About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 15 டிசம்பர், 2017

மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா

என் நண்பர்வீட்டு திருமணத்திற்குச் சென்றேன். அவர் முற்போக்காளர். அன்பளிப்பைத் தவிர்க்கவும், கொடுத்தால் எங்களை அவமதித்தகாக ஆகும் என்று கண்டிப்பாக பத்திரிகையில் போட்டிருந்தனர். அதனால் நாங்கள் எல்லோரும் கைவீசிக்கொண்டு போனோம். அவருடைய சகோதரியை மணமேடைக்கு அழைத்து வந்தனர். அங்கே இருவீட்டு மூத்தவர்கள் மட்டும் ரெண்டு நாற்காலியில் அமர்ந்திருந்தனர். பெரிய குத்துவிளக்கு இருந்தது. ஒரு மூதாட்டி அதை ஏற்றினாள்.
'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது." திருக்குறளை சொல்லிவிட்டு ஒரு தாத்தா தட்டில் இருந்த தாலியை எடுத்து மப்பிள்ளைக்குக் கொடுத்தார். அவர் பெண்ணின் கழுத்தில் கட்ட, கல்யாணம் முடிந்தது. என்னுடன் வந்த ஆந்திரா நண்பர் அப்போதுதான் போன் பேசிவிட்டு சுதாரித்துக்கொண்டார்.
"முஹுர்தத்திற்கு இன்னும் நேரம் இருக்கு இல்லையா?" என்று கேட்டார். சரியாபோச்சு. இப்போதானே கல்யாணம் முடிந்தது என்றேன். "எப்போ? இங்கதானே இருந்தேன். இன்னும் மேடைல அக்னி குண்டமே வளர்க்கலையே?" என்றார். அவர்கள் ஏன் அப்படிச் செய்தார்கள் என்று நடந்த கதையைச் சொன்னேன். "ஆஆஹ்..." என்று வாய்பிளந்தார். நாங்களும் பந்திக்குப் போனோம். பஞ்சமுக குத்துவிளக்கு அக்னிதான் ஹோம குண்டம். சித்தர் திருவள்ளுவரின் ஒரு குறள்தான் வேதமந்திரம். அதுதான் வாழ்த்துப் பா. அங்கே ஒரு வைணவ புரோகிதர் சும்மா உட்கார்ந்திருந்தார். அவருக்கு என்ன வேலை என்று சத்தியமாகப் புலப்படவில்லை.
"ஹையோ.. இதுக்கா இவ்ளோ பெரிய சத்திரம் எடுத்து செலவு செய்யணும்.. இதை வீட்லயே பண்ணிருக்கலாமே? ஓட்டல்ல ஒரு ரிசப்ஷன் சிம்பிளா கொடுத்திருந்தா போதும்" என்றார் மிகுந்த ஏமாற்றத்துடன். நாம் என்னத்தை சொல்ல? அது அவரவர் விருப்பம்.
"மாங்கல்யம் தந்துனானே.." என்ற வாக்கியங்களை பாரதம் முழுக்க மணமேடையில் கேட்கிறோம். அது எந்த தெய்வத்தைப் பற்றியது? இது ஸ்லோகமா? ஹுஹூம். இது எதுவுமில்லை. "என்னுடைய வாழ்க்கையில் அங்கமாகி இருப்பவளே, இந்த மங்கல நாணை, உன் கழுத்தில் அணிவித்து நம் உறவை உறுதி செய்கிறேன். குணவதியே நூறாண்டுகாலம் வாழ்க!" என்பதுதான் அதன் பொருள்.
No automatic alt text available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக