About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 27 மே, 2019

மாற்றம் நல்லதல்ல!

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பது மூத்தமொழி. மனிதன் தோன்றி பல காலங்கள் ஆகிவிட்டபடியால் இன்னும் ஏன் குரங்கினம் இருக்கிறது? இப்படி சில கேள்விகள் எழும். ஒரு இனம் மொத்தமாக வேறொரு இனமாக மாறுவது இல்லை என்கிறது பரிணாமத் தத்துவம். அதில் சில அம்சங்கள் அப்படியே தொடர்ந்து நிலவ சிலது மட்டும் ஏற்றம் பெறுகிறது. நமக்குத் தெரிந்து ஆதிமனிதன் இலை தழை கிழங்குகளைத் தின்றுதான் உயிர் வாழ்ந்தான். குமரி நிலத்தில் முருகனும் குமரா (எ) வள்ளிக் கிழங்குகளையே பயிர் செய்து கொடுத்தான். மனிதன் ஒரு கட்டத்தில் வேட்டையாடி மாமிசம் உண்ணும் நிலைக்கு வந்தான். காட்டு மிருகங்கள் நீங்கலாக ஏனையவை எல்லாமே தாவர உண்ணிகள்தான்.
சிம்பன்ஸி எனப்படும் வாலில்லா மனிதக் குரங்குகள் பெரும்பாலும் பழங்கள், வித்துகள், இலைகள், கரையான்கள், சிறு பூச்சிகள் என உண்டு வந்தது. ஆனால் அதனுடைய உணவு முறையும் அண்மைக் காலத்தில் மாறிவிட்டது என்பதை ஜெர்மானிய விலங்கியல் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். அதுவும் மனிதனைப் போலவே எல்லா வகையான மாமிசத்தையும் உண்கிறது என்பதை கடந்த இரண்டு ஆண்டுகளாக கவனித்துள்ளனர். பெரிய ஆமையை இவை புரட்டிபோட்டு, அதன் ஓட்டை பாறையில்/மரத்தில் ஓங்கி அடித்து உடைத்து, உள்ளிருக்கும் மாமிசத்தை உண்ணத் துவங்கியுள்ளது. அதில் புரதம், தாது, கொழுப்பு உள்ளது என்றாலும் இந்த போக்கு புதிதாய் உள்ளதாம். எஞ்சிய மாமிசத்தை மரப் பொந்தில் சேமித்து வைக்கிறதும் ஆச்சரியமே என்கிறார்கள். புவி வெப்ப மாற்றத்தால் இவை நடக்கிறதா அல்லது மரபணு குணங்களே மாறுகிறதா என்பது ஆய்வில் தெரியவில்லை.
மனித பழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் எல்லாமே பல காலங்களுக்குப்பின் அவனுடைய மூதாதையர்களிடம் இப்போது மெள்ள வெளிப்படத் துவங்கியுள்ளது. ஆமை, மான், பன்றி இறைச்சி உண்ணும் இப்போக்கு நல்லதல்ல என்று அக்கட்டுரைத் தெரிவிக்கிறது. பெப்சி, கோக், அருந்தி சுருட்டு, சிகரட் புகைக்கும்போது இவையும் சாத்தியம்தான். அடுத்த நிலையில் இவை நர மாமிசம் உண்டாலும் ஆச்சரியமில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக