About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 18 நவம்பர், 2016

விஸ்வகர்மா புரோஹிதர்களின் உரிமைகள்




இளங்கோவின் சிலப்பதிகாரம் பாடல்கள் வாயிலாக சைவ சமய திருமணங்கள் எல்லாமே அந்தணர்கள் மறை ஓத நடந்து வந்ததைப் படித்துள்ளோம். அதில் அக்னி வளர்க்கப்படாத எந்தவொரு சடங்கையும் நம் சமயத்தில் கேள்விப்பட்டதில்லை. (சீர்திருத்தத் திருமணத்தில் கூட பகுத்தறிவு நாத்திகர்கள் தங்களை அறியாமலே தமிழ் மரபு என்று சொல்லி குத்துவிளக்கு ஏற்றி அக்னியை ஆவாகனம் செய்தபின் மங்கல நாண் கட்டச் சொல்லுகிறார்கள்.)
பண்டையகாலம் முதலே மறை ஓதும் அந்தணர்கள் வந்த படியால், ஏனைய வர்ணத்தவர்கள் மற்றவர்களை அழைக்கும் பழக்கம் குறைந்துபோனது அல்லது அறவே இல்லை என்று சொல்லலாம். இன்று விஸ்வகர்மா குல குடும்பங்களில் அதே குலத்து பண்டிதர்களை முன் வைத்து திருமண சடங்குகளை செய்விக்கும் முறை குறைந்து வந்துள்ளது.
விஸ்வகர்மா புரோஹித ஆச்சாரிகளின் உரிமையை நிலைநாட்டி சுமார் 200 வருடங்கள் முன்பே இது குறித்த வந்த ஒரு சுவாரஸ்யமான கோர்ட் தீர்ப்பை இங்கு பதிவிடுகிறேன்.
- எஸ். சந்திரசேகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக