About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

இயற்கை நடத்தும் பாடங்கள்

கன்னியாகுமரி கேரளா கடலோரங்களில் பத்து நாட்களாக திமிலங்கள், சிறு மீன்கள் எல்லாமே கொத்துகொத்தாக கரை ஒதுங்கிக்கொண்டிருந்தது. மேலோட்டமாக சீதோஷ்ண மற்றும் பூகோள பரப்பில் ஏதும் அசம்பாவிதமாக நமக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் ஜீவராசிகள் உணர்ந்துள்ளன. மக்கள் அதுபற்றி பேசிவிட்டு சும்மா இருந்தனர். பிற்பாடு பலத்த காற்று தொடங்கியது.
முன்கூட்டியே கணித்துச்சொல்லி அச்சிட்டு விற்கும் பஞ்சாங்கத்தை வானிலை மையம் வழிகாட்டுதலாக பின்பற்றக்கூடாது. அது மூடநம்பிக்கையாகிவிடும். அறிவியலுக்கு உட்பட்டு வானிலை மையம் சொன்னால்தான் பரிசீலனை செய்யலாம் என்ற நிலைதான் இன்றும் உள்ளது. இந்நிலையில்தான் தென்கோடி மாவட்ட மீனவர்கள் ஆழ்கடலுக்குப் போய் மாட்டிக்கொண்டனர். பாதிபேர் திரும்பினர், சிலர் எங்கோ ஒதுங்கினர், சிலர் காணவில்லை. பஞ்சாங்கத்தில் சொன்னதெல்லாம் அப்படியே குறிப்பிட்ட தேதியில் நடக்கவேண்டும் என்று எந்த உத்தரவாதமுமில்லை. கோள்களின் நிலையும் நகர்வும் கணக்கிட்டு சொல்லும் ஒரு அனுமானம்!
நீண்ட கடல்பரப்பைக் கொண்ட தென் பகுதியில் கடல்வாழ் ஜீவராசிகளின் நடவடிக்கைகளில் திடீர் மாற்றம் வந்தால் அதை ஆராய்ந்து பார்த்து காரணம் அறிய முற்படுவதில்லை. கரை ஒதுங்கிய 20 அடி நீள திமிலங்களை நடுக்கடலுக்கு விரட்டினால் அவை மீண்டும் கரைக்கு வந்தது. இதை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அதற்கே கடலுக்குள் போகப் பிடிக்கவில்லை எனும்போது மீனவர்கள் போகலாமா? ஏதோ அசம்பாவிதம் வானிலையிலோ பூமித்தட்டிலோ நிகழ வாய்ப்புண்டு என்பதை எல்லோருமே சொல்கிறோம், பதிவுகளைப் பார்க்கிறோம், அத்தோடு மறந்துபோகிறோம்.
வெளியே புயல் அடிப்பதற்கும் கடலில் திமிங்கிலம் ஒதுங்குவதற்கும் என்னங்க சம்பந்தம்? இதெல்லாம் பழைய முகநூல் பதிவும் செய்தி. மக்கள்.இதை நம்ப வேண்டாம், புரளி கிளப்ப வேண்டாம் என்று ஆட்சியரே சொன்னால், வேறு என்ன செய்ய?
"தெரியுது...பயப்பட்டா முடியுமா? பிழைப்புன்னு இருக்கே. கடலுக்குப் போகாட்டி எப்படி?" என்று மீனவர்கள் சொல்கிறார்கள். அவர்களை குறை சொல்ல முடியாது.
இதுபற்றி டிவியில் செய்தி பார்த்தபின் விமர்சனம் செய்துவிட்டு இருப்பதோடு நம் கடமை முடிந்தது. இனி அடுத்தடுத்து சீற்றங்கள் மிகுதியாகி வருகிற விளம்பி வருடம் (உகாதி) சித்திரையில் உச்சக்கட்ட பிரளயம் நிச்சயம்.

கணித்தது நடந்ததா?
~~~~~~~~~~~~

ஆற்காடு திருக்கணித பஞ்சாகத்தில் கணித்தபடி எவையெல்லாம் இந்த கார்த்திகை மாதத்தில் நடந்துள்ளது?
1) ஓக்கி புயல்  - குமரி மாவட்டம் பாதிப்பு
2) சூரியனிச் சுற்றி பரிவேடம் என்னும் Halo தோன்றும்போது 'பரிவேடம் பலத்த மழை' என்பது தமிழர்களின் சொற்றொடர்.
3) அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை விரைவாக தயாரிக்க ஒப்புதல் போனவாரம் கையெழுத்தானது.
4) தெற்காசிய பகுதி இந்தோனேசியாவின் பாலி தீவில் Mt.Agung எரிமலை வெடித்துச் சிதறியது.
5) தூத்துக்குடி-குமரிமாவட்டத்தைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான மீனவர்கள் நடுக்கடலில் புயலில் சிக்கி, அதில் பலர் இறந்ததாக அசுப செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.  
6) புதிதாக 'சாகர்' புயல் அந்தமான் அருகே உருவாகியுள்ளது. நாளை முதல் வட தமிழகம்- ஆந்திராவை நோக்கி நகர்ந்து வந்து மிரட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக