About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 15 ஆகஸ்ட், 2019

யாரைக் கேட்க வேண்டும்?

நடிகர் மாதவன் நேற்று தன்னுடைய சமூகதளம் பக்கத்தில் ஆவணி அவிட்டம் (எ) உபாகர்மம் முன்னிட்டு பூணூல் அணிந்து முடித்த படத்தை பதிவிட்டிருந்தார்.

பலர் இதை எதிர்த்து விமர்சனம் செய்திருந்தனர். 'பகிரங்கமாக சாதியைக் காட்டுவது கண்டிக்கத் தக்கது', 'ஆரிய கலாச்சாரத்தை பரப்புவது வேதனை', 'வெறுத்து ஒழித்த இந்துமத சடங்குகள் எதற்கு?', 'பின்புறம் காணப்பட்ட ஷோகேஸ்  பொம்மைகளில் சிலுவை உள்ளது ஏன்?', என்ற ரீதியில் எல்லா மதத்தினரும் பலவித விமர்சனங்களை சந்தடி சாக்கில் போட்டிருந்தனர்.

நாமம் தரித்து சடங்கு/ சம்பிரதாயம் பற்றி அவருடைய பக்கத்தில் பதிவிட அவர் யாரைக் கேட்கவேண்டும்? இதனால் யாருக்கு என்ன தீங்கு வந்தது? இதை எதிர்த்துப்பேச மக்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது? அவனவன் மாடு அடித்துத் தின்றதையும், கோழியின் கழுத்தைத் திருகி வாட்டி எடுப்பதையும், திராவிட மணியின் மகன்/பேரன்கள் அத்திவரதரின் காலில் வெட்கமில்லாமல் சரணாகதி ஆனதையும், தலைவர்கள் ரம்ஜான் நோன்புக் கஞ்சி குடிப்பதையும், நத்தார் விழாவுக்கு பாதிரிகளுடன் கைக்கோர்த்து கேக் உண்பதையும் துணிந்து பதிவிடும்போது, இந்த இவருடைய தனிப்பட்ட பதிவை எதிர்த்து விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை. கருப்புச் சட்டை அணிந்து பகுத்தறிவு நாத்திகம் பரப்பி, திருமால் சம்பந்தப்பட்ட பெயர்களை தன் படங்களுக்குச் சூட்டும் அரசியல் நடிகரா இவர்?

போகிறபோக்கைப் பார்த்தால் தான் இந்து என்று வெளிப்படையாகச் சொல்லவே இருமுறையேனும் யோசிக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கி வருகின்றனர். இது நல்லதல்ல!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக