பழுக்கக் காய்ச்சிய இரும்புச் சங்கிலியை வெறும் கையாலேயே எப்படிப் பிடிக்க முடியும்? அது சாமி வந்திறங்கி நடத்தும் தெய்வச் செயல்; அல்லது ஏதோ மாயா ஜாலம் வித்தை மூலம் நடப்பது.
தன் குரு காலாங்கி நாதர் சொல்லித்தந்த சங்கிலி ஜாலம் பற்றி ஆறாம் காண்டத்தில் (பாடல் 154 - 156) போகர் விவரிக்கிறார். தவளை உடும்பு மற்றும் ஏதாவது ஒரு விலங்கின் கொழுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மூன்றையும் கலந்து சிறு துளைகளிட்ட பானையில் ஊற்றிக்கொண்டு குழித்தைலம் சேகரித்து இறக்க வேண்டும்.
முழு உள்ளங்கை மற்றும் விரல்களிலும் இந்த நெய்யைச் பூசிக்கொண்டு அந்தச் சூடான சிவந்த சங்கிலியை வெறும் கைகளால் பிடித்துக்கொண்டு இழுத்து உருவினாலும், அக்கைகளுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது என்று போகர் சொல்கிறார்.
காணொளியில் நான் பார்த்தது கோயில் வளாகத்தில் நடந்தது. சிவந்த சங்கிலி மேல் விபூதியைத் தெளித்தபின் பிடித்து உருவுகிறார். கையில் நெய் எதையும் பூசிக்கொள்ளவில்லை. ஆகவே தெய்வச் செயலாகப் பார்க்கவேண்டும். ஆனால் இச்செயலைப் பார்ப்பவர்கள் இது பலே உருட்டு சுருட்டு, மூடநம்பிக்கையின் உச்சம் என்று கிண்டலடிப்பார்கள்.
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக