About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 15 டிசம்பர், 2017

சிவன் சொத்து : பனைவோலை, பாதுகை

மாணிக்கவாசகர் திருவாசகத்தைப் பாட அந்த ஈசனே அந்தணர் வடிவாக வந்து, பாடல்கேட்டு, படி எடுத்து ஒலைச்சுவடியாக வடித்து கையொப்பமும் இட்டார். திருவாதவூரான் சொல்லக்கேட்டு தில்லையம்பலன் எழுதிய திருவாசகம் ஓலைக்கட்டு இன்றும் இருக்கின்றது. சிதம்பரத்தில் உள்ள அம்பலத்தாடி மடத்தில் பாதுகாக்கப்பட்டு, தற்போது அது பாண்டிச்சேரி (பஜாஜ் ஆட்டோ ஷாப் எதிரில், முத்தியால்பேட்) அம்பலத்தாடி (தலைமை) மடத்தில் பூசனை செய்து பாதுகாக்கப்பட்டு வருகின்றது. வருடம் ஒருமுறை மார்கழித் திருவாதிரை அன்று மட்டும் ஓலைச்சுவடி பேழைக்கு சிறப்பு தைலங்கள் சாற்றப்படும். ஆனால் மகா சிவராத்திரி அன்று இரவு 11-12 வரை மட்டுமே பொதுமக்கள் தரிசனத்திற்கு வைக்கப்படுகிறதாம்.
அதுபோல், சுந்தரர் எமக்கு அடிமை என்று வழக்காடி திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்) வரை கூட்டிச்சென்று இறுதியில் கருவறைக்குள் மறைந்த ஈசன், தன் பாதுகைகளை விட்டுச்சென்றார். இன்றும் அது கிருபாபுரீஸ்வரர் கோயில் கருவறைக்கு முன்பாக சிறு கண்ணாடி பெட்டிக்குள் பாதுகைகள் வைக்கப்பட்டுள்ளது. போய் தரிசனம் செய்து இப்பிறவியை அறுத்திடுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக