About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 13 மார்ச், 2026

தென்னை மரத்தில் தேள் கொட்டினால்...!

இன்னும் சிறிது காலம் போர் நீடித்தால் உலகெங்கும் அதன் தாக்கம் பெருமளவில் பாதிப்பைத் தரும். இறக்குமதியாகும் கச்சா எண்ணெய், எரிபொருள், எரிவாயு சார்ந்தே இத்தனைக் காலமும் ஓட்டியாகிவிட்டது. இனி மாற்று உபாயம் வரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இனிமேல் தற்சார்பு வழியே உதவும்.

சூரியசக்தி, தாவர எரிபொருள், பயோகேஸ், மற்றும் புதுப்பிக்கவல்ல எல்லா வழிகளும் கையாள வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது கண்கூடு. குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு கார் என்ற பந்தா மேல்தட்டு கலாச்சாரம் தீவிர எரிபொருள் பற்றாக்குறையை விளைவிக்கும்.

கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை பீதியால் induction stove, electric rice cooker இன்னும் அதிகமாக விற்பனையாகிறதாம். அது சரி. ஆனால் இதன் அதிகரித்த தேவை மின்சாரப் பற்றாக்குறைக்கு வழி வகுக்கும். நான் கணக்கெடுத்தவரை மும்முனை இணைப்பு உள்ள வீடுகளில் கோடையில் இனி AC, Fridge, Washing machine, Induction stove, Electric rice cooker, RO, Inverter, Fan, Light, kettle எல்லாம் ஒரே நேரத்தில் ஓடினால் ஆச்சரியமில்லை. ஒவ்வொரு வீட்டுக்கும் அனுமதிக்கப்பட்ட 5 kw அளவைவிட மொத்த பயன்பாட்டு அளவு தாண்டிவிடும். கூடுதல் ASD விதிக்கப்படும்.

இன்னும் சிலர் வீடுகளில் முன் எப்போதோ மின்வெட்டு ஆனபோது எல்லா phase selector switch ஒரே முனையில் திருகி வைத்து அதை அப்படியே மறந்து போனவர்களும் உண்டு. மின் பளு அதிகமாகி கம்பத்தில் இருந்து வீட்டு மீட்டர் பாக்ஸ் மெயின் போர்டுக்கு வரும் கேபிள் உருகும் அபாயமும் எழும். அப்படியானால் ஒரு/ இரு முனை சப்ளை மட்டும் வரும். இதனால் மின் பளு Load demand அதிகமாகும். வரும் வாரங்களில் அடிக்கடி டிரான்ஸ்பார்மர் ட்ரிப் ஆவதும் நடக்கும். 

ஆக அவரவர் வீடுகளில் மின் பயன்பாட்டை விழிப்புடன் sanctioned load அளவுக்குள் பயன்படுத்த வேண்டும்.

-எஸ்.சந்திரசேகர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக