கோபத்தில் ஒருவரை யாரேனும் 'கட்டையில போறவனே' என்று வசை பாடினால் அது எனக்குச் சிரிப்பை வரவழைக்கும். ஒரு கட்டை இன்னொரு கட்டையைத் திட்டுது என்று நினைத்துச் சிரிப்பேன்.
"உண்ட மயக்கம்.. தூக்கம் வருது.. இப்படி கொஞ்சம் கட்டைய சாய்ச்சிக்கிறேன்."
"அவன் செம்ம நாட்டுக்கட்டை போல"
"டேய், இது உழைச்சு காப்பேறிய வைரம் பாய்ஞ்ச கட்டைடா"
நகைச்சுவையாக, ஆபாசமாக, வீரமாக, மேலே உள்ள இந்த வர்ணனை எல்லாம் இந்த அழுகும் உடலென்னும் கட்டையைப் பற்றியது என்பது விளங்கும். பாடை என்னும் கட்டை மீது போகும் கட்டையைப் பற்றியதுதான் முதல் வரியில் உள்ளது.
அவ்விதம் கட்டையில் சுடுகாடு போய்ச் சேராமல் தூலமாக இந்தக் கட்டையுடன் அப்படியே கயிலாயம் (எ) காடுவெளிக்கு ஏறிப்போனால் என்ன சொல்வார்கள்? 😄
-எஸ்.சந்திரசேகர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக