About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 13 மார்ச், 2025

பெரும் பேறு!

வார்க்கவே பரிபூரண விநாயகர் பாதம்

   வினையகல வளமாகத் துணைபுரியும்

தீர்க்கமாய் உரைக்க அமர்ந்த பெரியவரே

  தோன்றி விளக்கிய இரெட்டியப்பட்டியரே

பார்க்கவே கருணையருள் கண்களுடன்

   பரம்பொருளாய் நிலைத்த சித்தபுருடரே

மார்க்கமாய் அருட்சட்டம் உபதேசித்தவரே

  மறுபிறவி அறுக்கும் ரகசியம் தந்தவரே


சேர்க்கவே நன்னெறி புண்ணியங்கள்

   சீர்மிகு அடியார்கள் வாழ்க்கையிலீட்ட

கோர்க்கவே மலர்களைக் கண்ணியாய்க்

   கடமையும் பக்தியும் இணைத்திருக்க

ஈர்க்கவே பாடல்களும் பரவசமேலோங்க

   இயம்பிடும் தத்துவமும் விண்ணப்பமும்

தீர்க்கவே சங்கடமகல விடியலில் நீராடி

   தியானிப்போம் ஆண்டவர் சரணத்தை!


-எஸ்.சந்திரசேகர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக