About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 2 மே, 2019

உகந்த கல் எது?

நட்டகல்லும் ‘ஓம்’ என்று பேசி அதிர்வை வெளிப்படுத்தும் என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம். அப்படி ஒலிக்கும் கல்லுக்குள் இறைவன் இருக்கிறான் என்பதை சிவவாக்கியர் சொன்னார். ஸ்தபதிகள் சிலை வடிக்க ஒவ்வொரு கல்லையும் தட்டிப்பார்த்து வெளிப்படும் ஓசையை வைத்துத்தான் தேர்வு செய்வார்கள். இல்லாத பட்சத்தில் அது சிலை வடிக்கப் பயன்படாமல் கால் மிதிக்கும் படிக்கல்லாகப் போய்விடுகிறது. ஸ்பதிகள் அந்தக் கல்லை நீர், ரத்தினம், தான்யம், தனம், வஸ்திரம், சயனம், என ஒவ்வொன்றிலும் ஒரு மண்டலம் வைத்து சோதனை செய்தபிறகுதான் தோஷமில்லாத அந்தக் கல்லுக்கு ஸ்பரிச பூஜை போட்டு பூக்களைச் சாற்றி, மந்திரம் ஓதி கடவுள் உருவத்தைக் குறிப்பார்கள். சிலையை வடித்த பிறகு இறுதியாக அந்தச் சிலையின் வலது/இடது கண்களை ஸ்தபதி திறப்பார்.

பாருங்கள்! ஒரு கல் மிதிபடுவதும் மதிக்கப்படுவதும் எப்படி என்ற ஆகம விதியை மிக இயல்பாக அவர் தன் பாடலில் (424) விளக்கிவிட்டார். ஓங்காரம் ஜெபிக்காமல் நாம் இருந்தால் நம்முள் நாதன் வந்து குடியிருக்க மாட்டான். ஆக, சிலை வடிக்க எவ்விதமான கல் உகந்தது என்பதை தெளிவாக்கி விட்டார். முன்பு என் நூலில் பக்கங்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நான் எடிட் செய்து நீக்கிய சில பகுதிகளை இங்கே பதிவிட்டேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக