About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 18 நவம்பர், 2018

உலக கழிப்பறை நாள்

அதிக கனமான ராக்கெட்டை விண்ணில் ஏவி இந்தியா பல சாதனைகளை நிகழ்த்துகிறது. இன்னொரு பக்கம் அமிதாப் பச்சனின் 'சௌச்சாலே கி செப்டிக் டேங்' டிவி விளம்பரம் தினமும் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை வருகிறது. இன்னும் எத்தனைக்காலத்திற்கு கழிப்பறையின் அவசியத்தை காட்டுவார்களோ? சௌச்சாலா இல்லாமல் இருக்கலாம் ஆனால் செல்போன் இல்லாமல் இருக்க முடியாத நிலைதான் உள்ளது! ஆக, விண்ணும் மண்ணும் சாதனை களம்தான்!


புதன், 7 நவம்பர், 2018

சிவகாம சுந்தரி

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்! இன்று உமையவள் மீது ஒரு பாடல் புனைந்தேன். ஏன் எதற்கு தீடீரென இயற்றவேண்டும் என்ற காரணம் தெரியவில்லை. இதெல்லாம் எம் குலதெய்வம் மஹாமாரியம்மன் பணிக்க அவள் ஆசியுடன் நடப்பது.

   

சனி, 3 நவம்பர், 2018

சித்த மருத்துவத்தில் ஒரு புரட்சி

அது ஜனவரி 2016. எனது சித்த நூல்களை படித்துவிட்டு, போகர் மேல் கொண்ட ஈர்ப்பில் என்னோடு நட்பில் சேர்ந்தார் ஒரு அன்பர். இவர் பிடெக் மற்றும் எம்பிஏ படித்தவர். வங்கி பின்னணிப் பணி BPOவில் தற்போது வேலைசெய்கிறார். இரண்டாண்டுகளுக்கு முன் இவர் சித்தர்கள், சித்த மூலிகைகளைபற்றி நிறைய சந்தேகங்களை என்னிடம் கேட்டறிந்தார். முதல்முறை படித்துவிட்டு என்னிடம் பேசும்போது அவர் ஏதும் தெரியாத ஆரம்பகட்ட நிலையில்தான் இருந்தார். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு “சார், இவ்ளோ சக்திவாய்ந்த மூலிகைகள் இருக்குனா, எல்லா நோய்களுக்கும் நல்ல மருந்து செய்து கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு மருந்து தந்து காப்பாத்தணும்” என்று லட்சியத்தை ஆதங்கத்துடன் சொன்னார்.
“நீங்கதான் செய்துகொடுக்கணும்னு சிவசித்தம் இருந்தா சித்தர் ஆசியோடு கைகூடும். முயற்சி செய்யுங்கள்” என்று சொன்னேன். “சார், நீங்க மருந்துகள் எதுவும் செய்யலையா?” என்றார். “இல்லீங்க. மருத்துவ குறிப்புகள் மூலிகைகள் பற்றி எழுதினாலும், மருந்து செய்துகொடுக்க எனக்கு ஆர்வம் வரவில்லை” என்றேன். அதன்பின் இந்த இரண்டு ஆண்டுகளில் அவர் மூலிகைகளை பற்றியும், நோய் விதகளை படித்தும், மருத்துவ குணபாகம்/ செய்பாகம் நிறைய கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினார். வேலைக்கு போய்வந்த பின் சித்த வைத்தியரிடம் சென்று அடிப்படை சூத்திரங்கள் கற்றார். அப்படி வளர்ந்தவர் இன்று சித்த மருத்துவத்தில் ஒரு திருப்பத்தை உண்டாக்கியுள்ளார்.
அது என்ன? எல்லா நோய்களுக்கும் ஒரே மூலமருந்து சூரணம். இந்த குருமருந்து சூரணத்தை இதர மருதத்துவ சூரணங்களோடு சேர்த்து கொடுக்கும்போது ஒரு வேளையில், மூன்றே நாளில், ஒரே வாரத்தில், ஒரு பட்சத்தில், ஒரு மண்டலத்தில் நோய் குணமாகிறது. அக்காலத்தில் ஒரு சர்வரோக குளிகை மட்டும் கையில் எடுத்துப் போவார்கள். உடலுக்கு முடியாமல் போனால், அக்குளிகையை தேய்த்து ஒரு சிட்டிகை எடுத்து தேனில் குழைத்து நாக்கில் தடவி உண்பார்கள். அதுபோல்தான் இந்த சூரணமும். நாளடைவில் எல்லாவித Medical Reportsம் படித்து அறிந்து மருந்து கொடுக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்றார். இன்னும் வைத்திய 'முப்பூ' பற்றி இவர் கற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனக்குத் தெரிந்து இவருடைய சூரணங்கள் கீழ்கண்ட நோய்களுக்கு அருமருந்து. சகல ஜூரம், நீரிழிவு, செரிமானம், கல்லீரல் கோளாறு, இரைப்பை, பித்தம், சிறுநீரக கோளாறு; கர்ப்பப்பை /மார்பக/மூளை/ எலும்பு புற்றுநோய்; கர்ப்பப்பை கட்டி, இருதய அடைப்பு, இரத்தக் கொதிப்பு, மூளையில் க்ளாட், இரத்தக் கசிவு, இரத்தப் புற்றுநோய், எய்ட்ஸ், எச்ஐவி, தோல் நோய்கள், மற்றும் முக்குண தோஷங்களை நீக்கும் சூரணங்களாக செயல்படுகிறது. இவரிடம் இதுவரை மருந்து பெற்று உண்ட பல நோயாளிகளின் உரையாடல்களை எனக்கு தினம் அனுப்புவார். அல்லோபதியில் தேறாத பல நோய்கள் இம்மருந்தினால் குணமாகியுள்ளது. கைவிடப்பட்ட முற்றிய நிலையில் வந்து குணமான நோயாளிகள் நன்றி தெரிவித்துள்ளனர். இவரிடம் மருந்து சூரணங்கள் எல்லாம் முற்றிலும் இலவசம். உணவு பத்தியம் நிச்சயம் உண்டு. நோய்கள் எல்லாமே ஊழ்வினையால் வருவது என்பதை அறிவோம். அது குணமாகும் தருணம் வரும்போதுதான் விதியாளிக்கு வைத்தியம் பலன்கொடுக்கும்.
“என்ன ஆச்சரியம்! ரெண்டு வருஷத்துக்கு முன்ன நீங்க இருந்ததுக்கும் இப்போ செய்துள்ள சாதனையையும் பார்த்தா ரொம்ப பிரமிப்பாதான் இருக்கு. விட்டகுறை தொட்டகுறை ஏதோ இருந்துள்ளதால் சித்தர்கள் ஆசியோடு நடக்கிறது. சந்தோஷம்!” என்றேன்.
மருந்தை சுண்டல் விநியோகம்போல் செய்தால் அதன் அருமை தெரியாமல் வீணடிப்பார்கள் என்பதால் சென்னையில் ஒரு குறிப்பிட்ட கடையில் போய் தக்க நபரை அணுகி, நண்பர் அனுப்பும் ஆடியோ செய்தியை அங்கே போட்டுக் காட்டினால்தான் மருந்து பொட்டலங்கள் தரப்படும். இவர் என் வாசகராக, நண்பராக, வைத்தியராக இருப்பது எனக்குப் பெருமை. பெரிய உயிர்க்கொல்லி நோய்களுக்கு நல்ல தீர்வு வந்துவிட்டது என்பதை நீங்கள் அறியவேண்டும். பெரிய அளவில் மருத்து தயாரித்து இச்சேவையை கையாளும்போது இவருடைய பெயர், கைபேசி, மின்னஞ்சல் விவரங்களை நிச்சயம் இங்கே பதிவிடுகிறேன்.
இது வியாபார நோக்கில் செய்வதில்லை என்பதால் விளம்பரமோ, விலைப்பட்டியலோ ஏதுமில்லை. நோயாளிகள் சுகம் பெற்றபின் தாங்கள் விருப்பப்பட்டதை கொடுத்து ஜீவகாருண்ய நோக்கில் உதவலாம். இத்தொகை அடுத்துவரும் நோயாளிகளுக்கு மருந்து தயாரித்து கொடுக்க உதவும். “சர்வ ஜனா சுகினோ பவந்து"
அவர் பெயர் திரு.ஜகத்குரு, 9176147041


வெள்ளி, 2 நவம்பர், 2018

ஆற்றின் நடுவில் மண்டபம் எதற்கு?

ஏதோ அழகுக்கு தமிழன் கட்டிவைத்தான் என நினைக்க வேண்டாம்,  பயன் தெரிந்தால் ஆடிபோவீர்கள்..!
நவீன வெள்ள அபாய எச்சரிக்கை இருக்கும் முன்னரே, தாமிரபரணியில் நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல் பூர்வமாக அறிந்துக் கொண்டார்கள். அதுதான் வெள்ள அபாயத்தை முன்னரே அறிவிக்கும் சங்கு கல் மண்டபம்.
இந்த மண்டபம் எதற்கு என யோசித்தது உண்டா?
தாமிரபரணி ஆற்றின் மையத்தில் சங்கு கல்மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. மூன்று பக்கம் திறந்தவெளியுடனும் தண்ணீர் வரும் எதிர் பக்கம் மட்டும் கல்சுவரால் அடைக்கப்பட்ட மண்டபம் அது.
அதன் உச்சியில் கோபுரம் போன்ற அமைப்பில் சங்குபோன்ற அமைப்பு உள்ளது. ஆற்றில் வெள்ளம் வரும்போது அந்த மண்டபத்துக்குள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்தால், வெள்ளத்தின் சத்தத்தால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு மிக சத்தமாக ஊதப்பட்டு சத்தம் மக்களை அடையும்.
இதனை வெள்ள அபாய அறிவிப்பாக மக்கள் அறிந்து, மக்கள் மேடான இடங்களுக்குச் சென்று தங்களைப் பாதுகாத்துக் கொள்வர்.
வெள்ளம் மிக அதிகமானால் மண்டபத்தின் சங்கு அமைப்பினை மூழ்க செய்யும்... அப்போது சப்தம் நின்று விடும். பின்பு வெள்ளம் வடிகின்ற போது, மீண்டும் சங்கு சத்தத்தினை வெள்ளத்தால் ஏற்படுகின்ற காற்று உண்டாக்கும்.
சங்கின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அடங்கிவிடும். இது வெள்ள அபாயம் நீங்கியது என்பதற்கான அறிகுறி என மக்கள் அறிந்து, பின்னர் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள்..
பல கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய சங்கு கல்மண்டபங்கள் இன்று அழிந்து போய்விட்டன. அரசும் இது எதற்கு என புதுபிக்க மறந்துவிட்டதா..?
ஒரு சில இடங்களில் மட்டும் இந்த மண்டபங்கள் இருக்கின்றன. ஆனால், ஆற்றில் வெள்ளம் வரும்போது அபாய ஒலி எழுப்பும் அளவிற்கு வேலை செய்கிறதா என்று தெரியவில்லை, ஏனெனில் அந்த காலத்தில் பராமரிப்பு இருந்தது. இந்த காலத்தில் இதன் பயனே பலருக்கு தெரியாது, ஏதோ அழகுக்கு தமிழன் கட்டிவைத்தான் என பலர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.. ஆனால் உண்மையில் அறிவியலுக்காக.