About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 23 மே, 2019

நேர்மைக்குக் கிடைத்த வெற்றி

'நரி சின்னத்தை அழுத்தினால் நாய் சின்னம் விழுகிறது' என்று சென்ற வாரம் வரை புகார் சொல்லி வந்தது திமுக. அதனால் எப்படி இருந்தாலும் மத்திய-மாநில அரசுகளின் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று எல்லோரும் பேசி வந்தனர். ஆனால் நேற்றைய முடிவுகள் அதைப் பொய்யாக்கியது. ஊழலில் சிக்கித் தவிக்கும் ராஜா, கனிமொழி, தயாநிதி, கார்த்தி சிதம்பரம், அனைவருமே அப்பழுக்கற்ற நேர்மையாளர்கள் என்று வாக்காளப் பெருமக்களே தீர்ப்பளித்தபின் உச்சநீதி மன்றம் நீதி விசாரணை நடத்தி அதில் தண்டனை வந்தாலும் மக்கள் நீதிமன்றத்தில் இவர்கள் பாஸாகி விட்டனரே!

மின்னணு வாக்கு எந்திரம் பற்றி இவர்கள் புகார் எழுப்பியது பொய்யா? அல்லது மேற்படி கனவான்கள் மீது ஊழல் குற்றம் சுமத்தியது பொய்யா? இதுவரை மெகா ஊழல் என்று எது நினைக்கப் பட்டதோ அது ஊழலல்ல, வெறும் மாயை என்று தமிழக மக்கள் சித்தம் தெளிவடைந்து விட்டனர் என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது.

ஈழம் பிரச்சனை, மீத்தேன், கச்சத்தீவு, காவேரி பிரச்சனை, நியூட்ரினோ, ஜல்லிக்கட்டு, கெயில் குழாய் வாயு ஆகியவற்றுக்கு திமுக தான் முழுமுதற் காரணம் என்று இனி யாரும் திட்ட முடியாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக