About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

செவ்வாய், 21 மே, 2019

அ-சைவம்

மனதின் உந்துதலால் நாவின் தேவைக்கேற்ப வளைத்துக் கொண்டு எதையும் உண்ணலாம். உடல் எதைச் செய்தாலும் ஆன்
பமா கெடுவதில்லையாம். பின் ஏன் கொலை தற்கொலை கற்பழிப்பு செயல்களைப் பெரிதுபடுத்த வேண்டும்? உடல் தீண்டப்பட்டும் ஆன்மா நல்லபடியே உள்ளதால் அது குற்றமாகாது என்றால் சட்டம் தண்டிக்கக் கூடாதே?

ஒரு மாசடைந்த ஆன்மா தானிருக்கும் தேகத்தை ஆட்டிப் படைத்திட, அது புத்திக்கெட்டு வேறொரு ஆன்மா குடியிருக்கும் தேகத்தைத் துன்புறுத்துகிறது. ஆக, இது இரு ஆன்மாக்களின் பழி தீர்க்கும் படலமா? அல்லது, இரு உடல்கள் மோதிக்கொள்ளும் களமா? அடிப்படையில் உணவுதான் மனதின் இயல்பைத் தீர்மானிக்கிறது. மனம் ஆசைப்பட உடல் உணவை உண்ண, உணவின் தன்மைக்கேற்ப உடலை தவறாக இயக்கி அது இறுதியில் அவ்வுடல் குடியுள்ள ஆன்மாவுக்குப் பழியைத் தேடித் தருகிறது. உடல்தான் தின்றது ஆனால் உணர்ச்சியின் செயலால் வந்த ஊழ்வினை தண்டனை ஆன்மாவுக்கு. கர்மவினைக் கேற்பத்தான் ஒருவன் சைவம்-அசைவம் உணவை உண்ண நேர்கிறது. கோபத்தால் வந்த பாவத்தால்தான் பிறவிகள் எடுக்கிறான். சைவ உணவே உண்டாலும்கூட அதிக உப்பு காரம் மசாலா பொருட்கள் மனதைக் கெடுக்கும். அதற்கு அடுத்த நிலையில் காரசாரமான புலால் உணவு.

சுட்ட புலால் வேண்டுமா? சுடாத புலால் வேண்டுமா? தொல்லுலகில் முன்னேறிய மூத்தகுடியே புலால் உண்டு கள் குடித்தபோது நாம் மட்டும் உண்ணாமல் இருந்தால் எப்படி? குறிஞ்சிநில முருகனே புலால் உண்டான் என்று ஒரு போடு போட்டால் எவராவது வாயைத் திறப்பாரோ?

புலால் உண்ணக்கூடாது என்பதைச் சித்தர்கள் திருவள்ளுவரும் வள்ளலாரும் உணர்த்தி விட்டனர். உடனே நம் மக்கள், 'குகன் இராமனுக்கு மீன் தந்தான், காளத்திவேடன் சிவனுக்கு மாமிசம் தந்தான்' என்று வாதம் செய்வார்கள். அந்த இரு வேடர்களும் இறைவன்பால் மூடபக்தி கொண்டதால் எது சரி/தவறு என்பதை அறியாமல் தாங்கள் உண்பதையே தந்தனர். ஆனால் அ-சைவம் என்றாலே சீவனற்ற என்ற பொருள் நிலவும். இதை அசைவர்களுக்கு யார் புரிய வைப்பது?

முகநூலில் அவரவர் மனதுக்குப் பட்ட புரட்சிகரமான சொந்தக் கருத்துக்களைப் பரப்புரை செய்து நியாயப்படுத்தி வருகிறார்கள். சைவம்-அசைவம் பேதமில்லை. இறைவனுக்கு நாம் விருப்பமுடன் எதையும் படைக்கலாம். சமய நூல்கள் சொல்லும் எந்த வரம்புகளும் தேவையில்லை. அனைவரும் இனி கருவறையில் மூலவரைத் தீண்டலாம், வங்கியில் பெட்டக அறையில் நிபந்தனையின்றி எல்லோரும் நுழையலாம். கோயிலில் பக்தி செலுத்துகிறோம், வங்கியில் பணம் செலுத்துகிறோம் ஆகவே அனைவரும் சமம்.   தனிமனித சுதந்திரத்தை இனி சமுதாய கோட்பாடு/ பக்தி/நிர்வாக சட்டதிட்டம் என்று சொல்லி யாரும் தடுக்கக் கூடாது என்று சொல்வார்கள்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக