About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 1 டிசம்பர், 2018

குற்றத்தில் பெரியது என்ன?

சமீப நாட்களாக தினமும் செய்தித் தாளைப் படித்தாலே கொலைக் குற்றங்களின் எண்ணிக்கையும் அதை செய்தவர்களின் பின்னணியும் திகிலூட்டுகிறது. மீண்டும் அதே குற்றவாளிகள்தான் இதில் ஈடுபடுவது தெரிகிறது. தடயம் கிட்டாத வகையில் கைத்தேர்ந்த பழையவர்கள் செய்வது சுமார் 70% என்றும் புதிய குற்றவாளிகள் 30% என்று புள்ளிவிவரம் சொல்கிறது. CCTV இருந்தும் அதில் பதிவான கொலை வீரர்களின் முகத்தை குற்றப்பின்னணி ஆவணத்தில் அலசிப் பார்ப்பதும் தாமாகிறது. Face recognition மென்பொருள் மூலம் கூட்டத்தில் முகத்தை சரிபார்த்து அடையாளம் கண்டுபிடிப்பது எளிதாகிவிட்டது என்றபோதும் குற்றவாளிகளைத் தேடுவது சிரமமாக இருக்கிறது. கொலையாளிகள் என்று சொல்வது மரியாதையில்லை என்று கருதும் சமுதாயத்தில் நாம் இருப்பதால், கண்ணியம் குறையாமல் அவர்களை ‘கொலைக்குற்ற வீரர்கள்’ என்று சொல்லிடுவோமே!
‘பல குற்றங்களில் தேடப்பட்டு வந்த குற்றவாளி’ ‘தண்டனைப் பெற்ற முன்னாள் கைதி’ என்று அவர்களைப்பற்றி அறிமுகம் செய்யும்போது, தவறு சட்டத்திலும், மனித உரிமை ஆணையம் மீதும்தான் தெரிகிறது. குற்றத்தில் சிறிது/ பெரிது, மன்னிக்கப்படுவது / படாதது, இத்தனை வருடங்கள் இருந்தால் தண்டனை காலம் போதும், என்று பரிந்துரை செய்ய சட்டமும் அதை நிலைநாட்ட மனித உரிமை ஆணையமும் செயல்படுகிறது. நியாயப்படி நிரபராதிக்கு அநீதி இழைக்கபட்டால் அதற்கு ஆணையத்தின் தலையீடு வேண்டும்தான். ஆனால் பழையவர்கள் புதியவர்களுக்கு சிறையில் குருகுல பாடத்தையும் செயல்படும் ரகசியத்தையும் கற்பிப்பது ஆபத்தாக முடிகிறது. கோரிக்கை வைத்தால் குற்றவீரரின் பிறந்தநாள்களுக்குக்கூட விடுதலை செய்யும் அதிசய நிலை எதிர்காலத்தில் வரும்போல!
சந்தர்ப்ப சூழ்நிலை குற்றவாளிகள் மிகக்குறைவு. ஆனால் habitual crime record கொண்டவர்களால் மீண்டும் மீண்டும் கொலை/கொள்ளை குற்றங்கள் எழுகிறது என்றால் காவல் துறைக்கும் சட்டத் துறைக்கும் அது நேர விரயம்தான். எங்கேனும் குற்றம் நடந்தால் பழைய குற்றவாளியை முதலில் தேடுவது வழக்கம். மூன்று முறைக்கு மேல் ஒருவர் தொடர் குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்தவர் என்றால் அவரை வேறு விதமாக கையாள வேண்டும். மீண்டும் மீண்டும் டெங்கு கொசு வளர அருமையான சூழலை உருவாக்கித் தந்தபின், ஊரெல்லாம் ஒரே காய்ச்சல் அதை மருத்துவர்கள் கட்டுப்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டுவதுபோல் உள்ளது.
பண பலம், ஆள் பலம், அரசியல் பின்னணி, என்று எல்லாமே கொலை வீரர்களை ஊக்கபடுத்தி வளர்த்து விடுவதால் காவலும்/சட்டமும் என்ன செய்ய முடியும்? ஐயோ பாவம்! பணிந்து போயாக வேண்டிய கட்டாயத்தில்தான் உள்ளது. இதன் நடுவில் ‘அப்பாவி’ நிரபராதிகளான அந்த ‘ஏழு பேர்’ விடுதலைக் குறித்து நாடே கவலையில் உள்ளது. ஜேப்பிடி, நகைத் திருட்டு முதல் கற்பழிப்பு, கொலைவரை தண்டனைகள் பூப்போல இருப்பது வேடிக்கையாக உள்ளது. அதே தீவிர தண்டனைகலைத் தொடர வேண்டிய கட்டாயம் உள்ளது. மரண தண்டனை என்பது மனித உரிமை மீறல் என்றால் சித்தர்கள் உரைத்த வழியில் தாக்க வேண்டியதுதான்.
பெரியது கேட்கின் தர்மநெறி மக்களே
பெரிதுபெரிது இளமையில் திருட்டு
அதனின் பெரிது கற்பழிப்பும் கொலையும்
அதனினும் பெரிது மன்னித்தும் குற்றம் புரிதலே

No automatic alt text available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக