About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 8 நவம்பர், 2019

கோமியம் தங்கமயம்

நம் இந்து சம்பிரதாயப்படி சுத்தி செய்யும் எல்லா சடங்குகளிலும் பசு கோமியம் இடம்பெறும். வீடு முழுதும் புரோட்சணம் செய்ய, அடிபட்ட சிராய்ப்புகளைச் சுத்தம் செய்ய, மருந்தாக உட்கொள்ள, தீயசக்திகளை விரட்ட, மண்வளம் கூட்டும் பஞ்சகவியமாக என்று அநேக பயன்பாடு உண்டு.
பசுவின் ஐந்து பொருட்களான பால் தயிர் நெய் சாணம் கோமியம் ஆகியவற்றின் கலவையே பஞ்சகவ்வியம். இது மனிதனுக்கு கால்நடைகளுக்கு தாவரங்களுக்கு உற்ற மருந்தாக வயிற்றில்/குடலில் தேங்கிய ஆமத்தை நீக்க அருமருந்தாகப் பயன்படுகிறது. சித்த மருத்துவத்தில் ரசவாதம் செய்யும்போது புடம் போட வரட்டியும், மூலிகைத் திருநீறு தயாரிக்கவும் பயன்படுகிறது.
வடக்கே அதிக விலைக்குப் போகும் பசுமாடு என்றால் அது கீர் இனம். எடை கனமானதும், தட்ப வெட்பத்தைத் தாங்கிக் கொள்ளும் திறனும், நோய் எதிர்ப்பு சக்தியும், அதிக பாலும் தரவல்லது. இதனுடைய ஒரு லிட்டர் கோமியத்தில் சுமார் 3-10 மில்லிகிராம் அளவுக்கு தங்கத் துகள்களின் கூறுகள் கரைந்துள்ளதாகப பல்லாண்டுகளுக்கு முன்பே பரிசோதனை முடிவு வெளியானது. இது எப்படியும் மேற்கத்திய நாட்டு ஆய்வாளர்களையும் கார்பரேட் மருந்து நிறுவனங்களையும் கோபப்படச் செய்யும்.
'ஐய்யயே! அந்த பசு எப்படியோ போகட்டும் அது தமிழ்நாட்டு பசு இல்லை' என்ற அளவில் சிந்திக்கும் மாசடைந்த தமிழர்களே அதிகம் உள்ளனர். சாணம் முதல் கோமியம் வரை தமிழாக இருந்தால்தான் மதிக்க வேண்டும் என்ற மூடத்தனத்தை முற்போக்குக் கட்சிகள் விதைத்து விட்டன. இனி காலம் போகிற போக்கில் இதன் மதிப்பு தெற்கே தேயும்.
சாணம், கோமியம், நாட்டுச் சர்க்கரை, தண்ணீரில் கலந்து ஒருநாள் நுரைக்க வைத்து வடிகட்டினாலே அமிர்த கரைசல் தயார். இதை தெளிப்பு உரமாகப் பயன்படுத்த நல்ல பலன் கிட்டும். மதுராந்தகம் அருகே ஒரு வைணவர் தனிப்பட்ட அளவில் பசுக்களை பராமரித்து Medicated Komiyam மற்றும் Distilled Komiyam தயார் செய்து பாட்டிலில் அடைத்து வியாபாரம் செய்கிறார். இதற்கு நல்ல வரவேற்பும் உள்ளது. முன்பெல்லாம் கிராமத்து வீட்டினுள் மண் தரையில் பசுஞ்சாணத்தையும் கோமியத்தையும் கரைத்துப் பூசுவார்கள். அது நாளடைவில் இறுகிப் போய் தரை பசுமையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் ஜொலிக்கும். வீட்டினுள் கிருமி நாசினியாகவும் வெப்பத்தைக் கட்டுப்படுத்தவும் பயன்பட்டது. அதுபோல்தான் கோமியத்தின் மருத்துவ பண்பும்.
சுமார் பத்து ஆண்டுகள் இவ்விதம் தெளித்த மண் தரையை சிறிதளவு பெயர்த்து எடுத்து சோதித்தால் அடர்த்தியாக தங்கத் துகள்கள் கெட்டிப் பட்டிருக்கும் என்பது உறுதி. ஊசி போட்டு அதன் மருத்துவ பண்புகளை கெடுக்காதவரை, வடக்கோ /தெற்கோ கோமாதாவின் எல்லா இன கோமியத்திலும் தங்கத்துகள் பரவலாக இருக்கும். புனிதமான கோமியத்தில் திருமகள் லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்கிறாள். கிராமத்து வீட்டில் பெரிய அலமாரி கப்போர்டுகள் சுவற்றில் வைத்துக் கட்டுவார்கள். அது நாளடைவில் கரையானால் செல்லரித்துப் போகாமல் இருக்க அதை சுவற்றின்மீது வைத்துக் காரைப் பூசும்முன் ஒரு தாமரை இலையை அகலமாக விரித்து சுவற்றில் வைத்து அதன்மீது மரச்சட்ட அலமாரியைப் பதிப்பார்கள். தாமரையில் லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்கிறாள்.
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக