About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

மானிடப் பிறவி!

இங்கே பதிவில் இருப்பது உண்மையான தத்துவார்த்தமான நல்ல கருத்துள்ள படம்.


இன்னொரு பிறவியே வேண்டாம் சாமி என்றும், வாழும்வரை நோயற்ற ஆரோக்கியம் இருந்தால் போதும் என்றும், எப்படியாவது உயிர் பிழைத்து மீண்டு வந்தால் போதும் என்றும், இனியும் வாழப்பிடிக்கவில்லை விபரீத முடிவு வேண்டும் என்றும், இதுபோல் ஒவ்வொருவரும் பல வேண்டுதல்களை வைக்கிறார்கள். இதில் சரி/ தவறு என்று எதுவுமில்லை. அவரவர் அனுபவங்கள் தந்த வலியும் வேதனையும், புத்தியின் செயல்படும் அக்கணம் நிலவும் சூழலுமே இதை முடிவு செய்யும். 

நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தான் என்றும், ஆயுசு கெட்டி போல எப்படியோ பிழைச்சிட்டான் என்றும், வாழ வேண்டிய வயசுல தப்பான முடிவைத் தேடிகிட்டான் என்றும், சமூகத்தில் பல விமர்சனங்கள் வரும். எதுவாயினும் எல்லா முடிவுகளும் முடிவானவையே என்பது கர்மாவின் தத்துவக் கோட்பாடு. புல் பூண்டு மிருகம் மனிதன் என்று நிலைகள் உயர எத்தனை லட்சம் பிறவிகள் எடுத்து ஓர் ஆன்மா முன்னேறுகிறது என்பதைச் சிவபுராணம் நன்கு உணர்த்துகிறது. 

அப்படி இருக்கும்போது இந்த ஆன்மா சிவனுக்குச் சொந்தமானது. நாம் அதன் காப்பாளர்கள் மட்டுமே! பிறவி தோறும் வந்துவிட்டுப்போகும் நமக்கு அதை அவனிடமே துப்புரவாக ஒப்படைப்பது வரை பிறவிப் பணி ஓயாது, அதன் மீது உரிமையைக் கோர முடியாது.

-எஸ்.சந்திரசேகர்