About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 13 அக்டோபர், 2024

நாசூக்காக!

என் நண்பர் ஒருவர் தன் மாமாவின் பெருமைகளை என்னிடம் பேசும்போது,

"அவர் இந்த வயசுலேயும் விடாம யோகா செய்வார், ஃபிட்டா வெச்சிப்பார், சுத்த சைவம்தான், வாரக்கடைசியில டிரிங்க்ஸ் பண்ணுவார்."

"நல்ல விஷயம்தான? கூடுதலா வருமானம் ஆச்சு! வீட்லயே டிரிங்க்ஸ் பண்ணி அதைக் காதும் காதும் வெச்ச மாதிரி யாருக்கு விநியோகம் பண்ணி விக்கிறாரு? அக்கம்பக்கம் வாடை வருமே. திராட்சையோட கோதுமையா பார்லியா... எதைப் போட்டு பண்றாரு?"

"ஐயோ... அவர் பண்ணி விக்கலை... குடிக்கிறாரு."

"குடிகாரர்னு தெளிவாச் சொல்லுங்க. இங்கிலீஷ்ல சொல்லவே அர்த்தம் மாறுதில்ல. அவருக்காக வெட்கப்பட்டு நீங்க எதுக்கு பாவம் நாசூக்கா தன்மையா சொல்லணும்?"

"சேச்சே.. அந்த அளவுக்கு குடிகாரர்னு சொல்லமுடியாது.. பையன்தான் அளவா கிளாஸ்ல ஊத்தி கொடுப்பான்."

"ஏங்க... குடிக்கிறவர்க்கு அளவா ஊத்தி குடிச்சிக்க தெரியாதா என்ன? இதுக்குனு ஒருத்தர் பக்கத்துல மெனக்கெட நின்னு ஊத்தி வேற தரணுமா? சரியாப்போச்சு."

அவர் மாமாவின் பிரதாப சரித்திரத்தை நிறுத்திக்கொண்டார். 😂

குடிகாரன் என்ற தகுதியைப் பெற ஏதோ அளவீடு வைத்திருப்பார்களோ? 🤔

-எஸ்.சந்திரசேகர்



செவ்வாய், 8 அக்டோபர், 2024

ஆதித்யா!

 


ஒரு சூரியன் மட்டும் இருப்பது போலவும், முற்றிலும் அது எரிந்து பஸ்மம் ஆகிவிட்டால் எதிர்காலத்தில் பூலோக உயிர்களுக்குத் தேவையான வெளிச்சமும் வெப்பமும் கிடைக்க என்ன செய்ய என்று விஞ்ஞானிகள் கவலைப்படுகிறார்களாம்.  சித்தர்களின் ஆய்வுப் பாடல்களைப் படித்துப் பொருள் அறிந்தால், விஞ்ஞானிகள் பிதற்றவோ அச்சப்படவோ வேண்டாம். 🤔

'துவாதச ஆதித்யர்களில் தான் விஷ்ணு' என்று பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார். சிவன் தன்னுடைய வலது கண்ணில் சூரியனையும், இடது கண்ணில் சந்திரனையும் வைத்துள்ளதால், சூரியனை அழிவற்றவனாகவே கருதவேண்டும். 

ஒரு மஹாயுகம் என்பது நமக்கு 4,320,000 ஆண்டுகள், அதாவது 12000 பிரம்மதேவர் ஆண்டுகள் என்பதாம். 12 ராசிகளுக்கு வீதம் 12 சூரியன்கள் சுழற்சியில் வந்து போனால், தாராளமாக ஒவ்வொருவரும் 1000 தேவ ஆண்டுகள் பூரணமாக ஒளி வீசலாம். அவ்வப்போது தங்களுடைய ஒளிரும் பணி முடிந்ததும் அவர்கள் சிவ பூஜையும் யாகமும் செய்து சக்தியைத் தொடர்ந்து கூட்டுகிறார்கள். ஆதித்ய மண்டலத்தில் என்ன நடக்கிறது என்பதை அங்கே போய் போகர் பார்த்துள்ளார். ஆக ஆதித்யர்க்கு முடிவில்லை.

அதனால்தான் கோயில் கல்வெட்டுகளில் நம் மன்னர்கள் தம் ஆணைப்படி ஏற்படுத்தும் பூஜா கட்டளைகளும்,  திருவுண்ணாழியில் சுவாமிக்கு விளக்கு எற்றுவதையும் 'சூரியசந்திரர் உள்ளவரை தொடரவேண்டும்' என்றே வடித்தனர்.

-எஸ்.சந்திரசேகர்