About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 29 டிசம்பர், 2023

எல்லாம் அளவோடுதான்!

இப்படியொரு படத்தையும் அதன் கீழே வாசகமும் இருப்பதைப் பார்த்தேன்‌. இது சரியா? மலச்சிக்கல், மூட்டு வலி, நீரிழிவு, கர்ப்பப்பை கோளாறுகளை இது  தீர்க்கும் என்பது பொதுவான ஒரு விதி. ஆனால் இந்தப் பிரச்சனைகள் எதனால் வருகிறது என்று ஆராயாமல் அதிகமாக இக்கிழங்கை உண்ணக்கூடாது. 

சராசரி ஆரோக்கியம் உள்ளவர்கள் பனங்கிழங்கை உண்டால் நன்மையைத் தரும். அவித்த இக்கிழங்கை என் சிறுவயதில் நிறைய சாப்பிட்டுள்ளேன்.

இதயம் சம்பந்தமான நோய், தண்டுவட எலும்புத் தேய்மானத்தால் வருகின்ற ஆஸ்ட்டியோ இடுப்புவலி பிரச்சனையும் மேற்படி சிக்கல்களை உண்டாக்கும். பரிசோதனை செய்து மேற்படி நாள்பட்ட நோய்க்கான காரணம் அறியாமல் மேம்போக்காக மலச்சிக்கல் மூட்டுவலிக்கான மருந்தை உண்டால் வேலை செய்யாது. ஆறாதார சக்கரங்கள் உள்ள பகுதிகளில் சக்தி ஓட்டம் தடைபடுவதால் அது மேலும் சிக்கலைத்தான் உண்டாக்கும். உஷார்!

-எஸ்.சந்திரசேகர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக