About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 3 நவம்பர், 2018

சித்த மருத்துவத்தில் ஒரு புரட்சி

அது ஜனவரி 2016. எனது சித்த நூல்களை படித்துவிட்டு, போகர் மேல் கொண்ட ஈர்ப்பில் என்னோடு நட்பில் சேர்ந்தார் ஒரு அன்பர். இவர் பிடெக் மற்றும் எம்பிஏ படித்தவர். வங்கி பின்னணிப் பணி BPOவில் தற்போது வேலைசெய்கிறார். இரண்டாண்டுகளுக்கு முன் இவர் சித்தர்கள், சித்த மூலிகைகளைபற்றி நிறைய சந்தேகங்களை என்னிடம் கேட்டறிந்தார். முதல்முறை படித்துவிட்டு என்னிடம் பேசும்போது அவர் ஏதும் தெரியாத ஆரம்பகட்ட நிலையில்தான் இருந்தார். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு “சார், இவ்ளோ சக்திவாய்ந்த மூலிகைகள் இருக்குனா, எல்லா நோய்களுக்கும் நல்ல மருந்து செய்து கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு மருந்து தந்து காப்பாத்தணும்” என்று லட்சியத்தை ஆதங்கத்துடன் சொன்னார்.
“நீங்கதான் செய்துகொடுக்கணும்னு சிவசித்தம் இருந்தா சித்தர் ஆசியோடு கைகூடும். முயற்சி செய்யுங்கள்” என்று சொன்னேன். “சார், நீங்க மருந்துகள் எதுவும் செய்யலையா?” என்றார். “இல்லீங்க. மருத்துவ குறிப்புகள் மூலிகைகள் பற்றி எழுதினாலும், மருந்து செய்துகொடுக்க எனக்கு ஆர்வம் வரவில்லை” என்றேன். அதன்பின் இந்த இரண்டு ஆண்டுகளில் அவர் மூலிகைகளை பற்றியும், நோய் விதகளை படித்தும், மருத்துவ குணபாகம்/ செய்பாகம் நிறைய கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினார். வேலைக்கு போய்வந்த பின் சித்த வைத்தியரிடம் சென்று அடிப்படை சூத்திரங்கள் கற்றார். அப்படி வளர்ந்தவர் இன்று சித்த மருத்துவத்தில் ஒரு திருப்பத்தை உண்டாக்கியுள்ளார்.
அது என்ன? எல்லா நோய்களுக்கும் ஒரே மூலமருந்து சூரணம். இந்த குருமருந்து சூரணத்தை இதர மருதத்துவ சூரணங்களோடு சேர்த்து கொடுக்கும்போது ஒரு வேளையில், மூன்றே நாளில், ஒரே வாரத்தில், ஒரு பட்சத்தில், ஒரு மண்டலத்தில் நோய் குணமாகிறது. அக்காலத்தில் ஒரு சர்வரோக குளிகை மட்டும் கையில் எடுத்துப் போவார்கள். உடலுக்கு முடியாமல் போனால், அக்குளிகையை தேய்த்து ஒரு சிட்டிகை எடுத்து தேனில் குழைத்து நாக்கில் தடவி உண்பார்கள். அதுபோல்தான் இந்த சூரணமும். நாளடைவில் எல்லாவித Medical Reportsம் படித்து அறிந்து மருந்து கொடுக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்றார். இன்னும் வைத்திய 'முப்பூ' பற்றி இவர் கற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனக்குத் தெரிந்து இவருடைய சூரணங்கள் கீழ்கண்ட நோய்களுக்கு அருமருந்து. சகல ஜூரம், நீரிழிவு, செரிமானம், கல்லீரல் கோளாறு, இரைப்பை, பித்தம், சிறுநீரக கோளாறு; கர்ப்பப்பை /மார்பக/மூளை/ எலும்பு புற்றுநோய்; கர்ப்பப்பை கட்டி, இருதய அடைப்பு, இரத்தக் கொதிப்பு, மூளையில் க்ளாட், இரத்தக் கசிவு, இரத்தப் புற்றுநோய், எய்ட்ஸ், எச்ஐவி, தோல் நோய்கள், மற்றும் முக்குண தோஷங்களை நீக்கும் சூரணங்களாக செயல்படுகிறது. இவரிடம் இதுவரை மருந்து பெற்று உண்ட பல நோயாளிகளின் உரையாடல்களை எனக்கு தினம் அனுப்புவார். அல்லோபதியில் தேறாத பல நோய்கள் இம்மருந்தினால் குணமாகியுள்ளது. கைவிடப்பட்ட முற்றிய நிலையில் வந்து குணமான நோயாளிகள் நன்றி தெரிவித்துள்ளனர். இவரிடம் மருந்து சூரணங்கள் எல்லாம் முற்றிலும் இலவசம். உணவு பத்தியம் நிச்சயம் உண்டு. நோய்கள் எல்லாமே ஊழ்வினையால் வருவது என்பதை அறிவோம். அது குணமாகும் தருணம் வரும்போதுதான் விதியாளிக்கு வைத்தியம் பலன்கொடுக்கும்.
“என்ன ஆச்சரியம்! ரெண்டு வருஷத்துக்கு முன்ன நீங்க இருந்ததுக்கும் இப்போ செய்துள்ள சாதனையையும் பார்த்தா ரொம்ப பிரமிப்பாதான் இருக்கு. விட்டகுறை தொட்டகுறை ஏதோ இருந்துள்ளதால் சித்தர்கள் ஆசியோடு நடக்கிறது. சந்தோஷம்!” என்றேன்.
மருந்தை சுண்டல் விநியோகம்போல் செய்தால் அதன் அருமை தெரியாமல் வீணடிப்பார்கள் என்பதால் சென்னையில் ஒரு குறிப்பிட்ட கடையில் போய் தக்க நபரை அணுகி, நண்பர் அனுப்பும் ஆடியோ செய்தியை அங்கே போட்டுக் காட்டினால்தான் மருந்து பொட்டலங்கள் தரப்படும். இவர் என் வாசகராக, நண்பராக, வைத்தியராக இருப்பது எனக்குப் பெருமை. பெரிய உயிர்க்கொல்லி நோய்களுக்கு நல்ல தீர்வு வந்துவிட்டது என்பதை நீங்கள் அறியவேண்டும். பெரிய அளவில் மருத்து தயாரித்து இச்சேவையை கையாளும்போது இவருடைய பெயர், கைபேசி, மின்னஞ்சல் விவரங்களை நிச்சயம் இங்கே பதிவிடுகிறேன்.
இது வியாபார நோக்கில் செய்வதில்லை என்பதால் விளம்பரமோ, விலைப்பட்டியலோ ஏதுமில்லை. நோயாளிகள் சுகம் பெற்றபின் தாங்கள் விருப்பப்பட்டதை கொடுத்து ஜீவகாருண்ய நோக்கில் உதவலாம். இத்தொகை அடுத்துவரும் நோயாளிகளுக்கு மருந்து தயாரித்து கொடுக்க உதவும். “சர்வ ஜனா சுகினோ பவந்து"
அவர் பெயர் திரு.ஜகத்குரு, 9176147041


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக