About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 7 ஆகஸ்ட், 2019

ழகர 51


ழகர 51 ஆறுமுகன் துதி


அழகொழுகும் அறுமுகமும்
  தழல் திகழும் எழில் அயிலும்
  விழையநட மிடுமயிலும்      புகழாதே    
அழுதுழலும் விழலனிவன்
  பழையவினை முழுதும்அற
  அருள்கமழும் திருவடிகள்     தருவாயே
நிழலில்வளர் தெய்வானை
  தழையில்வளர் குறமாது
  பழகிவளர் திருமுருக        உனைநாளும்
மொழிகுழற மனம்நெகிழ
  கழலடியில் முழுமைபெற
  முனிவன்என புனிதம்எழ     அருள்வாயே
குழையணிகள் செவிகுழைய
  முழுதுமொளிர் உடைதழைய
  மழலையென தவழவரு      எழிலோனே!
எழுபிறவி கழியில் அழி
  பழியனையும் பனிருவிழி
  இழிமழையில் முழுகவரம்   பொழிவாயே!
பொழிலழகும் வயலழகும்
  மதிலழகும் திகழவழி
  பொலிவுபெறு பழநிமலை    விழைவோனே!
பொதியமலை முனி அருண
  கிரி மகிழ இனியதமிழ்
  பொழியும்முழு உலகுதொழு பெருமாளே!

- ‘திருப்புகழ் திலகம்’ திரு.மதிவண்ணன் 


ஐந்துக்கு ஐந்து என இருபத்தைந்து கட்டங்கள் வரைந்து 'நமசிவய' என்ற பஞ்சாட்சரத்தின் பீஜ அட்சரமாக அ, , , , ஒ என்ற எழுத்தையும் கோச அட்சரங்களான ஐயும், கிலியும், சவ்வும், றீயும், ஸ்ரீயும் எழுத்தையும் அமைத்து 9, 11, 4, 15, 12  என்ற எண்ணையோ 10,18,14,6,3 எண்ணையோ சிதம்பர சக்கரத்தில் நாட்டி மொத்தம் ஐம்பத்தோர் அட்சரம் எழுதுவார்கள். அதைப்போலவே சிவனின் உருவான முருகனின் மொழி அழகைக் குறிக்கும் ழகரம் ஐம்பத்தொரு முறை இப்பாடலில் இடம் பெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக