About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 4 நவம்பர், 2019

திருக்குறள் நான்காம் பால்: வீடு

வீடு என்னும் மோட்ச காண்டம் பற்றி தனித்தொகுப்பு உள்ளது. அதை அச்சேற்றாமல் பதிப்பில் முடக்கியதாக திருவள்ளுவரின் வம்சத்தில் குல மடாதிபதி பல வருடங்களுக்குமுன் சொன்னதாக நாம் கேள்விப்பட்ட செய்தி. அறம் கடைபிடித்தால் பொருளும் இன்பமும் இறுதியில் வீடும் கிட்டும், இதற்கென தனியாக ஒரு காண்டம் உண்டா என்ன? உண்டு. இதற்கு என்ன ஆதாரம்?

திருவள்ளுவரின் மருமகன் ஏலேல சிங்கன் வகையறா திருவள்ளுவ நாயனார் மடத்தின் மடாதிபதியாக 1900ல் அலங்கரித்தவர் இதுபற்றிக் கூறியிருந்தார். தனியாக மோட்ச காண்டம் உண்டு என்றும் அதில் வள்ளுவ குலதினற்கு ஏற்ப ஜோதிடமும் சேர்ந்து வரும். இது சமயம் சார்ந்த மூட நம்பிக்கை என்று அக்கால ஆங்கிலேயர்களும் நம் திராவிட எழுச்சிக்கு வித்திட்ட கூட்டமும் சேர்ந்து இதை பதிப்பாக விடாமல் தடை போட்டதாக மடாதிபதி பிற்பாடு 1960 ல் சொன்னதாக அறிகிறோம்.   .

"தமிழ்ச் சங்க நூல்களில் திருக்குறள் என்ற பெயர் மட்டும் தொகை என்ற சங்க நூல் பட்டியலில் பெயர் குறிப்பு மட்டும் இருந்தது. ஆனால் முழு ஓலைச் சுவடியும் எங்கும் கிடைக்கவில்லை.

அன்றைய பிரிக்கப் படாத கோயமுத்தூர் மாவட்டத்தில் ஈரோடு அருகே முடவாண்டி சத்தியமங்கலம் என்ற ஊரில் கள்ள கவுண்டன் பாளையம் என்ற ஊரில் திருவள்ளுவரின் மருமகனும் ஒரே வாரிசுமான ஏலேல சிங்கனின் வாரிசுகள் அரசர்களிடம் பட்டயங்கள் பெற்று மடாதிபதிகளாக உள்ளதாக தமிழ் அறிஞர்களுக்குத் தகவல் கிடைத்தது. இவர்களுக்கு கொங்கு வள்ளுவர், கொங்கு பறையர் உட்பட அப்பகுதியில் வாழும் பல்வேறு ஜாதியினர் குல சீடர்களாக உள்ளதாக தமிழ் அறிஞர்கள் அங்கு சென்ற போது அறிந்து கொண்டனர். மேலும் இந்த மடம் கரூர் பரமத்தி அருகே நடந்தை,அந்தியூர் ,குள்ளவீரம் பாளையம்,பாலக்காடு எல்லை ஆகிய இடங்களில் தங்களைப் போலவே உறவு முறை மடங்களை கொண்டிருந்ததாகவும் அறிந்து கொண்டனர்.

குழந்தை ஆனந்தர் மடம் என்று அழைக்கப்பட்ட இந்த மடங்களில் திருவள்ளுவர் தன் கையால் பூஜை செய்து, பிறகு மருமகன் ஏலேல சிங்கனிடம் அளித்த மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் விக்ரஹங்கள் பூஜை செய்யப்பட்டு வந்ததாகவும் அறிந்து கொண்டனர். ஏன்? காரணம் திருவள்ளுவரின் பூர்வீக ஊர் மதுரை ஆகும்.

கொங்கு பறையர்களின் புரோகிதர்களான கொங்கு வள்ளுவர்களுக்கே குருவாக விளங்கியதால் திருவள்ளுவர் என்ற பட்டப் பெயர்களையும் கொண்டு இருந்தனர் இம்மடாதிபதிகள். ஜோதிடம் குறித்து இவர்கள் நிமித்தம் பார்ப்பதற்காக, அதாவது ஓலைச் சுவடிக்கட்டில் நடுவில் நூலைப் போட்டுப் பார்த்தால் எந்தப் பக்கம் வருகிறதோ அந்தப் பக்கத்தில் ஒரு திருக்குறளும், ஓரத்தில் ஒரு ஜோதிடக் குறிப்பும் இருக்கும். அந்த ஜோதிடக் குறிப்பை பார்ப்பதற்கான ஒரு புனித நூலாக மட்டுமே திருக்குறளை இம்மடாதிபதிகள் அப்போது பார்த்து வந்தனர்.

தற்போது இந்த சுவடிகள் 3 பிரதிகளாகவும் உள்ளன. ஆனால் இம்மூன்று சுவடியிலும் அறத்துப்பால்,பொருட்பால்,காமத்துப்பால் இவை மட்டுமே இருந்தன. சுவடியில் இருக்கும் ஜோதிட குறிப்பு ஆன்மிக குறிப்பாக இருந்ததால் மோட்சத்துப்பாலாக இருந்தது. இதை பின்னாளில் சம்பந்தப்பட்ட முற்போக்கு கூட்டம் மத மூட நம்பிக்கை என்று நிராகரித்து திருக்குறளில் சேர்க்காமல் இருட்டடிப்பு செய்தனர்.

நமக்குத் தெரிந்து அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கு மேலும் ஒன்று உண்டு. 'அப்பாலும் அடி சார்ந்தார்.' கபிலர், பரணர், திருவள்ளுவர் முதலான நாற்பத்து ஒன்பது கடைச்சங்கத் தமிழ் புலவர்கள்தான் 'பொய்யடிமை இல்லாத புலவர்கள்' என்ற நாயன்மார்கள். திருவள்ளுவரும் மேற்கூறிய 49 புலவர்களைப் போல விபூதி, ருத்ராட்சம் அணிந்து பஞ்சாட்சரம் என்ற நமச்சிவாய மந்திரத்தை ஓதி மதுரை சங்கத் தலைவனான சொக்கநாதரை இரு கையை கூப்பி வணங்கியவாரே அகத்தியம்,தொல்காப்பியம் ஆகிய இலக்கண நூல்களின் வழிகாட்டுதலின் படி சங்க இலக்கியங்கள் பாடியதை சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகிறார்.

பொய்யாமொழிப் புலவர் என்று போற்றப்பட திருவள்ளுவ நாயனார் என்றே, திருவள்ளுவர் பூஜித்த லிங்கத்தை இன்று வரை பூஜித்து வரும் திருவள்ளுவரின் பெண் வழி பேரன்களான இந்த மடாதிபதிகள் கூறி வருகின்றனர். சில புலவர்களின் சூழ்ச்சியால் சேர நாட்டுக்குத் தஞ்சம் போக வேண்டியனாது. இன்றும் கேரளா பக்கம் திருவள்ளுவ நாயனாருக்குக் கோயில்கள் உண்டு. சடையப்ப வள்ளல் ஆதரவுடன் ஏலேல சிங்கன் வாரிசில் ஒருவர்தான் மைலாப்பூரில் இருந்து கரூர் பரமத்தியிலுள்ள நடந்தை, முடவாண்டி, சத்தியமங்கலம் ஆகிய ஊர்களில் குடியேறியதாக அறிகிறோம். ஏலேல சிங்கனிடம் இருந்த லிங்கம் இந்திரனுக்கு அறும் பாவம் தீர்த்த லிங்கம், தந்திரத்தில் கொடிய விஷத்தை அறுத்த லிங்கம், சதா சிவானுக்கேற்ற லிங்கம், சொக்கலிங்கம் என்ற குறிப்பும் மடத்தில் உள்ளது.


இக்கட்டுரைக்குச் செய்திகளை வழங்கிய நண்பர் திரு.T. பாலசுப்ரமணிய ஆதித்யன் அவர்களுக்கு நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக