About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 4 நவம்பர், 2019

சர்ச்சைக்குள் சித்தர்!

கடந்த இரண்டு நாட்களாக திருவள்ளுவர் Top 5 இடத்தில் பேசப்பட்டு வருகிறார். அவர் காவியா வெள்ளையா? நீறில்லா நெற்றியா திரிபுண்டரமா? முப்புரி நூல் பூண்டாரா இல்லையா? உருத்திராட்சம் தரித்தாரா இல்லையா? குடும்பஸ்தரா சன்னியாசியா? சந்ததி இருந்ததா இல்லையா? 'அறம் பொருள் இன்பம்' என முப்பால் இருக்க நான்காம் பால் குறிக்கும் 'வீடு' தொகுப்பு அழிக்கப்பட்டதா மறைக்கப்பட்டதா? ஆதிக்க ஆங்கிலேயராலா திராவிடக் கூட்டத்தாலா? 
இங்ஙனம் திருவள்ளுவரே திகைக்கும் அளவில் கலி 5120 ஆண்டில் அவரைப் பற்றி விசாரணைகள் நடக்கின்றது. முதன் முதலில் 1812 ல் F.W.எல்லிஸ் பதிப்பித்ததுதான் முதல் பிரதி. அதன் பிறகு பல 'மூலமும் உரையும்' தொகுப்புகள் அச்சாகி வெளிவந்தது. இங்கே படத்தில் நீங்கள் காண்பது 1885 ஆம் ஆண்டு முருகேச முதலியார்வாள் பதிப்பின் அட்டைப்படம்.
எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கும்போது திருவள்ளுவர் சிவசத்தியை பூஜித்த நாயன்மாராகக் கருதப்படுபவர். போகர் இவரை 'அறிவான ஞான சித்து' என்கிறார். போகர் கொங்கணர் திருவள்ளுவர் ஔவையார் கோரக்கர் எல்லோரும் சமகாலத்து சித்தர்கள். குரு- சீடர் மரபில் வருவோர். 'சங்கத்து புலவர்களின் நந்நூலேற்ற அகத்தியர்' என்கிறார் போகர். Agathiyar school of syllabus பின்பற்றப்பட்டு 'தேர்வுபெற்ற சித்தர்' என அங்கீகரிக்கப்பட்டவர் திருவள்ளுவர். அப்படியெனில் அவர் சமஸ்கிருதத்திலும் புலமை பெற்றவராகத்தான் இருந்திருக்க வேண்டும். (இது போகர் உரைக்கும் தகுதி அளவுகோல்படி.)
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் ஓவியர் வேணுகோபால சர்மா பக்திப்பழமாய் வரைந்த திருவள்ளுவரின் படம் நிராகரிக்கப்பட்டது. பிற்பாடு அவரை சமணத் துறவியாக பட்டை கொட்டை இல்லா வெறுமையுடன் வரைந்த படம் ஏற்கப்பட்டது. எப்படி திருமந்திரம் அக்காலத்திலேயே ஶ்ரீமந்த்ரமாலா என்று சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டதோ அவ்வாறே திருக்குறளும் 'ஸ்லோக தோஹே' என்று அந்நாளிலே இயற்றப்பட்டு இன்றும் மறைப்பாக இருக்கலாம். எப்போதும்போல் நடக்கும் கூத்தை நாம் வேடிக்கைப் பார்ப்போம்.
Image may contain: 1 person
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக