About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 18 பிப்ரவரி, 2023

சிவராத்திரி!

மஹாசிவராத்திரிக்கு உங்களுடைய சிறப்புப் பதிவு ஏதேனும் உண்டா என்று நம் நண்பர் கேட்டார். 

அவனை நினைக்காத தருணம் உண்டா என்ன? சீவனில் கலந்து வாசியில் நகர்ந்து சிந்தையில் அமர்ந்து எப்போதும் நம்மை ஆட்கொள்பவன் நம் தேகத்தில் பஞ்சபூதமாய் இருப்பவன். இந்த ஆன்மா அவனுடையது. அதனால் நினைத்தபோது இங்கே பாடல் புனைவது, சித்த நூலிலிருந்து சிலவற்றைப் பதித்து விளக்கம் தருவது, என எப்போதும் அவன் நினைவாகவே இருப்பதால், நமக்குத் தினமும் சிவராத்திரி, ஏகாதசி, கந்தசஷ்டிதான்.

மாலையில் திருநீறு பூசி சிவபுராணம், சிவாஷ்டகம் என எது முடியுமோ அதைப் பாராயணம் செய்வேன். ஜெபமாலை அணிந்து மந்திரம் உருவேற்றுவேன். பிறகு இரவு சாப்பாடு முடித்தபின் நெடுநேரம் கண் விழித்து இருக்காமல் நேரத்தோடு தூங்கப்போவதுதான் என் பாணி! 😂

ஊரே அமர்க்களப்படுகிறது. கோயிலில் விடியவிடிய நான்கு கால பூஜை நடக்கும். ஆனால் இந்த ஆள் என்ன இப்படிச் சொல்கிறார் என்று நினைக்கிறீர்களோ? 🤔

என்னைப் பொறுத்தவரையில் ...

"தினமும் சந்தியில் பிரதோஷ காலம்

தினமும் இடையாமம் சிவராத்தி ஓரை

தினமும் வைகறையில் நாரணன் நேரம்

தினமும் முப்பொழுதும் நாடலாம் முக்தி"

இங்கே படத்தில் உள்ள ஸ்படிக லிங்கமும் சாளக்கிராமங்களும் என் மூதாதையர் விபூதி சித்தர் தாத்தா 1561-ஆம் ஆண்டு சமாதியில் போய் அமரும்வரை நித்தம் பூசித்தது. 🕉️

-எஸ்.சந்திரசேகர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக