About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

அன்றே வீச என்ன அவசரமோ?

விநாயக சதுர்த்தியன்று காலையில் களிமண் பிள்ளையாரை வைத்துப் பூஜை செய்தபின் அன்று மாலைக்குள்ளாகவே சாற்றிய மலர் மாலை காயும் முன்பே, வைத்த சந்தனத்தின் ஈரம் காயும் முன்பே அதை நீர் நிலையில் வீச வேண்டும் என்று யார் கிளப்பி விட்டார்களோ தெரியவில்லை. டிவி செய்தியில் காட்டிய படத்தைப் பார்த்தால் அப்படித்தான் உணர்த்தும்!

விநாயகருக்கு அன்று மாலையிலும் விளக்கேற்றி அகவல் படிக்க வேண்டும். மறுநாள் காலை (இன்று) புனர் பூஜை உண்டு. விளக்கேற்றி மலர்கள் தூவி வெற்றிலை பழம் பாக்கு வைத்துத் தூபதீபம் காட்ட வேண்டும். பிறகு அந்த விநாயகரை சற்றே வடக்கு நோக்கி நகர்த்தியதும் பூஜை நிறைவு பெறும்.
அதாவது உங்கள் இல்லத்தில் எழுந்தருளிய விநாயகருக்கு எல்லாம் வைத்துப் படைத்து வழிபட்டபின் அதில் அரூபமாக விழித்த நிலையிலுள்ளவரை முறையாகத் தூங்கவைத்து மறுநாள் கடலில் கரைத்து விசர்ஜனம் செய்யவேண்டும். ஏன் விசர்ஜனம்? தினமும் மண்/ கல்/ உலோக விக்ரஹத்தை வைத்து வழிபட்டால் கோயிலைப்போல் வீட்டிலும் நித்திய நைவேத்தியங்கள் படைத்து உபசரிக்க வேண்டும்.
போகிற போக்கில் மக்களால் ஒரு பொழுதுகூட விளக்கேற்ற முடியாமல் போகுமோ? 😪

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக