About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 20 ஜூலை, 2026

"குலதெய்வம் காலாவதி ஆகுமா?"

இப்படத்திலுள்ள ஜோதிடர் காணொளி ஒன்றில் "ஒவ்வொரு வம்சத்திலும் அதன் குலதெய்வம் எத்தனை தலைமுறை வரைக்கும் காக்கும்?" என்பதைப் பற்றிப் பேசினார். 

அந்த விளக்கம் எதுவும் எனக்குத் திருப்திகரமாக இருக்கவில்லை.

வம்சத்தில் ஒரு மூதாதையர் இருந்தார் என்றால் அவரிலிருந்து அதிகபட்சமாகப் பதினான்கு தலைமுறைகள் தொடர்ந்து அந்த வம்சக் கிளைகள் வரும். வம்சத்தில் ஒரு குடும்பத்தில் எல்லாருக்கும் உடனே நின்றுவிடாது. அதில் ஒரு மகனுக்கு நிற்கும். அடுத்த தலைமுறையில் அவன் அண்ணன் / தம்பி யாருக்கேனும் நிற்கும். அடுத்த தலைமுறையில் அவன் பங்காளிக்கு நிற்கும். குலதெய்வத்தை ஆராதிக்க இப்படி ஏதோ ஒரு கிளையில் இன்னும் பல தலைமுறைகளுக்கு அக்குலதெய்வம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். தெய்வம் எக்காலத்திலும் விட்டுப்போகாது. 

சங்கிலித் தொடரில் விட்டுப்போவது அதுவல்ல நாம்தான். அதாவது இனி அந்த வம்சத்தில் நாம் பிறப்பு எடுக்க அவசியமில்லாதபோது நின்றுபோகும். ஒரு தந்தைக்கு மூன்று மகன்கள் என்றால் ஒருவனுக்குப் பெண் குழந்தை மட்டும் இருக்கும், இன்னொருவனுக்கு குழந்தை இல்லாமலோ திருமணம் ஆகாமலோ இருக்கும், ஒருவனுக்கு ஆண் வாரிசு இருக்கும். அக்குடும்பம் அடுத்த தலைமுறைக்கு வளராமல் படிப்படியாகக் குறைந்து போய் குலதெய்வ ஆராதனை நின்றுபோகும். அதுவே பெரியப்பன்/ சிற்றப்பன் மகன்களுக்கு ஆண் வாரிசுகள் இருக்கலாம். அவர்களது அடுத்த தலைமுறையில் தொடர்ந்து ஒரு கட்டத்தில் ஒவ்வொன்றாய் நிற்கலாம். 

ஆக இப்படியாக வம்சாவளியில் தன் மகன்/பங்காளி வயிற்றுப் பேரன்கள் கொள்ளுப்பேரன்கள் ஒவ்வொன்றாய் விடுபடும். அதற்கேற்ப அவரவர் ஜாதகத்தில் 12 ஆம் வீட்டில் குருவின் நிலை அமையும். குலதெய்வம் அதுவரை காலாவதி ஆகாது. தக்க காலத்தில் வம்சத்தில் ஒவ்வொருக்கும் விடுதலை தந்து அனுப்புகிறாள். அந்த வம்சத்தில் ஏதோவொரு கிளை தொடராமல் முற்று பெறும் மற்றவை கொஞ்சம் தொடரும். இது சூட்சுமம் நிறைந்த விஷயம். 

-எஸ்.சந்திரசேகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக