About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

முருகன் பிரம்மச்சாரி!

முருகன் அகத்தியர்க்கு உபதேசித்த சுப்பிரமணியர் ஞானம் 500 நூலில் கடைசி பாடல்தான் இது. 

முருகனின் வாய்மொழியில் அஷ்டகர்மம் மெய் என்பது தெரிகிறது. வாலையின் அருளால் திரிகூடத்தில் ஒளிரும் அசையாத செந்நிற தீபமே தெய்வமாக இருந்து வாக்கில் வந்து அமரும் என்பது உண்மை. தான் நித்திய பிரம்மச்சாரி என்பதை முருகன் கூறுகிறான். அதனால் வாசியின் உருவகமாக வள்ளி-தெய்வானை இரு கலைகளான பிங்கலை இடகலையாக (வேட மயில், வேழ மயில்) இருப்பது தெரிகிறது. 

“கொண்டேன் மூன்றெழுத்தைக் குவித்தேன், மகாரம் நகாரம் சிகாரமோடு மூன்றெழுத்தை யானறிந்து முருகனானேன்” என்று சொல்லியுள்ளான். இந்த மூன்றெழுத்தில் மாலவன், ருத்ரன், பிரம்மா சங்கமித்துள்ளனர். அதுவே ரிக் யஜூர் சாம வேதங்களின் ரூபமாகவும் கருதப்படும்.

ஆனால் இதை அறியாத நம் மக்களோ, அந்த சிவன், விஷ்ணு, பிள்ளையார், முருகன், கிருஷ்ணன், சாஸ்தா எல்லாருக்கும் ரெண்டு தாரங்கள் இருக்கு, நாம கட்டிகிட்டா தப்பில்லை என்று சாதாரணமாகச் சொல்வார்கள்.

-எஸ்.சந்திரசேகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக