About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 21 செப்டம்பர், 2023

விதிமுறைகள் உண்டு!

இதுபோன்ற ஐம்பொன் கங்கணத்தை நகை கடைகள் விற்கத் தொடங்கிவிட்டன. இதை யார் எல்லாம் அணியலாம் அணியக்கூடாது? சொல்வதில்லை! இதை அணியும் காலத்தே கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன? எதுவும் அவர்கள் சொல்வதில்லை. 


பலர் தம் வலது கையில் காசி/ திருப்பதி/ ஷிர்டி தலங்களின் புனிதக்கயிறைக் கட்டியிருப்பதைப் பார்த்துள்ளேன். அவர்கள் உண்ணும்போது அதன் நீளமான நுனிப்பகுதியானது எச்சில் இலையில் ரசம்/மோர் குடிக்கும். அதுபோல் நோன்பு சரடு/ விரத தோரம் கட்டிக்கொள்ளும் பெண்கள் சிலர் அதை இறுக்கிட விரலால் பிடித்துக்கொண்டு பல்லால் எச்சில் பட கடித்து இழுப்பதைப் பார்த்துள்ளேன். 🤔 மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தபோது மஞ்சள் சரடு அங்கே கூடிய சுமங்கலிகளுக்கு விநியோகமானது. அதில் ஒரு பெண் பல்லால் கடித்துப்படும் பாட்டை டிவியில் நீண்டநேரம் குளோசப் காட்டினர். அதைப் பார்த்த பலரும் தங்கள் தலையில் அடித்துக் கொண்டிருப்பார்கள். 😀

மேற்சொன்ன இரண்டிலும் பவித்ரம் பேணுவது என்பது அறவே இல்லை. வீட்டில் பெரியவர்களும் கண்டித்துச் சொல்வதில்லை. சிவலிங்கம்- நந்தி கங்கண காப்போ, கௌரிசங்கரம் ஆபரணமோ அணிந்தால் தீவிர ஆச்சாரமும் உச்சபட்சமான பவித்ர நிலையை வாக்கால்/ மனத்தால்/ செயலால் அனுஷ்டிக்க வேண்டும் என்பது விதி. 

-எஸ்‌. சந்திரசேகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக