About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

ஆடிக் கிருத்திகை!

ஆறுபடை வீடிருந்தும்  உன்னை எங்கும் தேடுகின்றேன்

ஆகமம் போற்றும் உன்னை வேள்வியில் தேடுகின்றேன் 


வீரன்படை திரண்டிருந்தும் ஓங்கும் வினையோ ஓயவில்லை

வேலன்படை காத்துமென்ன பிறவி அறுக்க முடியவில்லை

என் சிந்தையுள் புகுந்தவா குருகுகா ஷண்முகா

உன் விந்தையுள் விந்தையா சொல்லையா முருகையா ... 


சீலன்படை வென்றுமென்ன குத்தும் இன்னல் தீரவில்லை

ஆற்றுப்படை பெற்ற நீயோ அறிந்தும் ஏதும் செய்வதில்லை   

என் மனதினுள் நிலைத்தவா கொற்றவா சித்தையா

என் சீவனுள் கலந்தவா காத்தருள் கந்தையா  

- எஸ்.சந்திரசேகர் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக