About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

ஊறும் களிம்பு!

முகநூல் நண்பர் ஒருவர் கடந்த மாதம் ஒரு பாடலை அனுப்பினார். அதன் உட்பொருள் விளக்கத்தை அவருடைய குருநாதர் கோரியதாகச் சொன்னார். எனக்குத் தெரிந்தவரை அதற்கு விளக்கம் கொடுத்தேன்.
















'
'சார், சித்தர் பரிபாஷை அறிய முன் + பின் பாடல்களை கோர்வையாய் வாசித்தால்தான் ஓரளவுக்கு விளங்கும். இங்கே நாலு வரியில் உள்ள சங்கதிகளை நான் புரிந்து கொண்டதுவரை சொல்கிறேன். மேலோட்டமாகப் படித்தால் இது வைத்தியம்போல் தெரியும் ஆனால் யோக சக்கரத்தில் நம் உடம்பில் அகத்தே நடக்கும் ரசவாதம் போல் விளங்குகிறது. ரசவாதம் புறத்தே உலோகத்தில் மட்டும் நடப்பதல்ல, அது நம் உள்ளேயும் நடக்கும்.
கால் முன்னெலும்பு நஞ்சேறியது. மூலாதாரம் முதல் பாதம்வரை நாகலோகம். நாகம் என்றால் குன்டலினி பாம்பு அதன் நீர்மம் நஞ்சு. அது மேலே ஏறி திடமாகிய பின் ரத்தத்தில் ஊறும் அதன் அதிர்வை காட்டும். (Cells get activated when kundalini rises through àràdhàra chakras). இதன் விளைவு நாவில் உணரலாம் என்று மறைப்புடன் சொல்கிறது. (சித்த வைத்தியத்தில் விஷக்கடி முறிவுக்கான மருந்தின் சுவை நாவில் இனிப்பாக இல்லாமல் கசப்புச் சுவை தெரியும்வரை சிகிச்சை தொடரும்.)
மூலாதாரம் தூண்டப்பட்டால் அது உடலில் எல்லா நீர் திரவங்களையும் வேதிக்கச் செய்து அது விசுத்திக்கும் ஆக்ஞாவுக்கும் இடையே வெளிப்படும். வாயில் இரும்பை/ செம்பை வைத்துக்கொண்டு துப்பினால் தங்கமாவதும், உள்ளங்கையில் பாதரசம் வைக்க அது ரசமணியாகக் கட்டுவதும் வாதவேதை வித்தையே. வள்ளலார், சேஷாத்ரி சுவாமிகள், மானூர் சுவாமிகள் ஆகியோர் 19ஆம் நூற்றாண்டில் செய்து காட்டியவை.
சார், இவ்வரிகள் எந்த நூல்/ பாடலில் இருக்குதுங்க? என் சிற்றறிவுக்குத் தெரிந்ததை விளக்கினேன். உங்கள் குருநாதர் தரும் முழு விளக்கத்தை எனக்கு அனுப்பினால் நானும் தெரிந்து கொள்வேன்!'
இன்னும் பதிலுக்குக் காத்திருக்கிறேன். 🌺
- எஸ்.சந்திரசேகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக