About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 31 மார்ச், 2019

பறையர் அடையாளம்

நீண்ட நாட்களாகவே இதுபற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம் உண்டு. ஆனால் எழுதலாமோ கூடாதோ என்ற தயக்கம் இருந்தது. சாதியைப் பற்றியோ சாதிப் பெயரை சொன்னாலோ அது கெட்ட வார்த்தைக்கு சமமான அந்தஸ்தை இன்றைக்குப் பெற்றுவிட்டது.

காலங்காலமாக நம் பாரதத்தில் நான்கு வகை வர்ணங்கள் நிலவி வருகிறது. அதனுள் எராளமான சாதிப்பிரிவுகள் உட்பிரிவுகள் வரும். நாம் ஏதோவொரு வர்ணத்தை/குலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், உள்ளபடி பார்த்தால் பிறப்பால்- தொழிலால் -குணத்தால் எப்படியும் மூன்று வகையான வர்ணங்கள்கீழ் வருகிறோம். சமூகத்தில் சாதி என்பது அடையாளம். அதைத்தாண்டி அதைப் பிடித்துக் கொண்டு தொங்க ஏதுமில்லை. குறிப்பிட்ட ஒரு வர்ணத்திலோ சாதியிலோ பிறப்பதால் உயர்வோ தாழ்வோ இல்லை. இதில் இன்னொரு வசதி என்னவென்றால் நம் வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் வர்ணம் interchangeable ஆக இருந்துள்ளது. பிற்பாடு அதுவே மெள்ள மாறி பின்வரும் தலைமுறைகளுக்கு பிறப்பு வர்ணம்/சாதியாக நிலைத்தது. இதைப்பற்றி விளக்க "துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று இந் நான்கல்லது குடியும் இல்லை" என்கிறது புறநானூறு. ஆமாம், உண்மைதானே!

கிராமத்தில் எல்லா சாதிகளும் ஒன்றையொன்று சார்ந்தே இருந்தன. அதில் ஊருக்கு சுபிட்சம் கொண்டுவர ஜெபம் தபம் சங்கீர்த்தனம் மற்றும் தர்மநெறி அறிவுரை கல்வி போதனைகளைச் சொல்வது பிராமணனின் பணி. விளையாட்டு போர் பயிற்சி ஊர்காவல் துடிப்புள்ள செயல் எல்லாம் ஷத்ரியரும், உணவு தானியம் வர்த்தகம் பொருளாதரம் நிதியை கவனிக்க வைசியர்களும், கட்டளை இட்ட பணியை செய்து முடிக்க சூத்திரர்களும் இருந்தனர். இன்றைக்கு நாம் பிறப்பால் வேறு வர்ணமாக இருப்பினும் தொழிலால் எல்லோருமே சூத்திரர்கள்தான். எல்லோரும் வேலை செய்கிறோம் நமக்கு அலுவல் பணிகளை மேலதிகாரி delegate செய்ய அதை கௌரதையுடன் execute செய்கிறோம். நம் அப்துல் கலாம் பிறப்பால் முஸ்லிம் ஆனால், வகித்த பதவியால் ஷத்ரியர், ஞானத்தால்/குணத்தால்/பழக்கத்தால் பிராமணர்.

நேற்று செய்தித்தாளில் என் கண்ணில் பட்ட ஒரு செய்தி. "சாதி ஒழிப்பென்று கூறி தாழ்த்தப்பட்ட தலித் சமூகமென உளவியலாக பறையர்களை ஒடுக்கி விட்டனர் இன்றைய அரசியலாளர்கள். மானமுள்ள பறையர்கள் இதை புரிந்துக்கொண்டு அவர்களை அரசியலிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதே வீர சோழ பறையர் நலச்சங்கம் முன்வைக்கும் ஏகமனதான தீர்மானம்!"

உண்மையில் பறையர்களின் பின்புலம் என்பது உயர்வானதாகவே இருந்துள்ளது. அவர்களுக்கு சம்புரிஷி கோத்திரம். அக்குலத்தில் சமய சொற்பொழிவாளர்கள், ஆசிரியர்கள், தானியம் பண்டகதாரர்கள், விவசாயிகள், சமுதாய அறிவிப்பாளர்கள், தூதர்கள், முரசு கருவிகள் செய்வோர், பண்ணிசை வேந்தர்கள், பக்தி இலக்கியவாதிகள், என்று பலர் இருந்தனர். எல்லோருமே வேளாளர் குலத்தில் உதித்து வந்தவர்கள். பிற்பாடு அது பிளவுபட்டு பல ஜாதிகளாக மாறிட அதில் பாதிபேர் எப்படியோ பட்டியல் சமூகத்திற்குள் போய்விட்டனர். பறையர் என்றாலே மோளம் அடிப்பவர் என்ற கருத்து நிலவி விட்டது. அதற்கேற்ப அவர்களுடைய வெளிப்புறத் தோற்றம், உணவு, பழக்க வழக்கமும், brand image போல் நிலைத்து விட்டது.

உணவு தானியங்களைப் படியால் அளந்து, செய்த வேலைக்கு (பறை அளந்து) கூலியாகத் தருபவன் எப்படி கேவலமானவன் ஆகிறான்? நாராயணன் நம் எல்லோருக்கும் பறை தருபவன் என்று முதல் திருப்பாவை பாடலில் ஆண்டாள் பாடினாளே! அதனால் நாரயணன் பறையன்தானே?
பிற்பாடு அந்த அளவையின் வாயை தோலால் பூட்ட பறை மோளம் ஆனது. ஆக இது ஆங்கிலேயர் சூழ்ச்சிக்கு முன்புவரை மோசமான வார்த்தையாக இருக்கவில்லை. பிற்பாடு திரிபு ஏற்பட்டு இன்று ஜாதிப் பட்டியலில் வந்துவிட்டது. பறையர்களே! பறையராக இருக்க பெருமைப் படுங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக