About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

மூளைச்சலவை

19 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை ஜமீன்தார் பண்ணையார் மற்றும் செல்வந்தர்கள் மட்டும் மாளிகைகளில் வாழ்ந்தனர். வீட்டின் கொல்லையில் கிணறும் தோட்டமும் இருக்கும். நதி /ஏரி/ குளம் என நீர்நிலைகளில் தான் குளித்தனர். காலைக் கடன்கள் முடிக்க புதர் /தோப்பு/ வனாந்தரம் என வெட்டவெளிக்குச் சென்றனர். அக்காலத்தில் மாளிகையில்கூட கழிவறை இருந்ததில்லை.

ராஜாங்க சமஸ்தான மேட்டுக்குடியினர் மட்டும் காலில் செருப்பு அணிந்தனர். அவர்களைத்தவிர பிராமணன் உட்பட யாரும் செருப்பு அணிந்ததில்லை. வைதீகர்கள் தோலை அணியக்கூடாது என்ற ஆச்சாரம் இருந்ததால் அவர்கள் வெறுங்காலுடன்தான் எங்கும் நடந்தனர். இதுதான் அன்றைய சமுதாய கட்டமைப்பின் நிலை. இக்காலத்தில்தான் எல்லாம் மாறிவிட்டது.

ஆனால் கடந்த ஒரு நூற்றாண்டில் திராவிட கட்சிகளின் அயராத பிரச்சாரத்தால் அருந்ததியர் (எ) சக்கிலியர் குலத்தினரை நன்கு மூளைச்சலவை செய்வதில் வெற்றி பெற்றன. அண்மையில் ஈரோடு மாவட்டத்தில் கலைஞரின் பகுத்தறிவு ஆலையம் கட்ட அருந்ததியினர் பூமிபூஜை போட்டதை நாம் செய்திகளில் படித்தோம்.

சமுதாயத்தின்மீது அவர்களுக்குள்ள கருத்து என்ன என்று தெரிந்தால் அவர்கள் எந்த அளவுக்கு மனம் மாற்றப்பட்டனர் என்பது புரியும்.

"ஆயிரக்கணக்கான வருசமா, ஐயனுங்க நம்மள செருப்பு தெக்க வெச்சாங்க, மலம் அள்ள வெச்சாங்க, இப்பவாது கலைஞர் ஐயாவால அரசாங்க சம்பளம் கெடைக்குது, நம்ம பாட்டன் காலத்துல பழைய சோறு வெங்காயம் கெடைச்சா அதுவே பெரிசு" என்று பேசினர்.

நமக்குத் தெரிந்து 60கள் வரை யார் வீட்டிலும் குளியலறை/ கழிவறை பிரத்தியேகமாய் இருந்ததில்லை. மிஞ்சிப்போனல் வசதி படைத்த சிலர் மட்டும் உலர் கழிவறைகள் (Dry latrines) கொல்லையில் வைத்துக் கொண்டனர். மற்ற எல்லோரும் வெட்டவெளியில் போய்தான் அமர்ந்தனர். அது நிலத்திற்கு உரமானது. எஞ்சியதை பன்றியும் காக்கையும் சுத்தம் செய்தது. வீட்டில் கழிவறை என்பது அநாச்சாரம் என்பதால் பிராமணன் வீட்டில் அக்காலத்தில் இருந்ததேயில்லை. மூவேந்தர்களின் அரண்மனையில்கூட இருந்ததில்லை. அரச குலத்திற்கென அது தனியே கட்டப்பட்டிருந்ததென தொல்லியல் படங்களில் தெரிகிறது. ஆக ஊர் மக்களுக்குச் செருப்பு தைக்கவும் ஊராரின் மலம் அள்ளவும் ஆயிரம் வருடங்களாக ஒரு சமூகம் இருந்ததா என்பது கேள்விக்குறி.

முஸ்லீம் படையெடுப்பிற்குப்பின் சின்னாபின்னமான தேசத்தில் பல குலத்தினர் பிழைப்புக்காக ஏதேதோ வேலைகள் செய்தனர். அப்போதும்கூட தமிழகத்தில் மலம் அள்ளும் கலாச்சாரத்தை யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். "என்ன… ஜனங்களின் மலத்தை அள்ளுவார்களா? அள்ளி என்ன செய்வார்கள்?" என்றுதான் அன்றைக்கு விசித்திரமாகக் கேள்வி கேட்டிருப்பார்கள். ஆங்கிலேயர் வருகைக்குப்பின் சமுதாயம் மாசுபட்டது. எல்லோரையும் ஜாதிவாரியாக ஆங்கிலேயன் பார்த்தான். ஏன்? செட்டியார்கள் முதலியார்கள் நாயக்கர்கள் அக்காலத்தில் துபாஷாகவும் பெரும் செல்வந்தர்களாகவும் இருந்து கோலோச்சினர். துரையிடம் செல்வாக்கான இவர்கள் ஜாதிப்பிரிவு நிலைக்கேற்ப பணிகளை உண்டாக்கி அன்றே மாற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம்.

உண்மை நிலை இப்படியிருக்க கல்வியறிவு இல்லாத ஒரு பிரிவினரை அரசியல் ஆதாயத்திற்கு மூளைச்சலவை செய்து, ஆயிரம் வருடங்களாக ஐய்யமார்களுக்குத் தோல் காலணிகள் தைத்தும் மலம் அள்ளியும் தாங்கள் இழிவாக வாழ்ந்து வந்தனர் என்பதை உருவேற்றி அருந்ததியர் மனத்தில் துப்புரவாகப் பதிய வைத்ததில் திராவிடக் கட்சிகளின் அசாத்திய உழைப்பு வெளிப்படுகிறது.

"கோயில் கருவறையில் மூலவரையே இடிப்பார்கள்; தீயவர்கள் மூட மக்களை மூளைச்சலவை செய்வார்கள்; மனிதனின் வாக்கு செல்லுபடி ஆகாது காகிதத்தில் எழுதுவதையே நம்புவான்; மலம் மூத்திரம்கூட விலைக்கு விற்கும் காலம் வரும்" என்று காலக்ஞான தீர்க்கதரிசனத்தில் அன்றே ஶ்ரீவீரப்பிரம்மேந்திரர் சொன்னார்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக