About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 11 ஜூலை, 2019

வழி தவறிய இந்துக்கள்!

விளக்கு வைக்கும் அந்தி/சந்தி வேளையில் உட்கார்ந்து மும்முரமாகப் பேன் பார்ப்பது, நிலைப்படியில் அமர்ந்து தலைமுடியைச் சீவிக் கோதுவது, நாரையைப்போல் ஒற்றைக் காலில் தலைவாசலில் நின்றபடி நகம் வெட்டுவது, கண்ணாடி வைத்து மீசையைத் திருத்துவது, என இவையெல்லாம் சமய நெறிக்கு ஒவ்வாத செயல்கள். இதைப் பார்க்கும்போது மூன்றாவது நபரான நமக்கே எரிச்சல் வரும்.

அண்டை வீட்டின் முன்னால் துளசி மாடத்தில் சிறிய அகல் தீபம் எரிந்து கொண்டிருக்க, அதன் பக்கவாட்டில் அந்தக் குடும்பத்தின் மூத்த மருமகள் தன் மூத்த பெண்ணுக்கும் அவள் தன் தங்கைக்கும் பேன் பார்த்துக் கொண்டிருந்தனர். குரங்குகள் வரிசையாகப் பேன் பார்க்கும் மாமல்லபுர சிற்பம் என் நினைவுக்கு வர சிரித்துக் கொண்டேன். பீடையும் தரித்திரமும் அண்டும் அளவுக்கு மேற்சொன்ன அத்தனைவித செயல்களையும் அவர்கள் செய்வார்கள். குடும்பத்தில் சண்டை, பிளவு, நிதி நெருக்கடி, சுகவீனம், நிம்மதியின்மை என எல்லாம் நிலவுகிறது. அவர்கள் சுத்த முற்போக்காக உதய சூரியனில் ஐக்கியமானவர்கள். யாருடைய அறிவுரையினாலோ கடவுளுக்கு விளக்கேற்றும் நிலைக்கு முன்னேறியுள்ளனர். பக்தி சிந்தனைகளும் சமய நெறிகளும் அதிகம் பரவியுள்ள இக்காலத்தில் இன்னமும் நெறிதவறிய பழக்கங்கள் நிலவுவதற்கு அவ்வீட்டுப் பெரியவர்களே காரணம்.

ஐம்பது வயதான அவ்வீட்டு மகன் என்னிடம் ஒருசமயம் "நீங்க புக்ஸ் எல்லாம் எழுதற ஆத்தராமே... என்ன மாதிரி புக்ஸ்?" என்றார். "சித்தர்கள் பத்தினது" என்றேன். "அவங்கெல்லாம் யாரு?" என்றார். "அகத்தியர் திருமூலர் போகர் கேள்விப் பட்டிருப்பீங்களே அவங்கல்லாம் சித்தர்கள்" என்றேன். "இவங்க இன்டியன்ஸா... பக்தி லெக்சர் தந்து கச்சேரி செய்றவங்களா?" என்றார். "இல்லீங்க. அவங்க மிஸ்டிக் மென்" என்றேன். அவருக்கு என்ன புரிந்ததோ? ஐயோ பாவம்! இத்தனைக் காலமும் எதைப்பற்றியும் அறியாமல் சுப்ரதீபமாக இருந்துவிட்டார். 😥 ஒரு பள்ளிக்கூட மாணவனைக் கேட்டால்கூட அகத்தியரைப் பற்றி நன்கு சொல்வான். ஆக இவருக்கு என் புத்தகத்தைப் படிக்கத் தந்து கஷ்டப்படுத்தக் கூடாது என்று இருந்துவிட்டேன். 😜

விளக்கேற்றும் நேரத்திலும், நாள்-கிழமைகளிலும் எதைச் செய்வது/ செய்யக்கூடாது என்ற சமய நெறிகளை நம் கிராமங்களில் இன்றும் கடைப்பிடிக்கிறார்கள். இந்த நகரவாசிகளுக்கு இது புரியாதது ஏனோ?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக