About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 31 டிசம்பர், 2017

ரூ.1,500 = ரூ.3,00,00000

என் நண்பரின் நண்பர் சரியாக ஆறு ஆண்டுகளுக்கு முன் ஆன்லைன் கிரிப்டோ நாணய வர்த்தக சந்தையில் $20 முதலீடு செய்தார். அன்றைய அமெரிக்க டாலர் மதிப்பில் அது சுமார் 1500 ரூபாய். திடீரென அந்த வர்த்தகம் மடமடவென உயர்ந்து போய் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா? ரூபாய் மூன்று கோடியே இருபது லட்சம். ஆத்தாடி! அதில் எக்ஸ்சேஞ் மூலம் நாம் பணம் போடவும் எடுக்கவும் சிறிய கமிஷன் கழிக்கப்படும். உலகம் முழுக்க வங்கிகளில் வாடிக்கையாளர்களின் பண கையிருப்பு குறைந்து போவதும், நாணயமில்லாத நாணயத்தில் போய் முதலீடு ஆவது பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
உட்கார்ந்தபடியே வருடத்திற்கு ஐந்து முதல் ஏழு லட்சம்வரை அதிலிருந்து அவர் தேவையான பணத்தை எடுக்கிறார். எஞ்சிய தொகை தொடர்ந்து சந்தையில் ஏறிக்கொண்டு இருக்கிறது. இவர்கள் எல்லாம் ஆரம்பத்திலேயே ICO அறிமுகமானபோது பங்கு கொண்டவர்கள். அன்றைக்கு ஒரு கிராம் தங்கம் ரூ.2200 இருந்த நினைவு. இவரை விட மிகப்பெரிய திமிங்கிலங்கள் இதில் உள்ளனர். இன்றைக்கு ஊரெல்லாம் இது பேசப்படுகிறது. ஒவ்வொருவரும் இதில் பல ஆயிரங்களையும் லட்சங்களையும் சக்திக்கேற்ப முதலீடு செய்து அதிர்ஷ்டம் எப்படி என்று பார்க்கிறார்கள். நிதி மேலாண்மையில் High risk, High return என்போம். இன்று எழுபத்துக்கும் மேற்பட்ட virtual நாணயங்கள் அறிமுகமாகிவிட்டது.
அதன்படி வர்த்தகத்தில் விழுந்தால் செம்ம அடிதான். தாறுமாறாக ஏறினால் கூரையை பிச்சிகிட்டு கொட்டும். ஆனால் இப்போது எத்தனை முதலீடு செய்தாலும் அது நாம் எதிர்பார்த்த லாபத்தை குறுகிய காலத்தில் ஈட்டாது. நம்ம ரிசர்வ் வங்கி சும்மா இருக்குமா? இதில் பணம் போட்டு லாபம் சம்பாதிப்பதை எப்படியாவது வருமான வரி சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறது. ரூபாயில் ரொக்கமாக மாற்றாமல் அந்த நாணயம் மூலம் மாற்று பரிவர்த்தனை செய்வதை தடுக்க முனைந்துள்ளது. நமக்கு வந்தவரை ஆதாயமே!
No automatic alt text available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக