரானை முதன் முதலில் பெங்காலியில் மொழி பெயர்ப்பு செய்த கிரீஷ் சந்திரசென் இஸ்லாமுக்கு மதம் மாறவில்லை. ஏனென்றால் அவர் ஏற்கனவே கீதையைப் படித்துப் பாராயணம் செய்தவர்.
உண்மை இப்படி இருக்க, நம்மூர் மூடர்கள் பாசறையில் மணியும் சுடலியும் சீமானும் டேனியலும் ஜீவனம் செய்ய இன்னும் மறுப்புப் பிரச்சாரம் செய்வது நகைப்புக்குரியது. கிருஷ்ண பரமாத்மா இவர்களிடத்தும் கருணைக் காட்டி வருகிறார் என்பது நிரூபணம்.

புதன், 9 அக்டோபர், 2019

டப்பா கார்

அது 78-79 வருடம் என்று நினைக்கிறன். என்னுடைய பெரிய அத்தை மைலாப்பூர் கச்சேரி சாலையில் வசித்தார்கள். அவருடைய கணவர் திரு.மீனாட்சி சுந்தரம் அப்போது காவல்துறை ஆணையராகப் பதவியில் இருந்தார். ஜூம்மா மசூதி பள்ளிவாசலுக்கு நேர் எதிர் வீடு. முன்பக்கமும் பின்பக்கமும் ஓடு வேய்ந்த பெரிய பங்களா. என் சிறுவயதில் கோடை விடுமுறையில் அங்கு வந்து தங்கியதுண்டு. மழையோ வெயிலோ வீட்டு வாசலில் பூட்டு-குடை ரிப்பேர் செய்யும் ஒரு கிழவனார் சிறிய டிரங்கு பெட்டியுடன் எப்போதும் அமர்ந்திருப்பார்.

ரோல்ஸ் ராய்ஸ் மாடல் வண்டியைப் பார்த்தாலே அதை 'டப்பா' கார் என்றுதான் என் சிறுவயதில் சொல்லி வந்தேன். கருத்த பச்சை நிறத்தில் உப்பலாக பழைய வண்டியாக இருந்ததுதான் அதற்குக் காரணம். அது விலை மதிப்பான வண்டி என்பது அப்போது எனக்குத் தெரியாது. 'இன்னுமா டப்பா கார் வெச்சிருக்கீங்க?' என்று நான் கேட்க, 'டேய், இது நல்ல ரோல்ஸ் ராய்ஸ் வண்டிடா' என்று அத்தை சொல்வார். கார்ஷெட்டில் டப்பா கார் இருக்க அதன் பின்பக்க சீட்டில் நான் கால்நீட்டிப் படுத்துக் கொள்ளும் அளவுக்கு இருக்கைகள் பெரிதாக இருந்தது. இன்று அதுபோன்ற டப்பா கார்கள் வின்டேஜ் கார்ஸ் கண்காட்சியாக வருடா வருடம் ஒரு நாள் சாலையில் அணிவகுத்துச் செல்கின்றன.

நாயைக் குளிப்பாட்ட, தோட்டப்பணி செய்ய, கைத்துப்பாக்கியைத் துடைக்க, கார் சுத்தம் செய்ய, கடைக்குச் சென்றுவர, கார்ப்பரேஷன் தண்ணீரை ரிக்ஷாவில் பிளாஸ்டிக் குடங்களில் கொண்டுவர என்று வீட்டுவேலை உதவிக்கென ஒரு காவலர் ஆர்டர்லி பணியில் இருந்தார்.

அண்மையில் அவ்வழியே போகும்போது ஒலி பெருக்கியில் தொழுகை கேட்கவே, சட்டென திரும்பி எதிர்புறம் அந்த பங்களா இருக்கிறதா என்று பார்த்தேன். அது இருந்த சுவடே இல்லை. அவ்விடத்தில் சுமார் பத்து பிளாக்கு அடுக்குமாடி காவலர் குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. அப்போது என் பழைய நினைவுகள் வந்துபோயின.




ஆய்வும் சர்ச்சையும்!

கடந்த சில தினங்களாக சுபாஷினி என்ற பெயர் செய்தியில் அடிபடுகிறது. கீழடி அகழாய்வு முடிவுகள் குறித்து தன் கருத்தைச் சொன்னது முதல் ஜெர்மனியில் பொது நூலகத்தில் சங்ககால தமிழ்ச் சுவடிகளைப் படித்ததுவரை அவர் தெரிவித்தவை மிகுந்த சர்ச்சைக்குள்ளாகி வந்துள்ளது. மேற்கண்ட எந்தவொரு தலைப்பிலும்/துறையிலும் அவருக்கு முன்னனுபவம் இல்லாதபோது அவர் தன்னை எப்படி வரலாற்று ஆய்வாளராக முன்னிறுத்திக் கொண்டு கருத்தைச் சொல்லலாம் என்று முகநூல் முதல் ட்விட்டர் வரை எதிர்ப்பும் விமர்சனமும் பெருகியுள்ளது.

இன்னொரு பக்கம் அவர் தமிழர் அல்ல கழகம் சார்ந்த திராவிட வடுகர் என்றும், இத்துறையில் ஆய்வுப் பட்டம்கூட பெறாதவர் எப்படி அதிகாரபூர்வமான கருத்தைச் சொல்ல முடியும்? என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இவருக்கு ‘ஒலைத்திருடி’ என்ற பட்டப்பெயரும் முகநூலில் சூட்டியுள்ளார்கள்.

ஜெர்மனியில் உள்ள சுவடிக்கட்டுகள் கடந்த 80 ஆண்டுகளாக இங்கிருந்து போயுள்ளது. அதில் தமிழ்/சமஸ்கிருதம் பெரும்பான்மையான எண்ணிக்கையில் உள்ளன. சாமானியர்களால் அது திருடப்பட்டிருக்காது. தமிழ் இலக்கியம் நன்கு படித்தவர்கள் மூலமாகவோ, சித்த வைத்தியர்கள் மூலமாகவோ, பெரும் பணத்திற்கு ஆசைப்பட்டு கொடுத்திருப்பார்கள். இக்காலத்தில் சிலை திருட்டு நடப்பதுபோல் அன்றும் பெரிய வலைப்பின்னலில் இருந்துள்ளது. அகத்தியர்/போகர் மற்றும் மூத்த சித்தர்கள் அருளிய பெருநூல் காவியங்கள் அதில் போயுள்ளன. சங்க இலக்கியம் என்றதுமே வெறும் பத்துபட்டு/எட்டுத்தொகை போன்றது என்று உடனே முடிவு செய்யக்கூடாது. நான் சொல்பவை முன்னேறிய அறிவியல்/ மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த சங்கதிகள் நிறைந்த பன்னீராயிரம்/ பதினெண்ணாயிரம் மற்றும் பல. இலங்கை சீனா மலேயா மார்க்கமாகச் சென்றடைந்த மூலமும்/ பிரதியும் ஏராளம் என்று ஒரு சித்தரே என்னிடம் பல்லாண்டுகளுக்குமுன் கூறினார்.

அப்படியே உள்ளூரில் பறிபோகாத சுவடிக்கட்டுகள் இருந்தாலும் அது வடமொழியா? தமிழா? என்ற கேள்வி எழும். அது ஆரியத் திராவிடமா/ திராவிடமா/ குமரித் தமிழர் நாகரிகம் சார்ந்த நூலா? என்று பிரிக்கப்படும். அது ஆன்மிகமா/ இலக்கியமா/ முற்போக்கா என்ற உட்பிரிவும் வரும். இது நம் தமிழர் வரலாறே அல்ல என்று தீர்மானித்து, இது நொட்டை அது நொள்ளை என்று ஏதேனும் குரல் எழுப்புவார்கள். சுவடிப்பாடலில் கூறப்பட்ட கருத்து இப்படி அல்ல அப்படி என்று திருக்குறளுக்குப் பின்னாளில் உரை எழுதியோர் கதைபோல் ஆகிவிடும். அதைப் படித்து முடிக்கும்போது எந்த உரை சரி/ தவறு என்று நம்மால் உணர முடியாத அளவுக்குக் குழப்பம் நீடிக்கும்.

மொத்தத்தில் அவரவர் கட்சி/கழக நிலைப்பாடு நோக்கில் ஆய்வின் முடிவுகள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்துப் பேசுகிறார்கள். ஆய்வுகள் குறித்துப் பேசத் தகுதியானவர்கள் யார்? தொல்லியல் துறைதான். என்னதான் தமிழ் கல்வெட்டியல் படிப்புக்குப் பாடத்திட்டம் வகுத்த மூத்த தொல்லியலாளராகவே இருந்தாலும் அந்த ஆள் வடமொழி தெரிந்த ஆரியர் அதனால் அவன் உண்மை பேசமாட்டான் என்று ஒரு தலைபட்சமாகவே விமர்சனங்கள் இருக்கும். ஆரியனல்ல அவன் திராவிட கூட்டத்தைச் சேர்ந்தவன் என்றால் அவன் தமிழுக்கு எதிரான செய்தியைப் பரப்பி உண்மையை அமுக்கி விடுவான் என்றும் விமர்சனம் எழும்.

ஆக இப்போதைக்கு வெளிநாடுகளில் இருக்கும் எண்ணற்ற ஓலைச்சுவடிகள் அங்கேயே பாதுகாப்பாக இருக்கட்டும். இவர்கள் தோண்டி முடித்து சர்ச்சை தீரும்வரை கீழடியைவிட இன்னும் 2000 வருடம் பழமைவாய்ந்த ஆதிச்சநல்லூர் ஆய்வுகளைப் பற்றி நாம் தேடிக்கண்டுபிடித்துப் படிக்கலாம். கடத்தப்பட்ட சிலைகளை இன்றைக்கு மீட்டுக்கொண்டு வருவதைப்போல் சுவடிகளையும் மீட்கும் நாள் வரும். அதை சித்தர்கள் முடிவு செய்வார்கள்!
Image may contain: 3 people, people smiling, meme and text

திங்கள், 7 அக்டோபர், 2019

உத்தரகோசமங்கை: பதிவும் பொருளும்

முகநூல் வாயிலாக வரும் கட்டுரைகளில் முரணான செய்திகளை சிலர் ஆர்வக்கோளாறில் பதிவிடுவதுண்டு. அப்படியொன்றுதான் அண்மையில் நான் படித்த உத்தரகோசமங்கை பற்றிய செய்தி. 'பல யுகங்களுக்கு முன்பு பூமியில் இலவந்திகைப்பள்ளி (எ) உத்தரகோசமங்கை தலத்தில்தான் முதன்முதலாக இறைவன் சிவபெருமான் மங்களநாதராக மரகதக்கல்லில் வடிக்கப்பெற்ற நடராஜராக, இறைவி மங்களாம்பிகையாக எழுந்தருளினர் என்றும்; உமையவளுக்கு சிவபெருமான் வேத ரகசியங்களை உபதேசித்த தலம் என்றும்; இங்குதான் இராவணன்-மண்டோதரி திருமணம் நடந்ததாகக் கல்வெட்டு உள்ளது என்றும்; நவகிரகங்கள் உருவாகும் முன்பே இத்தலம் தோன்றியதாகும்' என்றும் அப்பதிவில் செய்தி இருந்தது. இப்பிரபஞ்சத்தில் கிரகங்கள் எல்லாமே சூரிய சந்திரர் தோன்றிய காலத்திலிருந்தே இருக்கின்றன. நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்த்துக் கொள்ளாத வகையில் சன்னதியில் வழிபடுவது வேண்டுமாயின் பிற்காலத்தில் இடைக்காடர் முறைப்படுத்தியதாக இருந்திருக்குமே தவிர, கிரகங்கள் உருவாகும் முன்பே இத்தலம் வந்தது என்ற செய்தி புதிதாக இருக்கிறது. நவகோள்களில் சனீஸ்வரனின் பாதிப்பு இராவணனுக்கு அதிகமாக இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் சொன்னது. இதனை முறியடிக்க நவகோள்களை சிறைப்பிடித்தான். அவர்களை தன் சிம்மாசனத்தின் படிகளாக அமைத்து மிதித்து ஏறிச்சென்றான். பூவுலகில் மனிதர்களின் ஊழ்வினைக்கேற்ப திசாபுக்திப்படி யோகம்/தண்டனை என எதுவும் தரமுடியாமல் கட்டுண்டுக் கிடந்தனர். அங்கு வந்த நாரதர், 'இராவணா! இவர்களைக் குப்புறப் படுக்கவைத்து ஏறுவது உன் வீரத்திற்கு அழகல்ல' என்று கூற, இராவணன் உடனே இவர்களைப் புரட்டிப் போட்டான். போட்டதுதான் தாமதம் சனீஸ்வரனின் பார்வை இவன்மீது விழ உடனே எழரைச்சனி பீடித்தது. அதன் பிறகு இவனுக்கு அவப்பெயர்களும் தோல்விகளும் வந்து இராமன் இவனைப் போரில் வீழ்த்தினான். இதை எதற்குச் சொன்னேன் என்றால், புராண/இதிகாச/வரலாற்றுப் பதிவுகளைப் பலபேர் படித்தும் பகிர்ந்தும் வரும் நிலையில் தல புராணத்தில் குறிப்பிடாத வாய்மொழியாக பரப்பப்படும் சில ஐதீகக் குறிப்புகளை உயர்வு நவிற்சியாகச் சொல்லும்போது முரணான அச்செய்தி தவறாகவே கிரகிக்கப் படுகிறது. “மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது" என்னும் பழமொழியை உள்ளபடி நேரடியாகவே பொருள் கொள்வோமாக! முகநூல் வாயிலாக வரும் கட்டுரைகளில் முரணான செய்திகளை சிலர் ஆர்வக்கோளாறில் பதிவிடுவதுண்டு. அப்படியொன்றுதான் அண்மையில் நான் படித்த உத்தரகோசமங்கை பற்றிய செய்தி. 'பல யுகங்களுக்கு முன்பு பூமியில் இலவந்திகைப்பள்ளி (எ) உத்தரகோசமங்கை தலத்தில்தான் முதன்முதலாக இறைவன் சிவபெருமான் மங்களநாதராக மரகதக்கல்லில் வடிக்கப்பெற்ற நடராஜராக, இறைவி மங்களாம்பிகையாக எழுந்தருளினர் என்றும்; உமையவளுக்கு சிவபெருமான் வேத ரகசியங்களை உபதேசித்த தலம் என்றும்; இங்குதான் இராவணன்-மண்டோதரி திருமணம் நடந்ததாகக் கல்வெட்டு உள்ளது என்றும்; நவகிரகங்கள் உருவாகும் முன்பே இத்தலம் தோன்றியதாகும்' என்றும் அப்பதிவில் செய்தி இருந்தது. இப்பிரபஞ்சத்தில் கிரகங்கள் எல்லாமே சூரிய சந்திரர் தோன்றிய காலத்திலிருந்தே இருக்கின்றன. நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்த்துக் கொள்ளாத வகையில் சன்னதியில் வழிபடுவது வேண்டுமாயின் பிற்காலத்தில் இடைக்காடர் முறைப்படுத்தியதாக இருந்திருக்குமே தவிர, கிரகங்கள் உருவாகும் முன்பே இத்தலம் வந்தது என்ற செய்தி புதிதாக இருக்கிறது. நவகோள்களில் சனீஸ்வரனின் பாதிப்பு இராவணனுக்கு அதிகமாக இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் சொன்னது. இதனை முறியடிக்க நவகோள்களை சிறைப்பிடித்தான். அவர்களை தன் சிம்மாசனத்தின் படிகளாக அமைத்து மிதித்து ஏறிச்சென்றான். பூவுலகில் மனிதர்களின் ஊழ்வினைக்கேற்ப திசாபுக்திப்படி யோகம்/தண்டனை என எதுவும் தரமுடியாமல் கட்டுண்டுக் கிடந்தனர். அங்கு வந்த நாரதர், 'இராவணா! இவர்களைக் குப்புறப் படுக்கவைத்து ஏறுவது உன் வீரத்திற்கு அழகல்ல' என்று கூற, இராவணன் உடனே இவர்களைப் புரட்டிப் போட்டான். போட்டதுதான் தாமதம் சனீஸ்வரனின் பார்வை இவன்மீது விழ உடனே எழரைச்சனி பீடித்தது. அதன் பிறகு இவனுக்கு அவப்பெயர்களும் தோல்விகளும் வந்து இராமன் இவனைப் போரில் வீழ்த்தினான். இதை எதற்குச் சொன்னேன் என்றால், புராண/இதிகாச/வரலாற்றுப் பதிவுகளைப் பலபேர் படித்தும் பகிர்ந்தும் வரும் நிலையில் தல புராணத்தில் குறிப்பிடாத வாய்மொழியாக பரப்பப்படும் சில ஐதீகக் குறிப்புகளை உயர்வு நவிற்சியாகச் சொல்லும்போது முரணான அச்செய்தி தவறாகவே கிரகிக்கப் படுகிறது. “மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது" என்னும் பழமொழியை உள்ளபடி நேரடியாகவே பொருள் கொள்வோமாக!

Image may contain: one or more people, people standing and shoes

சனி, 5 அக்டோபர், 2019

சதிராடும் ஜாதிப் பெயர்கள்!

விடுதலைப் போரட்ட வீரரும் 'ஞானபானு' பத்திரிக்கையாளருமாக விளங்கிய சுப்ரமணிய சிவா அவர்களின் 135 ஆவது பிறந்தநாள் நேற்று ஓசையின்றிக் கடந்தது. போன மாதம் போனால் போகிறது என்று பாரதியார் நினைவு கூறப்பட்டார்.
சுப்ரமணிய சிவா பிறந்த வத்தலகுண்டு ஊரைச் சேர்ந்த ஒருவர் இதுபற்றி நேற்று முகநூலில் தன் வேதனையைப் பதிவிட்டிருந்தார். சுப்ரமணிய சிவா திராவிட கழகத்தைச் சேர்ந்தவராக இருந்திருந்தால் கிடைக்கும் மரியாதையே வேறு. அதிலும் இவர் பிராமணராகப் போனதால் இவரை நினைவு கூறுவார் யாருமில்லை என்றும் போட்டிருந்தார். அப்பதிவில் கமெண்ட்ஸ் போட்ட கழகத்தின் அன்பர் இருவர் 'ஏன் ஜாதியைக் குறிப்பிடுகிறீர்கள்? எல்லோரும்தான் விடுதலைக்குப் போராடினார்கள். ஜாதி இல்லாமல் பொதுவாகப் பெயரைச் சொல்லுங்கள்' என்று விமர்சனம் செய்திருந்தார். அதாவது ஜாதிப் பெயரைச் சொன்னால் தேசத் தியாகிகளுக்கு அவமானம் போலவும், ஜாதிப் பெயரால் அவர்கள் வேற்றுமை பாராட்டியது போலும் அல்லவா இந்த ஆளுடைய பேச்சில் தெரிகிறது?
சிதம்பரனார், பாரதியார், சுப்ரமணிய சிவா ஆகிய மூவரும் ஒருவர் மீது ஒருவர் பிரிக்க முடியாத பாசமும் மரியாதையும் கொண்டவர்கள். தங்கள் ஜாதிகளைத் தூக்கிவைத்துப்பேசி அதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்ததாகத் தெரியவில்லை. சிறைச்சாலையில் ஆங்கிலேயர்கள் சுப்ரமணிய சிவாவுக்குத் தொழுநோய் ஊசிபோட்டு சித்ரவதை செய்ததை வ.உ.சி அறிந்து அழுது விட்டார்.
வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்த இவர்கள் எல்லோரும் ஒன்றுபட்டது எப்படி? சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய பாரதி, முத்துராமலிங்கத் தேவர், ராமசாமி ரெட்டியார், காமராஜ் நாடார், வரதராஜூலு நாயுடு, ஸ்ரீனிவாச ஐயங்கார், திரு.வி. கல்யாணசுந்தர முதலியார், என எத்தனையோ நபர்களை ஜாதிப் பெயருடன் இணைத்து அடையாளம் காட்டமுடியும். அப்பெயரால் அவர்கள் எவ்விதத்தில் அசிங்கப் பட்டார்கள்? இக்கால சமுதாய மக்கள் அவர்களாகவே கற்பனை செய்துகொண்டு கோணங்கித்தனமான புத்தியுடன் தலைவர்களின் பெயர்களில் ஜாதியே வரக்கூடாது என்று கோஷம் போடுகிறார்கள்.
ஜாதிப் பெயரை நீக்கவேண்டுமென்றால் முதல் வேலையாக தேசப்பிதாவின் பெயரைத்தான் கையில் எடுக்கவேண்டும். வைசிய குலத்தின் ஜாதிப்பெயரைக் கொண்டு 'காந்திஜி' என்று அழைப்பதை நிறுத்த வேண்டும். 'மோஹன்ஜி, தாஸ்ஜி' என்று மாற்றவேண்டும். Hey, who is that Mohanji? No idea.